♥♪♪♪♪♪♪#சப்த_கன்னியர்_வழிபாடு♪♪♪♪♪♪♥ ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

மணக்கால் அய்யம்பேட்டை | 5:03 PM | Best Blogger Tips

 No photo description available.

 May be an image of flower and temple


  ♥சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற பாரம்பரிய சக்தி வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
சப்தகன்னியர் வழிபாடு | Saptha Kannigal Vazhipadu in Tamil
 ♥அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
No photo description available.
♥1.#ப்ராம்மி
-----------------------
🌀 பிராம்மி பற்றிய தகவல் வழிபாடு... - ஆன்மீக மந்திரங்கள் | Facebook
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

♦#தியான_சுலோகம்:-

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

♦#மந்திரம்:-

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

♦#காயத்ரி மந்திரம்:-

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

♥2.#மகேஸ்வரி
     ---------------------

Goddess maheshwari hi-res stock photography and images - Alamy

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது. எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

♥#தியானசுலோகம்:-

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

♦#மந்திரம்:-

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

♦#காயத்ரி மந்திரம்:-

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

♥3.#கௌமாரி
--------------------------

கேட்ட வரம் அருளும் வீரபாண்டி கௌமாரிஅம்மன்

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்.

♦#தியான_சுலோகம்:-

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

♦#மந்திரம்:-

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

♦#காயத்ரிமந்திரம்:-

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

♥4.#வைஷ்ணவி
--------------------------------
Who is the goddess Vaishnavi, and who is her husband? - Quora
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

♦#தியானசுலோகம்:-

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

♦#மந்திரம்:-

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

♦#காயத்ரி_மந்திரம்:-

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

♥5. #வாராஹி
--------------------------

தன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம் | Varahi Amman  Mantra

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும், ஓய்வுதருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்
அவதாரங்களில் ஒன்றாகும்.

இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.

♦#தியானசுலோகம்:-

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

♦#மந்திரம்:-
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

♦#காயத்ரிமந்திரம்:-

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

♥6.#இந்திராணி:
   -----------------------------

திருமண வரம் அருள்வாள் அன்னை இந்திராணி - 3-ம் நாள் வழிபாடு!  #AllAboutNavratri | Third day of Navratri... worshipping goddess - Vikatan

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே! இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.

♦#தியானசுலோகம்:-

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

♦#மந்திரம்:-

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

♦#காயத்ரிமந்திரம்:-

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

♥7.#சாமுண்டி
-----------------------------

எதிரிகளிடமிருந்து நம்மை காக்கும் சாமுண்டி | samundi shapath kanniyargal

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

♦#தியான_சுலோகம்:-

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

♦#மந்திரம்:-

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

♦#காயத்ரிமந்திரம்:-

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்..

May be an image of yoga

ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம்

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

ரயிலில் சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் ...?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 AM | Best Blogger Tips

 May be an image of train and railway

இந்தியாவில் ஓடும் ரயில்களில் பெட்டிகளில் கடைசியில் படத்தில் காண்பது போன்ற சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு என்ன அதர்த்தம் என உங்களுக்கு தெரியுமா?
 May be an image of 1 person, train and railway
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழ்வில் ஒருமுறையாவது ரயிலில் பயணித்திருப்பார்கள் அந்த அளவிற்கு ரயில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.
 May be an image of train, railway and text
 அடிக்கடி ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் தெரியாமல் இருக்கும். அப்படியான ஒருவிஷயம் தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள் இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது இந்தியாவில் 1853ம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது 
 May be an image of train and text
அப்படி ஒரு நாள் வந்த மாற்றம் தான் இந்த மஞ்சள் நிற கோடுகள் பொதுவாக இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும் ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன் பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். 
 May be an image of 1 person and train
இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம் முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. பிளாட்பாராத்தில் பயணிகள் வரும் போது முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டு பிடிக்க இது இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. 
 May be an image of train and railway
அதே போலச் சென்னையில் ஒடும் மின்சார ரயிலிலும் இது போன்ற கோடுகள் இருக்கும், அந்த கோடுகள் முதல் வகுப்பு பெண்களுக்கான ரயில் பெட்டிகளைக் குறிக்கிறது. இந்த தகவல் பலருக்குத் தெரியாது.
 

 

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, smiling and text

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி ?
 
இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா லைப் செம சூப்பரா போகும் , 
 25 Beautiful Rural Indian Women Paintings by Tamilnadu artist ilayaraja
பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா .. சரி விஷயத்துக்கு வரேன்
பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம் ஆகிட்டா , அவங்களுக்கு உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , 
 
பிரிஎண்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன் 
 60 S ILAYARAJA PAINTINGS ideas | indian women painting, indian paintings,  indian artist
1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான் அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும் நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான் அவ பேசுவா 
 
 Realistic Oil Paintings By Indian Artist S Ilayaraja
2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது 
 
 Artist S Elayaraja | Buy S Elayaraja Original Paintings & Artworks Online |  ArtZolo.com
3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ .. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது .. அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும் 
 Artist S Elayaraja | Buy S Elayaraja Original Paintings & Artworks Online |  ArtZolo.com
3a. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும் ஆசையும் அதிகம் ஆகும் 
 Ilayaraja paintings - recruitmentbopqe
4. நீங்க எந்த விஷயத்துக்கு வேணும்னாலும் சண்டை போடுங்க பேசாம இருங்க ஆனா சண்டைபோடுற அப்போ மேட்டர் சம்பந்தமா நீங்க வெளிப்படையா பேசுனத எந்த காரணத்துக்காகவும் சொல்லிக்கமிக்க கூடாது .. நீங்க இவ்ளோ நாள் வெளிப்படையா இருந்ததை , சண்டையில சொல்லிட்டா எல்லாம் முடிச்சிடும் அப்புறம் ரொம்ப கஷடம் திரும்ப அந்த நிலைமைக்கு வரதுக்கு 
 color: S.Ilayaraja Paintings Collections
5. அவளை சுத்தி இருக்கவங்க சொல்லுற மாதிரி என் புருஷன் இல்லை அவன் ஜாலியான ஆளு அப்படின்னு அவ நெனைச்சி , உங்களுக்குள்ள நீங்க பேசுறத அவ வெளிய யாருகிட்டயும் சொல்லாம மறைக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும் , 
 

 
முனைவர் ஸ்ரீவளர்ராஜென்

 

கேப்டன் விக்ரம் பத்ரா.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 May be an image of 4 people

நான் இந்திய கொடியை ஏற்றிவிட்டு வருவேன் அல்லது அதே கொடியால் சுற்றப்பட்டு வருவேன்", "என் மனம் இன்னும் அதிக வெற்றிகளை கேட்கிறது" இவையெல்லாம் மறைந்த இந்திய இராணுவ வீரர் கேப்டன் விக்ரம் பத்ரா தனது குடும்பத்தினரிடமும், நாட்டு மக்களிடமும் விட்டுச் சென்ற பொன்மொழிகள்.
 
யார் இந்த விக்ரம் பத்ரா! ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் நிஜ ஹீரோவின் உன்மை வரலாறு தெரியுமா? 
 
கேப்டன் விக்ரம் பத்ரா 09 செப்டம்பர் 1979-ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிறந்தார். இரட்டையரான இவர்களில் விக்ரம் மூத்தவர் ஆவார். விக்ரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான கிர்தாரி லால் பாத்ரா, பள்ளி ஆசிரியையான கமல் காந்திற்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். விக்ரமுக்கு சீமா மற்றும் நூதன் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
 
விக்ரம் தனது ஆரம்ப கால கல்வி முழுவதையும் ஆசிரியையான தனது தாயிடமிருந்தே கற்றார். பின் மேற்படிப்பிற்காக பாலம்பூரில் உள்ள டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, பாலம்பூரில் உள்ள மத்திய பள்ளியில் தனது இடைநிலை கல்வியை முடித்தார். சிறுவயது முதலே பல்வேறு திறன்களைக் கொண்டிருந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கராத்தே, டேபிள் டென்னிஸ் மற்றும் பல விளையாட்டுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
 
சிறு வயதிலிருந்தே விக்ரம் பத்ராவிற்கு தேசபக்தி அதிகமாக இருந்தது. தனது 12-ஆம் வகுப்பில் 82 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற இவர் அதன் பிறகு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் பி.எஸ்.சி மருத்துவ அறிவியல் படிப்பை முடித்தார்.
தேச பக்திமிக்க கேப்டன்
அவர் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே என்.சி.சி (நேஷனல் கேடட் கார்பஸ்) ஏர் விங்கில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விக்ரம் என்.சி,சியின் கேப்டனாக உருவெடுத்தார். என்.சி,சியின் சி சான்றிதழுக்குத் தகுதி பெற்ற இவர் என்.சி.சியில் மூத்த அதிகாரிக்குக் கீழ் இயங்கும் பதவியையும் பெற்றார். தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க விக்ரம், அந்த நிகழ்விற்கு பிறகு தான் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதாகத் தனது பெற்றோரிடம் கூறினார்.
 
விக்ரம் இந்திய இராணுவத்தில் சேர தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த நேரம் 1995 ஆம் ஆண்டு பட்ட படிப்பை முடித்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சி.டி.எஸ்) தேர்வுக்கு தயாரானார். அதே சமயம் அவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ ஆங்கிலம் படிப்பிற்காகச் சேர்ந்திருந்தார். 
 
மேலும், பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே பல்கலைக்கழகத்தில் மாலை வகுப்புகளில் பயின்று வந்தார்.
.
​விக்ரம் பத்ராவின் இராணுவ வாழ்க்கை
விக்ரம் பத்ரா 1996-ஆம் ஆண்டு டேராடூனில் மனேகஷா பட்டாலியனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து அங்கு இராணுவ பயிற்சியை முடித்தார். அதில் அவரது திறமையைக் கண்ட அதிகாரிகள் 13-வது லெப்டினென்டாக ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸில் நியமித்தனர். அவரது முதல் வேலையே ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சபூர் நகரில் இருந்தது.
 
இந்திய கொடியை உயர்த்தி வருவேன்
ஒவ்வொரு முறை விக்ரமிற்கு விடுப்பு கிடைக்கும் போதும் அவரது சொந்த ஊரான பாலம்பூருக்கு வருவார். அவ்வாறு அவர் 1999 ஆம் ஆண்டு ஹோலி விழாவின் போது தனது வீட்டிற்கு வந்திருந்த போது அவரது காதலியான டிம்பிள் சீமாவையும் சந்தித்தார். அப்போது 'நான் இந்திய கொடியை வெற்றிகரமாக உயர்த்திய பின் வீட்டிற்கு திரும்ப வருவேன்' என்று கூறிச் சென்றார்.
 
கார்கில் போர் வெடிப்பு
அந்த சிறிய விடுப்பிற்கு பிறகு விக்ரம் தனது இராணுவ குழுவோடு இணைந்தார். ஜூன் 5 ஆம் தேதி கார்கில் போரும் வெடித்தது. அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் என அந்த தேசங்கள் பெயர் மாற்றப்பட்டன. போர் சமயங்களில் வாரம் ஒரு முறை தனது பெற்றோரிடம் விக்ரம் பேசி வந்தார். அவ்வாறு 29 ஜூன் 1999 அன்று அவர் பெற்றோருடன் பேசியதே கடையாகும்.
 
கேப்டன் பதவி பெற்ற விக்ரம்
1999 ஜூன் 19ம் தேதியன்று கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது லெப்டினெண்ட் விக்ரம் பத்ராவின் தலைமையிலான குழு 5140 புள்ளிகளை பெற்றது. இதனால் அவர் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின், ஜூன் 30 அன்று அவரது குழு முஷ்கோ பள்ளத்தாக்கிற்கு சென்றது. தொடர்ந்து, ஜூலை 7 அன்று அதிகாலையில் இந்திய இராணுவம் எதிரிகளோடு தாக்குதல் நடத்தியது.
 
விக்ரமின் மார்பைத் துளைத்த குண்டு
எதிரிகளோடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயம் காயமடைந்த அதிகாரியை மீட்க விக்ரம் அங்கு சென்றார். அப்போது, காயமடைந்த அதிகாரியிடம் உங்களுக்கு குடும்பம் உள்ளது, குழந்தைகளும் உள்ளன. நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்றார். தொடர்ந்து யதிகளைத் தாக்க முயன்ற போது எதிரி ஒருவனின் துப்பாக்கி குண்டுகள் விக்ரமின் மார்பைத் துளைத்தது. விக்ரம் கொல்லப்பட்டார்.
 
கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர மரணத்திற்கு பிறகு இராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது நினைவாக இந்திய இராணுவம் பல்வேறு இராணுவக் கட்டிடங்களுக்கும் கேப்டன் பத்ரா என்ற பெயரை சூட்டியது. அவரது நினைவாக அவர் சென்ற மலைக்கும் கூட பத்ரா டாப் என பெயரிடப்பட்டது.