*மரணம் வரை மனைவி*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:34 | Best Blogger Tips
Image result for மரணம் வரை மனைவி

ஓர் நாள் இரவு நேரத்தில் 
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம் 
முடித்து விட்டு 
உறங்கிக் கொண்டிருந்தான்..
அப்போது அவன் கனவில் 
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..
●"இந்த கரும்பலகையில், 
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின் 
பெயர்களை எழுது" என்றார்..
அந்த விவசாயும், 
"
அப்பா, அம்மா , 
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் , 
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி , 
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை , 
காதலி , நண்பன்" என 
முப்பது பேர் பெயரை எழுதினான்..
அப்பொழுது கடவுள், 
"
கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்., 
நீ யாரை இழக்க முடியும் 
என்று நினைக்கிறாயோ, 
அந்தப் பெயரை அழி" என்றார்..
சற்று யோசித்த விவசாயி, 
காதலி , நண்பன் என 
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
கடவுள் மறுபடியும், 
"
இன்னும் இரண்டு பேர் 
பெயரை அழி" என்றார்..
விவசாயும்
கொஞ்ச நேரத்தில், 
"
மாமா , அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
விவசாயி இப்படியே, 
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..
கடைசியாக 
அப்பா , அம்மா , 
மனைவி , மகன் , மகள் என 
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..
கடவுள், 
"
இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை 
நீக்க வேண்டும்., 
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்..
விவசாயி வருத்தத்துடன் 
சிறிது நேரம் கழித்து, 
அப்பா , அம்மா 
பெயரை அழித்தான்..
கடவுள் மீண்டும், 
"
இன்னும் இரண்டு பேர் பெயரை 
அழிக்க வேண்டும்" என்றார்..
கடவுளுக்கு சற்று 
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.. 
"
அடுத்ததாக இவன் யார் பெயரை 
அழிக்கப்போகிறான்?" என்று..
அப்போது விவசாயி, 
மிகுந்த சோகத்துடனும் 
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..
கடைசியாக கரும்பலகையில், 
"
மனைவி" பெயர் மட்டும் இருந்தது..
கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..
●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு 
எதற்காக மனைவி பெயரை 
அழிக்கவில்லை?" என்று..
அதற்கு விவசாயி, 
"
மகள் எப்படியும் 
இன்னொரு வீட்டுக்கு 
வாழப் போய் விடுவாள்..
மகன், 
அவனும் அவனுடைய 
மனைவி குழந்தை என வாழ்வான்..
கடைசி காலம் வரை 
என்னோடு வாழக் கூடியவள் 
#என்_மனைவி 
மட்டும் தான்" என்றான்..
விவசாயின் பதிலைக் கேட்டு 
வியந்து போன கடவுள், 
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..

[
நம்முடைய 
வாழ்க்கைத் துணையாக
நாம் இறக்கும் வரை 
நம்முடன் வரக்கூடிய
நம்மோடு வாழக்கூடிய🏻
ஒரே உறவு, 
மனைவி மட்டும் தான்..
*மனைவியை மதிப்போம்.,*
*
மகிழ்வுடன் வாழ்வோம்.... ]*
Image result for மரணம் வரை மனைவிImage result for மரணம் வரை மனைவி

 நன்றி இணையம்

*படித்ததில் பிடித்தது*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:26 | Best Blogger Tips
Image result for *படித்ததில் பிடித்ததுImage result for *படித்ததில் பிடித்தது

1]
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2]https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.png*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[
இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngகுழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngசங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.
8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...? 
[
இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]
9] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.
10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஅவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12]வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஎண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14]நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
 *
நம்பிக்கையையே* ஆகும்.
15] https://www.facebook.com/images/emoji.php/v8/f6d/1/16/2600.pngஅமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.
16]மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. 
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

 நன்றி இணையம்