திருமணப் பொருத்தம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:12 | Best Blogger Tips




திருமணப் பொருத்தம் பல எண்ணிக்கையில் முனிவர்கள் வகுத்துத் தந்துள்ளாள்கள். நடைமுறையில் பொருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பது வழக்கமாக இருக்கிறது. இதனை சரசோதி மாலை என்ற சோதிட நூல் பாடல் வழவில் தந்துள்ளது.

செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்
தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு
ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக
மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே.
10
பொருத்தங்களும் முழுமையாகப் பொருந்தி வருகிறவாறு அடிப்படையில் அமைக்கவில்லை. சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை

தினப்பொருத்தம்
கனபோருத்தம்
யோனிப்போருத்தம்
ராசிப்போருத்தம்
ரஜ்ஜிப்பொருத்தம்.

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாததவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.
ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம்.

தினப் பொருத்தம்

மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.

கணப்பொருத்தம்

இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகானம் மனித கனம இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்கலியா முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள்.

மாகேந்திரப் பொருத்தம்

பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.

ஸ்திரீ தீர்க்கம்

மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.

யோனிப் பொருத்தம்

இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு. இதைக்கூறிடும் தகுதி எனக்கு உண்டு. ஏனெனில் பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.

ராசிப் பொருத்தம்

இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.

ராசி அதிபதி பொருத்தம்

சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.

வசியப் பொருத்தம்

மணமக்களின் நேச வாழ்விற்காக

ரஜ்ஜிப்பொருத்தம்

இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.

வேதைப் பொருத்தம்

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.
இந்த 10 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்றும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளோம்.

- – - – – -ஆண்களுக்கு – - – - – -

கீலே குறித்த நட்சத்திரம் தவிர
மற்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண் பொருத்தமாகும்

மணமகன் நட்சத்திரம் அஸ்வினி

அசுவினி ஆயில்யம் மகம் அஸ்தம் சுவாதி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பரணி

பரணி பூரட்டாதி அவிட்டம் பூசம் பூரம் அனுஷம் பூராடம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கார்த்திகை

கார்த்திகை புனர்பூசம் உத்திரம் விசாகம் உத்தராடம் பூரட்டாதி பூராடம் திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ரோகினி

உத்தராடம் திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் ரோகினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மிருகசீர்ஷம்

மிருகசீர்ஷம் சித்திரை அவிட்டம் உத்தராடம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவாதிரை

திருவாதிரை கேட்டை அனுஷம் ரோகினி அஸ்தம் சுவாதி திருவோணம் சதயம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் புனர்பூசம்

புனர்பூசம் கிருத்திகை உத்திரம் விசாகம் உத்திரடாம் பூரட்டாதி மகம் பூரம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூசம்

பூசம் பூராடம் திருவோணம் பரணி பூசம் அனுஷம் உத்திரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் ஆயில்யம்

ஆயில்யம் மகம் பூரம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் மகம்

மகம் ஆயில்யம் புனர்பூசம் அசுவினி கேட்டை முலம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்ரம்

உதரம் விசாகம் சித்திரை புனர்பூசம் கிருத்திகை உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அஸ்தம்

அஸ்தம் திருவாதிரை ரோகினி சுவாதி திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சித்திரை

சித்திரை உதரம் உத்திரட்டாதி மிருகசீர்ஷம் அவிட்டம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சுவாதி

சுவாதி ரோகினி திருவாதிரை அஸ்தம் திருவோணம் சதயம் அசுவினி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் விசாகம்

விசாகம் உத்திரம் உத்திரட்டாதி கிருத்திகை புனர்பூசம் உத்திராடம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அனுஷம்

அனுஷம் பரணி பூசம் பூராடம் உத்திரட்டாதி பூரம் முலம் திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் கேட்டை

கேட்டை முலம் திருவாதிரை அசுவினி ஆயில்யம் மகம் ரேவதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் முலம்

முலம் அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை ரேவதி திருவாதிரை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூராடம்

பூராடம் பரணி பூசம் பூரம் அனுஷம் உத்திரட்டாதி கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் உத்தராடம்

உத்தராடம் ரோகினி மிருகசீர்ஷம் கிருத்திகை புனைபூசம் உதரம் விசாகம் பூரட்டாதி இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் திருவோணம்

திருவோணம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி சதயம் பூசம் கிருத்திகை இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் அவிட்டம்

அவிட்டம் பரணி ரேவதி சித்திரை மிருகசீர்ஷம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் சதயம்

சதயம் ரோகினி திருவாதிரை அஸ்தம் சுவாதி திருவோணம் இவை ஆகாது.

மணமகன் நட்சத்திரம் பூரட்டாதி

பூரட்டாதி பரணி ரேவதி கிருத்திகை புனைபூசம் உதரம் உத்தராடம் விசாகம் இவை ஆகாது.
மணமகன் நட்சத்திரம் உத்திரட்டாதி

உத்திரட்டாதி விசாகம் சித்திரை பரணி பூசம் பூரம் அனுஷம் பூராடம் இவை ஆகாது. மற்ற நட்சர்ஹ்திரம் பொருந்தும்.

மணமகன் நட்சத்திரம் ரேவதி

ரேவதி அசுவினி ஆயில்யம் மகம் கேட்டை முலம் பூரட்டாதி அவிட்டம் இவை ஆகாது. மற்ற நட்சத்திரம் பொருந்தும்.