*ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆலங்குடி, திருவாரூர்*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 May be an image of temple

*ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் ஆலங்குடி, திருவாரூர்*
No photo description available. 
குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோவிலாக ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது.
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்
தாயார் : ஏலவார் குழலி
உற்சவ மூர்த்தி : தட்சிணாமூர்த்தி
தல விருச்சம் : பூளை எனும் செடி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி
 
குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 98வது தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை.
 May be an image of text that says "அருள்மிகு ஏலவார்குழலி எலவார்கு SRI YELAVARKUZHALI குழலி அம்மன் அம்மன்சன்னசி ச சன்னதி AMMAN SANNATH!"
அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் "சுக்ரவார அம்பிகை" என்பதாகும்.
 
இந்த ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இவரே இங்கு குரு. எனவேதான், இது குரு ஸ்தலமாகத் திகழ்கிறது. வியாழன் தேவ குரு. 
 May be an image of ‎temple and ‎text that says "‎அருள்மிகு குருபகவான் சன்னதி SRI GURUBHAGAWAN SANNATHI لفه குருமுர்து குரு முர்தரு SRICURUMOCRTY‎"‎‎
வியாழனால் தோன்றும் துன்பங்களுக்கு தட்சிணாமூர்த்தியே தீர்வு தருவார். அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன்; 
 
இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கக் காட்சி கொடுக்கிறார். இவரை வழிபடுவதால், ஆயுள், ஆரோக்கியம், சந்தானப் பேறு, புகழ், ஐஸ்வரியம் ஆகிய யாவும் குறைவிலாது கிட்டும் என்பது நம்பிக்கை.
 May be an image of temple
ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி. மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர்.' வெளிப் பிராகாரத்திலேயே, தெற்குப் பார்த்த அம்பாள் சந்நிதி.
 
 May be an image of temple
உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். உள் பிராகாரத்தில் நால்வர் பெருமக்கள், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
 May be an image of ‎text that says "‎ஓவ்ஷ்ணவி வாராஹி இந்திராணி சாமுண்டி பாலமுருகன் צק‎"‎
கருவறையில் காட்சிகொடுக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். ஸ்ரீஇரும்பூளை நாதர், ஸ்ரீகாசி ஆரண்யேஸ்வரர், ஸ்ரீஆரண் யேஸ்வரர், ஸ்ரீஆலங்குடிநாதர், ஸ்ரீஆலங்குடியான் எனப் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.
 
ஆலங்குடியின் தலவிருட்சம் பூளைச்செடி. தீர்த்தம்- அமிர்தப் பொய்கை. விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டதாம். கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோவிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும்.
 
இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம். 
 May be an image of temple and text
சிவனுக்கான பஞ்ச ஆரண்யத் தலங்களிலும் இதுவும் ஒன்று. இந்த ஊரில், விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது. ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் தலத்தில் வேறு விஷங்கள் என்ன செய்யும் என்கிறார்கள் பக்தர்கள்.
 May be an image of temple
ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தியை எல்லா நாள்களிலும் வழிபடலாம் என்றாலும் வியாழக்கிழமைகள் மிகவும் விசேஷம். இங்கு நடைபெறும் தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றிவிட்டும் தட்சிணாமூர்த்திக்கு 24 விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள் பக்தர்கள். பின்பு பிராகாரத்தை 24 முறை வலம் வரவேண்டும். 
 
இவ்வாறு வழிபாடு செய்து ஆபத்சகாயேஸ்வரரையும் ஏலவார்குழலி அம்மனையும் வேண்டி வழிபட சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. குருபலம் கைகூடும்.

 May be an image of temple and text

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

தாம்பரம் – கொல்லம் எக்ஸ்பிரஸ்! 🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 10:07 AM | Best Blogger Tips

 May be an image of train and text that says "தினமும் தமிழகழும் கேரளாவும் இணைக்கும் தாம்பரம்- கொல்லம் எக்ஸ்பிரஸ்! 16101 16102 MAIL EXPRESS தினசரி சேவை OE 美間定 தாம்பரம் TAMBARAM TRAIN BHARAT ரவிஸ் anfbal கொல்லம் KOLLAM EXPRESS வழித்தடம் 16101 ாம்பரம் நிலையம் கொல்லம் மொத்து தூரம் கொல்லம் யருசை မျ္ားစားလပုံခြငင်ံ செங்கல்பட்டு தாம்பரு 05:43PM 07:10PM நரம்பரம் មមច៍ भरणी LEP 16102 கொல்லம் தாம்பரம் நிலையம் வருமை မြောဇလုံမြိစံ 07:15PM 04:13PM 04:15PM PM 04:55 ஆரியங்காவு செங்கோட்டை -புனலுர் மலைப்பாதையின் செங்ககாட்ணட ஸ்ரீரிஸ்சிபுத்தூர் பயணம்! கொடட்டாருக்கதை COMPOSITION) மலை, பாலம், கரங்கப்பாதை இயற்கையின் அற்புதம்! AM 04፡50 SLEEPER GENERAL (UR) ACATER 2 C2TIER SLRD/LPR GUARD 245 Aιαωα சிறப்புகள் AC2TIER(2A) LIKE 1,105 ₹,565 COMMENT SHARE FOLLOW 参けの果 *pun மனலப்பாதை நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளீர்கனா? TRAIN BHARAT CHTH" 

 

🚆🌴 தமிழகம் – கேரளாவை தினமும் இணைக்கும் பிரபலமான ரயில்! தாம்பரம் – கொல்லம் எக்ஸ்பிரஸ்! 🔥

16101 / 16102 தாம்பரம் – கொல்லம் – தாம்பரம் மெயில் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு மற்றும் கேரளாவை தினமும் இணைக்கும் முக்கியமான இரவு நேர ரயில்களில் ஒன்றாகும்.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக அழகிய ஆரியங்காவு மலைப்பாதையை கடந்து கொல்லத்தை அடையும் இந்த ரயில், சுற்றுலா பயணிகள், வேலைக்குச் செல்லும்ோர், மாணவர்கள் மற்றும் குடும்ப பயணிகளின் முதல் தேர்வாக உள்ளது.

━━━━━━━━━━━━━━━━━━━━

🏛️ ரயிலின் சிறப்புகள்

🚆 ரயில் எண் : 16101 / 16102

📍 வழித்தடம் : தாம்பரம் ⇄ கொல்லம்

📅 இயக்கம் : தினமும்

⚡ வகை : Mail Express

🛤️ மொத்த தூரம் : 738 கி.மீ

⏱️ பயண நேரம் : ➡️ தாம்பரம் ➜ கொல்லம் – 13 மணி 45 நிமிடங்கள் ⬅️ கொல்லம் ➜ தாம்பரம் – 14 மணி 05 நிமிடங்கள்

━━━━━━━━━━━━━━━━━━━━

தமிழகம் மற்றும் கேரளா இடையேயான முக்கிய இணைப்பாக பல ஆண்டுகளாக சேவை செய்து வரும் இந்த ரயில், செங்கோட்டை – புனலூர் மலைப்பாதை, பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகை ரசிக்க சிறந்த ரயில் பயணங்களில் ஒன்றாகும்.

━━━━━━━━━━━━━━━━━━━━

🚆 16101 தாம்பரம் ➜ கொல்லம்

🟢 தாம்பரம் – 05:15 PM

🔴 செங்கல்பட்டு – 05:43 / 05:45 PM

🔴 விழுப்புரம் – 07:10 / 07:15 PM

🔴 உளுந்தூர்பேட்டை – 07:42 / 07:43 PM

🔴 விருத்தாசலம் – 07:56 / 07:58 PM

🔴 திருச்சிராப்பள்ளி – 09:40 / 09:45 PM

🔴 திண்டுக்கல் – 10:47 / 10:50 PM

🌙 அடுத்த நாள்

🔴 மதுரை – 12:10 / 12:15 AM

🔴 விருதுநகர் – 12:48 / 12:50 AM

🔴 சிவகாசி – 01:13 / 01:15 AM

🔴 ஸ்ரீவில்லிபுத்தூர் – 01:28 / 01:30 AM

🔴 ராஜபாளையம் – 01:43 / 01:45 AM

🔴 சங்கரன்கோவில் – 02:08 / 02:10 AM

🔴 கடையநல்லூர் – 02:28 / 02:30 AM

🔴 தென்காசி – 02:48 / 02:50 AM

🔴 செங்கோட்டை – 03:25 / 03:30 AM

🔴 ஆரியங்காவு – 03:54 / 03:55 AM

🔴 தென்மலை – 04:23 / 04:25 AM

🔴 புனலூர் – 05:25 / 05:30 AM

🔴 அவனீஸ்வரம் – 05:39 / 05:40 AM

🔴 கொட்டாரக்கரை – 05:49 / 05:50 AM

🔴 குண்டரா – 05:59 / 06:00 AM

🟢 கொல்லம் – 07:00 AM

━━━━━━━━━━━━━━━━━━━━

🚆 16102 கொல்லம் ➜ தாம்பரம்

🟢 கொல்லம் – 04:00 PM

🔴 குண்டரா – 04:13 / 04:15 PM

🔴 கொட்டாரக்கரை – 04:26 / 04:28 PM

🔴 அவனீஸ்வரம் – 04:34 / 04:36 PM

🔴 புனலூர் – 04:55 / 05:00 PM

🔴 தென்மலை – 05:43 / 05:45 PM

🔴 ஆரியங்காவு – 06:34 / 06:35 PM

🔴 செங்கோட்டை – 07:10 / 07:15 PM

🔴 தென்காசி – 07:28 / 07:30 PM

🔴 கடையநல்லூர் – 07:43 / 07:45 PM

🔴 சங்கரன்கோவில் – 08:03 / 08:05 PM

🔴 ராஜபாளையம் – 08:28 / 08:30 PM

🔴 ஸ்ரீவில்லிபுத்தூர் – 08:43 / 08:45 PM

🔴 சிவகாசி – 09:08 / 09:10 PM

🔴 விருதுநகர் – 09:43 / 09:45 PM

🔴 மதுரை – 10:30 / 10:35 PM

🔴 திண்டுக்கல் – 11:35 / 11:40 PM

🌙 அடுத்த நாள்

🔴 திருச்சிராப்பள்ளி – 12:50 / 12:55 AM

🔴 விருத்தாசலம் – 02:24 / 02:26 AM

🔴 உளுந்தூர்பேட்டை – 02:39 / 02:40 AM

🔴 விழுப்புரம் – 03:18 / 03:20 AM

🔴 செங்கல்பட்டு – 04:48 / 04:50 AM

🟢 தாம்பரம் – 06:05 AM

━━━━━━━━━━━━━━━━━━━━

🚉 பெட்டி அமைப்பு (Coach Composition)

✅ General (UR) – 4

✅ Sleeper Class (SL) – 8

✅ AC 3 Tier (3A) – 2

✅ AC 2 Tier (2A) – 1

✅ SLRD / Luggage Cum Guard Coach – 2

━━━━━━━━━━━━━━━━━━━━

💰 தோராயமான கட்டணம்

💺 General (UR) – ₹245

🛏️ Sleeper Class – ₹420

❄️ AC 3 Tier – ₹1,105

❄️ AC 2 Tier – ₹1,565

📌 பயண தேதி மற்றும் Dynamic Fare அடிப்படையில் கட்டணம் மாறுபடலாம்.

━━━━━━━━━━━━━━━━━━━━

🌟 ஏன் இந்த ரயில் சிறப்பு?

✅ தினசரி சேவை

✅ தமிழகம் – கேரளா நேரடி இணைப்பு

✅ செங்கோட்டை – புனலூர் மலைப்பாதையின் இயற்கை அழகு

✅ சுற்றுலா, வேலை, கல்வி மற்றும் குடும்ப பயணிகளின் விருப்ப ரயில்

✅ இரவு நேர பயணம் – பகலில் உங்கள் இலக்கை அடைய வசதி

━━━━━━━━━━━━━━━━━━━━

💬 உங்கள் கருத்து?

🚆 நீங்கள் 16101 / 16102 தாம்பரம் – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளீர்களா?

🌄 செங்கோட்டை – புனலூர் மலைப்பாதை பயணம் உங்களுக்கு எப்படி இருந்தது?

Thanks & copy from 🚆 TRAIN BHARAT | மக்கள் குரல் – ரயில் வளர்ச்சி 🇮🇳