எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:25 | Best Blogger Tips

 



ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...

 

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.

 

மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும்.

 

இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும்.

 


பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும்.

 

தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும்.

 

இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.

 


வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!.

 

ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது.

 

இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.

 

சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது.

 

அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது.

 

"நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை!

 

வேகமாகச் செயல்பட முடியவில்லை.

 

எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.

 


நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது.

 

"அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி.

 

"அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய்.

 

"எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி.

 

"அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்.

 

"சே! புரியாமல் பேசுகிறாயே!

இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி.

 

நாய் விடவில்லை. "நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.

 

ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது....

 

அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது.

 

என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது...

 

ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.

 

சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தது

 

"நண்பனே!எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது.

 


அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது.

 

அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!

 

ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது.

 

விண்ணையே என்னால்

இப்போது தொட முடிகிறது.

 

மனிதர்களும் இது போன்ற ஏமாற்றம், சோகம், கோபம், பொறாமை, பேராசை என்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம் 💪

 



நன்றி இணையம்


நேற்று பிரதமர் ஆற்றிய உரை....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips

 









 

பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.

 

"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

 

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 

நான் பிரதமராக பதவியேற்ற போது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.

 

ஈரான் 48000 கோடி.

ஐக்கிய அரபு எமிரேட் 40000 கோடி

இந்திய எரிபொருள் நிறுவனங்கள் 133000 கோடி

இந்தியன் ஏர்லைன்ஸ் 58000 கோடி

இந்திய ரயில்வே 22000 கோடி

பி.எஸ்.என்.எல் 1500 கோடி.

 

நமது பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் இல்லை.

ஒரு போரை எதிர்த்துப் போராட வேண்டுமானால் 4 நாட்கள் கூட தாங்க முடியாத அளவு ஆயுதங்கள் மட்டுமே இருந்தது.

 

அது மட்டுமல்ல ...

 

உளவுத் துறை கூட ஒரு பெரிய தோல்வியாக இருந்தது. வெடிகுண்டுகள் எப்போது, ​​எங்கு வெடிக்கும் என்று யூகிக்க முடியாத நிலை இருந்தது.

 

நான் பொறுப்பேற்ற போது இதுதான் நிலைமை. அந்த நேரத்தில் எனது பிரதான பொறுப்பு அனைத்து அமைப்புகளையும் சரிப்படுத்துவது மற்றும் கடன் தொல்லையில் இருந்து மீள்வது ஆகும்.

 





அதிர்ஷ்டவசமாக  சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை விகிதங்கள் குறைந்து விட்டிருந்தது. குறைக்கப்பட்ட விலைகள் அனைத்தும் உங்களுக்கு வழங்கப்படாமல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

 

அதனால், என் மீது இவ்வளவு அன்பு கொண்டு இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் நீங்கள் என் மீது ஒரு சிறிய கோபம் கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் உதவ முடியவில்லை.

காரணம், நமது எதிர்கால தலைமுறைகளை மனதில் வைக்க வேண்டியிருந்தது.

 

முந்தைய அரசாங்கத்தின் தவறுகள் எங்களுக்கு போராட்டமாக மாற்றப்பட்டுள்ளன.

 

அவர்கள் ஆட்சி காலத்தில், எரிபொருள் விலை 120 டாலர்களாக இருந்தபோது அவற்றை  லிட்டருக்கு ரூ.85-க்கு விற்றனர்.

 

அது எப்படி சாத்தியம் ஆனது ?

 

கடனில் அந்த எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

பொது மக்களின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அவர்கள்  விலையை அதிகரிக்கவில்லை. மானிய விலையில் விற்றதுடன் கடனையும் செலுத்தவில்லை.

 

இந்த வழியில் அவர்கள் 250000 கோடிக்கு வெளிநாட்டு கடன்களை வைத்திருந்தனர்.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 25000 கோடியை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

இந்திய எரிபொருள் நிறுவனங்களுக்கு 133000 கோடி கடன் வைத்து இருந்தார்கள்.

 

நம் நாடு மிகப் பெரிய கடன்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில், தடையில்லாமல் எரிபொருளைப் பெற கடன்களைச் செலுத்த நாங்கள் கூறப்பட்டோம்.

 

பெட்ரோல் /டீசல் மீது மத்திய அரசு வரி வசூலிக்கப்பட்டதற்கான காரணம் இதுதான்.

அதனால் இன்று நாங்கள் 250000 கோடி கடனை வட்டியுடன் முடித்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும்.

(இது உங்கள் கடன். நாட்டு மக்கள் அனைவரின் கடன்)

 

ரயில்வே இழப்புகள் அகற்றப்பட்டுள்ளன. முந்தைய நிர்வாகங்கள் நிலுவையில் வைத்திருந்த அனைத்து கடன்களும் முடிவடைந்தன. புல்லட் ரயிலை மின்மயமாக்குவது முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

18500 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 40 ஆயிரம் கிலோமீட்டர் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன.

150000 கோடி இளைஞர்களுக்கு முத்ரா கடன்களாக வழங்கப்பட்டது.

ஆயுஷ்மான் பாரத் 50 கோடி மக்களுக்கு 150000 கோடியுடன் தொடங்கப்பட்டது.

அனைத்து நவீன மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் நமது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ?

இது உங்கள் தியாகம்.

எரி பொருள் மீது நீங்கள் செலுத்திய மத்திய அரசு வரி மூலம் இவை சாத்தியம் ஆனது.

நீங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் (you are part of the show).

 

நாம் வரியை அகற்றினால் என்ன ?

நம்மால் கடன்களை அடைக்கமுடியாதா ? 

அடைக்க முடியும்.

ஆனால் மறைமுகமாக நாம் எல்லா விஷயங்களிலும் வரிகளை அதிகரிக்க வேண்டும்.

இது 130 கோடி மக்கள் அனைவருக்கும் சுமையாக இருக்கலாம்.

ஆனால்  எரி பொருள் விலை சுமை பெருமளவில் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும்.

 

கடைசியாக ஒரு விஷயம்.

 

உங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் பெரும் கடன்களில் இருக்கும்போது நீங்கள் அதிர்ஷ்டத்தால் பெற்ற பணத்தை என்ன செய்வீர்கள் ?

 

நீங்கள் பொறுப்பற்ற முறையில் செலவிடுவீர்களா ?

அல்லது

கடன்களை அடைப்பீர்களா ?

 

பொறுப்பற்ற முறையில் செலவிட்டால் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் ?

உங்களுக்கு கடன் கொடுத்த நபர் தொடர்ந்து மிகவும் பொறுமையாக இருப்பாரா ?

(நாடும் ஒரு குடும்பம் தான்)

 

இந்த நாட்டின் தேசபக்தியுள்ள குடிமகனாக தயவுசெய்து நாட்டின் வளர்ச்சியில் என்றென்றும் கைகோருங்கள்.

 

எதிர்க்கட்சிகளின் வித்தைகளுக்குள் வீழ்ந்து விடாதீர்கள்.

இந்த எதிர்க்கட்சிகள் எப்போதுமே தேர்தல் எண்ணம் கொண்டவை, இப்போது வெவ்வேறு மாநிலங்களில் ஒரு தேர்தல் வரும்போதெல்லாம் தவறான பிரச்சாரங்களுடன் மக்களை குழப்ப முயற்சிக்கின்றன.

 

தயவுசெய்து சிந்தியுங்கள் !

 

தயவுசெய்து இதை அனைத்து இந்தியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் !

 

உங்கள்,

 

#நரேந்திர_மோடி...

 

பாரத் மாதா கி ஜய்!!!

 

#Narendra_Modi

 

#ஜெய்ஹிந்த்



Thanks Web

எஸ்.வி.சேகர் அவர்களைப் பற்றிய அறியாத

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips

 



🌠 இன்றைய நட்சத்திரம்

 

இன்று தனது 71'ஆவது

💫 பிறந்தநாள் காணும்

 நாடக, திரைப்பட நடிகர்,

 இயக்குனர் பின்னாளில் அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்ட கலைஞர்

 எஸ்.வி.சேகர் அவர்களைப் பற்றிய அறியாத பல அரிய செய்திகளுடன் சிறப்பு பதிவு.!

 

   🌺   ☘️      ☘️   🌺  

 

தஞ்சை மாவட்டம், சீர்காழி அருகிலுள்ள சட்டநாதபுரம் தான் இவரது சொந்த ஊர். இவரின் இனிஷியலில் எஸ்.வி.'க்கு அர்த்தம், எஸ். என்றால் அப்பாவின் சொந்த ஊரான சட்டநாதபுரம், வி. என்றால் அப்பா வெங்கட்ராம'னைக் குறிப்பிடுவது.

 


பிற்காலத்தில் பன்முகத் திறமை கொண்டு விளங்கிய இவர் ஒரு ஒலிப்பதிவாள'ராகத்தான் (Sound Engineer) தன் வாழ்வை தொடங்கினார்.! அதற்குப்பிறகு தான் நாடக மேடையில் அடியெடுத்து வைத்தார்.

 

1968'ல் இவரது தந்தை வெங்கட்ராமன் அவர்கள் "கற்பகம் கலாமந்திர்" என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். இக்கம்பெனி நடத்தும் நாடகங்களில் மேடை உதவியாளராக சேகர் பணிபுரிந்தார். அப்போது அப்பாவிடமிருந்து புகைப்பட கலையையும் கற்றுத் தேர்ந்தார்.

 


இந்த சமயத்தில் இவரது தந்தை இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் சென்னை கிளைக்குப் பொறுப்பாளராக இருந்தார். மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படத்தை வானொலியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பக்கூடிய விதத்தில் ஒலிச்சித்திரம்ஆக்கி அனுப்புவது இந்த நிறுவனத்தின் முக்கிய வேலை. இந்த முக்கியமான பணியை அப்பாவிடம்  உதவியாளராக இருந்து இவர் செய்து வந்தார்.

 

ஒரு முறை அவரது அப்பா பதிவு கூடத்துக்கு வரமுடியாத சூழ்நிலையில் அவரில்லாமல் இவர் செய்த முதல் படம்  எம்.ஜி.ஆர். நடித்த  ‘நம்நாடு’. அதன் விறுவிறுப்பு குறையாமல் மாறுபட்ட விதத்தில் ஒரு மணி நேர ஒலிச்சித்திரமாக்கினார் சேகர். இது இலங்கைக்குப் போய் சேர்ந்த அன்றே இவரது அப்பாவுக்கு நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு..?

 

இந்த முறை ஒலிச்சித்திரம்" பிரமாதமாக இருக்கிறது பாராட்டுக்கள் என்றார் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர். இந்தப் பாராட்டுக்குரியவன் நானல்ல. என் பதினேழு வயது மகன் தான்.! என்று கூறியுள்ளார் அவரது தந்தை.

 

அடுத்து இவர் தனித்து தயார் செய்தது சிவாஜிகணேச'னின் ஒப்பற்ற சித்திரம்  “வசந்த மாளிகை”. இப்படி ஆரம்பித்த இவர் இதுவரையிலும் சுமார் 275 திரைப்படங்களுக்கு ஒலிச்சித்திரங்கள்.! தயாரித்து கொடுத்துள்ளார்.

 

   ☘️   🌺      🌺   ☘️  

 


இவரது கலையுலக பயணத்தை தொடங்கியது இவரது ஏழாவது வயதில் வேப்பம்பூ பச்சடி என்ற வானொலி சிறுவர் நாடகத்தில்.! அப்போது சென்னை வானொலியில் பிரபலமான கூத்தபிரான் அவர்களால் இவரது முதல் அரங்கேற்றம் நடந்தேறியது.

 

இவரது தந்தையின் நாடக குழு மூலம் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன் இவரது நண்பர். அவர் நாடகங்களும் நடத்தி வந்தார்.  அவரது நாடகங்களுக்கு அடிக்கடி இவர் போவதுண்டு. அப்படி ஒரு நாள் சென்னை சிறைச்சாலையில் நடந்த ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் அன்றைய நாள் வராமல் போனார். வி.கோபாலகிருஷ்ணன் இவரிடம் அந்த கதாபாத்திரத்தில் நீயே நடித்து விடு என்றார். இவரும் ஒப்புக்கொண்டு நடித்தார். அது தான் இவர் நடித்த முதல் நாடகம். வி.கோபாலகிருஷ்ணன் நாடகத்தில் நடிகராக அங்கீகாரம் பெற்ற இவர் அந்தக் குழுவுடன் சிங்கப்பூர் சென்றும் நடித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து கப்பலில் திரும்பி வந்த போது நண்பர்களுடன் பேசி கப்பலிலேயே ஆரம்பித்தது தான் நாடகப்ரியாநாடகக்குழு 1974'ல் கப்பலில் ஆரம்பித்த இவரது குழு இன்று இன்று வரை வெற்றிகரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது.! அன்று இவருடன் கூட்டு சேர்ந்து நாடக குழு ஆரம்பித்த வரிகளில் நடிகர்  கமல்ஹாசனும் ஒருவர்.!

 

நாடகத்தையும் படிப்பையும் தொடர்ந்த இவர் மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரப் பொறியியலாளர்படிப்பு பயின்று முடித்துள்ளார்.

 

   🌺   ☘️      ☘️   🌺  

 

திரைத்துறையில்...

 

 கே.பாலசந்தர் அவர்கள் நினைத்தாலே இனிக்கும்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் சிங்கப்பூரில் நடப்பது போன்ற ஒரு காட்சியை சென்னையிலுள்ள இவரது பதிவு திரையரங்கில்எடுத்தார்கள். இவரது ஸ்டூடியோவுக்கு வரும் ரஜனிகாந்த் அவருக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக 5 வெள்ளி சிங்கப்பூர் பணம் கொடுப்பார்.! இவர் உடனே நம்ம ஊரு புத்தியைக் காட்டிட்டே பாத்தியாஎன்று சொல்ல வேண்டும். இது தான் காட்சி. இவர் வழக்கமாக இருக்கின்ற இடத்தில் இருந்த படி ரஜனிகாந்திடம் இந்த வசனத்தைச் சொன்னார். இதை நடிப்பு என்ற கோணத்தில் பார்க்காமல் சாதாரணமான ஒரு சீன் தானே என்ற கண்ணோட்டத்தில் வெகு இயல்பாக நடித்து கொடுத்தார். 1979'ல் படம் வெளியான போது இக்காட்சி பிரபலமாகி சாமானிய ரசிகர்களிடமும் போய் சேர்ந்தது.!

 

இந்த நேரத்தில் கே.பாலசந்தரே மீண்டும் இவரை அழைத்து  “வறுமையின் நிறம் சிகப்புபடத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். வேலை இல்லாமல் திண்டாடும் 3 நண்பர்களைப் பற்றியது இப்படம். கமலஹாசன், திலீப், எஸ்.வி.சேகர் மூவரும் நண்பர்களாக நடித்தனர்.

 

விசு'வின்  மணல் கயிறு 1982 படம் தான் இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம். இதில் இவருக்கு இணையாக நடித்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா'வின் தங்கை சாந்தி கிருஷ்ணா.

 

அதைத்தொடர்ந்து சிம்லா ஸ்பெஷல், மிஸ்டர் பாரத், பூவே பூச்சூடவா, பட்டம் பறக்கட்டும், சிதம்பர ரகசியம், பெண்டாட்டியே தெய்வம், அரசாட்சி, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தினந்தோறும் தீபாவளி, டௌரி கல்யாணம், கிருஷ்ண கிருஷ்ணா, தங்கமான புருஷன், சிகாமணி ரமாமணி, குடும்பம் ஒரு கதம்பம், வீட்டில எலி வெளியில புலி, மணந்தால் மகாதேவன், ஜித்தன், ஜீன்ஸ் வல்லவன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நாடகங்களில் ஏராளமாக நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க மறுத்த படங்கள் மட்டும் 200-க்கும் மேல்.!

 

💰 இராம.நாராயணன் அவர்களது தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், பட்டம் பறக்கட்டும் போன்ற 19'க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இவரை அடுத்து இயக்குநர் விசுவின் 18 படங்களில் நடித்துள்ளார்.!

 

💰 முக்தா வி.சீனிவாசன் படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார். கேரளாவில் மோகன்லால், சீனிவாசன் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற  “நாடோடிக்காற்றுஎன்ற படம் கதாநாயகன்என்ற பெயரில் தமிழில் முக்தா வி.சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்தது. இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடன் இணைந்து நடித்தவர் பாண்டியராஜன். இப்படம் 100 நாட்கள் ஓடியது. இப்போதும் எஸ்.வி.சேகர் துபாயோ, சிங்கப்பூரோ போனாலும் இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் பற்றி ரசிகர்கள் கேட்பதுண்டு.!

 

திரைப்படத்துறையில் இவரை மிகவும் கவர்ந்தவர் ஜெய்சங்கர். அவருடன் பூவே பூச்சூடவாபடத்தில் தமிழில் புதுமுகமான நதியா'விற்கு இணையாக நடித்தார். அந்த வகையில் நதியா'வின் முதல் கதாநாயகன் இவர் தான்.!

 

   🌺   ☘️      ☘️   🌺  

 

திரைப்படங்களில் பரபரப்பாக நடித்தாலும், இடைவிடாமல் நாடகங்களில் நடித்த்து வந்தார்.! இவர் 25'க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியிருக்கிறார். இந்த நாடகங்களை 6000-க்கும் மேற்பட்ட முறை மேடையேற்றியிருக்கிறார். நாடகத்தில் இவருக்கு மானசீகக் குரு சோஅவர்கள்.

 

1984'ல் ஒரே நாளில் 8 நாடகங்கள் நடித்திருக்கிறார்.!

 

அதேபோல 2003'ல் அமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் 32 நாட்களில் 28 நாடகங்களைப் போட்டிருக்கிறார்.! அனைத்தும் அரங்கு நிறைந்த காட்சிகள்.

 

இந்த இரு நிகழ்வுகளும் அவரது கலை உலக வாழ்வில் சாதனைகளாக கருதப்படுகிறது.!

 

   🌺   ☘️     ☘️   🌺 

 

1979 ஆகஸ்ட் மாதம் இவருக்குத் திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் உமா மகேஸ்வரி. இவர் பிரபல இசையமைப்பாளர்  ஜி ராமநாதன் அவர்களின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.! இவர்களது மகன் அஸ்வின் சேகர், மகள் அனுராதா.

 

இவரது மகன் அஸ்வின் கடந்த 2007'ம் ஆண்டு வேகம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.!

   🌺   ☘️      ☘️   🌺

நன்றி இணையம்