பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 9:43 | Best Blogger Tips

#பெற்றோர்செய்தபாவம்பிள்ளைகளைசேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை! 

சொர்க்கமா க்கான பட முடிவு
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். 


கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...


நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். 


அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். 


திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..


அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார். 


வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! 


சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன். 


புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். 


அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. 


ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். 


அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய். 


தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 


தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான். 


நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். 


ஓம் நமோ நாராயணா...!


நன்றி இணையம்

வீர வாஞ்சிநாதன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 9:05 | Best Blogger Tips

#பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர் அவர்கள் #சென்னை க்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர்.


உதவியாளருக்கு குழப்பம். 


தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.


குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே கொஞ்சம் பழங்கள்.


 தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை #மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.


அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் #காலில் தேவர் நெஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.

உதவியாளரிடமிருந்து புடவை/ பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து

 - எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம் என தேவர் சொல்ல


 - அந்த மாதரசி ,'செய்திருக்கும் உதவிகளே போதுமானது - அதிகமும்' என சொல்கிறார்.


சில நிமிடங்கள் கழிய - தேவர் மீண்டும் எழுந்து பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெறுகிறார்.


தேவரின் உதவியாளர் மண்டையே வெடித்து விடும் நிலை!


ஓரிரு நிமிட மெளனமான வாகனப் பயணம்.


ஐய்யா, அந்த பெண்மணி யார்?


"#என்தாய் "- தேவர்


பார்த்தால் ஐய்யர் பெண்மணியாக - உதவியாளர்


"ஆம். என் தாய். #வீர_வாஞ்சிநாதன் மனைவி"


- என்று தேவர் உணர்ச்சியுடன் கண்கலங்கி சுதந்திர போராட்ட சிந்தனைக்குள் மூழ்கினார்...

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வெறும் வார்த்தைகளால் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.,


.#தென்னகத்து_பகத்சிங் என்று போற்றப்பட்ட #வீர_வாஞ்சிநாதன் மனைவிக்கு சுதந்திரத்துக்குப்பின் நேரு அரசால் குறைந்த பட்ச கெளரவம் கூட கிடைக்கவில்லை.


 அங்கீகரிக்கப்பட்ட போது அது இனி தேவையில்லை என ஏற்க மறுத்தவர் திருமதி வாஞ்சி.


தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு அப்போதே திராவிட இயக்கங்களால் நன்கு விதைக்கப்பட்டு இருந்தது.அதனால் தமிழகத்திலும் அவர்களின் தியாகம் மறைக்கப்பட்டது..


லண்டனில் இந்தியா ஹவுஸ் மாளிகையில் #வீரசாவர்கரின் ஆயுதப் போராளி இயக்கத்தில்"(free india society) தளபதியாக விளங்கிய #வவேசு_ஐயர் பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.


(இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன)


அவரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவரே வீர வாஞ்சிநாதன்.B.A அவர்கள்.

கப்பலோட்டிய தமிழன் #வவுசி யை செக்கிழுக்க வைத்த திருநெல்வேலி கலெக்டர் #ஆஷ் என்பவனை #மணியாச்சி ரயில் நிலையத்தில் 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு ,தன் இயக்கத்தினரை பாதுகாக்க தானும் தன் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டு வீரமரணம் அடைந்தார்.


அவரது உடலில் சட்டைப்பையில் ஒரு #கடிதம் அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்தது.அக்கடிதத்தை கீழே படித்துப்பாருங்கள்......


"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.


 ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். 


எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,


 கேவலம் ஒரு அன்னியனாகிய #ஐந்தாம்_ஜார்ஜ், (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. 


அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.


 அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.


 இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."- இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்..


நாளை வீர வாஞ்சிநாதன் உயிர்தியாகம் செய்த நாள்  (1886 - ஜூன் 17,) 


தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் நாளை வீர வாஞ்சிநாதன்

தியாகத்தை நினைவு கொள்ளுங்கள்!

நன்றி இணையம்

எதிர்பாராத திருப்பங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 8:48 | Best Blogger Tips

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். 


இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால் தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.


பயணம் என்பது பிரச்சினையான போது தான் வாகனம் உருவானது.


எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!  

          
இனியதொரு காலை வணக்கம்



நன்றி இணையம்

கோ சேவையை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 8:39 | Best Blogger Tips

*கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும் இன்றைய  தலைமுறைக்கு :*


சேவைகளுக்கெல்லாம் சிகரம் போன்றது

கோ-சேவை.
கோ-சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை விடவே கூடாது.

தயங்கவும் கூடாது.

 பசுக்களின் மூச்சு காற்று நம் மீது படுவது சௌபாக்கியங்களில் ஒன்று என்பது தெரியுமா?

ரமண மகரிஷியை தேடி ஒரு முறை ஒரு செல்வந்தர் வந்தார்.


வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர் அவர். சரியான கருமி.


அவருக்கு உடலெங்கும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது.


எத்தனை எத்தனை பெரிய வைத்தியர்களிடம்,


ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் காட்டியும் நோய் தீரவில்லை.


ஒரு கட்டத்தில் ஆடையே உடுத்த முடியாத அளவு நோயின் தீவிரம் அதிகமானது.

எரிச்சலிலும் வலியிலும் துடித்தார்.

ரமணரை போய் பார்த்தால் ஏதாவது தீர்வு சொல்வார் என்று யாரோ சொல்ல ரமணரை நாடி திருவண்ணாமலை வந்தார்.


பகவான் ரமணர் அவரை பார்த்து,


நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து.


உன்னிடம் உள்ள செல்வத்தை கொண்டு ஏழை எளியோருக்கு தான தர்மங்கள் செய்.


ஆஸ்ரமத்தில் உள்ள கோ-சாலையில் ஒரு மண்டலம் வேலை செய்.


பசுக்களை குளிப்பாட்டு,


சாணத்தை அள்ளிப்போடு,


கோ-சாலையை சுத்தம் செய்!”

என்றார்.

செல்வந்தரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு,


ஆஸ்ரமத்தின், . . .


கோ-சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தார்.


சரியாக, 48 நாள் கழித்து பார்த்தபோது ,


அவரது உடலில் தோல் நோய் இருந்த தடயமே மறைந்து போய் அவருக்கு பரிபூரணமாக குணமாகியிருந்தது.


பசுவின் சாணம்,


கோமியம் ,


ஆகியவை நம் மேல்படுவது,


பசுக்களின் மூச்சுக் காற்றை நாம் சுவாசிப்பதும்,


சஞ்சீவனியை விட சிறந்த மருந்து என்பது ரமணருக்கு தெரியாதா என்ன?


தீராத தோல் நோய் உள்ளவர்கள்,


உங்கள் அந்தஸ்தை தூக்கி தூர போட்டுவிட்டு,


ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவு பணியை செய்து பாருங்கள்.


""கோ-சேவையின் மகத்துவம் புரியும்.""


அனைத்து உயிரனங்களுக்கும் தோஷம் உண்டு.


ஆனால் தோஷமே இல்லாத ஒரே உயிரினம் பசு மட்டுமே.


ஒரு பசுவை ஒருநாள் பார்த்துக்கொண்டிருந்தாலும் தொழுவத்தில் இருந்தாலும்,


பார்ப்பவருக்கு பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.


பிரம்மஹத்தி தோஷமே விலகும்போது சாதாரண தோல் நோய் குணமாகாதா?


 காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல்,


கீழ்கண்ட மந்திரத்தை கூறி பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் ,


புத்திரப் பேறு கிடைக்காத பெண்ணுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும்.


*சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே.*


பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார்.


கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும்.


கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால்,


சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான்.


கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகாராஜன் ரகுவைப் பெற்றான்.


பசு காயத்ரீ மந்திரம்:-

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

 1 பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவன் ,

அவன் நம் முன்னோர்கள் 7 தலை முறையைக் கரை ஏற்றி விடுவான். நாட்டுப் பசுவினம் காக்க உதவிப் பயனடையுங்கள்.



நன்றி இணையம்

முயற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 8:29 | Best Blogger Tips


👤✍

“நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை.

அதற்கான முயற்சிதான் புகழைத்தருகின்றது.

நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை.

ஓடி அடைந்த வேகத்தை,வெற்றிபெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்”

👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*



நன்றி *பெ.சுகுமார்*

“வெற்றி உனக்குள்ளே

மணக்கால் அய்யம்பேட்டை | PM 8:09 | Best Blogger Tips
👤✍


“வெற்றி உனக்குள்ளே!”
-ஹிப்னோ ஜி.கெ கட்டுரையிலிருந்து…


தனி மனிதர்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இந்த 5 சங்கதிகளே காரணமாக இருக்கின்றன.


1.சாதிக்க வேண்டும் என்கிற வெறி


2.வரையறுக்க்ப்பட்ட இலக்கு


3.விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல்


4.சரியான கண்ணோட்டம்


5.தன் மீதான முழு நம்பிக்கை.


👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*


நன்றி👤✍ *பெ.சுகுமார்*

பத்து நிமிடங்கள் முன்னதாக

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:43 | Best Blogger Tips

*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*

காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?* 

*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.


*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*


நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.


*3.முப்பது நிமிடங்கள்:*


ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.


*4.உணவில் ஒழுங்கு:*


வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*


*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*


```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.


*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*


அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*


*7.மனிதர்களை நெருங்குங்கள்:*


இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.


*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*


வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.


*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*


ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*


*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*


உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.


*12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*


உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று *அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.*


*13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*


இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*


*14.மனிதத்தன்மையே கடவுள்தன்மையின் ஆரம்பம்:*


மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் – 

மகிழ்ச்சியாய் – 
*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* தீவிரமாகப் பங்கெடுங்கள்.

*புதிய சிந்தனை அல்ல இது....*


*புத்துணர்சியூட்டும் சிந்தனை.*


நன்றி இணையம்


*மனித வாழ்க்கையின் உண்மை...!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:34 | Best Blogger Tips

🐐 🐐 🐐 🐐 🐐 🐐

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்

நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ

50 வருடங்களுக்கு வாழ்வாய்...!



*இதற்கு கழுதை சொன்னது*



நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!




கடவுள்

கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!




🐕 🐕 🐕 🐕 🐕 🐕




அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.

நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!




*இதற்கு நாய் கூறியது :*




கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு

15 வருஷம் போதும்...!




கடவுள்

நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!




🐒 🐒 🐒 🐒 🐒 🐒




அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!




நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.

நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.

நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!




*இதற்கு குரங்கு கூறியது :*




20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!




கடவுளும்

குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!




👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼




கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!




*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*

*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*

*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*




*இதற்கு மனிதன் கூறினான் :*




20 வருஷம் ரொம்ப குறைவு...!

*கழுதை* வேண்டாம் என்ற

30 வருடங்களையும்

*நாய்* வேண்டாம் என்ற

15 வருடங்களையும்

*குரங்கு* வேண்டாம் என்ற

10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!




கடவுள்

மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!




அன்று முதல்

மனிதன் முதல்

*20 வருடங்களை*

ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!




கல்யாணம் செய்து கொண்டு அடுத்த

*30 வருடங்களை*

*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!




குழந்தைகள்

வளர்ந்தபிறகு அடுத்த

*15 வருடங்களுக்கு*

அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.

மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!




வயதாகி, Retire ஆன

பிறகு *குரங்கு* போல்

*10 வருடங்களுக்கு*

மகன் வீட்டிலிருந்து

மகள் வீட்டிற்கும்,

மகள் வீட்டிலிருந்து

மகன் வீட்டிற்கும் தாவி

பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!




*மனித வாழ்க்கையின் உண்மை...!*


நன்றி இணையம்




🤠 🤠 🤠 🤠 🤠 🤠

வெண்ணீரின் பயன்கள்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:26 | Best Blogger Tips

*வெண்ணீரின் பயன்கள்*


இதை அதிக அளவில் பகிர்தல் அனைவரும் பயன் பெற உதவும்


ஒரு ஜப்பானிய  மருத்துவர் குழு சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.

  
1 மைக்கிரேன்

2 உயர் இரத்த அழுத்தம்

3 குறைந்த இரத்த அழுத்தம்

4 மூட்டு வலி

5 திடீர் அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்

6 கால்-கை வலிப்பு

7.கொழுப்பின் அளவு அதிகரித்தல்

8 .இருமல்

9 .உடல் அசௌகரியம்

10. கொலு வலி

11 ஆஸ்துமா

12 ஹூப்பிங் இருமல்

13 .நரம்புகள் தடுப்பு

14.கருப்பை மற்றும் சிறுநீர் தொடர்பான 
 நோய்கள்

15.வயிற்று பிரச்சினைகள்

16 .குறைந்த பசியின்மை

17 .கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

18 .தலைவலி


*சுடு நீர் பயன்படுத்துவது எப்படி?*


காலையில் எழுந்து, வெரும் வயிற்றில்  சுமார் 2 தம்ளர் சூடான நீர் குடிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் 2 தம்ளர்  குடிக்கமுடியாது ஆனால் மெதுவாக பழகுங்கள். 

*குறிப்பு:*


 *தண்ணீரை எடுத்துக் கொண்ட பிறகு 45 நிமிடங்கள் எதுவும்  சாப்பிட வேண்டாம்.*


*சூடான நீர் சிகிச்சை உடல்நல பிரச்சினைகளை குறித்த காலத்திற்குள் தீர்க்கும்*


30 நாட்களில் நீரிழிவு நோய்


30 நாட்களில் இரத்த அழுத்தம்


10 நாட்களில் வயிற்று பிரச்சினைகள்


9 மாதங்களில் அனைத்து வகை புற்றுநோய்


6 மாதங்களில் நரம்புகள் அடைப்பு


10 நாட்களில் ஏராளமான பசி


10 நாட்களில் கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள்


✔ மூக்கு, காது மற்றும் தொண்டை பிரச்சனைகள் 10 நாட்களில்


15 நாட்களில் பெண்கள் பிரச்சினைகள்


30 நாட்களில் இதய நோய்கள்


✔ 3 நாட்களில் தலைவலி / சர்க்கரை நோய்


✔ 4 மாதங்களில் கொழுப்பு


✔ 9 மாதங்களில்    கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம் 


4 மாதங்களில் ஆஸ்துமா


* குளிர் நீர் உங்களுக்குப் பிடிக்கிறது !!!

குளிர்ந்த நீர் இளம் வயதில் உங்களை பாதிக்கவில்லை என்றால், அது வயதான காலத்தில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

* குளிர் நீர்  இதயத்தின் நரம்புகளை மூடி, மாரடைப்பு ஏற்படுகிறது. *இதயத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் குளிர் பானங்கள்*


*இது கல்லீரலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இது கொழுப்பை கல்லீரலில் சிக்க செய்கிறது* கல்லீரல் மாற்றுக்காக காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் குளிர்ந்த நீர் குடிப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்.


* குளிர்ந்த நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது. இது பெரிய குடல் மற்றும் புற்றுநோயின் விளைவுகளை பாதிக்கிறது.


*தயவுசெய்து இந்த தகவலை பிறரும் பயனடையுமாறு பகிருங்கள்*


நீங்கள் பகிர்வதால் ,அது யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சேமிக்கும்.


நன்றி

-டாக்டர் டி. மென்சா-அசரே