செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்
“சேமித்த வாழ்க்கை ஆனால் வாழ மறந்த வாழ்க்கை!”
இந்தியாவின் பல ஓய்வுபெற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு வியப்பான முரண்பாடு உள்ளது.
அவர்களிடம் பணம் இருக்கிறது… சொத்து இருக்கிறது… பாதுகாப்பு இருக்கிறது…
ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கும் மனநிலை இல்லை.![]()
திரு. சர்மா — இது ஒரு பெயர் மட்டும் அல்ல.
உங்கள் தந்தை, மாமா, அயலவர்… அல்லது நாமே கூட இருக்கலாம்.
அவர் வளர்ந்த காலம் பற்றாக்குறையின் காலம்.
ரேஷன் கடை வரிசை, சேமிப்பு தான் பாதுகாப்பு, அரசு வேலை தான் கனவு — அந்த தலைமுறை.
40 ஆண்டுகள் அவர் உழைத்தார்.
டாக்ஸி கட்டணம் / ஆட்டோ கட்டணம் தவிர்க்க பஸ்ஸில் சென்றார்
பேருந்து கட்டணம் மிச்சப்படுத்த நடந்தார்
கிழிந்த காலர் சட்டையையும் மாற்றாமல் அணிந்தார்.
தனது ஆசைகளை தள்ளிவைத்து குழந்தைகளின் கல்வி, திருமணம், குடும்பத்தின் எதிர்காலம் என்பதற்காக வாழ்ந்தார்.
இன்று அவருக்கு:
EMI இல்லாத வீடு,
FD, போன்ற சேமிப்புகள்,
மாதாந்திர ஓய்வூதியம்,
வங்கியில் பணம்
எல்லாமே இருக்கிறது.
ஆனால், மே மாத வெப்பத்தில் கூட
“மின்சாரம் வீண் செலவு…” என்று ஏசியை அணைத்து விட்டு வியர்த்து தூங்குகிறார்.
இதுதான் இந்திய ஓய்வுபெற்றவர்களின் மிகப் பெரிய சோகமான உண்மை.
“Switch Failure” — சேமிப்பிலிருந்து செலவிற்கு மாற முடியாத மனநிலை
நிதி உளவியல் வல்லுநர்கள் இதை
“Switch Failure” என்று கூறுகிறார்கள்.
40 வருடங்கள் மனதில் ஒரே கட்டளை:
“சேமிப்பு, சேமிப்பு இன்னும்
அந்த மனநிலை பாதுகாப்பாக மாறிவிடுகிறது.
அதனால் ஓய்வுக்குப் பிறகு:
“இப்போது செலவழித்து வாழ்க்கையை அனுபவி”
என்று சொன்னாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.
பணம் செலவிடுவது கூட அவர்களுக்கு தவறு செய்த உணர்வை தருகிறது.
இந்திய குடும்பங்களில் தினமும் நடக்கும் சில உண்மைகள்
FD வட்டியை மட்டும் பயன்படுத்துவது
வட்டியை செலவிடுவார்கள்.
ஆனால் முதல்தொகையை தொடவே மாட்டார்கள்.
“அது குழந்தைகளுக்காக…”
“அவசரத்திற்கு…”
என்று வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் பணவீக்கம் மெதுவாக அவர்களின் வாழ்க்கை தரத்தை சுருக்கிக் கொண்டே போகும்.
மருத்துவ சிகிச்சையையும் தள்ளிப்போடுவது
வங்கியில் பணம் இருந்தாலும்:
முழங்கால் அறுவை சிகிச்சை,
கண் அறுவை சிகிச்சை,
நல்ல மருத்துவ வசதி
இவற்றை “செலவு அதிகம்” என்று ஒத்திவைப்பார்கள்.
ஆரோக்கியத்தை விட பணத்தை பாதுகாக்க முயற்சிப்பார்கள்.
பயணத்திலும் அதே மனநிலை
70 வயதிலும்:
AC Coach வேண்டாம்,
Flight வேண்டாம்,
நல்ல ஹோட்டல், ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்…
“சில ரூபாய் மிச்சமாகட்டும்” என்பதற்காக உடலை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள்.
குழந்தைகளுக்காக எல்லாம் விட்டுச் செல்லும் மனநிலை
“நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பிள்ளைகளுக்குத்தான்…”
இந்த எண்ணம் பல பெற்றோரின் மனதில் ஆழமாக உள்ளது.
ஆனால் சில நேரங்களில்: தாங்கள் வாழாமல், அவர்களுக்காக மட்டும் சேமித்து, இறுதியில் வாழ்க்கையே அனுபவிக்காமல் போகிறது.
அவர்களின் மிகப் பெரிய பயம் என்ன?
“நான் இன்னும் 20 வருடம் வாழ்ந்தால்…?”
பணம் தீர்ந்து போகுமோ என்ற பயம்.
ஏனெனில் அவர்கள்:
பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பை சுருக்கியது,
வாழ்க்கைச் செலவு எப்படி உயர்ந்தது
என்பதை நேரில் பார்த்தவர்கள்.
அதனால் மிக மோசமான நாளுக்காக தயார் செய்கிறார்கள்.
ஆனால் அதற்குள், நல்ல நாட்களை வாழ மறந்துவிடுகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கிறது?
ஒரு நாள் அவர்கள் இல்லாமல் போகிறார்கள்.
பின்னால்:
வங்கியில் உள்ள தொகை,
பயன்படுத்தாத நகைகள்,
காலியாக இருக்கும் பெரிய வீடு…
இவை மட்டும் இருக்கும்.
ஆனால் அவர்களுடன் சேர்ந்து புதையுண்டு போவது:
செல்லாத சுற்றுலாக்கள்,
வாங்காத சிறிய ஆசைகள்,
குடும்பத்துடன் செலவிடாத தருணங்கள்,
சொல்லாமல் விட்ட அன்பு.
முடிவுரை
சேமிப்பு மிக முக்கியம்.
ஆனால் வாழ்க்கையை முழுவதும் சேமிப்பதற்காக மட்டும் வாழக் கூடாது.
பணம் என்பது
“பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொருள்” மட்டும் அல்ல…
“வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்த வேண்டிய கருவி” கூட.
ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது:
மெதுவாக வாழ,
உடலை கவனிக்க,
விருப்பங்களை நிறைவேற்ற,
குடும்பத்துடன் நேரம் செலவிட,
மனநிம்மதியை அனுபவிக்க
கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு.
இறுதியில் மனிதர்கள் நினைவில் வைத்துக் கொள்வது
நீங்கள் எவ்வளவு பணம் சேமித்தீர்கள் என்பதல்ல…
நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தீர்கள் என்பதுதான்.
எனவே இன்றைய 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்கள் தேவைகளுக்கு செலவழியுங்கள், வாழ்க்கையை மகிழ்வோடு வாழுங்கள், சந்தோஷமாக இருங்கள்
🙏🌹நன்றி இணையம் 🌹🙏

