மோடி அவர்களின் ஷாக்கிங் சாதனை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:32 | Best Blogger Tips
மோடி அவர்களின் ஷாக்கிங் சாதனை க்கான பட முடிவுமோடி அவர்களின் ஷாக்கிங் சாதனை க்கான பட முடிவு

இன்னும் 1000 நாட்களில் இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் தரப்படும் என்று 2015 சுதந்திர தின விழா கொடியேற்றி வைத்து மோடி அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். நேற்று மாலை கடைசியாக மின் இணைப்பை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு kraamaththukku வழங்கி இந்தியா கிராமங்களில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி உள்ளது மோடி அவர்களின் அரசு.
மின் வசதி பெற்ற கிராமங்கள் என அறிவிக்க ஒரு கிராமத்தில் 10 % நபர்களுக்கு மின் வசதி செய்து கொடுக்க பட்டு இருக்க வேண்டும். கிட்ட தட்ட 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. அடுத்த கட்டமாக 2019 மார்க்சுக்கு முன்னால் 40 மில்லியன் குடும்பங்களுக்கு மின் இணைப்பை வழங்க வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்க பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மின்சாரம் இல்லாத கிராமங்கள் லிஸ்டில் விடுபட்டு இருந்த 1275 கிராமங்களையும் தேடிப்பிடித்து இப்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு ள்ளது.
சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இத்தனை நாட்கள் கழித்து அனைத்து கிராம மக்களும் மின்சார வசதி பெற்றது பற்றி எந்த விவாதமும் இருக்காது.
இந்த சாதனையை ஊடகங்களில் விவாதிக்க ஒரு தொலை காட்சியும் வராது. இதை மக்களுக்கு எடுத்து சொல்ல கட்சி தலைவர்களுக்கு நேரமும் இருக்காது.
நாடு நன்றாக வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
 Thanks Web

பழநி மலை முருகரின் அதிசய தகவல்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips
பழநி மலை முருகரின் அதிசய தகவல்கள்... க்கான பட முடிவுபழநி மலை முருகரின் அதிசய தகவல்கள்... க்கான பட முடிவு
1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும்.
3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
5. விக்ரகத்தின் புருவங்களுக்கு இடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக் கொண்ட நாட்கள்ஒன்பது வருடம்.
10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
15. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
பழநிமலை முருகருக்கு அரோகரா.

நன்றி இணையம்