![Muthukumar Ambasamudram's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/11059907_868015213278818_3795584990892879054_n.jpg?oh=1344969ea36fa086bf4b1e2560d030ba&oe=562342AA)
![Muthukumar Ambasamudram's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p160x160/11667339_868015216612151_1257060647855215382_n.jpg?oh=2a58d934e2561a5dce8593330a9597f7&oe=561CFECC)
![Muthukumar Ambasamudram's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s240x240/11033124_868015236612149_4085723639856563611_n.jpg?oh=558539450ec03909e7b08f4422b08e21&oe=56280CAD)
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.