திருவண்ணாமலை டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:01 | Best Blogger Tips
Image result for திருவண்ணாமலை

நண்பர்களே!
திருவண்ணாமலை செங்குந்தர் (கைக்கோளர்) முதலியார்களில் தி.சாமி முதலியார் குடும்பம் குறித்து பேசி வருகிறோம்.
Image result for திருவண்ணாமலை
வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான் 

நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம் ஆனால் பார்ப்பனர்களிடம் அதற்கு முன்பு 2000 ஆண்டுகள் சூத்திரர்களாக அடிமைப்பட்டு கிடந்தோம்

குத்திரர்கள் படிக்கக் கூடாது என்று மனுதர்மம் சொல்கிறது என்று பார்ப்பான் சொன்னதால் அரசனை விட்டு அதனை சட்டம் செய்தததால் சூத்திரர்களாகிய நாமெல்லாம் படிக்காமல் இருந்தோம் படிக்க முடியாமல் இருந்தது
நம்முடைய குலதர்மம் படிக்காமல் இருப்பது படிப்பதை காதில் கூட கேட்க கூடாது என்று சொன்னது 

அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பு தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை
அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள் பணக்காரர் செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது

ஆனால் பணக்கார் _பணம் படைத்த சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க "விக்டோரியா இந்துபள்ளி "க்கூடத்தைத் திறந்தார்

இன்றைக்கு கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரியஇடத்தையும் "தர்ம "மாக கொடுத்தார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னதாக திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் விக்டோரியா இந்து பள்ளியில் படித்தவர்கள் தான் 

தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்

1. டி.எஸ்.முத்துக்குமாரசாமிமுதலியார்
2.
டி.எஸ்.நாரயணசாமி முதலியார்
3.
டி.எஸ்.ராமு முதலியார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 - 00 மணிக்கு அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி
தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்
ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல் மண்டகப்படி ஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும் அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே
திருவூடலுக்கு போகும் அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம் அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளைதி.சாமிமுதலியாரின் முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்

1929 முதல் 1939 வரை 10 ஆண்டு காலம் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்

அண்ணாமலையார் திருக்கோயிலின் அறங்காவலராகவும் அறங்காவல் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார் இன்றைக்கு வளர்ந்து விரிந்து பரந்து பெருநகராகவிளங்கும்

திருவண்ணாமலைக்கு சாத்தனூர் அணையிலிருந்து ராட்சத குழாய்களின் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது வருகிறது

ஆனால் 90 வருடங்களுக்கு முன் திருவண்ணாமலை மக்கள் கிணற்று நீரை மட்டுமே நம்பி கிணற்று
தண்ணீரை பயன்படுத்தி வந்த போது

திருவண்ணாமலைக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கும் சமுத்திர ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டி அதிலிருந்து மோட்டார் வைத்து இறைத்து குழாய்கள் மூலமாக
திருவண்ணாமலை நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் தான் இப்பொழுது கூட திருவண்ணாமலை நகரில் மிச்ச மீதமிருக்கும் தெருக் குழாய்களை _ பழைய தெருக் குழாய்களை பார்த்தால் அந்தத் தெருக் குழாய்களில் பெயர் கல்வெட்டுகள் இருக்கிறது

அந்தக் குடிநீர்க்குழாய் கல்வெட்டுகளில் 90 சதவீதம் நகராட்சி தலைவர் என்று டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் பெயர் தான்பொறிக்கபட்டிருக்கும்
ஆணையாளர் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களின் பெயர் இருக்கிறது

நண்பர்களே...

நான் 1960 களில் பள்ளிக்கு படிக்க வந்த காலத்தில் இப்போது இருப்பது போல் ஓட்டல்கள் டீ கடைகள் இல்லை பாட்டல் வாட்டர்களும் இல்லை
தண்ணீர் தாகம் என்றால் என்னைப் போன்ற வெளியூர்க்காரர்கள் குழாய்த் தண்ணீரைத்தான்குடிப்போம் குழாயைத் திறந்துவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு முகம் கை கால்களையும் கழுவுவோம்

முத்துக்குமாரசாமி முதலியார் குடும்பத்திற்கு திருவண்ணாமலைக்கு தெற்கே கீழ் அணைக்கரை சாவல்பூண்டி சமுத்திரம் கிராமங்களில் ஏராள நஞ்சை புஞ்சை நிலங்கள் இருந்ததுஅதுவும் சமுத்திர ஏரியின் தண்ணீர் பாயும் நிலங்கள் அடிக்கடி நிலத்தை சாகுபடியைபார்க்க சமுத்திர ஏரிக்கு கீழே போகும் போது அவருக்கு தோன்றி இருக்கிறது

வளர்ந்துவரும் இந்த ஊருக்கு சமுத்திரம் ஏரிக்கு கீழே பிரமாண்ட கிணறுகளை வெட்டினால் தான் அதிலிருந்துவற்றாமல் தண்ணீர் கிடைக்கும் என்று திட்டமிட்டு கிணறுகளை வெட்டி முதன்முதலாக திருவண்ணாமலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்தவர் டி.எஸ். முத்துக்குமாரசாமி முதலியார் 

இப்பொழுது நகரம் முழுதும் மின்சாரம் வந்து விட்டது. தெருவிளக்குகள் ஒளிர்கின்றது
90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையின் ஒவ்வொரு தெரு வின் முகப்பிலும்ஒரு பெரிய கல்தூண் நடப்பட்டிருக்கும் அந்த .கல்தூணின் உச்சியில் மண்எண்ணைய்லாந்தர் - சிம்னி தான் இரவு நேரங்களில் பெயருக்கு "மினுக்" "மினுக்" எனமின்மினிப் பூச்சி போல தூரத்து நட்சத்திரம் போல் எரியும் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் திருவண்ணாமலை நகராட்சி தலைவராக வந்த போது தான்அவர் தான் அன்றைய திருவண்ணாமலை நகரம் முழுவதும் முதன்முதலாக மின்சார விளக்குகளை அமைத்தவர்

அதே போல நகரத்து குப்பைகளை அள்ளுவதற்கு அள்ளி அவைகளை வெளியே எடுத்துச் சென்று ஒரு இடத்தில் கொட்டி எருவாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டம் கொண்டு வந்தவர் டி.எஸ்..முத்துக்குமாரசாமி முதலியார் மாட்டு வண்டிகள் மூலமாக திருவண்ணாமலையிலிருந்து குப்பைகளை நகருக்கு வெளியே கொண்டு சென்று
அவருடைய நிலங்கள் இருக்கும் கீழ் அணைக்கரை கிராமத்திற்கு அருகில்மணலூர்பேட்டை சாலையில் நகராட்சி எருக் குழிகளை ஏற்படுத்தியவர்

90 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் ஆதிதிராவிடர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு போவதற்கு தடை இருந்தது

அதிகபட்சமாக கோபுரத்தில் நுழைந்து சின்ன நந்தி வரை கூட போக முடியாதகாலம் அவர் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த போது தான் "ஹரிஜன ஆலயப் பிரவேசம் "நடந்தது
அவரே முன்னின்று ஆதிதிராவிடர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார்

அந்தக் காலத்தில் 1920 -- 1930 - 

1940
களில்

கவர்னர் கலெக்டர்

நீதிபதிகள் எல்லோரும் ஆங்கிலேயர்கள்

அவர்கள் திருவண்ணாமலை வந்தால்
தங்கினால் அவர்களுக்கு வரவேற்பு விருந்து என்று திருவண்ணாமலையில் கொடுத்தஒரேகுடும்பம்
டி.எஸ்.முத்துக்குமரசாமி முதலியார் குடும்பம் தான்.

ஒரு பக்கம் கீழ் அணைக்கரை சாவல்பூண்டி சமுத்திரம் என மூன் கிராமங்களிலும் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் அந்த குடும்பத்திற்கு
சொந்தமாக இருந்தது

விவசாயத்தோடு இன்னொரு பக்கம் வியாபாரமும் செய்தார்கள்

டாடா கம்பெனியின் அத்தனை பொருட்களுக்கும் இவர் ஏஜெண்ட்டாக இருந்தார்

இந்துஸ்தான் லீவர் என்ற அந்த கம்பெனி தயாரித்த பொருட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மொத்த ஏஜெண்ட்டாக இருந்தார்

இந்தியன் டுபொக்கோ கம்பெனியின் . சிகரெட்டுகள் சிசர்ஸ் பிளேயர்ஸ் வில்ஸ் பாஸுங் ஷோ வில்ஸ் நேவி புளு என ஏராள சிகரெட்டுகளுக்கு மாவட்ட அளவில் ஏஜெண்டாக இருந்தார்

பாரி கம்பெனியினுடைய 

பாரி மிட்டாய் பாரிசாக்லெட்

பாரி உரம் போன்றபாரிக் கம்பெனி தயாரிப்புகளுக்கு ஏஜென்டாக இருந்தார்.

டால்மியா சிமெண்ட்டுக்கு அவர்தான்
ஏஜண்ட்டாக இருந்தார் நண்பர்களே


நன்றி
சாவல்பூண்டி மா.சுந்தரேசன்


நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க ! என்ன வழி?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips
Image result for negative thoughts image

வீட்டிற்கு விருந்தினர்கள் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளின் வால்தனம் போதாதென்று வந்த குழந்தைகளின் வால்தனமும் சேர்ந்து கொண்டு ஒரே ரகளை. உங்கள் பாட்டனார் வழிச் சொத்தாக ஒரு பழங்கால கடிகாரம் வீட்டின் நடுக் கூடத்தில். மிகுந்த அக்கறையும் கவலையுமாய், “பிள்ளைகளா! பார்த்து விளையாடுங்க, இந்தக் கடிகாரத்தை உடைச்சுடாதீங்க,” என்று சொன்னால் அந்தக் கடிகாரம் பேரீச்சம் பழத்திற்குத் தயாராகிவிடும்..

சீக்கிரம் கிளம்பு, பஸ்ஸை மிஸ் பண்ணத்தான் போறோம்,” என்று கிளம்பினால் பேருந்தைத் தவறவிட உங்கள் மனது ரெடி.
 Related image
இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?
நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க வேண்டும். தீர்ந்தது பிரச்சனை!

லூட்டி அடிக்கும் உங்கள் பிள்ளைகளிடம், “கத்தாதே! சப்தம் போடாதே!என்பதற்குப் பதிலாய், “அமைதியாய் இரு!என்றுதான் உபதேசம் இருக்க வேண்டும்.
 Image result for child negative thoughts image
அக்கறைக் குறைவாய் உண்பவரிடம் சாம்பாரைச் சட்டையில் கொட்டிக்கப் போறேஎன்று சொல்லாமல் சாம்பாரைக் கவனமாய் தட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்,” என்பதே சரியான ஆலோசனை. இவையெல்லாம் முக்கியமற்றவை போல் தோன்றலாம். ஆனால் இவை நம் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது.
 Image result for child negative thoughts image
பல ஆண்டுகளாய்க் கார் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள். எங்கும் சென்று இடித்ததில்லை; கீறல் இல்லை. நீங்களும் சமர்த்து; காரும் சமர்த்து. பிறகு அதை விற்றுவிட்டுப் புதிதாய் ஒரு கார் வாங்கி, அதன் புது மெருகின் கவனத்தில் எங்கேயும் இடித்துவிடக்கூடாது,” என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்காமல், “நான் இந்தக் காரைப் பத்திரமாக ஓட்டப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டால் போதும்.

பரபரப்பான கிரிக்கெட் மேட்ச். அசால்ட்டாய் 96 ஓட்டம் எடுத்துவிட்டார் தொடக்க ஆட்டக்காரர். அவருடைய செஞ்சுரிக்காக அரங்கத்தில் டென்ஷன். அவருக்கும் டென்ஷன். இந்தப் பந்தில் நான் கேட்சாகிவிடக் கூடாது,” என்று நினைக்காமல், “வா போடு! ஸிக்ஸர் அடிக்கிறேன் பார்,” என்று நினைத்தால் போதும், நூறு நிச்சயம்.

இதேதான் அனைத்திற்கும்.

நான் வாழ்க்கையில் நொடித்து விடக்கூடாது... நான் இந்த விஷயத்தைச் சொதப்பி விடக்கூடாது...என்பதையெல்லாம் உதறி எறிந்துவிட்டு,

நான் முன்னேறுவேன்... சாதிக்கப் பிறந்தவனப்பா நான்... வெற்றி எனது தோஸ்த்...என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மனம் சரியாய் நகரும்; மகிழும்!


நன்றி இணையம்

Dont miss to Read 📗📘📙📓📔

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:32 | Best Blogger Tips
Image result for Dont miss to Read 📗📘📙📓📔

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது?

அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா?

நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழியாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18.அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்ள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது,அள்ளிக்கொடுங்கள். ஏனென்றால் நாம் போகும்போது சிறிதும் அள்ளிச்செல்ல முடியாது


😎
🌷🍀🌹🌻🌺🍁



- படித்ததில் பிடித்தது.




நன்றி இணையம்