**இந்தியாவின் காலடியில் ஆதிக்க சக்திகள்..!* 🌹🔥

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:18 | Best Blogger Tips
LIVE: PM Modi visits Bharatiya Nabhikiya Vidyuth Nigam in Kalpakkam, Tamil  Nadu - YouTube
**இந்தியாவின் காலடியில் ஆதிக்க சக்திகள்..!*
 
🌹🔥 மோடி கல்பாக்கம் வந்து சென்றது, நம்மில் பலருக்கும் தெரியாமல் போனதுதான் மிகவும் வருத்தமானது. ஏனெனில் உலகத்தில் வளர்ந்த நாடுகள், தங்களது மின்சார தேவைக்கு பயன்படுத்துவது நியூக்ளியர் எனெர்ஜி, அது விலை குறைவானது, அது தரும் மின்சாரம் மிக அதிகம். எனவே இந்தியாவும் வல்லரசாக வேண்டும் என்றால் நியூக்ளியர் எனெர்ஜிக்கு செல்ல வேண்டும்.
 
அதற்கு பெரியளவில் பயன்படுத்தப்படுவது யுரேனியம். அதை நாம் தடையற்று வாங்க வேண்டும் என்றால், அதற்கு நாம் NSG (Nuclear Supplier Group) சேர்ந்தால்தான் அதை கொடுப்பார்கள்.
PM Modi to launch projects worth over Rs 62k crore in T'gana, visit TN  nuclear power plant - BusinessToday
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
யுரேனியத்தில் நாம் மின்சார தேவைக்குப் பயன்படுத்தியபின் நமக்கு கிடைப்பது புளூட்டோனியம் என்ற உபரி. ஆனால் அதுதான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள். அப்படியென்றால், அதை நாம் நமது அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஏன் மற்றவர்களுக்கு கூட கொடுக்க முடியும். 
 
அதனால் நாம் கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கனடா போன்ற நாடுகளிடம் இருந்து யுரேனியம் வாங்குகிறோம். அதை பயன்படுத்திய பின்னர் புளூட்டோனியத்தை அவர்களுக்கு (NPT நாடுகள்) திருப்பி கொடுக்க வேண்டும். அதை கொடுக்கவும், திரும்ப பெறவும் நம்மிடம் மிகப்பெரியளவில் பணம் வாங்குவார்கள். 
PM Modi to visit Tamil Nadu, Lakshadweep on January 2-3 - The Economic Times
 
அதை நாமே வைத்துக்கொள வேண்டுமெனில், நாம் NPT( Non-Prolifration of Nueclear Weapons) என்று சொல்லப்படும் அணு ஆயுதங்களை, நாம் துறக்க வேண்டும், மேலும் எந்த அணு ஆயுத சோதனைகளையும் செய்யக்கூடாது. அப்படி நாம் செய்தால் பாகிஸ்தானும், சீனாவும் டுபாக்கூர் அணு ஆயுதத்தை வைத்தே நம்மை மிரட்டி பணியவைக்க மாட்டார்களா?
 
அப்படி செய்யாததால், நம்மால் தங்கு தடையற்ற யுரேனியத்தை வாங்க முடியவில்லை. அதனால் நாம் நியூக்ளியர் ரியாக்டர் மின் உற்பத்திக்கு, அணு மின் நிலையங்களை கட்ட முடியவில்லை. 
 
வாஜ்பாய் அணு ஆயுத சோதனையை செய்து முடித்தபின்னர், நமக்கு யாரும் யுரேனியம் கொடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.
அதனால் பின்பு வந்த சோனியா அரசாங்கத்திற்கு பல கட்டளைகளை போட்டார்கள். அதில் நாம் ராக்கெட் சோதனை செய்யக்கூடாது, சென்சிடிவான ஆராய்ச்சிகள் செய்யக்கூடாது என்று பல கீழ்படிதலுக்கு பின்பு நம் பொம்மை பிரதமர் யுரேனியத்தை பெற முடிந்தது. நம் தேஜஸ் விமான தயாரிப்பு முதல், விமானம்.தாங்கி கப்பல்கள் வரை நிறுத்தப்பட்டது!PM Narendra Modi To Visit Tamil Nadu, Lakshadweep On January 2-3 To Launch  Various Projects
 
அதாவது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது, வாங்கினால் தடை போடுவோம் என்ற கட்டளை போலத்தான்.
 
அப்போது ஒரு பொம்மையும், ஊழல்வாதிகளும் நாட்டை ஆண்டதால், அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தது. ஆனால் இன்று நமது மோடி, 
 
முடிந்தால் தடை செய்து பார் என்றார். நமது வாத்தி, நான் வாங்குவது ரஷ்ய ஆயில் என்றால் யூரோ யூனியன் வாங்குவது என்ன தக்காளி சட்டினியா என்று அமெரிக்க மண்ணிலேயே கேட்டு அவர்களின் ரெட்டை வேஷத்தை அசிங்கப்படுத்தினார். 
 
அது போன்ற தடைகள் என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு மாறாக தோரியம் என்ற பொருளை அணு மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். உலகில் இருக்கும் தோரியம் இருப்பில் 25% நம்மிடம்தான் உள்ளது. அதை வைத்து நம்மால் அணுமின் நிலையத்தில் பயன்படுத்த முடிந்தால் யாரையும் இந்தியா சார்ந்திருக்க வேண்டியதில்லை. 
 
அதற்காக நமது அணுசக்தி தந்தை ஹோமி பாபா 1954 ல் யுரேனியத்திற்கு பதிலாக தோரியத்தை பயன்படுத்தலாம் என்று சொன்னார். ஆனால் அதற்குரிய டெக்னாலஜி நமக்கு கிடைக்கவில்லை என்பதைவிட அதற்குரிய ஆராய்ச்சிக்கான டெக்னாலஜியை நமக்கு US, Euro நாடுகள் தடுத்துவிட்டது. அதை நம்மால் மட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யவில்லை.
 
இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யா அதை வெற்றிகரமாக செய்து முடித்தது. அதை நாமும் இப்போது செய்து முடித்துள்ளோம். எனவே, நமக்கு இனிமேல் மேலை நாடுகளை யுரேனியத்துக்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை, பயன்படுத்திய பின் அவர்களுக்கு புளூட்டோனியத்தை கணக்கு காட்ட வேண்டியதில்லை. PM Modi to launch several development projects in T'gana, Tamil Nadu today  | India News - Business Standard
 
அதைதான் நமது கல்பாக்கம் அணு மின் உலையில் வெற்றிகரமாக செய்துள்ளார்கள், மோடி அதை தொடங்கி வைக்க வந்தார். அப்படியெனில் அது உலக சாதனை, ஆனால் ஏன் நமக்கு தெரியவில்லை!
அதைப்பற்றிய புரிதல் என்பது மிகவும் சிக்கலானது. ஆனால் எளிதாக பார்த்து புரிந்துகொண்டால், நாமும் அணு அறிவியல் விஞ்ஞானியே, அதற்காக முயற்சிக்கிறேன்! எனக்கே அது புரிந்தால் அனைவருக்கும் புரிந்துவிடும் என்ற நம்பிக்கையில்....!
 
அதற்கு முன்பாக, அணு பற்றி ஒரு அடிப்படை புரிதல் தேவை. ஒரு அணுவை பிளந்து அதில் உள்ள ஒரு எலெக்ட்ரானை வெளியேற்றினால், அப்போது மிக அதிக அளவில் வெப்பம் உருவாகும். அதை நாம் நீரை கொதிக்க வைத்து, டர்பைன் (turbine) மூலம் இயக்கி மின்சாரம் தயாரிக்கிறோம். அதற்கு பெயர் ஃபிஸன் (Fission) என்பதாகும். 
PM Modi in Kalpakkam : கல்பாக்கம்.. இந்தியாவின் முதல் உள்நாட்டு Fast  Breeder Reactor - நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
 
உதாரணமாக ஒரு யுரேனியம் தாதுவில் 92 புரோட்டான்களும், 146 எலெக்ட்ரான்களும் இருக்கிறது. அதை இரண்டையும் சேர்த்தால் (92+146=238) வருகிறதல்லவா, அதனால்தான் அதை யுரேனியம் 238 என சொல்கிறோம்.
 
அதில் நாம் ஒரு புரோட்டானை அதனுள் செலுத்தும்போது அது யுரேனியம் 239 ஆக மாறும் அப்போது பெருமளவில் வெப்பம் உருவாகும். அங்கே புரோட்டான், எலக்ட்ரான் சமனாக இல்லாததால் அது ஒரு புரோட்டானை 23 நிமிடங்கள் கழித்து உள்வாங்கி அது நெப்டூனியம் என்று மாறும். அப்போது அதனுள் 93 புரோட்டான்களும், 146 நியூட்ரான்களும் இருக்கும். 
 
அதிலிருந்து மேலும் ஒரு எலெக்ட்ரானை Fission மூலம் வெளியேற்றினால், 94 புரோட்டான்கள், 145 நியூட்ரான்களை கொண்ட புளூட்டோனியமாக மாறும். இந்த புளூட்டோனியம் தான் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தும் மூலப்பொருள்.
இப்போது அடுத்த Fusion டெக்னாலஜியை பற்றி பார்க்கலாம். சென்ற முறையில் ஒரு எலெக்ட்ரானை வெளியே எடுக்கும்போது அங்கே பெருமளவில் வெப்பம் உருவாகும் என்று பார்த்தோம். அதற்கு நேர்மாறான டெக்னாலஜி தான் இந்த ஃபிஸைல் டெக்னாலஜி. 
 
இதில் ஒரு எலெக்ட்ரானை வெளியேற்றுவதற்கு பதிலாக, ஒரு எலெக்ட்ரானை கூடுதலாக சேர்ப்போம். அப்போதும் அதே போல பெருமளவில் வெப்பம் உருவாகும். அதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை வைத்து, நாம் மின்சாரம் பெற முடியும். ஆனால் பிரிப்பதை விட சேர்ப்பது என்பது மிக கடினமான வேலை. 
 
எனவே அதை செய்ய அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலகில் பல நாடுகள் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தது. இந்தியாவும் பெருமளவில் முயற்சி செய்தது. அதாவது நமது அணு விஞ்ஞானத்தின் தந்தை என்ற ஹோமி பாபா, அதை 1954 ல் முன் வைத்தார். 
PM Modi to Witness Core Loading of Indigenous Fast Breeder Reactor at  Kalpakkam on Monday
 
ஏன் இந்தியா இதற்கு முயற்சித்தது என்றால், நம் நாட்டில் தோரியம் 232 என்பது பெருமளவில் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி மற்ற நாடுகளை யுரேனியத்திற்காக சார்ந்திருக்காமல் நமது இயற்கை வளத்தையே பயன்படுத்த முடியும் என்பதால்தான்..,
ஆனால் அதை நம் அடிமை அரசாங்கங்களால் செய்ய முடியவில்லை. அந்த நிலையில் ஹோமி பாபா மர்மமாக கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பும் லால் பக்தூர் சாஸ்திரி இறப்பு போல காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்படது.
 
தோரியத்தில் இருக்கும் 232 மூலக்கூறுகளில் 90 புரோட்டான்களும், 142 எலெக்டரான்களும் (90+142=232) இருக்கிறது. அதில் ஃப்யூஸன் (Fusion) டெக்னாலஜி மூலம் ஒரு எலெக்ட்ரானை சேர்க்கும்போது, அது யுரேனியம் 233 ஆக மாறுகிறது.
இந்த Fusion Technology ஐத்தான், நமது இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கண்டுபிடித்து, அதை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் Fast Breader மூலம் வெற்றிகரமாக சேர்த்துள்ளார்கள். இதன் வெற்றி கண்காணிக்கப்பட்டு, பின்பு மற்ற அணு உலைகளுக்கும் விரிவாக்கி அதை தரம் உயர்த்தப்போகிறார்கள். 
 
அணு உலைக்கும், அணு ஆயுதத்திற்கும் என்ன வித்தியாசம்?
 
இந்த அணுக்களை பிளப்பதோ, அல்லது சேர்ப்பதோ கட்டுபாடாக நடந்தால் அது அணு விசை.
அதுவே திறந்த வெளியில் கட்டுப்பாடு இல்லாமல் வெடிக்க அனுமதித்தால் அதுவே அணு ஆயுதம்!
இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? 
 
இந்திய விஞ்ஞானிகள் உலகளவில் சென்று மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை செய்யும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் செய்ய முடியவில்லை?
காரணம், நம் அரசுகளை ஆண்டவர்கள் மேலை நாடுகளின் கைக்கூலிகளாக இருந்தார்கள். இன்று ஒரு ஆண்மையுள்ள நேர்மையான, தலைவர் மோடி இருப்பதால்தான் கோவிட்டுக்கு தடுப்பூசி முதல் தோரியம் அணு மின் விசை வரை கண்டுபிடிக்க முடிந்தது! 1954 ல் ஒரு மாமா நேருவுக்கு பதிலாக பட்டேல் அல்லது மோடி இருந்திருந்தால், இது அன்றே நடந்திருக்கும். 
 
குறிப்பு: 
 
இதை என் மர மண்டையில் புகுத்த நிறைய படித்து அதை எளிதாக்கி கொடுத்திருக்கிறேன்.
*இதை நாளை ஓட்டுப் போடும், இந்தியாவை நேசிப்பவர்களுக்கும், வருங்கால இந்தியாவை உருவாக்கப் போகும் உங்கள் குழந்தைகளுக்கும் கொண்டு சேர்த்துவிடுங்கள்*.
 
அதைச் செய்தால், *நேற்றுவரை உலகின் கைகளில் இருந்த நாம், இந்தியாவின் கைகளில் இனி உலகம் இருக்கும் நிலை வரும்!** 🙏🏻👍🏻

நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை..........!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:12 | Best Blogger Tips

 Measures Taken During Shipboard Operation for the Safety of Ship's Crew,  Cargo, and Marine Environment

ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள்.

 

இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியலீளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது

 Seabird Ghana Limited - At Seabird Ghana, we strive to provide employees  with a safe work environment. Each employee has the responsibility to  follow our safety rules, regulations and laws. Safety is

ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுதுபார்த்ததற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார்.

 

"என்ன?!" என்று ஆச்சரியமாக உரிமையாளர் கேட்டார்.

"நீங்கள் ஏறக்குறைய எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு விரிவான பில் கொடுங்கள்."

பதில் எளிது....

சுத்தியலால் தட்டுவதற்கு: $2 

 

எங்கு தட்ட வேண்டும், எவ்வளவு தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தட்டுவதற்கு : $19,998

ஒருவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பாராட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது...

 

ஏனெனில் அவை நீண்ட நெடிய போராட்டங்கள், சோதனைகள் மற்றும் கண்ணீரின் முடிவுகளால் பெறப்பட்டது

 

நான் ஒரு வேலையை 30 நிமிடங்களில் செய்கிறேன் என்றால், அதை 30 நிமிடங்களில் எப்படி செய்வது என்று 20 வருடங்களாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் பல ஆண்டுகளுக்கானது. சில நிமிடங்களுக்கு அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

#வாசித்ததில்பிடித்தது


 நன்றி இணையம்