விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும்.  இதில் 
வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய 
சுவை மிக்க பொருள்களின் கலவையாகும். 
 பூரணம் எனபது நிறைவானது என்ற 
பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள 
தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை 
குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.
 
 அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு 
முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” 
விநாயகருக்கு உகந்ததாகிறது.
 

 கொழுக்கட்டையின் கூர்மையான முன் 
பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. 
கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் 
தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான 
பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் 
சொல்கிறது. 
 
 எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, 
மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் 
பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக 
நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.
  
 “விநாயகரை 
வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் 
அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!
 
  அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும். இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும்.
பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.
அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.
எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.
“விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.


 

