எளிய முறையில் சரணாகதி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:06 | Best Blogger Tips

 38. சரணாகதி- Dinamani38. சரணாகதி- Dinamani

எளிய முறையில்

சரணாகதி விளக்கம்

மாட்டு வண்டிக்கு

உயிர் இல்லை

மாட்டுக்கு

உயிர், அறிவு

இரண்டும் உண்டு

ஆனால்

*வண்டிக்காரன்*

உயிரில்லாத

வண்டியை

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி

எந்த இடம் செல்ல

வேண்டும்

என்பதை தீர்மானித்து,

வண்டியை

செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்

ஒன்றும் செய்ய

இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற

ஜட வண்டியை

ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

எவ்வளவு காலம்..

எவ்வளவு நேரம்..

எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது இறைவனே*

இதுதான்

நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*

*இனியது செய்வோமே*!.

 

 


நன்றி இணையம்

 

ராவணனை வணங்கி உபதேசங்களை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:46 | Best Blogger Tips

ராவணன் உபதேசம் – chinnuadhithya

ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது.

அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார்.

லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்

லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை | Lakshmanan sought advice from Ravana -  fnewsnow.com

லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான்.

லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா?

நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே.

ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன்.

சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். அனுப்பக்கவுண்டர்

அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

 

 


நன்றி இணையம்