*தீட்டு_என்றால்_என்ன...?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:40 | Best Blogger Tips



*"தீட்டு"* என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.

இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை.

இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்.

*தீட்டு என்பது என்ன?*

*இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!*

*தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.*

*தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.*

*தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.*

ஆண், பெண் *கலந்தாலும் தீட்டு,*

குழந்தைகள் *பிறந்தாலும் தீட்டு,*

பெண்கள் *மாதவிடாயும் தீட்டு,*

*இறந்தாலும் தீட்டு!*

இப்படிப் பார்த்தால்,

தீட்டில் உருவான *நமது உடலே ஒரு தீட்டு* தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் *பிணம்* என்று பெயர் வைத்துப் *பிணத்தைத் தொட்டால் தீட்டு* என்பார்கள்.

*தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?*

சிந்தித்துப் பாருங்கள்.

*இதுவல்ல உண்மையான தீட்டு.*


இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, *இறைவனை* பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் *பயபக்தியோடு* சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

*தீட்டு என்பது வேறு அவை...,*

*காமம்,*

*குரோதம்,*

*லோபம்,*

*மதம்,*

*மாற்சரியம்*

*என்னும் பஞ்சமா பாதங்கள்!*

*காமத்_தீட்டு:*

காமம் என்பது *ஆசை.*

நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.

நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.

அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.

அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும்.

இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

*இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்*.

*குரோதத்_தீட்டு:*

குரோதம் என்பது *கோபம்.*

யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.

சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள் பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.

சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர், கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.

ஆயுளும் குறைந்து விடுகிறது.

கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

*இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.*

*லோபத்_தீட்டு:*

லோபம் என்பது *சுயநலம்.*

பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும்,

இரக்கம் என்பதே இல்லாமலும்,

சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும்,

கஞ்சத்தனமும்,

எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும்,

தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும்,

வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும்,

எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பது ஆகிய எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.

அதனால் தான் *சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள்.*

*மதத்_தீட்டு*

மதம் என்பது *கர்வம்* (ஆணவம்).

ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.

எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.

தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது.

ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் *கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர்.*

*மாற்சரியத்_தீட்டு*

மாற்சரியம் என்பது *பொறாமை.*

பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.

எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.

எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.

பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.

தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால் தான் *பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர்.*

*இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.*

*இந்தத் தீட்டுக்களையுடைவர்கள்... இறைவனை வழிபட முடியாது.*

*இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.*

*ஓம் நமசிவாய*

 நன்றி இணையம்

 


”ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது”

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips




ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு

தண்ணி பிடிச்சாலும் நிக்காது

🚩🚩🚩🚩🚩🚩🚩

மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார்.

அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

🌸🌸🌸🌸🌸🌸

இருந்தும் அந்த விவசாயி, சாமீ ... ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்குஎன்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், “ *குலதெய்வத்துக்கு* ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.



” *குலதெய்வமா* .... அப்படின்னா? - திருப்பிக்கேட்டார் அவர்.

சரிதான் .... உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி .... வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழிப் பாட்டனார் அவர்

அவர்கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு வா

ஏன் சாமீ .... அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் என் பிரச்சனை

தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்.....

என்ன சாமீ ... நீங்க .... ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச்சொல்லவே இல்லையே!

அப்ப இந்த சாமில ஒண்ணக் கும்பிடச்சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சிட்டு வரச் சொல்றீங்களே!

காரணமாத்தான் சொல்றேன்.


ஓட்டைப்பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.

நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை.

வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான்.

எனக்குப் பாத்திரமேகூட தேவையில்லை.

ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை.

பாத்திரம் இருந்தால்த் தானே எதையும் அதுலே போட்டு வைக்க முடியும்?

அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப்போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா ... போகாதா?”

அப்போ குலதெய்வம்தான் பாத்திரமா ... அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்துநாள் கழித்து, சாமீ! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோடக் கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சிபோய் கிடந்தது. யாருமே போகாம விட்டதால, கோயில் புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய்ப் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடுகல் தான் பேச்சாயி!ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்என்றார்.

சபாஷ் ... அந்தக்கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்என்றார் பெரியவர்!

சாமீ! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே ... எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன்.

நான் சொன்னதை மறந்துடாதே ... பேச்சாயியை விட்டுடாதே!

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்தமுறை அவரிடம் ஓர் செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமீ ! இப்போ நான் நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்தில பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க ... இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று அவர் திரும்பவும் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். ...... அது ..... ?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் குலதெய்வம்என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாக அனைவருமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

’’நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும்.

முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான்.

ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழிப் பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் கோத்திரம்என்னும் ஒரு ரிஷியின் வழி வழிப்பாதை.

பிற கோத்ரத்திலிருந்து பெண்கள் வந்து இந்த வழி வழிப்பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக்கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நக்ஷத்திரம் வேறாக,

உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும்

இருக்கும்.

அதுதான் இயற்கையும் கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி

இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில்

கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள்.

காது குத்துவது போன்ற வழிவழிச் செயல் பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகில் ஆயிரம் கோயில்கள் இருக்கலாம். அந்தக்

கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம். போகாமலும் இருக்கலாம்.

அதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனால் குலதெய்வக்கோயில்களுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை

அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு

செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம்.

இதன்படிப் பார்த்தால், குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது,

நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை

வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

---- பெரியவர் சொல்லச்சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம் !

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப்பின்னே இப்படியொரு

பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூடத் தெரியாமல்,

அதிகபக்ஷம் இருபாட்டன் பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமல்

அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் அந்த இறைசக்தி

குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது.

இப்படிச்சொல்வது கூட ஒரு தவறு.

வெளிப்பட வகை செய்யப்பட்டது!

அதுவும் யாரால்? நம் முன்னோர்களால் !

அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்......

நாம் யார்? அந்தத்தொடக்கத்தின் தொடர்ச்சி !

மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப்போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப்

புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம்அங்கேபோய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும்

அந்த இறைசக்தியைத் தொழும்போது, அவர்களும் பித்ருக்களாக

விண்ணில் இருந்து பார்க்கிறார்கள்.

நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.

இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

- பெரியவர் விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப்போனது.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம்

ஒன்றும் அடங்கியுள்ளது.

சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது

பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல்

போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத

இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று அவர் வீராப்பாபேசி,

நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும்

நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை.

அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே,

இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு

ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி

அருள்தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த

ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர

மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு

ஆட்படாமல் போய்விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம்.

பெரும்பாலும் ஒருவழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள்

புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில்,

வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான்

இம்மட்டில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,

மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”.

ஒரு குலதெய்வத்தின் பின்னால். இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளன. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அது தான் நிகழ்ந்துள்ளது.

எனக்கும் இந்தக்குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்க குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. அந்தக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண் .... என் தாத்தன் முன்நின்று மூச்சுவிட்ட இடம் .... என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு ... அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி, அந்தப்பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் இந்தக்குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

 


 நன்றி இணையம்