ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 PM | Best Blogger Tips

 

ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை வணங்குவோம்!

 

 

 நாளை  ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

 

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

 

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். 

 

ஆடிப் பெருக்கு

 

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.

 

முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன. காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

 

ஆடிபதினெட்டு கொண்டாட்டம்

 

ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.

 

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.

 

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

 

காவிரிக்குச் சூல்

 

காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

 

சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி -  தலை வாழையிலையில் - காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

 

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்

 

ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.

 

ஜோதிடத்தில் ஆடி பதினெட்டு

 

ஆடி பதினெட்டு என்பது சுக்கிரனோடு சூரியன், சந்திரன், புதன். குரு ஆகியவர்களுக்கு ஏற்படும் தொடர்புகளைக் குறிப்பதாகவே அமைந்திருக்கிறது. காவிரிக்குச் சீர் கொடுப்பது என்பது ஒரு பாரம்பரியமான விழாவாகும். அழகிய இளம்பெண்ணையும் கர்ப்பத்தையும் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஜோதிடத்தில் பாரம்பரியத்தைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். நதியைக் குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும். சீர் வரிசை மற்றும் சித்திரான்னங்களைக் குறிக்கும் கிரகம் புதனாகும்.

 

ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆடி பதினெட்டு அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் புதனின் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது நல்லது.

 

ஜோதிடத்தில் நதிகள் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசி மற்றுமல்லாது பெண் ராசியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த சந்திரனின் ராசியான கடகத்தைத் திரிகோண ராசிகளாகப் பெற்ற விருச்சிகம் மற்றும் மீன ராசிளும் நீர் ராசிகள் மற்றும் பெண் ராசிகளாகும்.

 

மேலும் சுக்கிர ஸ்தலத்து இறைவன் ஸ்ரீரங்கநாதர் காவிரியை சகோதரியாக கருதி சீர் செய்வதாகவும் அமைந்திருக்கிறது. நதியை குறிக்கும் கடகத்திற்கு சகோதர பாவமாக அதாவது மூன்றாம் பாவமாக வருவது கன்னியாகும். காவிரிக்கும் கடகத்திற்கும் அதிபதி சந்திரன் ஆகும். மாலவனுக்கும் கன்னிராசிக்கும் காரக கிரகம் புதன் ஆகும். இந்த வருடம் கூடுதல் சிறப்பாகச் சூரியன் புதனின் ஆயில்யத்திற்கு பயணிக்கும் அதேவேளையில் சந்திரன் மற்றொரு நீர் ராசியான மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் பயணிப்பது மட்டுமல்லாமல் புதனின் வீட்டில் நிற்கும் சுக்கிரனை சம சப்தமமாக பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ராவணன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, என்ன செய்வது என்று வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் கேட்டார். அதற்கு வசிஷ்டர், 'அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் தன்னிடத்தில் கொண்டுள்ள காவிரி ஆறு, தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்' என்றார். அதன்படி ராமர், காவிரி ஆற்றில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொண்டார். ராமபிரான் காவிரியில் நீராடிய தினம் ஆடிப்பெருக்கு எனப் புராண தகவல் தெரிவிக்கின்றன.

 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

 

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம்  விநச்யதி |

 

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே  விநச்யதி |

 

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

 

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

 

கோச்சாரத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் பயணம் செய்யும் நிலையில் தாமிரவருணி புஷ்கர ஆண்டில் காவிரியில் மட்டுமல்லாது தாமிரவருணி நதியிலும் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுவது மற்றும் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள். இதைப் பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்கியத்துக்கு அதிகாரம் வகிப்பவர்.

 

இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.  ஒருவருக்குப் பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவற்றைச் சிறப்புடன் வாழும் யோகத்தைத் தருவது சுக்கிரன் ஆகும்.

 

ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.

 

🌸🙏🌸

என்றும் அன்புடன்

அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜயம்  🛕

Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005

மிளகு பொங்கலுக்கு....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips

 May be an image of congee and text that says "がーかン மிளகு மி பொங்கல்"

மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா... இல்லை சாம்பாரா...
 
இப்படி ஒரு கேள்வியோட ஒரு பட்டி மன்றம் நடத்தினா உங்க ஆதரவு எந்த பக்கம்... இது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்விதான்... ஆனா என்னை கேட்டா ரெண்டுமே அசத்தலான தொடு உணவுதான்...
 
பெரும்பாலான மக்களுக்கு காலையில இந்த மிளகு பொங்கல் சாப்பிட கொடுத்தா சாப்பிடவே மாட்டாங்க. அதுக்கு முக்கியமான காரணம் இந்த பொங்கல் சாப்பிட்டதுமே பலருக்கு தூக்கம் வந்திடும். அதுக்கு காரணம் பொங்கல்ல நெய் அதிகமா சேர்த்து செய்யறதால இதுல கலோரிகள் அதிகமா இருக்கு.
 
பொங்கல் சாப்பிட்டதும் செரிமானம் ஆக அதிக ஆக்சிஜன் தேவைப்படும். இதனால மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைஞ்சு, டேக் டைவர்சன் எடுத்து வயிற்று பக்கம் போகுது. மூளையோட செயல் திறன் குறையறதால தூக்கம் வர்ற மாதிரி ஒரு உணர்வு நமக்கு ஏற்படுது. இந்த பொங்கல் மட்டுமில்ல கலோரிகள் அதிக அளவுல உள்ள எந்த உணவு சாப்பிட்டாலும் நமக்கு இதே போலதான் தூக்கம் வரும். யார் எது வேணா சொல்லட்டும். எனக்கு இந்த மிளகு பொங்கல் ரொம்ப பிடிக்கும்பா 😋...
 
எனக்கு மிளகு பொங்கல்,வடை உடன் தேங்காய் சட்னி - யும் பில்டர் காபி  சுவையோ சுவை அந்த சுவைக்கு .இந்த சோழ நாட்டின் சாதாரண பிரஜை ...ரமேஷ் அடிமை.


மார்கழி மாசம் நம்மூர் கோவில்கள்ல பிரசாதமா இந்த மிளகு பொங்கல் கொடுப்பாங்க. சின்ன வயசுல அந்த குளிர்லயும் குளிச்சிட்டு (சில சமயம் குளிக்காம) கோவிலுக்கு போய் சுடச்சுட தர்ற அந்த பொங்கல தொண்ணை இலையில வாங்கி சாப்பிடும் போது, அந்த குளிருக்கு இதமா தொண்டைக்குள்ள இறங்கும். ஒரே ஒரு குறை என்னன்னா, தொட்டுக்க ஒரு சட்டினியோ சாம்பாரோ குடுத்திருக்கலாம் 🤭.
 
சில ஹோட்டல்ல பொங்கல்ங்கற பேர்ல மஞ்சள் பொடியும் மிளகும் மட்டும் போட்டு கொண்டாந்து ஒரு வஸ்துவை இலையில வைப்பாங்க... இலையில வச்சுட்டா நீ கொடுக்கறதெல்லாம் நாங்க பொங்கல்னு சொல்லி சாப்பிடணும்மான்னு நம்ம வாய் நம்மளை பார்த்து கேவலமா கேட்கும். சாப்பிட்டு முடிச்சதும் வயிறும் கூட சேர்ந்து கழுவி ஊத்தும். இந்த மாதிரி பொங்கல் செய்யற அவங்களையெல்லாம் பிடிச்சி அண்ணனோட 50 வது படத்தை 5 தடவை பார்க்க வைக்கணும் 🤗.
 
ஒரு நல்ல மிளகு பொங்கலுக்கு உதாரணமே வறுத்து சேர்த்த முந்திரியும் அந்த நெய் மணமும்தான். அப்படியொரு பொங்கல் சாப்பிடணும்னா கண்டிப்பா நீங்க பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும். சில 'என்னமோபவன்' ஹோட்டல்கள்ல இன்னும் மோசம் பண்ணுவாங்க. பொங்கல்ங்கற பேர்ல ஒரு சதுரமான பாத்திரத்துல கொண்டாந்து கொடுப்பாங்க. அதை கவுத்தோம்னா தட்டுல செங்கல்ல தூக்கி வச்சது மாதிரியே இருக்கும். இவனுங்களை என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.
 
இவ்வளவு பேசறியே நீயே ஒரு நல்ல பொங்கல் ரெசிபி சொல்லேன்னு நீங்க சொல்றது கேட்குது. அதுக்காகத்தான் இந்த ரெசிபி. படிச்சிட்டு கட கடன்னு கிட்சனுக்கு ஓடிப்போய், பொங்கல் செஞ்சி தட்டுல போட்டு கொண்டாங்க பார்ப்போம்...
 
தேவையான பொருட்கள் :
 
அரிசி : 1 கப்
பாசிப்பருப்பு : 1/2 கப்
முந்திரி : 10
மிளகு : 1 1/2 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
நெய் : 2 லிருந்து 4 ஸ்பூன்
இஞ்சி : சிறு துண்டு
கருவேப்பிலை : 1 கொத்து
உப்பு : தேவையான அளவு 
 
செய்முறை :
 
ஒரு சட்டியில நெய் சேர்த்து அதுல மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நல்லா தாளிச்சு வச்சுடுங்க.
 
ஒரு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊத்தி (3 கப் தண்ணீர் ) அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, அது கூட தேவையான அளவு உப்பு சேர்த்து , 5 விசில் வர்ற வரைக்கும் வேக வச்சிட்டு ஆறினதும் அதுல, தாளிச்சது சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. அவ்வளவுதான் மக்களே...
 
எவ்வளவு எளிமையான ஒரு செய்முறைன்னு பார்த்தீங்களா 🤗... இதை அப்படியே செஞ்சி ஒரு சட்னியோ, சாம்பாரோ வச்சி சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க 🤗.
 
உங்களுக்கு மிளகு பொங்கலுக்கு தொட்டுக்க பிடிச்சது சாம்பாரா இல்லை சட்னியான்னு சொல்லுங்க...
 
 

காணாமல் போன கிணறு ... கண்டுபிடிக்கப்பட்டது...!!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:24 AM | Best Blogger Tips

 No photo description available.

காணாமல் போன கிணறு ... கண்டுபிடிக்கப்பட்டது...!!!
 
தஞ்சை அரண்மனை வளாகத்தில் பழங்கால கிணறு கண்டுபிடிப்பு
 
தஞ்சாவூர் : தஞ்சாவூரை சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆண்டனர். இவர்கள் ஆட்சி காலத்தில், 110 ஏக்கரில் அரண்மனை கட்டப்பட்டது.
 
இந்த அரண்மனையில் தர்பார் மஹால், ஆயுத கோபுரம், மணி கோபுரம், சார்ஜா மாடி ஆகியவை அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளன.
 
தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் இந்த அரண்மனையை எடுத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, புனரமைப்பு செய்கிறது.
இந்நிலையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தர்பார் மஹால், சார்ஜா மாடி, மணி கோபுரம், ஆயுதகோபுரம் ஆகியவை 
 
புனரமைக்கப்படுகின்றன. மேலும், மராட்டியர்களின் வம்சத்தினர் தங்கியுள்ள பகுதிகளும், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.
 
அரண்மனை வளாகத்தில் உள்ளே நுழைந்தவுடன் இடது புறத்தில் பழமையான, அழகிய கட்டுமானங்களை கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இடம் குப்பை மேடாக இருந்தையும், மரங்கள், செடி கொடிகள் மண்டி இருந்ததையும் சுத்தம் செய்து பார்த்த போது தான், கிணறு இருந்தது தெரிந்தது.
 
இதையடுத்து, அதை பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது: 
 
நாயக்கர் காலத்தில் பல்வேறு குளங்கள் உருவாக்கப்பட்டு, நீர் வழிபாதைகள் அமைக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிணறு, நாயக்கர் காலத்தின் வடிவமைப்பு கொண்டதாக இருக்கலாம்.
 
இந்த கிணறு அரச குல பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கிணற்றுக்கான நீர் வழிபாதையை கண்டுபிடித்து, தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்கிறது.
 
இவ்வாறு தெரிவித்தனர்.