ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - ராகு கேது சிறப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 5:23 PM | Best Blogger Tips

 காசிக்கு சமமாக கருதப்படும் திருவாஞ்சியம்(ஸ்ரீ வாஞ்சியம்) திருக்கோவில். –  தில்லை கீதம்

 

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - ராகு கேது சிறப்புகள் மற்றும் வரலாறு

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம்.
 
1. ஒரே திருமேனியில் 7 நாகங்கள் (ராகு-கேது சிறப்பு):
 
அரிய வடிவமைப்பு: பொதுவாக ராகு, கேது தனித்தனியாக இருப்பார்கள். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் ராகுவும் கேதுவும் ஒரே திருமேனியில் (ஒரே சிலையாக) ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி (அணைத்தவாறு) காட்சியளிப்பது மிக அரிய அமைப்பாகும்.
மரண பயத்தை அடியோடு போக்கும் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் : இன்று  ஒரு கோயில் 
7 தலை நாகம்: இந்த ஒரே திருமேனியின் தலைப்பகுதியில் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் (சர்ப்பம்) குடையாகக் கவிழ்ந்து நிழல் தருவது போல் இச்சிலை அமைந்துள்ளது.
 
ஏழு பிறவி வினை நீங்கும்: இந்த 7 நாகங்கள் கொண்ட ராகு-கேதுவை வணங்கும்போது, மனிதர்களின் ஏழு பிறவிகளாகத் தொடரக்கூடிய கர்ம வினைகளும், நாக தோஷங்களும், காலசர்ப்ப தோஷங்களும் உடனடியாக நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
Vanchinathar Temple : Vanchinathar Temple Details | Vanchinathar- Sri  Vanchiam | Tamilnadu Temple | வாஞ்சிநாதர் 
யோக ராகு-கேது: இத்தலத்தில் இவர்கள் "யோக ராகு", "யோக கேது" என்று அழைக்கப்படுகிறார்கள். தங்களை நாடி வரும் பக்தர்களுக்குத் தீமை செய்யாமல் நன்மைகளையும் யோகத்தையும் மட்டுமே வழங்குபவர்கள்.
ஓருடல் ஈருயிராய் ராகு கேது | Dinakaran 
2. தல வரலாறு (ஸ்ரீவாஞ்சியம் பெயர் காரணம்):
பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். பின்னாளில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், லட்சுமி தேவி பிரிந்து பூலோகம் வந்தார்.
 
தன் கணவரை மீண்டும் அடைய நினைத்த லட்சுமி தேவி, இத்தலத்திற்கு வந்து "குப்த கங்கை" தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்தார்.
 
லட்சுமியின் தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், மகாவிஷ்ணுவை இங்கு வரவழைத்து இருவரையும் சேர்த்து வைத்தார். மகாவிஷ்ணு தன் மனைவியை "வாஞ்சித்து" (விரும்பி) வந்து சேர்ந்த இடம் என்பதால் இத்தலம் 'ஸ்ரீவாஞ்சியம்' என்றும், இறைவனுக்கு 'வாஞ்சிநாதர்' என்றும் பெயர் வந்தது.
ஒரே சிலையால் ஆன ராகு, கேது பகவான் ஸ்ரீவாஞ்சியம், நன்னிலம், திருவாரூர்.  கிரகண காலத்தில் திறந்திருக்கும் ஒரே கோயில் ஸ்ரீவாஞ்சியம் ... 
3. எம தர்மராஜனுக்கு முதலிடம் (மரண பயம் நீக்கும் தலம்):
உயிர்களை எடுக்கும் பணியால் ஏற்பட்ட பாவங்கள் நீங்க, எமதர்மன் இத்தலத்தில் சிவனை நோக்கி தவமிருந்தார். சிவன் அவருக்குக் காட்சியளித்து, "இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் உன்னை வணங்கிய பிறகே என்னை வணங்குவார்கள்" என்று வரமளித்தார்.
எனவே, இக்கோயிலில் நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசிப்பது எம தர்மராஜனின் சன்னதியைத்தான். இதனால் மரண பயம் நீங்கும்.
4. காசியை விட வீசம் பெரியது:
"காசியில் மரித்தால் முக்தி, ஸ்ரீவாஞ்சியத்தில் வாழ்ந்தாலே முக்தி" என்ற பழமொழி உண்டு. காசிக்கு நிகரான 6 ஸ்தலங்களில் ஸ்ரீவாஞ்சியம் முதன்மையானது. காசியை விட ஒரு பங்கு (வீசம்) கூடுதல் புண்ணியம் தருவதால் இதற்கு "காசியிலும் வீசம் பெரியது" என்ற பெருமை உண்டு.
 
5. குப்த கங்கை தீர்த்தம்:
கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தங்கள்! – தில்லை கீதம் 
இங்குள்ள திருக்குளம் "குப்த கங்கை" என்று அழைக்கப்படுகிறது. கங்காதேவி மனிதர்களின் பாவங்களைத் துடைத்து தன் பாவம் நீங்க இத்தலத்து குளத்தில் ரகசியமாக (குப்த்தமாக) நீராடுவதாக ஐதீகம். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடுவது மகா புண்ணியம்.
வழிபாட்டு முறை:
முதலில் குப்த கங்கையில் நீராடி, பின்னர் எம தர்மராஜனை வழிபட்டு, அதன்பின் மூலவர் வாஞ்சிநாதர், அம்பாள் மங்களாம்பிகை மற்றும் 7 நாகங்கள் கொண்ட யோக ராகு-கேதுக்களை தரிசிப்பது முழுமையான பலனைத் தரும்.
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling, monument and temple🌷 🌷🌷 🌷

 

திருவைகல் என்ற #வைகல்மாடக்கோயில் (செண்பகாரண்யம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:56 PM | Best Blogger Tips

 கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்ற  சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமகள் செண்பக வனத்தில் ...Tamil - வைகன் நாதர் திருவைகல் மாடக்கோவில் மூலவர்:வைகல்நாதர்  (செண்பகாரண்யேஸ்வரர்) இறைவி: கொம்பியல்கோதை (சாகா கோமளவல்லி) தல விருட்சம் ...

 

#கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும்,
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும்,
 
திருமகள் செண்பக வனத்தில் கடுந்தவம் புரிந்து ஈசனை வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் ஒன்றான 
 
#மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
செண்பக மரங்கள் நிறைந்த காணப்பட்ட
(செண்பகாரண்யம்,
 
நித்யவாசபுரம்)
 கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றானதும், தேவாரப் பாடல் பெற்ற  சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், திருமகள் செண்பக வனத்தில் ...
திருக்கோயில் வரலாற்றையும் 
 
புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள்
🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻🙇🙇🙇 
 
உண்மையான அடியவர்களைச் சார்ந்தே இருக்கும் அருட்பெரும் தெய்வமான சிவபெருமான், அந்த பக்தர்களைச் சோதித்த பின்பே புடம் போட்டத் தங்கமாய்ப் புத்தொளி வீசச் செய்வார். பக்தியின் உத்தம நிலையை ஒருவன் அடைந்த பின்பே அவன் மீது கருணைப் பொழியும் பண்பினைப் பெற்ற எம்பெருமான், இம்மண்ணின் துயரங்கள் களைந்திடவே தலங்கள்தோறும் எழுந்தருளி தயை புரிகின்றார். அப்படிப்பட்ட அதி உன்னதத் தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது திருவைகல் மாடக்கோயில்.
 
திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடி அடுத்து பழியஞ்சியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் 2 கி.மீ. தெற்கில் உள்ளது. ( 63 நாயன்மார்களில் ஒருவரான கோட்செங்கோட்சோழன் கட்டிய மாடக்கோவில் இது) வைகல் அல்லது வைகல்நாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 33-ஆவது சிவத்தலமாகும்.
 திருவைகல் வைகல்நாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
இக்கோயில் பற்றிய குறிப்புகள் தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவற்றில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். இறைவன் சிவபெருமான் செண்பகா ஆரண்யேசுவரரின் வடிவத்தில் காட்சியளிக்கிறார்.
 
கோட்செங்கட்சோழன் கட்டிய எழுபது மாடக்கோயில்களுள் ஒன்றாகத் திகழும் இந்த வைகல் மாடக்கோயில் ஈசன் மீது பதிகம் பாடிப் பரவியுள்ளார் ஆளுடையப்பிள்ளை திருஞானசம்பந்தர். அதோடு, அப்பர் பெருமானும் பாடிப் பரவிய தலமிது. இந்தக் கோயிலை, ‘வடமலை அணைய நன்மாடக் கோயிலே’ என கயிலை மலைக்கு இணையாகப் பாடிய சம்பந்தப்பெருமான் மேலும், ‘வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசை செய்ய கண்வளவன் முன் செய்த கோயிலே’ என உலகத்தில் உள்ள உயிரினங்கள் மகிழ்வுற இத்தலத்தில் ஈசன் எழுந்தருளியதாகவும் எடுத்துரைக்கின்றார்.
 
திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு. க்ஷேத்திரக்கோவையிலும் இத்தலத்தினை நினைத்துப் போற்றுகின்றார். சைவ சமய சந்தானக் குரவர்களுள் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவக்ஷேத்திர கோவையிலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. சோழ வளநாட்டின் காவிரி தென்கரை தேவாரத் திருத்தலங்களில் 33வது தலமாகத் திகழ்கின்றது இந்த வைகல்மாடக்கோயில்.
 
ஈசனுக்கு திரிநேத்திரங்கள் [மூன்று கண்கள்] இருப்பதுபோல இந்த வைகலில் மூன்று சிவாலயங்கள் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் வைகல் மாடக்கோயிலோடு, பெரியநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும், விசாலாக்ஷி உடனுறை விஸ்வநாதர் ஆலயமும் ஒருங்கே அமையப்பெற்றிருப்பது விசேஷம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியவர்களோடு, இந்திராதி தேவர்களும், அகத்திய மாமுனிவரும் போற்றி வழிபட்ட திருக்கோயில் இது. தேவர்கள் ஈசல் வடிவில் வழிபாடு செய்த புகழ்மிகு கோயிலாகும்.
 
*மூலவர் : வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
*அம்மன் : சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.
*தல விருட்சம் : செண்பகம்
*தீர்த்தம் : செண்பக தீர்த்தம்
*புராண பெயர் : வைகல்மாடக்கோயில்
*ஊர் : திருவைகல்
*மாவட்டம் : மயிலாடுதுறை
*பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், அப்பர், வள்ளலார் மற்றும் சேக்கிழார் 
 
"தோன்று கையினர்
இளமதி யணிசடை
எந்தை யாரிடம்
உளமதி யுடையவர்
வைக லோங்கிய
வளமதி தடவிய
மாடக் கோயிலே.
மெய்யகம் மிளிரும்வெண்
ணூலர் வேதியர்
மையகண் மலைமக
ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர
வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன்
செய்த கோயிலே.
#அப்பர் வாக்கில் வைகல் தேவாரம்:
"துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.
 
புராண வரலாறு:
 
ஆதியில் செண்பக வனமாகத் திகழ்ந்த இத்தலத்தில் நம்மையெல்லாம் தாங்கும், ஆதார சக்தியான அன்னை பூமா தேவி ஒரு சமயம் திருமாலை மணம் புரிந்திட வேண்டி, ஈசனை நோக்கித் தவமிருந்து திருமாலை மணந்து கொண்டாள். இதனால் கோவிந்தன் மீது கோபமுற்றாள் திருமகள். உடனே இந்த செண்பகாரண்யம் அடைந்து, சிவனாரை நினைத்து கடுந்தவம் இயற்றினாள். திருமகளைத் தேடி வந்த திருமால், இத்தல ஈசனை வணங்கினார். உடன் வந்த பிரம்மனும் இங்கே இறைவனை வழிபட்டு நின்றார். அப்போது மகாதேவர் அவர்கள் முன் தோன்றி, திருமகளை சாந்தப்படுத்தி, திருமாலோடு இணைத்து வைத்தார்.
 
திருமகளையும், நிலமகளையும் இரு மனைவியராய் திருமால் கொண்ட தலமிது.
ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல் மாடக்கோயில் தோரண வாயிலுடன் அழகுறத் திகழ்கிறது. கோயிலின் உள்ளே மையத்தில் அமைந்துள்ளது உயரிய மேடை. வலப்பக்கம் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் நந்தி மண்டபம். அதற்கு நேராக அமைந்துள்ளது ஐயன் வைகல்நாதர் சன்னிதி. உள்ளே செல்ல மூடுதளத்துடன்கூடிய அழகிய முன் மண்டபம். கருவறையில் இறைவன் வைகல்நாதர் கிழக்கே திருமுகம் காட்டி, வழுவழு லிங்கத் திருமேனியராக் காட்சி தருகின்றார். மூலவர் செண்பகாரண்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
கோயிலை வலம் வருகையில் வலப்புறம் அம்பிகைக்கு கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதி அமைந்துள்ளது. அதில் அழகிய வடிவில் எழிலோடு தரிசனமளிக்கின்றாள் அன்னை ஸ்ரீ கொம்பியல் கோதை. அப்பன் ஈசனை அன்னை மணக்கும் திருக்கோலம் இது.
முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் செண்பகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவில்களையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.
*கோயில் சிறப்புகள்:
வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் – இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும்.
வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.
தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.
கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.
இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது.
மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது.
வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தின் 4-வது பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், இறைவி கொம்பியல் கோதை பெயரையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு.
இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஞாலத்து நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் மாடக் கோயிற்குள் மதுரமே” என்று போற்றி உள்ளார்.
*புராணங்கள்:
இத்தலம் செண்பகரணியம், நித்யவாசபுரம் முதலிய பெயர்களில் அழைக்கப்பட்டது. இக்கோயிலின் சிவபெருமானை ஸ்ரீ மகாலட்சுமி வழிபட்டாள்.
மகாலட்சுமி / ஸ்ரீதேவி மகா விஷ்ணுவை விட்டுப் பிரிந்து, இந்த இடத்திற்கு வந்து, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார். இதற்கிடையில், மகா விஷ்ணுவும் பூதேவியும் மகாலட்சுமியைத் தேடி இந்தக் கோவிலுக்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர். மகா விஷ்ணு இந்தக் கோவிலில்தான் மகாலட்சுமியை மணந்தார்.
மற்றொரு புராணக்கதையின்படி, காட்டின் நடுவில் பிரிந்துபோன தன் குட்டியைத் தேடி ஒரு யானை வந்தது. அந்த யானை கவனக்குறைவாக ஒரு எறும்புப் புற்றைச் சேதப்படுத்தியது. எறும்புகள் யானையைக் கடித்ததில், அது இறந்துபோனது. யானைக் குட்டியும் எறும்புகளும் தங்கள் பாவத்திலிருந்து விடுபடுமாறு சிவபெருமானிடம் வேண்டின. சிவபெருமான், தன் தாயை இழந்த யானைக் குட்டிக்கு ஆறுதல் கூறி, எறும்புகளையும் மன்னித்தார்.
அமைப்பு:
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறம் விநாயகர் உள்ளார். வெளி திருச்சுற்றில் வலப்புறம் அம்மன் சன்னதியும், இடப்புறம் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளன. காலபைரவரும், சனி பகவானும் உள்ளனர். கோயில் சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மூலவருக்கு எதிராக நந்தி, பலிபீடம் காணப்படுகின்றன. வெளியே வலப்புறம் விநாயகர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மட்டும் உள்ளார். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய பெருமாள் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன.
பிரமன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). லட்சுமி தேவியார் வழிபட்ட தலம். இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு. கன்னிமூல கணபதி மற்றும் வள்ளி-தெய்வானையுடனான சுப்ரமணியரும் இங்கு தரிசனம் அளிக்கின்றனர். ஆலய வளாகத்தின் சுற்றிலும் நந்தவனம் அமைக்கப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சுகின்றது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தக் கோயிலில் நித்திய - நைமித்திய பூஜைகள் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன. தல விருட்சம் செண்பக மரம் முன்பு இந்தக் கோயிலில் இருந்தது. தற்போது இல்லை. தல தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோயிலின் வடபால் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 2006ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனான வரதராஜப் பெருமாள் மற்றும் கஜலட்சுமிக்கு திருமஞ்சனத்தோடு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட, நீண்ட நாள் திருமணத்தடை நீங்கி, திருமாங்கல்ய பாக்கியம் கைகூடும். அதேபோல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் நடத்தி சுக்ர ஹோமம் செய்ய, பலமான களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும். இத்தல அம்பிகைக்கு பொன் மாங்கல்யம் சாத்தி பிரார்த்திக்க ஜாதக ரீதியாக ஏற்படும் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும்.
*கல்வெட்டுகள்:
திருஞானசம்பந்தர் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடல்களைப் பாடியிருந்ததால், மூலக்கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்றும், அது சோழர் காலத்தில் புனரமைக்கப்பட்டு, பின்னர் விஜயநகரப் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்றும் அறியப்படுகிறது.
*திருவிழா:
மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.
*திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
*அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (18 கி.மீ.) காரைக்கால் செல்லும் வழியில் பழிஞ்சநல்லூர் குட்டக்கரையில் இறங்கி அங்கிருந்து தெற்கே ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
திருச்சிற்றம்பலம் 🙏🏻
சிவ சிவ 🙏🏻🙏🏻🙇🙇
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

ராகு பகவான் ஜாதகத்தில் எப்படி பலன் தருகிறார் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:43 PM | Best Blogger Tips

 மங்கல வாழ்வு தரும் ராகு பகவான்

ராகு பகவான் ஜாதகத்தில் எப்படி பலன் தருகிறார் ?
 
ஒரு ஜாதகத்தில் ராகு பகவான் தரும் பலன்கள்  
 
பற்றி ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது தனித்த ராகு பகவான் ஒரு மாதிரியான பலனை தருகிறார். 
 
அதே ராகு பகவான் மற்ற கிரகங்கள் உடன் சேரும் போது வேறு மாதிரியான பலன்களை தருகிறார்.
 
ராகு பகவான் பருப்பொருள் அற்ற நிழல் கிரகம் ஆகும். ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எனவே இருக்கின்ற வீட்டையே சொந்த வீடாக கருத வேண்டும் பலன் எடுக்கும் போது ராகு உடன் சேர்ந்த கிரகங்கள் மற்றும் ராகு பகவானை பார்வை செய்த கிரகங்கள் இதன் அடிப்படையில் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
 
ராகு பகவான் தனித்த நிலையில் அதன் இயல்பான பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.ராகு பகவான் ஆனவர் சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் கடுமையான கெட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
 
ராகு பகவான் இயற்கை சுப கிரகமான குரு பகவான் ,வளர்பிறை சந்திரன், தனித்த புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுடைய பார்வையை அல்லது சேர்க்கையை பெற்ற நிலையில் அதன் தசை ஜாதகருக்கு நல்ல பலனை அள்ளிக் கொடுக்கிறது.
 
குரு பகவான் உடன் ராகு பகவான் சேரும் பொழுது ராகு பகவான் ஆனவர் குருவின் இணைவால் சுப தன்மையை அடைவார்.ஆனால் அதே நேரத்தில் குரு பகவான் ஆனவர் கடுமையான பாவ தன்மையை அடைகிறார்.இங்கு குரு தசை ஆனது கடுமையான கஷ்டங்களை அதன் தசையில் தருகிறது.அதே நேரத்தில் ராகு பகவான் தசை நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
 
ராகு பகவான் ஆனவர் உப ஜெய ஸ்தானமான 3,6,10,11 ஆம் இடங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் பார்வையை பெற்ற நிலையில் கடுமையான யோக பலனை ஜாதகருக்கு கொடுக்கிறது.
 
ராகு பகவான் மேசம் ,ரிஷபம் ,மகரம், கடகம் மற்றும் கன்னி ஆகிய இடங்களில் நின்று திசை நடத்தினால் ஜாதகருக்கு நல்ல யோக பலனை தருகிறது.
 
ராகு பகவான் லக்னத்தில் அமர்ந்து சர்ப்ப தோஷம் என்ன நாகதோஷத்தை சாதகருக்கு கொடுத்து திருமண தடையை உண்டாக்குகிறார். அதே போல இரண்டாம் இடத்தில் ராகு பகவான் அமரும்பொழுது களத்திர தோஷத்தை ஜாதகருக்கு தருகிறார்.
 
மூன்றாம் இடத்தில் ராகு பகவான் அவரும் பொழுது சகோதர தோஷத்தை தருகிறார்.
ஐந்தாம் இடத்தில் அமரும் பொழுது புத்திர தோஷத்தை தருகிறார் . ஆறாம் இடத்தில் ராகு பகவான் எதிரியை வெல்வார்..ஏழாம் இடத்தில் அமரும் பொழுது திருமணத் தடையினை தருகிறார். எட்டாம் இடத்தில் ராகு பகவான் களத்திர தடையை தருகிறார். ஒன்பதாம் இடத்தில் அமரும் பொழுது தந்தைக்கான தோஷத்தை தருகிறார்.
 
பத்தாம் இடத்தில் ஒரு பாவியாவது அமர வேண்டும் என்ற விதியில் பத்தாம் இடத்தில் ராகு பகவான் அமர்வது நல்லது. 11ஆம் இடங்களில் ராகு பகவான் அமர்ந்து சுப கிரக பாதையில் பெரும்பொழுது புகுந்து நல்ல பலனை ஜாதகருக்கு கொடுக்கிறார் இதே போல 12ஆம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து குருவின் பார்வையை பெற்ற நிலையில் ராகு தசை வரும்பொழுது வெளிநாடு செல்லும் யோகம் உள்ள ஜாதகம் ஆகும்.
 
ராகு பகவான் குரு அணியை சேர்ந்த மேஷம், விருச்சிகம் ,தனுசு ,மீனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பலனை தருகிறது.இதேபோல சுக்கிரன் அணியை சேர்ந்த ரிஷபம், துலாம், மகரம் , கும்பம் மிதுனம் மற்றும் கன்னி ஆகிய ஆறு லக்கனங்களுக்கு நல்ல பலனை தர அதே அணியில் இடம் பெற வேண்டும்.
ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது என்பது மட்டுமல்லாமல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒன்றையும் அவை பெற்றிருக்கவில்லை.
 
உச்சம் ,ஆட்சி, மூல திரிகோணம்
போன்ற ஸ்தான வலிமை கிடையாது., பார்வை பலமும் கிடையாது.திக் பலம் கிடையாது.
எல்லா கிரகங்களும் முன்னோக்கி நகரும் பொழுது ராகு பகவான் மட்டும் பின்னோக்கி நகரும் என்பதால் இவற்றிற்கு வக்ர கதி கிடையாது. ராகு பகவான் ஒளி மிகுந்த சூரியனை நெருங்கும் பொழுது இவை சூரியனால் அஸ்தங்கம் அடைவதில்லை. மாறாக சூரியனுடைய ஒளியை மறைத்து. கிரகண தோஷத்தை உண்டுபண்ணுகிறது.
ராகு பகவான் வாரத்தின் ஏழு நாட்களில் ராகு பகவானுக்கு இடம் கிடையாது. ராகு பகவானுக்கு என்று தனி ஓரை கிடையாது.
 
ஒரு நாளைக்கு 1.30 மணி நேரம் அளவில் ராகு காலம் என்று மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராகு பகவான் தரும் தோஷங்கள் போக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூர், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம், திருபாம்பூரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி சென்று வழிபாடு செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் வெள்ளியில் பாம்பு படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து பரிகாரம் செய்ய வேண்டும்.
 
நன்றி 

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள

மணக்கால் அய்யம்பேட்டை | 3:41 PM | Best Blogger Tips

 கமண்டலம்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்
 
சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம்.
 
ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
 
ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்!
 
சைவ மார்கத்தினர் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் சகுணபிரம்மமாகவும் உபாசிக்கின்றனர்.
 
சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, 
 
அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
 
இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும்.
 
சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து,
 
ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியல் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது.
 
இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர்.
 
ஆனால், மிகவும் உடல்திறன் வலிமையாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான்.
 
இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலைக்கு செல்லும் என நாம் தெரிந்துக்கொள்ளலாம்.
 
மக்கள் வீண் பகட்டை தவிர்ப்பது அவர்களுக்கு தான் நல்லது.
 
சரி இனி, சிவபெருமானிடம் இருந்து பொதுமக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு நலன்கள் மற்றும் வாழிவியல் கருத்துகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
 
 ஜடாமுடி
| ஜடாமுடி |
சிவபெருமானின் நேர்க்கொண்டு உயர்ந்து காணும் ஜடாமுடியின் மூலம், ஒருமுகமாக இருக்கும் உடல், மனம் மற்றும் ஆத்மா உங்களது உடல்நிலையையும், மனநிலையும் அதிகரிக்க செய்யும் மற்றும் உங்களை அமைதியான நிலையில் ஆட்கொள்ள உதவும். உங்கள் செயல்களில் ஒருமுகத்தோடு செயல்பட பயன்தரும்.
நெற்றிக்கண் 
 
| நெற்றிக்கண் |
சிவபெருமானின் நெற்றிக்கண் நமக்கு கூறுவது என்னவெனில், நமக்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு அதை தகர்த்தெறிந்து, முடியாது என்பனவற்றையும் முடித்துக் காட்ட வேண்டும் என்பதே ஆகும்.
 திரிசூலம்
| திரிசூலம் |
திரிசூலம் மூலமாக நாம் அறிய வேண்டியது, நமது மனது, அறிவாற்றல், தன்முனைப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்தினோம் எனில் நமது வேலைகளில் சிறந்து செயல்பட இயலும் மற்றும் தோல்விகளைத் தகர்த்தெறியலாம் என்பனவாகும்.
 ஆழ்ந்தநிலை
| ஆழ்ந்தநிலை |
சிவபெருமானின் ஆழ்நிலை உருவின் மூலமாக, நாம் அமைதி மற்றும் பொறுமையைக் கையாளும் போது, நமது தினசரி பிரச்சனைகளையும், கவலைகளையும் எளிதாக கடந்து தெளிவான மனநிலை பெறலாம் என்பதே ஆகும்.
 சாம்பல்
| சாம்பல் |
சிவபெருமானின் தேகத்தில் இருக்கும் சாம்பல் நமக்கு உணர்த்துவது, நம் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் அல்ல, அனைத்தும் கடந்து போகும். அதனால் எதற்காகவும் மனக்கவலைப்படாமல், துயரம் கொள்ளாமல் உங்கள் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்து வாருங்கள் என்பதே ஆகும்.
 நீலகண்டன்
| நீலகண்டம் |
சிவபெருமானின் நீல நிற தொண்டையின் மூலம் நாம் அறியவேண்டியது, நமக்கு எவ்வளவு கோபம் வந்தாலும், அதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அதை மற்றவர் மீது திணித்து (விஷ சொற்களாக), உங்கள் நிலையை நீங்களே குறைத்துக் கொள்ள கூடாது, என்பதே ஆகும்.
 கங்கை
| உடுக்கை |
சிவபெருமானின் உடுக்கையின் மூலமாக, உங்கள் உடலின் அனைத்து எண்ணங்களையும் ஒருமுகமாக செயல்படுத்தும் போது, உங்கள் உடல் சுத்தமாகி, நோயின்றி வாழ உதவுகிறது என்பதே ஆகும்.
 
| கங்கை |
சிவபெருமானின் தலையில் இருக்கும் கங்கை நமக்கு உணர்த்துவது, உங்களது அறியாமையின் முடிவில் ஒரு தேடல் பிறக்கிறது. அந்த தேடலில் இருந்து தான் உங்களுக்கான புதிய வழி தென்படுகிறது என்பதே ஆகும்.
 
| கமண்டலம் |
சிவபெருமானின் கமண்டலம் மூலம் நாம் அறிய வேண்டியது, நமது உடலில் இருந்து தீய எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்தோம் என்றால் நாம் நல்ல நிலையை எட்ட முடியும் என்பதே ஆகும்.
 
| நாகம் |
சிவபெருமானின் கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் மூலமாக நாம் உணர வேண்டியது, நம்முள் இருக்கும் 'நான்' எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதே ஆகும்....
 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

மனித வாழ்க்கையின் முழுமை… ❤️👌

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

 வாழ்க்கையும் வலிகளும் - Shah Umari

மனித
வாழ்க்கையின்
மிக வலிகள்
நிறைந்த பருவம்
— முதுமை…
 
அந்தக்
காலத்தில்,
பொருள்
செல்வங்களோ,
புகழோ அல்ல…
 183,061 Close Up Of Holding Hands Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock
ஒரு அன்பான
விசாரணை,
ஒரு
நெருக்கமான
கைப்பிடித்தல்,
 28,309 Old Village Man Stock Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime
ஒரு “எப்படி
இருக்கிறீர்கள்?”
என்ற
வார்த்தைகள் தான் மனதை
உயிர்ப்பிக்கும்…
 
இறுதி
ஊர்வலத்தில்
எத்தனை பேர்
வந்தார்கள்
என்பது
முக்கியமல்ல
 
ஆனால்,
உயிரோடு
இருக்கும்
காலத்தில்,
 How Are You In Tamil: 5+ Ways To Cherish Tradition - ling-app.com
நண்பர்களும்
உறவுகளும்
வந்து சந்தித்து
மகிழ்விப்பது தான்
உண்மையான நேசம்
 
பெற்றோரை
பராமரிக்கும்
மனமுடைய
பிள்ளைகள்
கிடைப்பது
ஒரு வரம்
 
வயதாகும் போது,
அவர்களுக்கு
தேவைப்படுவது
மருந்துகளைக்
காட்டிலும் ,
 
அன்பும்
அரவணைப்பும் தான்…
 macchu_offcl இளம் வயது மனிதர்கள் தான், சாதாரண ஏமாற்றங்களுக்கும்,  தோல்விகளுக்கும், உடலும் மனமும் சோர்ந்து போகிறார்கள். எங்களைப் போன்ற ...வயதானவர்கள்.. இவர்களுக்குத் தேவை உங்களது விரலின் நுனி மட்டுமே..  இதயத்திலிருந்து நீளட்டும்.. அன்பு! - Thentamil
இறந்த பின் யார்
வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?
 
சென்று போனவர்
திரும்பி வந்து
பார்ப்பதில்லை…
 
ஆனால், 
 
உயிரோடு
இருக்கும்
நாள்களில்
சக மனிதனை
 
மதித்து,
உறவுகளை
பேணி,
பெற்றோரை
காத்து
வாழும் மனிதனே
உண்மையில்
பேறுபெற்றவன்…
 
இறப்பு என்பது
இன்னும்
விளங்காத மர்மம்
 
ஆனால்
ஒரு நிதர்சன
உண்மை
என்னவென்றால் —
 
உயிர்
பிரிந்த பின்,
அந்த உடலுக்கு
எதுவும்
தேவையில்லை
 
ஆகவே,
வாழும்
நாள்களை 
 
அன்பால்
நிரப்புவோம்
 அன்றாட வாழ்வின் கவிதை: காதலிக்க வேண்டிய தருணங்களின் தொகுப்பு
மனிதர்களை
மதித்து
வாழுவோம்…
 வாரம் ஓர் அலசல் – ஆகஸ்ட் 19. உலக மனிதாபிமான நாள் - வத்திக்கான் செய்திகள்
மகிழ்ச்சியை
பகிர்ந்து வாழுவோம்
 
உலகை விட்டு
செல்லும்
நாளில்,
 Protect Trees In Coimbatore,மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் கோவையில் 300 அடி நீளத்திற்கு சுவர் ஓவியம்! - 300 feet  long wall painting in coimbatore to create awareness about ...
“நன்றாக வாழ்ந்தோம்”
என்ற
மன நிறைவே
 மகாபாரதம் - 1: பிரகஸ்பதியின் சாபமும் தாராவின் குழந்தையும் | Isha Tamil Blog
மனித
வாழ்க்கையின்
முழுமை❤️👌
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, beard, people smiling and temple🌷 🌷🌷 🌷