கடவுள் ......!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:32 | Best Blogger Tips

 கவியரசர் கண்ணதாசன் KAVIYARASAR KANNADASAN | Facebook

 

கடவுள் எப்படிப்பட்டவன்?

கவியரசன் கண்ணதாசன் சொன்னது.

ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.

மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.

அவன் தான் கடவுள்

பூலோகத்தில் வாழும் போது புகழையும் கொடுப்பான்.

பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.
செல்லியல் பார்வை : “மலேசியாவில் கண்ணதாசன்” – சில நினைவுகள் | Selliyal -  செல்லியல்

அவன் தான் கடவுள்

பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.

அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.

பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.

அவன் தான் கடவுள்

கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.

அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.

அவன் தான் கடவுள்
சனாதன தர்மம் குறித்து கவியரசர் கண்ணதாசன் என்ன சொல்லியுள்ளார்?

ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.

பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை  புலிக்கும் கொடுப்பான்.

அவன்தான் கடவுள்

அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.

அதை முழுவதும் பயன் படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.

அவன் தான் கடவுள்

தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.

அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.

அவன்தான் கடவுள்

‌நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.

அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.

அவன் தான் கடவுள்

புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.

தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.

அவன் தான் கடவுள்

கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.

தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.

அவன் தான் கடவுள்

மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.

சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.

பின்னிருந்து இயக்குவான்.

அவன் தான் கடவுள்

தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.

(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.

அவன் தான் கடவுள் கண்ணதாசன் ஆன்மிக சி்தனைகள் பதிவில் இருந்து.


Thanks from Web


கடைசியில் எல்லோரும் சிவனே நீயே கதி என்று சொல்வது ஏன் ?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:28 | Best Blogger Tips

 சிவனும் விஷ்ணுவும் நீல நிறத்தில் இருப்பது ஏன்? - QuoraView and Download Annamalaiyar Photos Photos, Images and Wallpapers | Ram  wallpaper, Tanjore painting, Lord shiva painting

 


சிவபெருமான் தான் காப்பாற்றியதாக கூறிய பிரிட்டிஷ் அதிகாரியின் கதை!
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏
ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺 🙏🙏
மந்திரத்தை அவர் 11 நாட்கள் பக்தியுடன் உச்சரித்தார். சரியாக பதினோராம் நாள் கர்னலிடமிருந்து கடிதம் வந்தது.
இந்து மதம் அற்புதங்களின் புனைவுகளால் நிறைந்துள்ளது; 
 
மனிதர்களாகப் பிறந்த கடவுள்களின் மனிதாபிமானமற்ற செயல்கள்; மற்றும் பல்வேறு இந்துக் கடவுள்களில் ஒருவரால் தரிசிக்கப்பட்டதாகக் கூறும் மனிதர்கள். ஆனால் பின்வரும் கதை மிகவும் தனித்துவமானது.
 
ஒரு இந்து தனது கனவில் ஒரு இந்துக் கடவுளைக் காண்கிறான் அல்லது நிஜ வாழ்க்கையில் ஒரு கடவுளின் தரிசனத்தைக் காண்கிறான், அது நம்பத்தக்கது, ஏனென்றால் அந்த நபர் அந்தக் கடவுளை மதிக்கிறார். ஆனால் ஒரு கிறிஸ்தவர் இந்து கடவுளைக் காண்பதாகக் கூறுகிறார், அவர் மனிதனின் உயிரைக் காப்பாற்றுகிறார்… அது கேள்விப்படாதது.
 
சிவபெருமான் - இரட்சிப்பவர்
 
அது 1879, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டனர். பிரித்தானிய இராணுவத்தில் ஒரு அதிகாரி, அகர் மால்வாவின் லெப்டினன்ட் கர்னல் மார்ட்டின், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் இராணுவத்தை வழிநடத்தினார்.
annamalaiyar deepam
கர்னல் மார்ட்டின் தனது மனைவிக்கு தனது நலம் குறித்த செய்திகளை அடிக்கடி அனுப்புவார். போர் நீண்ட காலத்திற்கு நீடித்தது மற்றும் லேடி மார்ட்டின் தனது செய்திகளைப் பெறுவதை நிறுத்தினார். இது இயல்பாகவே அவளுக்குக் கவலையாக இருந்தது.
 
ஒரு நாள், அவள் குதிரையின் மீது ஏறிக்கொண்டிருக்கும்போது, ​​பைஜ்நாத் மகாதேவ் கோயிலைக் கடந்து சென்றாள். சங்கு மற்றும் மந்திரங்களின் ஓசைகள் அவளைக் கவர்ந்தன. கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, ​​பிராமணர்கள் சிவபெருமானை வழிபடுவதை அறிந்தாள்.
 
பிராமணர்கள் அவளைப் பார்த்தார்கள், அவள் சோகமாகவும் பதட்டமாகவும் இருப்பதைக் கவனித்தனர். அவர்கள் என்ன விஷயம் என்று கேட்டார்கள், அவள் அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கினாள். சிவபெருமான் பக்தர்களின் வேண்டுதலைக் கேட்டு, கடினமான சூழ்நிலைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்கிறார் என்று சொன்னார்கள்.
Mahadeepotsavam: నేడు మహాదీపోత్సవం | Mahadeepotsavam: Today is  Mahadeepotsavam ksv
பிராமணர்களின் ஆலோசனையின் பேரில், அவர் 11 நாட்களுக்கு 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தின் 'லகு-ருத்ரி அனுஷ்டானத்தை' தொடங்கினார். தன் கணவர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால், கோயிலைப் புதுப்பிக்க வேண்டும் என்று சிவனிடம் வேண்டினாள்.
'லகுருத்ரி'யின் கடைசி நாளில், ஒரு தூதர் வந்து அவளுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அது அவள் கணவரிடம் இருந்து வந்தது. அவர் எழுதியிருந்தார் – “போர்க்களத்திலிருந்து நான் உங்களுக்குத் தொடர்ந்து செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன், ஆனால் திடீரென்று பதான்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் எங்களைச் சூழ்ந்தனர். மரணத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொண்டோம். திடீரென்று, இந்தியாவின் யோகி நீண்ட முடியுடன், மூன்று சுட்டிகள் (திரிசூலம்) கொண்ட ஆயுதத்தை ஏந்தியிருப்பதைக் கண்டேன். அவரது ஆளுமை அற்புதமானது மற்றும் அவர் தனது ஆயுதத்தை அற்புதமான பாணியுடன் சூழ்ச்சி செய்தார்.
இந்தப் பெரியவரைப் பார்த்ததும் பதான்கள் திரும்பி ஓட ஆரம்பித்தனர். அவருடைய அருளால் நமது கெட்ட காலங்கள் வெற்றியின் தருணங்களாக மாறியது. சிங்கத்தோலை அணிந்து, மூன்று முனை ஆயுதத்தை (திரிசூலம்) ஏந்திய இந்திய மனிதனால் மட்டுமே இது சாத்தியமானது. அந்தப் பெரிய யோகி, நான் கவலைப்பட வேண்டாம் என்றும், என் மனைவியின் பிரார்த்தனையில் மிகவும் மகிழ்ந்து என்னைக் காப்பாற்ற வந்திருப்பதாகவும் கூறினார்.
கடிதத்தைப் படித்த லேடி மார்ட்டின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவள் சிவபெருமான் சிலையின் காலில் விழுந்து கண்ணீர் விட்டாள்.
சில வாரங்களுக்குப் பிறகு, கர்னல் மார்ட்டின் திரும்பினார். கர்னல் மார்ட்டினின் உயிரைக் காப்பாற்றிய சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்க இருவரும் பைஜ்நாத் மகாதேவ் கோயிலுக்குச் சென்றனர். அப்போது தான், தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் தோன்றிய யோகியுடன் சிவபெருமானின் அற்புதமான ஒற்றுமையை அவர் உணர்ந்தார்.
 
இருவரும் சிவபக்தர்களானார்கள். அவர்கள் கோயில் வளாகத்தை மீண்டும் கட்டுவதற்கு உதவினர் மற்றும் அதன் பராமரிப்புக்காக பணத்தை நன்கொடையாக வழங்கினர். கோவில் வளாகத்தில் உள்ள பலகையில் பிரிட்டிஷ் தம்பதியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை, பைஜ்நாத் மகாதேவ் கோயில்தான் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நாட்டிலுள்ள ஒரே இந்துக் கோயில்!
சிவனை நேரில் பார்த்த ஆங்கிலேயர்... ஈசன் எப்படி இருந்தார் அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்த ஆச்சரியம்
 
பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை இங்கு பார்ப்போம். சிவன் எல்லோருக்காமான இறைவன் என்பதை இந்த ஆங்கிய தம்பதியர் மூலம் நாம் உணர முடியும். ஆங்கிலேய படை தளபதியை காக்க நேரில் தோன்றிய சிவ பெருமானை அவரே வர்ணித்து அனுப்பிய கடிதம், தற்போது பைஜிநாத் மஹாதேவ் கோயிலில் கல்வெட்டாக உள்ளது. அவர் ஈசனை வர்ணித்தைதையும், கோயில் உருவான விதமும் இங்கு பார்போம்.
சிவனை நேரில் பார்த்த ஆங்கிலேயர்... ஈசன் எப்படி இருந்தார் அவரின் ஆனந்த ரூபத்தை விவரித்த ஆச்சரியம்
 
பைஜிநாத் மஹாதேவ் கோயில் கட்டிய ஆங்கிலேயரின் சிவ பக்தி கதையை இங்கு பார்ப்போம். சிவன் எல்லோருக்காமான இறைவன் என்பதை இந்த ஆங்கிய தம்பதியர் மூலம் நாம் உணர முடியும். ஆங்கிலேய படை தளபதியை காக்க நேரில் தோன்றிய சிவ பெருமானை அவரே வர்ணித்து அனுப்பிய கடிதம், தற்போது பைஜிநாத் மஹாதேவ் கோயிலில் கல்வெட்டாக உள்ளது. அவர் ஈசனை வர்ணித்தைதையும், கோயில் உருவான விதமும் இங்கு பார்போம்.
அதிசயம் நடத்திய ஈசன் 

இறைவன் எல்லைகளைக் கடந்தவன் என்பதை உணர்த்தும் வகையில், சரணடைந்தவருக்கு தன் காத்தருளுவான் என்பதை இந்த உண்மை சம்பவம் விவரிப்பதாக உள்ளது. யோக யாத்ரா என்ற புத்தகத்தில் இந்த அற்புத நிகழ்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி இருந்தனர் என்பது நமக்கு தெரியும். 1879ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரியாக இருந்த லெப்டினண்ட் கலோனல் சி மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தினார்.
 
கடிதம் நின்று போனது:
 
கர்னல் மார்டின் குறிப்பிட்ட நாள் இடைவெளிக்கு ஒருமுறை தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதம் அனுப்புவது வழக்கம். ஆனால் போருக்கு சென்ற இடத்தில் மார்டினுக்கு சில சிக்கல்கள் சந்திக்க நேரிட அவரால் மனைவிக்கு கடிதம் அனுப்ப முடியவில்லை.
கடிதம் வராததால் மனம் நொந்த கர்னலின் மனைவி, ஒருநாள் குதிரையில் சவாரி சென்ற போது, அவரின் கண்ணில் பைஜிநாத் கோயில் தென்பட்டது.
 
அந்த கோயிலிலிருந்து வந்த சங்கின் ஒலி, சிவ மந்திர ஒலிகள் அவரை ஈர்த்து கோயிலுக்குள் செல்ல தூண்டியது.
உள்ளே சென்ற அவர் அங்கு பூஜை செய்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டு, தன் துயரை அவர்களிடம் விளக்கினார். வேதியர்கள் உங்களின் துயர் துடைக்க சிவ பெருமானால் தான் முடியும். அவர் தன்னை அண்டியவர்களின் துயரை நீக்கி இன்பத்தை அளிக்கக் கூடியவர்.
 
கர்னல் மார்டினின் மனைவிக்கு ‘ஓம் நமச்சிவாய’ என்ற லாகுருத்ரி அனுஷ்டான மந்திரத்தைக் கூறி, இதனை 11 நாட்கள் தொடர்ந்து உச்சரித்து பிரார்த்தனை செய்து வாருங்கள் உங்கள் துயரை துடைப்பார் என்றனர்.
 
அதிசயம் நடத்திய ஈசன் கர்னலின் மனைவி, தன் கணவன் எந்த துயரமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தைப் புதுப்பித்து தருவதாக பிரார்த்தித்துக் கொண்டு வீடு திரும்பினார்.
 
‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை அவர் 11 நாட்கள் பக்தியுடன் உச்சரித்தார். சரியாக பதினோராம் நாள் கர்னலிடமிருந்து கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில், “போர்க்களத்தில் இருந்தாலும் தொடர்ச்சியாக உனக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் எங்களை எதிரிகள் நாளாப் புறமும் சூழ்ந்து கொண்டனர். நாங்கள் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டோம்.
 
உயிர் பிழைக்க எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத நிலையில், அங்கு நீண்ட சடையுடன் கூடிய ஒரு இந்திய துறவியைக் கண்டேன். அவர் கைகளில் மூன்று முனைகளுடன் கூடிய கூறிய ஆயுதம் வைத்திருந்தார்.
 
அவரின் தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் இருந்தது. அவர் வைத்திருந்த ஆயுதத்தை கையாண்ட விதம் பிரமிக்க வைத்தது.
சிவனின் திருமேனி அவரின் பராக்கிரமத்தைப் பார்த்த எதிரிகள் பின் வாங்கி ஓடிவிட்டனர். தோல்வியை தழுவ வேண்டிய தருணத்தை அப்படியே மாற்றி வெற்றியை பெற்றது அவரால் தான்.
 
இதற்கெல்லாம் புலித்தோலை அணிந்தவரும், கையில் மூன்று முனை கொண்ட கூறிய ஆயுதமுமே காரணம். அவர் அங்கிருந்து செல்லும் போது, உன் மனைவி பிரார்த்தனை மூலமாக கேட்டுக் கொண்டதன் காரணமாக தான் காக்க வந்ததாக கூறினார்.
தற்போது இங்கு எந்த பிரச்னையும் இல்லை. விரைவில் திரும்புவேன்.” என எழுதியிருந்தார்.
 
காத்தருளிய ஈஸ்வரன்
இந்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த கணமே கர்னலின் மனைவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
பிரார்த்தனைக்கு இணங்க கணவரை சிவனே நேரில் சென்று காத்தருளியதால், அவரின் பாதங்களில் சரணடைந்தார்.
சில நாட்களில் கர்னல் மார்ட்டின் வீடு திரும்பிய பின்னர் நடந்த விஷயங்களை அவரது மனைவி கூற, இருவரும் சிவ பக்தர்களாக மாறினர்.
 
அவரின் வேண்டுதலில் படி 1883ல் கர்னல் மற்றும் அவரின் மனைவி ரூ. 16,000 ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடையாக அளித்தனர்.
இந்த குறிப்பு இன்றும் பைஜிநாத் ஆலயத்தில் கல்வெட்டுகளாக உள்ளன. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே கோயில் இதுவாகும்.

 


Thanks from Web