பரங்கிக்காய் சூப்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:26 | Best Blogger Tips
பரங்கிக்காய் சூப் 

மருத்துவ குணங்கள்:

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

தேவையான பொருள்கள்:

பரங்கிக்காய் = 1 துண்டு
தக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3 பல்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
பால் =  அரை கப்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி = சிறிதளவு
செய்முறை:

பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.

பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

சூடான ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.


மருத்துவ குணங்கள்:

பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
பரங்கிக்காய் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. நீர்ப்பை கோளாறுகள், வயிற்று கோளாறுகள், குடல் புழுக்கள், சிறுநீர் கோளாறுகள், வாத நோய், தீக்காயங்கள் மற்றும் சிறுநீரக வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை குறைக்கும். இவை உடலுக்கு ஊட்டம் மற்றும் சக்தியை அளிக்கிறது.
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

தேவையான பொருள்கள்:

பரங்கிக்காய் = 1 துண்டு
தக்காளி = 1
வெங்காயம் = 1
பூண்டு = 3 பல்
மிளகுத்தூள் = 1 ஸ்பூன்
பால் = அரை கப்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கொத்தமல்லி = சிறிதளவு
செய்முறை:

பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.

பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

சூடான ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணேய் சாத்துவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:21 | Best Blogger Tips
ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெண்ணேய் சாத்துவது ஏன்?
-------------------------------------------------------------------
தியாகத்திற்கும்,நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ஆஞ்சநேயர்.ராமனின் மீதுள்ள அன்பினாலும்,பக்தியாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பல உதவிகள் செய்தவர்.

ராம ராவண போர்க்களத்தில்,ராமனையும்,லட்சுமணையும் தன் இரு தோள்களிலும் சுமந்துகொண்டு செல்லும் போது ராவணன் தன் வில்லினால் ஏகப்பட்ட அம்புகள் மூலம் அனுமனை தாக்குகிறார் அதில் அனுமனுக்கு காயங்கள் ஏரளாம் மேலும் போர்க்களத்தில் அனுமன் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.ராம சேவைக்காக தன் உடம்பையே புண்ணாக்கிகொண்டவர்.

அந்த புண்கள் ஆறுவதற்கு உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெண்ணெயை தடவினார்கள்.அதனால்தான் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் பழக்கம் வந்தது.இன்னொரு தத்துவமும் சொல்லப்படுகிறது வெண்ணெயின் நிறம் வெண்மையாகும் அதேபோல் வெள்ளையான மனம் கொண்டவர்களை தன்னிடம் அனுமன் இணைத்துகொள்வார் என்பதை உண்ர்த்தவே வெண்ணெய் சாத்தும் பழக்கம் ஆகும். 

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிட்ரமணியன்.
தியாகத்திற்கும்,நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ஆஞ்சநேயர்.ராமனின் மீதுள்ள அன்பினாலும்,பக்தியாலும் தன்னுயிரையும் பொருட்படுத்தாது பல உதவிகள் செய்தவர்.

ராம ராவண போர்க்களத்தில்,ராமனையும்,லட்சுமணையும் தன் இரு தோள்களிலும் சுமந்துகொண்டு செல்லும் போது ராவணன் தன் வில்லினால் ஏகப்பட்ட அம்புகள் மூலம் அனுமனை தாக்குகிறார் அதில் அனுமனுக்கு காயங்கள் ஏரளாம் மேலும் போர்க்களத்தில் அனுமன் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.ராம சேவைக்காக தன் உடம்பையே புண்ணாக்கிகொண்டவர்.

அந்த புண்கள் ஆறுவதற்கு உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெண்ணெயை தடவினார்கள்.அதனால்தான் அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் பழக்கம் வந்தது.இன்னொரு தத்துவமும் சொல்லப்படுகிறது வெண்ணெயின் நிறம் வெண்மையாகும் அதேபோல் வெள்ளையான மனம் கொண்டவர்களை தன்னிடம் அனுமன் இணைத்துகொள்வார் என்பதை உண்ர்த்தவே வெண்ணெய் சாத்தும் பழக்கம் ஆகும்.

அன்புன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிட்ரமணியன்.

தமிழ் தாய் வாழ்த்து !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:20 | Best Blogger Tips
Photo: ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 100 கோடியில் சிலை வைப்பதை விட !
ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம் கலாச்சாரம் பண்பாடு போற்றும் ஆங்கில பாடல்கள் தான்" !

தமிழக அரசால் போற்றப்படும் இந்த தமிழ் தாய் வாழ்த்தும் இதை எழுதியவர் தெய்வத்திரு.மனோன்மணியம் சுந்தரனார் என்பது அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும்.... இந்த பதிவில் எனக்கு தெரிந்த (படித்த) இந்த அறிய பாடல் பற்றி வேறு சில விவரங்களும் , இந்த பாடலின் பொருளையும் தங்களுடன் பகிரலாம் என்பது என் எண்ணம் -- தெரிந்தவர்கள் பொருளிலோ தந்துள்ள விவரத்திலோ ஏதாவது விடு பட்டிருந்தால் / தவறாக கூற பட்டிருந்தால் தயவு கூர்ந்து தெரிவிக்கவும் .

தெய்வத்திரு . சுந்தரனார் அவர்கள் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க்கு தொண்டாற்றிய பெரும் மேதைகளில் முக்கியமானவர். இவர் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். மனோன்மணியம் என்னும் நாடக நூல் - இவர் எழுதிய மிகப்பெரிய படைப்பாகும்.
இந்த மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன்1970 இல் அறிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் தெரிந்த அந்த பாடல் இதோ ...அதன் பொருளும் தந்துள்ளேன் ...

பாடல் :
~~~~~~

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அறிஞர்களின் பொருள் :
~~~~~~~~~~~~~~~~~~~

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும் பொருத்தமான. பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!

இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

எளியவார்த்தையில் :
~~~~~~~~~~~~~~~~~~
அதாவது -- இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பரந்த இந்த கடல் தான் ஆடை ...பாரத நாடே அவளின் முகம் ...தென்திசை அதன் நெற்றியாம்.... அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் ...அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இன்னொரு செய்தி ....

தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக கொண்ட மற்றொரு மாநிலமான புதுச்சேரியில் - புதுச்சேரி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வாழ்த்துப்பாடலை எழுதியவர், தமிழ் உலகுக்கு பெரும் தொண்டாற்றிய தெய்வத்திரு. பாரதிதாசன்...இதோ அந்த பாடல் .. பாடலே எளிய முறையில் இருப்பதால் பொருள் தனியாக தேவையில்லை ... இந்த பாடல் தான் புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் பாட படுகிறது ( நான் என்னுடைய +1, +2 புதுவை மாநிலம்- காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல் நிலை பள்ளியில் படித்தேன் ..இந்த பாடல் தான் காலை வணக்க கூட்டத்தில் பாட படும் )


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

கடைசியாக ...

இப்படி எத்தனை எத்தனையோ பாடல்கள் படைப்புகள் நம் மொழியில் ஒன்றன கலந்துள்ளன - அவைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றாலே அது இந்த தமிழ் அன்னைக்கு பெரும் தொண்டாகும் ..... 100 கோடியில் சிலை வைப்பதை விட !
 
Via FB Palladam Siva Gurunathan

ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips


முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக் கற்க இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

சரி பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துள்ளோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. I do a Job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need to do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.

51. Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52. It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53. I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54. I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55. I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56. To do a job I am going to America.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் அமெரிக்காவுக்கு

57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58. Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59. Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.

60. I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61. I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62. I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63. I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64. I have been doing a job.
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66. I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67. I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68. I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69. I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70. If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71. If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.

72. If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:
உதாரணமாக மேலே நாம் கற்றப் பாடத்தில் "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என்று வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யையும் இணைத்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.


கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே எளிதாக உங்கள் மனதில் பதியக் கூடியதாக இருக்கும்.

1. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகின்றேன் ஒரு கடிதம்.
3. I play cricket.
நான் விளையாடுகின்றேன் கிரிக்கெட்.
4. I fill up the form.
நான் நிரப்புகின்றேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கின்றேன் வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகின்றேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகின்றேன் உந்துருளி.

கவனிக்கவும்
உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை:

I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என (மேலே எடுத்துக்காட்டியுள்ளதைப் போன்று) அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Long Forms = Sort Forms

Do + not = Don’t
Does + not = Doesn’t
Did + not = Didn’t
Will + not = Won’t
Was + not = Wasn’t
Were + not = Weren’t
Can + not = Can’t
Could + not = Couldn’t
Have + not = Haven’t
Has + not = Hasn’t
Had + not = Hadn’t
Need + not = Needn’t
Must + not = Mustn’t
Should + not = Shouldn’t
Would + not Wouldn't

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

அன்புடன்


அருண் HK Arun
aangilam.blogspot

'இட்லிக்கு சட்னி ! மனுஷனுக்கு...?'..கிட்னி! (கிட்னி முக்கியம்)

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:49 | Best Blogger Tips

மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம் என்ற கிட்னி. பல நேரங்களில் சினிமா கதாபாத்திரங்கள் அவசரச் செலவுக்கு இரு கிட்னிகளில் ஒன்றை விற்பதை பார்க்கலாம்.


Photo: 'இட்லிக்கு சட்னி ! மனுஷனுக்கு...?'..கிட்னி!
(கிட்னி முக்கியம்)

மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம் என்ற கிட்னி. பல நேரங்களில் சினிமா கதாபாத்திரங்கள் அவசரச் செலவுக்கு இரு கிட்னிகளில் ஒன்றை விற்பதை பார்க்கலாம்.

உலக மக்களிடையே சிறு நீரகத்தின் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் சர்வதேச சிறுநீரக தினம் ( World Kidney Day, March 13)  மார்ச் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உடலில் எந்த உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் அதை சரி செய்துவிடலாம். ஆனால், சிறு நீரகத்தில் கோளாறு என்ரால் அதை சரி செய்ய முடியாது. வேறு சிறுநீரகத்தை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இதிலும், ஆரம்ப நிலையில் கவனித்து விடுவது நல்லது. பாதிப்பு முற்றிவிட்டால் மாற்று சிறுநீரகம் கூட பொருத்துவது கடினம்தான்.

நமது உடலில் கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகம்தான். இது பாதிக்கப்பட்டால் உடலில் கழிவுநீர் தேங்கிவிடும்.

உணவு பழக்கம் தான் சிறுநீரகக் கோளாறுக்கு காரணம் என்றாலும் பரம்பரை நோய் காரணமாக இருக்கிறது.

பொதுவாக, கிருமி பாதிப்பு, விபத்தால் சிறுநீரகம் பாதிப்பு, சிறுநீரக அடைப்பு, சிறுநீரக புற்றுநோய் போன்றவற்றால் இந்த பாதிப்பு வருகிறது. அடுத்து மிக முக்கியமானது, நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சோதித்துக் கொள்வது நல்லது.

சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்தால் வயிற்று வலி ஏற்படும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீர் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்தச் சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் கரைக்கும் மருத்துவச் சிகிச்சை இருக்கிறது.

சிறுநீரகம், மனித உடலில் நீர் சமநிலையை காப்பாற்றி வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியேற்றும் ஜோடி உறுப்பு.

மனித சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் சுமார் 10 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளன. இவை ஒவ்வொரு 45 நிமிடமும் ரத்தத்திலுள்ள சுமார் 4.5 லிட்டர் தண்ணீரை வடிகட்டுகின்றன. குளுக்கோஸ், கனிமப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை மீள் உறிஞ்சல் மூலம் ரத்தத்துக்கு திருப்புகின்றன. மீதமுள்ள திரவமும், கழிவுகளும் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. கிட்னி ஒன்றில் 10 லட்சத்துக்கும் மேலான நெஃப்ரான்ஸ் என்னும் ரத்தக் குழாய்கள்  வடிகட்டுதல் மற்றும் மீள் உறிஞ்சல் பணியை மேற்கொள்கின்றன.

 சிறுநீரகத்தின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டால் சிக்கல்தான். அதாவது உடலிலிருந்து சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்துவிடும் அல்லது வெளியேறுவது முற்றிலும் நின்று விடும். கூடவே, ரத்தத்தில் ரசாயனப் பொருள் சமநிலை சீர்கெட்டு, யூரியாவின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். எலும்புகள் கால்சியத்தை இழக்கின்றன. மேலும், நரம்புகள் சீர் கெடுகின்றன. சுமார் 90% செயல் இழக்கும் வரை சீறு நீரகங்கள் வாழ்க்கையை நீடிக்க செய்கிறது. சிறு நீரகங்களில் ஒன்றை நீக்கி விட்டால், மற்றொன்று அளவில் பெரிதாகி மற்றொன்றின் பணியையும் சேர்த்து செய்கிறது. இரண்டும் செயல் இழந்தால் டயாலிஸிஸ் அல்லது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

70 விழுக்காடு பழுதுபட்டாலும் 30 விழுக்காடு நுண் குழாய்கள் கூடுதல் சுமையோடு பணியாற்றக்கூடியது சிறுநீரகங்கள். அந்த 70 விழுக்காடும் பழுது ஏற்படாமல் பாதுகாப்பதே இன்று முக்கிய அவசர, அவசிய பணியாக உள்ளது.

தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை சிறுநீரகம் செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. அபூர்வமாக சிலருக்கு இயற்கையிலோ அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு.

நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கட்டுரை இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும்.

ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கேன் செய்யும் போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்படுவது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு, அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தந்தவர்களும் உண்டு. இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்கியமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது.

இப்படிப்பட்டவர்களில் மிகச்சிலருக்கு 10-15 வருடங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும் முறையான இடைவெளிகளில் (6வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுத்தவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கும் பொருந்தும்.

அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.

அந்தத் தலையாய பணியின் ஒருபகுதியாக மக்களிடையே சிறுநீரகம் குறித்த மருத்துவ விழிப்புணர்வினை ஏற்படுத்தவே  மார்ச் 11-ம் நாள் உலக சிறுநீரக நாள் என்று அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

சிறுநீரகம் என்றால் என்ன?

1. நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று.

2. உலகின் மிகச்சிறந்த - மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்.

3. கருவி¢ல் நான்காவது மாதத்திலிருந்து துவங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு.

4. வயிற்றின் பின் பகுதி-விலா எலும்பிற்குக் கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் சிறுநீரகங்கள் இரண்டு உள்ளது.


செயல்பாடுகள்:

1. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் கழிவுநீர் வடிகட்டப்பட்டு சராசரியாக 1.5 லிருந்து 2 லிட்டர் சிறுநீரக வெளியேற்றப்படுகிறது.

2. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை மூத்திரமாக வெளியேற்றுவது ஒன்று மட்டுமே சிறுநீரகங்களின் செயல் அல்ல.

3. உடலில் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவது.

4. உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும்,

5. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும்.

6. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும்,

7. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும்.

8. அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.

சிறு நீரங்கள் செயல்படவில்லை எனில்

1. இரத்த அசுத்தமாகும்.

2. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.

3. தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்களின் சமநிலையில் பாதிப்பேற்பட்டு உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

4. இதன் விளைவாக மூச்சுத்திணறல், நினைவிழத்தல், இரத்தக்கொதிப்பு உண்டாகி சிறுந¦ரகங்கள் செயலிழந்து இறுதியில் மரணமேற்படும்.

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன? அறிகுறிகள், காரணங்கள்:

கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர்

சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர பிரியாத நிலை மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம¢, கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்பட்டு இதயம், மூளை, நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

உடன் வரும் சிறுநீரக செயலிழப்பு, நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீண்டநாள் இரத்தக்கொதிப்பு, நீண்டநாள் நீரிழிவு, பரம்பரை குடும்பவழி மரபணுக்கள் பாதிப்பு, நாட்பட்ட சிறுநீர்குழாய் அடைப்பு, வலிநிவாரணிகளையும், இரசாயன பொருட்களையும் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரக இரத்தக்குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் ஏற்படுவது நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பாகும்.

பாம்புக்கடி, கதண்டுவண்டுகடி, மலேரியா கொசுக்கடி, லெப்டோ பைரோசிஸ் என்ற உயிர்கொல்லி, வயிற்றுப் போக்கு, பிரசவகாலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, கருக்கலைப்பின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு உடன்வரும் சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.

இந்தப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுப் பொருட்களை சுத்திகரித்து நீக்க வேண்டும். அப்படிப் பிரித்து நீக்குவதைத் தான் டயாலிசிஸ் என்று சொல்கின்றோம்¢.

இது வியாதியின் தன்மையினைப் பொருத்து சிலருக்கு சில நாட்கள் அல்லது சிலவாரங்கள் தேவைப்படும். அதுபோன்றே சிலருக்கு வாழ்நாள் முழுமைக்கும் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை வரைக்கும் தேவைப்படும்.

டயாலிசிஸ் இரண்டு வகைப்படும். அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.

ஹீமோ டயாலிசிஸ்:

இது உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரகமாக ஒரு இயந்திரம் செயல்பட்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

நோயாளியின் கையில் பிஸ்டுலா என்ற சிறு அறுவை சிகிச்சையின் மூலம் இரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டு, இணைக்கப்பட்ட இரத்தக்குழாய் 3 அல்லது 4 வாரங்களில் வளர்ச்சியடைந்து டயாலிசிஸ் செய்ய ஏற்றவாறு செய்யப்படுகிறது.

நோயாளிக்கு இரத்தத்தில் யூரியா, கிரியாடினின் அளவு அதிகரித்து மூச்சுத்திணறல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்ற போது பிஸ்டுலா வழியாக டயாலிசிஸ் செய்யப்படும்.

நோயாளி துவக்ககாலத்தில் மருத்துவரை அணுகாமல் நாட்கள் கடந்துவந்தால் கைகளி¢ல் செய்யப்படுகின்ற அறுவை சிகிச்சைக்கு பதிலாக கழுத்திலோ, நெஞ்சிலோ அல்லது தொடையிலோ சிறிய குழாயினை செலுத்தி இரத்தத்தினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு செய்தால் குழாயினை அதே இடத்தில் அதிக நாட்கள் வைத்துக் கொள்ள இயலாது எனவே, கையில் பிஸ்டுலா செய்துகொள்வதே சிறந்தது.

பெரிடோனியல் டயாலிசிஸ்;

இதில் நோயாளியின் வயிற்றில் துளையி¢ட்டு ஒரு குழாயினை செருகி, அந்த இரப்பர் குழாய் மூலமாக வயிற்றுக்குள் திரவத்தினை செலுத்தி 4 அல்லது 5 மணி நேரத்திற்குப் பிறகு அத்திரவத்தினை வெளியேற்ற வேண்டும்.

இப்படியான முறையி¢ல் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இப்படி செய்கின்ற போது இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியா, கிரியாட்டினின் வெளியேற்றப் படுகின்றது.

இதை நோயாளியே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியாளிரின் பார்வையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

இதயம் பலகீனமானார்கள், வயாதானோர்கள், நீரிழிவு நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை ஏற்றதாகும்.

இதைச் செய்து கொள்கின்றபோது கிருமித்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இதற்கு தொடர் ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்று பெயர்.

இந்த இரண்டு முறையில் எது நோயாளிக்கு ஏற்றது என்பது மருத்துவரின் ஆலோசனை மற்றும் நோயாளின் குடும்பச் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து.

டயாலிசிஸ் செய்து கொண்டால் பூரண குணமாகிவிடும் என்று நினைப்பது தவறு!

சிறுநீரகப் பாதிப்பின் தன்மையைப் பொருத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தேவையெனில் அதுவரை டயலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். அதுபோலவே சிறுநீரக தானம் தரயாரும் முன்வராத நிலையில் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்து கொள்ளத்தான் வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை:

பழுதடைந்துவிட்ட சிறுநீரகத்தினை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வைப்பதில்லை பெறப்பட்ட சிறுநீரகத்தினை வயிற்றுப் பகுதியின் வலப்பக்கத்தில் பொருத்துவது.

யாரிடமிருந்து சிறுநீரகம் பெறலாம்:

நெருங்கிய இரத்த உறவுளள உறவினர்களிடமிருந்து விபத்தில் அல்லது வேறு காரணங்களால் நினைவிழந்து மூளை இறப்பு ஏற்பட்டுள்ள வரிடமிருந்தோ அல்லது எல்லாவிதமான பரிசோதனைகளிலும் பொருந்திவரக்கூடிய தானமளிப்பவரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவரின் மனப்பூர்வமாக சம்மதத்துடன் உறுப்பு மாற்று நோயாளிகளின் சட்டத்திற்குட்பட்டுத்தான் பெற முடியும்.

அதுபோலவே சிறுநீரகத்தினை தானமாகக் கொடுப்பவரிடமிருந்து கூட உடனே எடுத்து விடமுடியாது. தானமாக பெறுபவரின் உடல் தானமாக கொடுப்பவரின் சிறுநீரகத்தினை ஏற்றுக்கொள்ளுமா என்பதை அறிய பல்வேறு நுண்ணியசோதனைகளை நடத்த வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை சற்றேக்குறைய 3 லிருந்து 4 மணி நேரம் நடைபெறும¢ பெற்றுக் கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் எல்லாம் பொருத்தி மாற்று அறுவைசிக்சை செய்து கொண்டாலும் தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஏனெனில் நமது உடலில் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாத அணுக்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி பொருத்தப்பட்ட சிறுநீரகத்தினையும் பழுதடையச் செய்துவிடும். சிகிச்சைக்கும் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஆகக் கூடிய செலவு பெரிய பொருளாதார சுமையினை ஏற்படுத்தக் கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிறுநீரக செயலிழப்பிலிருந்து நம்மைபாதுகாத்து கொள்ள மருத்துவ விழிப்புணர்வு மிகவும் தேவை.

எளிய உடற்பயிற்சி புகையினையும், மதுவினையும் தவிர்ப்பது-தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது- அமிலத்தன்மை வாய்ந்த தாதுப் பொருட்களடங்கிய லேகியம் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது- அதிக கொழுப்பு, அதிகப்புரதம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகட்டுப்பாடு - குறிப்பிட்ட இடைவெளிவிட்டு மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை மேற்கொள்வது நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புள்ளவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் நாம் நம்மை காத்துக்கொள்வதுடன் பொருளாதார இழப்பினையும் தவிர்க்கலாம். எனவே சிறுநீரகம் காப்போம் சீரிய வாழ்வு பெறுவோம்.

 கவனத்திற்கு:

1. ஒரே மாதிரியான நோயினால், ஒரே மாதிரியான காரணங்களால் எல்லோருக்கும் ஒன்று போலவே சிறுநீரகங்கள் பாதிக்கப் படுவதில்லை. எனவே அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பிற நோயாளிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்காதீர்கள்.

2. உங்கள் நோயைப் பற்றிய எந்த சந்தேகங்களையும் - எவ்வளவு கேள்விகளையும் உங்கள் மருத்துவரிடமே நேரிடையாகக் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.

3. நோயாளியோ, அவரது உறவினர்களோ அல்லது நோயாளி உடன் இருப்பவரோ நோய் பற்றி முழுமையாக மருத்துவரிடமோ அல்லது அவரின் உதவியாளர்கள் மூலமோ அறிந்து அவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையினை மேற்கொண்டு- மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு உணவு முறையினை மேற்கொள்வது நோயாளிக்கு மிகவும் நல்லது.

கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் நமது உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். முறையாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்ட நாட்களாக உள்ள சிறுநீரக கல், நாட்பட்ட தொற்று நோய் என பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்பால் இறக்கின்றனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் முழுவதும் கிட்னி செயலிழந்த நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நோயாளிகளுக்கு கிட்னி மாற்று அறுவை  சிகிச்சை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மட்டும் தான் தீர்வு. இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவு கட்டுப்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் வகை உணவுகளை தவிர்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளில் 29.7 சதவீதம் பேருக்கு கிட்னி பாதிக்கப்படுகிறது. இறக்கின்றனர்.
உலக மக்களிடையே சிறு நீரகத்தின் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் சர்வதேச சிறுநீரக தினம் ( World Kidney Day, March 13) மார்ச் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

உடலில் எந்த உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் அதை சரி செய்துவிடலாம். ஆனால், சிறு நீரகத்தில் கோளாறு என்ரால் அதை சரி செய்ய முடியாது. வேறு சிறுநீரகத்தை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. இதிலும், ஆரம்ப நிலையில் கவனித்து விடுவது நல்லது. பாதிப்பு முற்றிவிட்டால் மாற்று சிறுநீரகம் கூட பொருத்துவது கடினம்தான்.

நமது உடலில் கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகம்தான். இது பாதிக்கப்பட்டால் உடலில் கழிவுநீர் தேங்கிவிடும்.

உணவு பழக்கம் தான் சிறுநீரகக் கோளாறுக்கு காரணம் என்றாலும் பரம்பரை நோய் காரணமாக இருக்கிறது.

பொதுவாக, கிருமி பாதிப்பு, விபத்தால் சிறுநீரகம் பாதிப்பு, சிறுநீரக அடைப்பு, சிறுநீரக புற்றுநோய் போன்றவற்றால் இந்த பாதிப்பு வருகிறது. அடுத்து மிக முக்கியமானது, நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய்கள் உள்ளவர்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சோதித்துக் கொள்வது நல்லது.

சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்தால் வயிற்று வலி ஏற்படும். இது உணவு மற்றும் குடிக்கும் தண்ணீர் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்தச் சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் கரைக்கும் மருத்துவச் சிகிச்சை இருக்கிறது.

சிறுநீரகம், மனித உடலில் நீர் சமநிலையை காப்பாற்றி வளர்சிதை மாற்றக் கழிவுகளை வெளியேற்றும் ஜோடி உறுப்பு.

மனித சிறுநீரகங்கள் அவரை விதை வடிவத்தில் சுமார் 10 செ.மீ. நீளத்தில் அமைந்துள்ளன. இவை ஒவ்வொரு 45 நிமிடமும் ரத்தத்திலுள்ள சுமார் 4.5 லிட்டர் தண்ணீரை வடிகட்டுகின்றன. குளுக்கோஸ், கனிமப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை மீள் உறிஞ்சல் மூலம் ரத்தத்துக்கு திருப்புகின்றன. மீதமுள்ள திரவமும், கழிவுகளும் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. கிட்னி ஒன்றில் 10 லட்சத்துக்கும் மேலான நெஃப்ரான்ஸ் என்னும் ரத்தக் குழாய்கள் வடிகட்டுதல் மற்றும் மீள் உறிஞ்சல் பணியை மேற்கொள்கின்றன.

சிறுநீரகத்தின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டால் சிக்கல்தான். அதாவது உடலிலிருந்து சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்துவிடும் அல்லது வெளியேறுவது முற்றிலும் நின்று விடும். கூடவே, ரத்தத்தில் ரசாயனப் பொருள் சமநிலை சீர்கெட்டு, யூரியாவின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் அமிலத் தன்மை அதிகரிக்கும். எலும்புகள் கால்சியத்தை இழக்கின்றன. மேலும், நரம்புகள் சீர் கெடுகின்றன. சுமார் 90% செயல் இழக்கும் வரை சீறு நீரகங்கள் வாழ்க்கையை நீடிக்க செய்கிறது. சிறு நீரகங்களில் ஒன்றை நீக்கி விட்டால், மற்றொன்று அளவில் பெரிதாகி மற்றொன்றின் பணியையும் சேர்த்து செய்கிறது. இரண்டும் செயல் இழந்தால் டயாலிஸிஸ் அல்லது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

70 விழுக்காடு பழுதுபட்டாலும் 30 விழுக்காடு நுண் குழாய்கள் கூடுதல் சுமையோடு பணியாற்றக்கூடியது சிறுநீரகங்கள். அந்த 70 விழுக்காடும் பழுது ஏற்படாமல் பாதுகாப்பதே இன்று முக்கிய அவசர, அவசிய பணியாக உள்ளது.

தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை சிறுநீரகம் செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. அபூர்வமாக சிலருக்கு இயற்கையிலோ அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு.

நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கட்டுரை இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும்.

ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கேன் செய்யும் போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்படுவது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு, அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தந்தவர்களும் உண்டு. இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்கியமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது.

இப்படிப்பட்டவர்களில் மிகச்சிலருக்கு 10-15 வருடங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும் முறையான இடைவெளிகளில் (6வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுத்தவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கும் பொருந்தும்.

அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.

அந்தத் தலையாய பணியின் ஒருபகுதியாக மக்களிடையே சிறுநீரகம் குறித்த மருத்துவ விழிப்புணர்வினை ஏற்படுத்தவே மார்ச் 11-ம் நாள் உலக சிறுநீரக நாள் என்று அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

சிறுநீரகம் என்றால் என்ன?

1. நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று.

2. உலகின் மிகச்சிறந்த - மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்.

3. கருவி¢ல் நான்காவது மாதத்திலிருந்து துவங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு.

4. வயிற்றின் பின் பகுதி-விலா எலும்பிற்குக் கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் சிறுநீரகங்கள் இரண்டு உள்ளது.


செயல்பாடுகள்:

1. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் கழிவுநீர் வடிகட்டப்பட்டு சராசரியாக 1.5 லிருந்து 2 லிட்டர் சிறுநீரக வெளியேற்றப்படுகிறது.

2. உடலில் உள்ள கழிவுப் பொருட்களை மூத்திரமாக வெளியேற்றுவது ஒன்று மட்டுமே சிறுநீரகங்களின் செயல் அல்ல.

3. உடலில் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவது.

4. உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும்,

5. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும்.

6. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும்,

7. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும்.

8. அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.

சிறு நீரங்கள் செயல்படவில்லை எனில்

1. இரத்த அசுத்தமாகும்.

2. இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும்.

3. தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்களின் சமநிலையில் பாதிப்பேற்பட்டு உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும்.

4. இதன் விளைவாக மூச்சுத்திணறல், நினைவிழத்தல், இரத்தக்கொதிப்பு உண்டாகி சிறுந¦ரகங்கள் செயலிழந்து இறுதியில் மரணமேற்படும்.

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன? அறிகுறிகள், காரணங்கள்:

கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறக்கின்றனர்

சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர பிரியாத நிலை மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம¢, கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்பட்டு இதயம், மூளை, நுரையீரல்கள் பாதிக்கப்படுகின்றன.

உடன் வரும் சிறுநீரக செயலிழப்பு, நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீண்டநாள் இரத்தக்கொதிப்பு, நீண்டநாள் நீரிழிவு, பரம்பரை குடும்பவழி மரபணுக்கள் பாதிப்பு, நாட்பட்ட சிறுநீர்குழாய் அடைப்பு, வலிநிவாரணிகளையும், இரசாயன பொருட்களையும் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரக இரத்தக்குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் ஏற்படுவது நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பாகும்.

பாம்புக்கடி, கதண்டுவண்டுகடி, மலேரியா கொசுக்கடி, லெப்டோ பைரோசிஸ் என்ற உயிர்கொல்லி, வயிற்றுப் போக்கு, பிரசவகாலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, கருக்கலைப்பின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு உடன்வரும் சிறுநீரக செயலிழப்பு எனப்படுகிறது.

இந்தப்பாதிப்பிலிருந்து பாதுகாக்க இரத்தத்தில் கலந்துவிட்ட கழிவுப் பொருட்களை சுத்திகரித்து நீக்க வேண்டும். அப்படிப் பிரித்து நீக்குவதைத் தான் டயாலிசிஸ் என்று சொல்கின்றோம்¢.

இது வியாதியின் தன்மையினைப் பொருத்து சிலருக்கு சில நாட்கள் அல்லது சிலவாரங்கள் தேவைப்படும். அதுபோன்றே சிலருக்கு வாழ்நாள் முழுமைக்கும் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை வரைக்கும் தேவைப்படும்.

டயாலிசிஸ் இரண்டு வகைப்படும். அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.

ஹீமோ டயாலிசிஸ்:

இது உடலுக்கு வெளியே செயற்கை சிறுநீரகமாக ஒரு இயந்திரம் செயல்பட்டு இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

நோயாளியின் கையில் பிஸ்டுலா என்ற சிறு அறுவை சிகிச்சையின் மூலம் இரத்தக்குழாய்கள் இணைக்கப்பட்டு, இணைக்கப்பட்ட இரத்தக்குழாய் 3 அல்லது 4 வாரங்களில் வளர்ச்சியடைந்து டயாலிசிஸ் செய்ய ஏற்றவாறு செய்யப்படுகிறது.

நோயாளிக்கு இரத்தத்தில் யூரியா, கிரியாடினின் அளவு அதிகரித்து மூச்சுத்திணறல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்ற போது பிஸ்டுலா வழியாக டயாலிசிஸ் செய்யப்படும்.

நோயாளி துவக்ககாலத்தில் மருத்துவரை அணுகாமல் நாட்கள் கடந்துவந்தால் கைகளி¢ல் செய்யப்படுகின்ற அறுவை சிகிச்சைக்கு பதிலாக கழுத்திலோ, நெஞ்சிலோ அல்லது தொடையிலோ சிறிய குழாயினை செலுத்தி இரத்தத்தினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு செய்தால் குழாயினை அதே இடத்தில் அதிக நாட்கள் வைத்துக் கொள்ள இயலாது எனவே, கையில் பிஸ்டுலா செய்துகொள்வதே சிறந்தது.

பெரிடோனியல் டயாலிசிஸ்;

இதில் நோயாளியின் வயிற்றில் துளையி¢ட்டு ஒரு குழாயினை செருகி, அந்த இரப்பர் குழாய் மூலமாக வயிற்றுக்குள் திரவத்தினை செலுத்தி 4 அல்லது 5 மணி நேரத்திற்குப் பிறகு அத்திரவத்தினை வெளியேற்ற வேண்டும்.

இப்படியான முறையி¢ல் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இப்படி செய்கின்ற போது இரத்தத்தில் அதிகரித்துள்ள யூரியா, கிரியாட்டினின் வெளியேற்றப் படுகின்றது.

இதை நோயாளியே மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியாளிரின் பார்வையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

இதயம் பலகீனமானார்கள், வயாதானோர்கள், நீரிழிவு நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்முறை ஏற்றதாகும்.

இதைச் செய்து கொள்கின்றபோது கிருமித்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இதற்கு தொடர் ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்று பெயர்.

இந்த இரண்டு முறையில் எது நோயாளிக்கு ஏற்றது என்பது மருத்துவரின் ஆலோசனை மற்றும் நோயாளின் குடும்பச் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொருத்து.

டயாலிசிஸ் செய்து கொண்டால் பூரண குணமாகிவிடும் என்று நினைப்பது தவறு!

சிறுநீரகப் பாதிப்பின் தன்மையைப் பொருத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தேவையெனில் அதுவரை டயலிசிஸ் செய்து கொள்ள வேண்டும். அதுபோலவே சிறுநீரக தானம் தரயாரும் முன்வராத நிலையில் ஆயுள் முழுக்க டயாலிசிஸ் செய்து கொள்ளத்தான் வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை:

பழுதடைந்துவிட்ட சிறுநீரகத்தினை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வைப்பதில்லை பெறப்பட்ட சிறுநீரகத்தினை வயிற்றுப் பகுதியின் வலப்பக்கத்தில் பொருத்துவது.

யாரிடமிருந்து சிறுநீரகம் பெறலாம்:

நெருங்கிய இரத்த உறவுளள உறவினர்களிடமிருந்து விபத்தில் அல்லது வேறு காரணங்களால் நினைவிழந்து மூளை இறப்பு ஏற்பட்டுள்ள வரிடமிருந்தோ அல்லது எல்லாவிதமான பரிசோதனைகளிலும் பொருந்திவரக்கூடிய தானமளிப்பவரிடமிருந்தோ பெற்றுக்கொள்ளலாம்.

கொடுப்பவர் யாராக இருந்தாலும் அவரின் மனப்பூர்வமாக சம்மதத்துடன் உறுப்பு மாற்று நோயாளிகளின் சட்டத்திற்குட்பட்டுத்தான் பெற முடியும்.

அதுபோலவே சிறுநீரகத்தினை தானமாகக் கொடுப்பவரிடமிருந்து கூட உடனே எடுத்து விடமுடியாது. தானமாக பெறுபவரின் உடல் தானமாக கொடுப்பவரின் சிறுநீரகத்தினை ஏற்றுக்கொள்ளுமா என்பதை அறிய பல்வேறு நுண்ணியசோதனைகளை நடத்த வேண்டும். மாற்று அறுவை சிகிச்சை சற்றேக்குறைய 3 லிருந்து 4 மணி நேரம் நடைபெறும¢ பெற்றுக் கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் எல்லாம் பொருத்தி மாற்று அறுவைசிக்சை செய்து கொண்டாலும் தொடர்ந்து மருத்துவக்கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஏனெனில் நமது உடலில் மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளாத அணுக்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி பொருத்தப்பட்ட சிறுநீரகத்தினையும் பழுதடையச் செய்துவிடும். சிகிச்சைக்கும் பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஆகக் கூடிய செலவு பெரிய பொருளாதார சுமையினை ஏற்படுத்தக் கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிறுநீரக செயலிழப்பிலிருந்து நம்மைபாதுகாத்து கொள்ள மருத்துவ விழிப்புணர்வு மிகவும் தேவை.

எளிய உடற்பயிற்சி புகையினையும், மதுவினையும் தவிர்ப்பது-தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது- அமிலத்தன்மை வாய்ந்த தாதுப் பொருட்களடங்கிய லேகியம் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்ப்பது- அதிக கொழுப்பு, அதிகப்புரதம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகட்டுப்பாடு - குறிப்பிட்ட இடைவெளிவிட்டு மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனை மேற்கொள்வது நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புள்ளவர்கள் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் நாம் நம்மை காத்துக்கொள்வதுடன் பொருளாதார இழப்பினையும் தவிர்க்கலாம். எனவே சிறுநீரகம் காப்போம் சீரிய வாழ்வு பெறுவோம்.

கவனத்திற்கு:

1. ஒரே மாதிரியான நோயினால், ஒரே மாதிரியான காரணங்களால் எல்லோருக்கும் ஒன்று போலவே சிறுநீரகங்கள் பாதிக்கப் படுவதில்லை. எனவே அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பிற நோயாளிகளிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்காதீர்கள்.

2. உங்கள் நோயைப் பற்றிய எந்த சந்தேகங்களையும் - எவ்வளவு கேள்விகளையும் உங்கள் மருத்துவரிடமே நேரிடையாகக் கேட்டுத் தெளிவுபெறுங்கள்.

3. நோயாளியோ, அவரது உறவினர்களோ அல்லது நோயாளி உடன் இருப்பவரோ நோய் பற்றி முழுமையாக மருத்துவரிடமோ அல்லது அவரின் உதவியாளர்கள் மூலமோ அறிந்து அவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையினை மேற்கொண்டு- மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு உணவு முறையினை மேற்கொள்வது நோயாளிக்கு மிகவும் நல்லது.

கிட்னி பாதிப்பால் உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் நமது உடலில் உள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். முறையாக கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நீண்ட நாட்களாக உள்ள சிறுநீரக கல், நாட்பட்ட தொற்று நோய் என பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

சிறுநீரகம் முழுவதும் செயலிழந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி உலகில் ஆண்டுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் சிறுநீரக பாதிப்பால் இறக்கின்றனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் முழுவதும் கிட்னி செயலிழந்த நிலைக்கு ஆளாகின்றனர். இந்த நோயாளிகளுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை அல்லது வாழ்நாள் முழுவதும் டயாலிஸிஸ் சிகிச்சை மட்டும் தான் தீர்வு. இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவு கட்டுப்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் வகை உணவுகளை தவிர்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளில் 29.7 சதவீதம் பேருக்கு கிட்னி பாதிக்கப்படுகிறது. இறக்கின்றனர்.




Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

அறிந்து கொள்வோம்....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips

 
 உலகில் அதிக மழைப்பொழிவு உள்ள இடம் எது.. ?
...................................................................................

உலகில் கொலம்பியாவில் உள்ள லோரோ தான்(Lloro - Colombia) அதிக மழைப்பொழிவு உள்ள இடம் (42 Feet precipitation per year) ஆனால் வருடத்தில் அதிக நாட்கள் மழை பொழியும் இடம் சிலியில் உள்ள பாகியா ஃபிளிக்ஸ் (Bahia Felix) வருடத்தின் 325 நாட்கள் மழை பெய்து கொண்டே இருக்கிறது இங்கு.

நம் உடலின் எல்லா நகங்களும் ஒரே அளவில் வளர்கிறதா?
.....................................................................................................
அப்படி இல்லை என்றால் எந்த விரலின் நகம் சீக்கிரமாகவும்
...................................................................................................... எந்த விரலின் நகம் மிக மெதுவாகவும் வளர்கிறது ?
.........................................................................................

நம் உடலின் நகங்கள் எல்லாம் ஒரே அளவில் வளர்வதில்லை. எந்த கைப்பழக்கம் உடையவர்களோ அந்த கை நகங்களே வேகமாக வளர்கிறது.

அதிலும் சுட்டு விரல் (index finger) வேகமாக வளர்கிறது. பெருவிரல் (thumb) நகம் மற்றவிரல்களை காட்டிலும் மெதுவாக வளர்கிறது.

இன்னும் சொல்லப்போனால் நம் கால் பெருவிரல் நகம் தான் மிக மெதுவாக வளர்கிறது.

நகம் வளர்வதற்கு நகத்தின் அடியில் உள்ள திசுவில் கெரோட்டின் என்ற புரதம் உற்பத்தியாகி உதவுகிறது.

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் என்ன?
.......................................................................................................

இருட்டிலும் விலங்குகளின் கண்கள் ஒளிரக் காரணம் அதன் கண்களின் பின்புற உட் பகுதிகளில் "டேப்டம் லுசிடம்" என்று சொல்லப்படுகிற விளித்திரை ஒளிரும் செல் படலம் உள்ளது.

ஒளியானது கண்களின் ரெட்டினா எனப்படும் விளித்திரையின் மேல் பட்டு கண்களின் உட் சென்று டேப்டம் லுசிட படலத்தின் மேல் விழும் போது பிரதிபளிக்கின்றன.

இந்த ஒளிரும் படலம் இரவில் குறைந்த ஒளியிலும் அதற்கு உருவங்கள் தெளிவாக தெரிய பயன் படுகிறது.

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் பல வண்ணங்களில்
................................................................................................. ஒளிர்வது எப்படி?
................................
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் மேல் நுண்ணிய செதில்கள் உள்ளன அவற்றில் நுனிகளில் வெல்வெட்டு போன்ற நுண்துகள்கள் உருவாகின்றன.

இந்த துகள்கள் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் பேட்டன் என சொல்லப்படும் உடற்கூறு செல்களின் படி அந்தந்த நிறத்தை பெருகிறது.

அவற்றின் மீது வெயில் படும்போது கண்ணைக்கவரும் தோற்றத்தைப் பெறுகின்றன.

நம் கையால் இறகை தொட்டும் போது கைகளில் இந்த துகள்களை ஒட்டிக் கொண்டு அந்த இடம் நிறமற்ற வெளிர் இறகாகி விடும்.

தேனீக்கள் ரீங்காரமிடுவது ஏன் ?
.........................................................
உண்மையில் தேனீக்கள் ரீங்காரமிடுவதில்லை அதாவது அவைகள் சப்தத்தை எழுப்புவதில்லை.

தேனீக்களின் இறக்கைகள் நொடிக்கு 300 முதல் 400 தடவைகள் சிறகடிக்கின்றன. காற்றின் உராய்வு அதிர்வினால் நமக்கு இந்த ஒலியானது ரீங்காரமாக கேட்கிறது.

இதுவே ஒரு வண்ணத்துப்பூச்சியாயிருந்தால் எதுவும் கேட்பதில்லை இதன் சிறகுகள் நொடிக்கு 6 முதல் 10 தடவைகளே சிறகடிக்கின்றன.

கொசுக்கள் சிறிய உருவம் மற்றும் சிறு இறக்கைகள் காதின் அருகில் வந்தால் மட்டுமே "ஙொய்" என்ற சப்தம் கேட்கிறது.

வறண்ட குளப்பகுதிகள் பாளம் பாளமாக வெடிப்பது ஏன் ?
..................................................................................................

குளம் குட்டையின் தரைப்பகுதிகள் இயல்பாக களிமண்ணால் அமைந்திருக்கும். களிமண்ணில் சோடியம் பென்டோனைட் எனும் வேதிப்பொருள் கலந்து உள்ளது.

இது ஈரப்பபசை இருக்கும் போது விரிவடைகிறது. அதாவது களிமண் இளகியநிலையில் அல்லது விரிவடைந்த நிலையில் இருக்கும்.

வறண்ட நிலையில் நீர்பசை இல்லை இழுவிசை குறைந்து சுருங்கியநிலயில் பாளம் பாளம் ஆக வெடிக்கிறது.

உயரமான மலைப் பகுதிகளுக்கு செல்லும் போது மூச்சு
................................................................................................. வாங்குவது ஏன்? ஆனால் அங்கு வசிப்பவர்கள் இயல்பாக
................................................................................................... இருக்கிறார்கள் எப்படி ?
.....................................

சமநிலப்பகுதிகளை காட்டிலும் உயரமான மலைப்பகுதிகளில் காற்றில் உள்ள ஆக்சிஜன் அடர்த்தி யானது குறைவாக இருக்கும்.

நுறையீரலுக்கு வந்து சேரும் காற்றில் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு முழுமை அடையாததால். நுரையீரல் அதிகமாக இயங்குகிறது.

அதிகமான காற்று உடலின் உள் இழுக்கப்படும். இதுவே அந்த பகுதியில் வசிப்ப்பவர்களின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் ( hemoglobin ) அளவு அதிகமாக இருக்குப்பதால் இந்த வித்தியாசத்தை அவர்களால் உணர முடிவதில்லை.

இதை தகவைமைப்பு என்று சொல்லலாம்.

நவீன கைபேசியை (அல்லது ) தொலைபேசியை கண்டு
...............................................................................................
பிடித்தவர் யார் ?
.............................
டாக்டர். மார்டின் கூப்பர் (Dr. Martin Cooper) .

இவர் மோட்ரோலா (US) நிறுவனர்.

ஏப்ரல் 3, 1973 ல் டைனாடேக் (DynaTAC) எனும் மாதிரி வடிவமைப்பு நியூயார்கில் பரிசோதிக்கப் பட்டது.

சிலந்தி குரங்கு (Spider Monkey) ஏன் அவ்வாறு
............................................................................. அழைக்கப்படுகிறது?
.....................................
மத்திய மற்றும் தென் அமெரிக்க காடுகளில் காணப்படும்

இவ்வகை குரங்குகள்,வால் மற்றும் கால்களையும்

கைபோல பயன்படுத்தி மரத்திற்கு

மரம் தாவுகிறது

(ஐந்து கைகள் உள்ளது போல் தோற்றம் தரும்)

எனவே அவ்வாறு அழைக்கப்படுகிறது..

உலகின் உயரமான [volcano] எரிமலை எது ?
.........................................................................

சிலி- அர்ஜண்டைனா எல்லையில் உள்ள ஓஜோஸ் டெல்

சலாடோ (Ojos del Salado) 6887 m / 22,595 ft.


செயல்பாடு மிக்கதாக (most active) கருதப்படும் எரிமலை எது ?
......................................................................................................
இன்னும் செயல் பாடு உடையதாக கருதப்படும் எரிமலை

வாஸிங்டன் மாகாணத்தில் உள்ள (USA) உள்ள செயின்ட்

ஹெலன் மலைசிகரத்தில் [Mount St Helens ] உள்ளது.

இறுதி சீற்றம் July 10, 2008 ல் நிகழ்ந்தது....

மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?
.....................................................................

சிங்கம்..

இந்தியாவில் வற்றாத ஜீவா அந்தி எது ?
.................................................................

கங்கை..

உலகிலேயே மிக உயரமான சிகரம் எது ?
...................................................................

எவரெஸ்ட்..

மனித உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன ?
...........................................................................

6 லட்சம் நரம்புகள் உள்ளன..

சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் எப்போது வந்தது..?
.....................................................................................

1986 ஆம் ஆண்டு

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்...
............................................................

*திரைப்படங்களுக்கு தணிக்கை இல்லாத நாடு பிரான்ஸ்.

• பாம்புகள் இல்லாத நாடு பின்லாந்து.

• ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்த்தத்தைத் தொனிக்க கூடியச் சொற்கள் நிறைய உள்ளன.

ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இல்லை.

• ஒட்டகம் எவ்வளவு பசியோடு இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளாது.

• ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை பலன் தரும்.

• பாம்பின் பற்கள் இரையைக் கவ்வ மட்டுமே பயன்படும். தின்ன உதவாது.


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

மரகதலிங்கம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:14 | Best Blogger Tips
மரகதலிங்கம்..!

மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது. 

இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும்,

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .

சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. 

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது.

இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும்,

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .

சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism
 

சிவன் கழுத்தில் பாம்பு ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:03 | Best Blogger Tips
Photo: சிவன் கழுத்தில் பாம்பு ஏன்?
--------------------------------------
பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும்,சினேகமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியாது.ஆகவேதான் ஜோதிடத்தில் கூட ராகு,கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்தியிருக்கும்.

யாருக்கும் கட்டுபடாத நாகம் இறைசக்திக்கு கட்டுப்பட்டுள்ளது எனபதை நமக்கு உணரத்தவே சிவன் கழுத்துல் பாம்பு ஆகும்.இன்னொரு தத்துவமமும் உண்டு.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பாம்பின் குணத்தை யாரும் அறியார்.எப்போது சீறும்,சினேகமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமுடியாது.ஆகவேதான் ஜோதிடத்தில் கூட ராகு,கேது திசைகள் பாம்பின் குணத்தை ஒத்தியிருக்கும்.

யாருக்கும் கட்டுபடாத நாகம் இறைசக்திக்கு கட்டுப்பட்டுள்ளது எனபதை நமக்கு உணரத்தவே சிவன் கழுத்துல் பாம்பு ஆகும்.இன்னொரு தத்துவமமும் உண்டு.

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.