வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 எப்போதும் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக  வாழ்வதற்கான 3 வழிகள்


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 


கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 


மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
சொர்க்கம் நம் வீட்டிலே... எப்படி? இப்படி... இசைக்கு இருக்கு அபார சக்தி!
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக
உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை
உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
ஆரோக்கியமான வாழ்க்கை: உணவு மற்றும் உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் தவிர்க்க  வேண்டியவை
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
 

தயவு செய்து


*வேர்க்கடலை,*
 

*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
 

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*


*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
 

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
 

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து 

*மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம்
சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
 

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட 

*மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
 

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 

*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் 

*சாத்தியமாகும்.*


*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... 

நன்றி - நமது நலனில் என்றும் உங்களுடன்.. பரதேசி  - 

தவ யோகேஷ்வர்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஐ பாகவதர்..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:10 AM | Best Blogger Tips

 May be an image of text that says "THEVARINA நசிறப்பு செய்தி கள் 24x7 கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஜ பாகவதர்"

 

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர்.
தனது புகழின் உச்சியிலும் மனதில் வைத்திருந்த ஒரு தீராத ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நேரில் சந்திப்பதே
 
அந்நாளில் இந்தியா முழுவதும் பெயர் பெற்ற பாகவதரின் புகழ், அக்கால அரசியல் தலைவர்களின் புகழையும் மிஞ்சியதாக கூறப்பட்டது. அரசியலில் சேருமாறு அழைப்புகள் வந்தபோதும், அவர் அதை மரியாதையுடன் நிராகரித்தார். 
 
ஆனால் தேவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிலைத்திருந்தது.
காலம் மாறியது. வாழ்க்கை சோதனைகள் சூழ்ந்தன. புகழ் குறைந்து, பல துன்பங்களை சந்தித்த பாகவதர், கண்பார்வையையும் இழந்த நிலையில் இருந்தார். 
 
அந்த சமயத்தில் தேவர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக ரயிலில் வருவதாக அறிந்த அவர், திருச்சி ரயில் நிலையம் சென்று காத்திருந்தார். 
 
தேவரும் அவரை சந்திக்க சம்மதித்து ரயிலிலிருந்து இறங்கினார். பார்வையற்ற பாகவதர், “அவரை தொட்டு உணர வேண்டும்” என்று கேட்டார்.
 
தேவரை தழுவிய அந்த நொடியில் பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். “இந்த பிறவி எடுத்த கடன் முடிந்தது போலிருக்கிறது.
இவர் மனிதப் பிறவி அல்ல; சாட்சாத் முருகப்பெருமானின் அவதாரம்” என்று தழுதழுத்த குரலில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 
 
அந்த சந்திப்பு ஒரு மனிதரைச் சந்தித்த தருணம் மட்டும் அல்ல; ஒரு ஆன்மீக அனுபவமாக அவர் உணர்ந்த தருணமாக நினைவுகூரப்படுகிறது.
 
அவரது நிலையை அறிந்த தேவர், பாகவதருக்கு பொருளுதவியும் செய்ததாக கூறப்படுகிறது. பலரின் நினைவில் தேவர் வாழ்ந்த காலத்திலேயே சித்தராகவும், மறைந்த பின் தெய்வமாகவும் உயர்ந்தவர் என்ற மரியாதை நிலைத்தது.
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷