”மாங்கல்யம் தந்துனானே

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:57 | Best Blogger Tips
”மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்”

இது திருமணம் நடக்கும்
போது... மணமகன்
மணமகள் கழுத்தில்
தாலிகட்டும் நேரத்தில்
புரோகிதரால் ஓதப்படும்
மந்திரம்....

இதன் அர்த்தம்
எத்தனை பேருக்கு தெரிய
அந்த
மந்திரத்தை அப்படியே ம
இப்படிதான் இருக்கும்..

“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”

Visit our Page -► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]”மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்”

இது திருமணம் நடக்கும்
போது... மணமகன்
மணமகள் கழுத்தில்
தாலிகட்டும் நேரத்தில்
புரோகிதரால் ஓதப்படும்
மந்திரம்....

இதன் அர்த்தம்
எத்தனை பேருக்கு தெரிய
அந்த
மந்திரத்தை அப்படியே ம
இப்படிதான் இருக்கும்..

“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”

Via தமிழால் இணைவோம்

தகவல் தொழிநுட்பம் Hard Disk

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:55 | Best Blogger Tips
தகவல் தொழிநுட்பம்:


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.

எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.

1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.

5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.

6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.
 
Via 

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:51 | Best Blogger Tips
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். 

"குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.


via - அன்பென்றாலே அம்மா
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...

"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.

அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

"குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.


via - அன்பென்றாலே அம்மா

உங்கள் வீட்டில் நோயுற்றவர்கள் இருக்கிறார்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:49 | Best Blogger Tips

 
 
அமாவாசை-பௌர்ணமியின் விஞ்ஞானம் தெரியுமா உங்களுக்கு?ஒரு நோயாளியை பார்க்கும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று குழப்பம் வந்துள்ளதா?ஆன்மீகம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளதா?இந்த கேள்விகளுக்கு சத்குரு தரும் சுவாரஸ்யமான பதில்கள் இங்கே!

கேள்வி
மற்ற நாட்களைவிட அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு மட்டும் ஏன் இத்தனை மகத்துவம்?
சத்குரு:
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் எல்லாவற்றையும் மேல் நோக்கி இழுக்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியின்மீது கூடுதலாக இருக்கும். மனநிலையில் சமநிலையற்றவர்கள் இந்தச் சக்தியைச் சமாளிக்க முடியாமல் அதிகப்படியாகத் தடுமாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மேலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். துக்கமாக இருப்பவர்கள் கூடுதலாக வேதனை கொள்கிறார்கள். அமைதியாக இருப்பவர்கள் மேலும் அமைதியாகிறார்கள்.
இந்த ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்கி மேலே எழுவதைக் கண்கூடாகக் காணலாம். உங்கள் உடலில் உள்ள ரத்தம்கூட மேல்நோக்கிச் சுண்டி இழுக்கப்படுகிறது.
தங்கள் சக்தியை மேல்நோக்கிச் செலுத்தப் பலவித முயற்சிகளில் ஈடுபடும் சாதகர்களுக்கு இந்த இரண்டு நாட்களும் இயற்கை அருளும் வரப்பிரசாதம்!
கேள்வி
நோயாளிகளைப் பார்க்கும்போது, எனக்குள் ஒரு குழப்பம் உண்டாகிறது. முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? அல்லது இயல்பாக உற்சாகமாக இருக்கலாமா?
pournami, isha, yoga, meditation, sadhguru, spiritual, disease, death
சத்குரு:
வேதனையில் இருப்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதுதானே நியாயம்? நீங்களும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் வேதனையை அடிக்கோடிட்டுக் காட்டுவதில் என்ன அர்த்தம்?உடல்நலமின்றி இருப்பவர்களைச் சந்திக்கப் போகும் பெரும்பாலானவர்கள் இந்தத் தவறைத்தான் செய்கிறார்கள். நோய் முகம் நோயுற்று இருப்பவருக்கு, அவரைச் சுற்றி ஆரோக்கியமற்ற சோகமான சூழல் இருந்தால், அது எப்படி உதவி புரிய முடியும்?உற்சாகமான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தருவதுதானே புத்திசாலித்தனம்? அதுதானே அவர் விரைவில் நலம்பெற துணைபுரியும்?
நோயுற்று இருக்கும்போது, தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷங்களைப் புதைத்துவிட்டு தன்னைப் போல் வேதனைகளோடு வளைய வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவருக்கு நோய் உடலில் மட்டுமல்ல, மனதிலும் இருக்கிறது.
கேள்வி
ஆன்மீகம், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதா?
சத்குரு:
ஆன்மீகம் என்பதை யாருக்கோ என்னவோ நடப்பதாக ஏன் நினைக்கிறீர்கள்? ஆன்மீகம் என்பது உங்களைப்பற்றியது. நீங்கள் என்பது ஓர் உண்மை நிலை!குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு, உங்களுடைய பகுத்தறிவால் விளக்கம் கொடுக்கமுடியாமல் போகும்போது, அவற்றைப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்று தீர்மானித்துவிட்டீர்கள்.
உங்கள் குடும்பம், உங்கள் செல்வம், உங்கள் கல்வி, உங்கள் மனம், உங்கள் உடல் இவையெல்லாம் நீங்கள் இந்த பூமியில் வந்து சேகரித்தவை. நீங்கள் என்று நான் குறிப்பிடுவது, நீங்கள் இப்படிச் சேகரித்தவற்றை அல்ல. அதற்கும் உள்ளே, உங்கள் அடிப்படையாக விளங்குவதை நீங்கள் என்று உணரும் அனுபவமே ஆன்மீகம்!
சுருக்கமாகச் சொன்னால், உங்களைப் பற்றியது ஆன்மீகம். உங்கள் அனுபவத்தில், நீங்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை ஆன்மீகமும்!

Via http://tamilblog.ishafoundation.org/

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:42 | Best Blogger Tips

இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு:

இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.


இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.

ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.
 
Via மைலாஞ்சி ( Mylanchi )
 

புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:40 | Best Blogger Tips
புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்:-

புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
 
புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.

இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும். இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.

இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்.
புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
புளிச்சக் கீரையில் வைட்டமின் “ஏ”யும் தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன.

இக்கீரை உடம்புக்கு குளிர்ச்சியையும் செரிமான சக்தியையும் தருவதுடன் பித்தத்தையும் தணிக்கிறது. குடற்புண், மூத்திர நீரை வெளியேற்றுதல், இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்ப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மலத்தை இளக்குகிறது. இக்கீரையின் புளிப்புத் தன்மையால் சிணுக்கு இருமல், மந்தம் நீங்கி, காய சித்தியும், வீரிய சக்தியும் உண்டாக்குகிறது. மேலும் வாத நோய் ருசியின்மை, சீதளம், இரத்தப் பித்த ரோகம், கரப்பான் வீக்கம் முதலிய நோய்களையும் நீக்கும். இந்தப் பூக்களைப் பிழிந்த சாற்றுடன் மிளகும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட, அரோசிகம், பித்த வாந்தி முதலிய நோய்களை நீக்கலாம். இவ்விதையின் எண்ணெயை வீக்கங்களுக்கும் ஊமைக் காயங்களுக்கும் தடவ வலி நீங்கும்.

இந்தக் கீரையைத் துவையலாகவும், சட்டினியாகவும் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பொரியல், மசியல், குழம்பு போன்ற வேறு முறைகளிலும் இதைச் சமைக்கலாம்.
Via இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

கீதையின் 8ம் அத்தியாயத்திலிருந்து சில வைரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:39 | Best Blogger Tips
கீதையின் 8ம் அத்தியாயத்திலிருந்து சில வைரங்கள்

அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன
ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.
நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன
ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.
நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.

சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.

(மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.
வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.
 
 Via தர்மத்தின் பாதையில்
 

வாசியோகம்!(பகுதி3)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:36 | Best Blogger Tips
வாசியோகம்!(பகுதி3)
நமது மனித சரீரத்தில் இருமூக்குத் துவாரங்களின் மூலமாக மனித உடம்பினுள்ளும் வெளியிலும் சென்று வரும் மூச்சுக் காற்றாகும்.இவ் வாயுவானது தாயின் கற்பத்தில் சிசு தரித்த கணம் முதல் இறப்பு வரை இயல்பாகவே நடந்து வருதலாகும்.

இம்மூச்சு நின்று விட்டால் உயிர் போய் இறப்பு நிலை உண்டாகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இத்தகைய ஆற்றல் மிக்க பிராணவாயுவானது கட்டுப்பட்டு நிற்பதற்கே பிராணாயாமம் என்று பெயராகும்.

பிராணன்-ஆயாமம்---பிராணாயாமம் ஆகும்.பிராணன் என்றால் வாசியாகிய மூச்சுக் காற்று என்றும் ஆயாமம் என்றால் கட்டுப் படுத்துதல் என்றும் பொருள் படும்.எனவே தான் இப்பயிற்சியைப் பிராணாயாமம் என்று சொல்லி உள்ளனர்.

நமது மனித உடம்பில் இப்பிராண வாயுவானது தத்துவார்த்த ரீதியாக லலாட மத்தியாகிய புருவ மத்தியில் தோன்றி ஒவ் என்று மூலாதாரத்திற் குதித்து அவ் என்று நாபித் தானத்தில் முட்டி சவ் என்று இடை பிங்கலைகளின் வழியிலோடி நாசியிற் 12அங்குலம் புறப்பட்டு 4அங்குலம் களன்று (பாழாகப் பாய்ந்து)8அங்குலம் மீண்டும் வந்து இவ் உடம்பினுள் புகுந்து நிற்பதாகும்.

இது; 60 நாழிகையாகிய ஒரு நாளைக்கு 360-60-21600சுவாசம் இயங்குகிறது.இந்த 21600 நாழிகையே ஒரு வருடம் ஆகும்.21600ஐ80ஆல் பெருக்க (21600-80-1728000)வரும் தொகையே கிரேதாயுகமாகும்.
இதை60ஆல் பெருக்க(21600-

இதுவும் நாழிகை 1க்கு 360 சுவாசம் வீதம1296000)வருவது திரேதாயுகமாகும்.40ஆல் பெருக்க வரும் தொகை (21600-40-864000)துவாரபரயுகமாகும்.20ஆல் பெருக்க வரும் தொகை (21600-20-432000)கலியுகமாகும் எனச் சித்தர் பெருமக்கள் அனுபவப் ப+ர்வாங்கமாகச் சொல்லியருளி உள்ளனர்.

இவைகள் ஜோதிட சாஸ்திரத்திற்கு வித்தாகும்.இதை மையமாக வைத்தே பஞ்சப+தத் தத்துவ அடிப்படையில் நாடி ஜோதிடக் கிரந்தங்களும்,பிற ஜோதிட நூல்களும் அவற்றின் பலாபலன்களும் ஞானிகளால் நமக்காகக் கண்டறிந்து சொல்லப் பட்டுள்ள பொக்கிசங்களாகும்.

 இது பற்றிப் பின்னால் தெளிவாக விளக்கி எழுதுகிறோம்.இப்படி 21600 சுவாசத்தில் 7200சுவாசம் 4அங்குல அளவில் பாழாகப் பாய்ந்து14400
சுவாசம் உள்ளே புகும்.

இதில் மூலாதாரத்தில் 600 சுவாசம்,சுவாதி~;டானத்தில் 6000சுவாசம்,மணிப+ரகத்தில் 6000 சுவாசம், அநாகதத்தில் 6000 சுவாசம்,விசுத்தியில் 1000 சுவாசம்,ஆக்ஞையில்1000 சுவாசம்,
நாதாந்தத்தில்1000 ஆக 21600 சுவாசம் இயங்குகிறது.இதில் பாழாகப் பாய்ந்து போகிற 7200சுவாசத்தை மீண்டும் இச் சரீரத்தில் புகச் 
செய்யும் முறையே இவ் வி,J யோகத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

பற்றியே சிவவாக்கியச் சித்தர் தமது நூலில் மிகத் தெளிவாகக் கூறிஉள்ளார்.

  “உருத் தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் 
  கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
  விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் 
  அருட்தரித்த அப்பனாணை அம்மையாணை உண்மையே.”

 இதன்படிச் சூரிய சந்திர கலைளாகிய இரு நாடிகளையும் ஒன்று சேர்த்து மூலாதாரத்திற் சென்று முட்டுகிற போது வாயுவானது கபாலத்தைப் பற்றி நின்று அக்கினி உண்டாகி யோக ககி கூடும் போது வயது நிறைந்த முதியவரும் குமரனாகி அளவில்லாத ஆயுட் பேற்றை அடைந்து யோக சித்தி பெறுவர்.
நமது மனித சரீரத்தில் இருமூக்குத் துவாரங்களின் மூலமாக மனித உடம்பினுள்ளும் வெளியிலும் சென்று வரும் மூச்சுக் காற்றாகும்.இவ் வாயுவானது தாயின் கற்பத்தில் சிசு தரித்த கணம் முதல் இறப்பு வரை இயல்பாகவே நடந்து வருதலாகும்.

இம்மூச்சு நின்று விட்டால் உயிர் போய் இறப்பு நிலை உண்டாகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இத்தகைய ஆற்றல் மிக்க பிராணவாயுவானது கட்டுப்பட்டு நிற்பதற்கே பிராணாயாமம் என்று பெயராகும்.

பிராணன்-ஆயாமம்---பிராணாயாமம் ஆகும்.பிராணன் என்றால் வாசியாகிய மூச்சுக் காற்று என்றும் ஆயாமம் என்றால் கட்டுப் படுத்துதல் என்றும் பொருள் படும்.எனவே தான் இப்பயிற்சியைப் பிராணாயாமம் என்று சொல்லி உள்ளனர்.

நமது மனித உடம்பில் இப்பிராண வாயுவானது தத்துவார்த்த ரீதியாக லலாட மத்தியாகிய புருவ மத்தியில் தோன்றி ஒவ் என்று மூலாதாரத்திற் குதித்து அவ் என்று நாபித் தானத்தில் முட்டி சவ் என்று இடை பிங்கலைகளின் வழியிலோடி நாசியிற் 12அங்குலம் புறப்பட்டு 4அங்குலம் களன்று (பாழாகப் பாய்ந்து)8அங்குலம் மீண்டும் வந்து இவ் உடம்பினுள் புகுந்து நிற்பதாகும்.

இது; 60 நாழிகையாகிய ஒரு நாளைக்கு 360-60-21600சுவாசம் இயங்குகிறது.இந்த 21600 நாழிகையே ஒரு வருடம் ஆகும்.21600ஐ80ஆல் பெருக்க (21600-80-1728000)வரும் தொகையே கிரேதாயுகமாகும்.
இதை60ஆல் பெருக்க(21600-

இதுவும் நாழிகை 1க்கு 360 சுவாசம் வீதம1296000)வருவது திரேதாயுகமாகும்.40ஆல் பெருக்க வரும் தொகை (21600-40-864000)துவாரபரயுகமாகும்.20ஆல் பெருக்க வரும் தொகை (21600-20-432000)கலியுகமாகும் எனச் சித்தர் பெருமக்கள் அனுபவப் ப+ர்வாங்கமாகச் சொல்லியருளி உள்ளனர்.

இவைகள் ஜோதிட சாஸ்திரத்திற்கு வித்தாகும்.இதை மையமாக வைத்தே பஞ்சப+தத் தத்துவ அடிப்படையில் நாடி ஜோதிடக் கிரந்தங்களும்,பிற ஜோதிட நூல்களும் அவற்றின் பலாபலன்களும் ஞானிகளால் நமக்காகக் கண்டறிந்து சொல்லப் பட்டுள்ள பொக்கிசங்களாகும்.

இது பற்றிப் பின்னால் தெளிவாக விளக்கி எழுதுகிறோம்.இப்படி 21600 சுவாசத்தில் 7200சுவாசம் 4அங்குல அளவில் பாழாகப் பாய்ந்து14400
சுவாசம் உள்ளே புகும்.

இதில் மூலாதாரத்தில் 600 சுவாசம்,சுவாதி~;டானத்தில் 6000சுவாசம்,மணிப+ரகத்தில் 6000 சுவாசம், அநாகதத்தில் 6000 சுவாசம்,விசுத்தியில் 1000 சுவாசம்,ஆக்ஞையில்1000 சுவாசம்,
நாதாந்தத்தில்1000 ஆக 21600 சுவாசம் இயங்குகிறது.இதில் பாழாகப் பாய்ந்து போகிற 7200சுவாசத்தை மீண்டும் இச் சரீரத்தில் புகச்
செய்யும் முறையே இவ் வி,J யோகத்தின் முக்கியக் குறிக்கோளாகும்.

பற்றியே சிவவாக்கியச் சித்தர் தமது நூலில் மிகத் தெளிவாகக் கூறிஉள்ளார்.

“உருத் தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்தரித்த அப்பனாணை அம்மையாணை உண்மையே.”

இதன்படிச் சூரிய சந்திர கலைளாகிய இரு நாடிகளையும் ஒன்று சேர்த்து மூலாதாரத்திற் சென்று முட்டுகிற போது வாயுவானது கபாலத்தைப் பற்றி நின்று அக்கினி உண்டாகி யோக ககி கூடும் போது வயது நிறைந்த முதியவரும் குமரனாகி அளவில்லாத ஆயுட் பேற்றை அடைந்து யோக சித்தி பெறுவர்.

தியானம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:33 | Best Blogger Tips
உ
                                      தியானம்
ஐந்து புலன்களுக்கும் மேலாக ஆறகவதாக இருப்பதுவே மனம் ஆகும்.பல்வேறு விதமாக எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருப்பதுவே  இம் மனம் ஆகும். 

இவ்வாறு அலை பாய்ந்து திரியும் இம் மனத்தினை ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து மன மற்ற இடத்தில் இருக்கச் செய்வதற்கான முறைகளே தியானமாகும்.இம் மனமானது மனித உடம்பினுள் வெகு சூட்சுமப் பொருளாக இயங்குகிறது.

இதனை பல்வேறு நிலைகளில் சிதற விடாமல் ஒருமுகப்பட்டு நிறுத்துகின்ற போது அதி அற்புதமான ஆற்றல் மிகுந்த சக்திகளை மனிதன் அடைகிறான் என்பதனை இன்றுவரை முன்னோர்கள் காலம் தொட்டு நமது அநுபவப் பூர்வமாக கண்டு வருகிறோம்.இந்த மனதம் அடங்க முதலில் ஆசைகளை அடக்க வேண்டும்.ஆசைகளானது கட்டுப் படப்பட மனமடங்கும்.

     இதையே திருமூலர் என்ற மஹரிஷி தமது நூலில் கூறி உள்ள பாடலைக் கவனிக்கவும்.
     பாடல்:-“ஆசை அறுமின் ஆசை அறுமின்
           ஈசனோடாயினும் ஆசையறுமின்
           ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
           ஆசை விடவிட ஆனந்தந்தானே.”----எனவே இத்தகைய ஆசைகளை அடக்க வல்ல வழி முறைகளையும் அதனால் கட்டுப் பாட்டிற்குள் வரும் மனதிற்கும் உள்ள பயிற்சி முறைகள் எட்டு நிலைக்களங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

          இவை யோக சாதனங்களுக்கு உரிய எட்டு விதமான அங்கங்களாகும்.

    அவைகள் முறையே---1;இயமம்,2.நியமம்,3.ஆசனம,;4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம்,6.தாரணை,
7.தியானம்,8.சமாதி-என்பனவாகும்.

1.இயமம்:-மனத்தை தீயவற்றுள் செல்ல விடாது கட்டுப்பாடுடன் இருத்தல்.

2.நியமம்:-மனத்தை நல்வழிக்குச் செலுத்தி அதன்படி நடத்தல்.

3.ஆசனம்:-யோகாப்பியாசம் செய்வதற்குறிய இருக்கை.

4.பிராணாயாமம்:-மூச்சுக் காற்றையும்,பிராண சக்தியையும் ரேசக,ப+ரக,கும்பகத்தால் கட்டுப் படுத்தி மனத்தை ஒரு நிலைப் படுத்துதல்.

5.பிரத்தியாகாரம்:-மனமானது ஐம்புலன்களின் சாராம்சமான சத்த,ஸ்பரிச,ருப,ரஸ கந்தாதிகள் வழியாக வெளியே புறவுலகில் செல்லவிடாது ஆமையைப் போல் அடங்கி நிற்றல்.

6.தாரணை:-பஞ்சேந்திரியங்களின் வழியாகப் புறவுலக நாட்டம் தவிர்த்து மனதை ஒரு குறியில் நிற்கச் செய்தல்.

7.தியானம்:-குறிப்பிட்ட ஒரு இடத்தில் மனம்,புத்தி மற்றும் புலாதிகளை நிற்கச் செய்தல்.

8.சமாதி:-மனமும்,உயிரும்,96 தத்தவங்களும் இறை வாழுமிடமாகிய சகஸ்ரதள கமலத்தில் இறைவனோடு இரண்டரக் கலந்து நிற்கப் பெறுவதாம்.

இங்ஙனம் அட்டாங்க யோக நெறியிற் செல்ல தன்னை வழி நடத்திச் செல்ல வேண்டும்.
           தொடரும்! ஐந்து புலன்களுக்கும் மேலாக ஆறகவதாக இருப்பதுவே மனம் ஆகும்.பல்வேறு விதமாக எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருப்பதுவே இம் மனம் ஆகும்.

இவ்வாறு அலை பாய்ந்து திரியும் இம் மனத்தினை ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து மன மற்ற இடத்தில் இருக்கச் செய்வதற்கான முறைகளே தியானமாகும்.இம் மனமானது மனித உடம்பினுள் வெகு சூட்சுமப் பொருளாக இயங்குகிறது.

இதனை பல்வேறு நிலைகளில் சிதற விடாமல் ஒருமுகப்பட்டு நிறுத்துகின்ற போது அதி அற்புதமான ஆற்றல் மிகுந்த சக்திகளை மனிதன் அடைகிறான் என்பதனை இன்றுவரை முன்னோர்கள் காலம் தொட்டு நமது அநுபவப் பூர்வமாக கண்டு வருகிறோம்.இந்த மனதம் அடங்க முதலில் ஆசைகளை அடக்க வேண்டும்.ஆசைகளானது கட்டுப் படப்பட மனமடங்கும்.

இதையே திருமூலர் என்ற மஹரிஷி தமது நூலில் கூறி உள்ள பாடலைக் கவனிக்கவும்.
பாடல்:-“ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசையறுமின்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
ஆசை விடவிட ஆனந்தந்தானே.”----எனவே இத்தகைய ஆசைகளை அடக்க வல்ல வழி முறைகளையும் அதனால் கட்டுப் பாட்டிற்குள் வரும் மனதிற்கும் உள்ள பயிற்சி முறைகள் எட்டு நிலைக்களங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

இவை யோக சாதனங்களுக்கு உரிய எட்டு விதமான அங்கங்களாகும்.

அவைகள் முறையே---1;இயமம்,2.நியமம்,3.ஆசனம,;4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம்,6.தாரணை,
7.தியானம்,8.சமாதி-என்பனவாகும்.

1.இயமம்:-மனத்தை தீயவற்றுள் செல்ல விடாது கட்டுப்பாடுடன் இருத்தல்.

2.நியமம்:-மனத்தை நல்வழிக்குச் செலுத்தி அதன்படி நடத்தல்.

3.ஆசனம்:-யோகாப்பியாசம் செய்வதற்குறிய இருக்கை.

4.பிராணாயாமம்:-மூச்சுக் காற்றையும்,பிராண சக்தியையும் ரேசக,ப+ரக,கும்பகத்தால் கட்டுப் படுத்தி மனத்தை ஒரு நிலைப் படுத்துதல்.

5.பிரத்தியாகாரம்:-மனமானது ஐம்புலன்களின் சாராம்சமான சத்த,ஸ்பரிச,ருப,ரஸ கந்தாதிகள் வழியாக வெளியே புறவுலகில் செல்லவிடாது ஆமையைப் போல் அடங்கி நிற்றல்.

6.தாரணை:-பஞ்சேந்திரியங்களின் வழியாகப் புறவுலக நாட்டம் தவிர்த்து மனதை ஒரு குறியில் நிற்கச் செய்தல்.

7.தியானம்:-குறிப்பிட்ட ஒரு இடத்தில் மனம்,புத்தி மற்றும் புலாதிகளை நிற்கச் செய்தல்.

8.சமாதி:-மனமும்,உயிரும்,96 தத்தவங்களும் இறை வாழுமிடமாகிய சகஸ்ரதள கமலத்தில் இறைவனோடு இரண்டரக் கலந்து நிற்கப் பெறுவதாம்.

இங்ஙனம் அட்டாங்க யோக நெறியிற் செல்ல தன்னை வழி நடத்திச் செல்ல வேண்டும்.

தொடரும்!

அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:18 | Best Blogger Tips
அர்ச்சனை பொருட்களும்,அவற்றின் அர்த்தங்களும்.
------------------------------------------------------------------------
நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன்.

தேங்காய்:
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு):
சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம் ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுயநலம்,பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும்,உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம்:
வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால் முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு:
ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது,அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.நாம் அனைவ்ரும் கோயிலுக்கு செல்லும்போது,தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும்,தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,தத்துவத்தையும் சொல்கிறேன்.

தேங்காய்:
  தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடினமாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.

விபூதி(திருநீரு):
 
சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம் ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுயநலம்,பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும்,உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

வாழைப்பழம்:
 
வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால் முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

அகல் விளக்கு:
 
ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது,அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

அர்த்தமுள்ள இந்துமதம்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips


அர்த்தமுள்ள இந்துமதம்.

துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்-கவியரசு கண்ணதாசன்

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.


இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்

நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.

சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.

நல்லது.

இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

`ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.






`தீயவர்’ என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

அதற்கு எதிர்மறை என்ன?

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.
துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்-கவியரசு கண்ணதாசன்

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.


இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்

நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.

சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.

நல்லது.

இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

`ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.


`தீயவர்’ என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

அதற்கு எதிர்மறை என்ன?

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.

Via  நானே பிரம்மம்




ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:13 | Best Blogger Tips
ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தகவல் - www.karpom.com
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.

சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??

Cc: Carbon Copy

நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும்.

Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும்.

இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி.

இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

Bcc: Blind Carbon Copy

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது.

இது பாதுகாப்பானதும் கூட. இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும்.

Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.

Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தகவல் - www.karpom.com

இயற்கை சார்ந்த உணவு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips
இயற்கை சார்ந்த உணவு முறைகள்

தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins ) 
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.


மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது. 

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.


3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் : 

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :

தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம். 

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே , 

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ). 

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் : 

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். 

இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும். நன்றி.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/
தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrates )
3. கொழுப்பு ( Fats )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.


மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.


3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் :

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :


தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் :

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.


Via தமிழ் -கருத்துக்களம்

வர்க்கோத்தமம் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | Best Blogger Tips
வர்க்கோத்தமம் என்றால் என்ன?
--------------------------------------------
வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் மகரத்தில் சனி இருந்து, அம்சத்திலும் மகரத்தில் சனி இருந்தால் அதற்கு வர்கோத்தம சனி என்று பெயர்! மகரத்திற்கு சனி யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

 அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது! லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்: சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும். 

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும் செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும் புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும். குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும் சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும் ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் மகரத்தில் சனி இருந்து, அம்சத்திலும் மகரத்தில் சனி இருந்தால் அதற்கு வர்கோத்தம சனி என்று பெயர்! மகரத்திற்கு சனி யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது! லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்: சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும் செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும் புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும். குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும் சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும் ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:50 | Best Blogger Tips
குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?

பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

0-4 மாதம்

நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.

மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம்

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம்

இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம்

இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்

இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

0-4 மாதம்

நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.

மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம்

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம்


இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம்

இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்

இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.
 
Via தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி
 
 
 

அவசர கால முதலுதவி முறைகள்....!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:47 | Best Blogger Tips

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.
 
posted toVia இயற்கை உணவும் இனிய வாழ்வும்
 

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:45 | Best Blogger Tips



கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ப்ராக்கோலி

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு


ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நட்ஸ்


புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

பப்பாளி


தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி


உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஒயின்

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.
 
  Via World Wide Tamil People