சுயம்புவாய் தோன்றிய *கோனேரிராஜபுரம்* *நடராஜர்* !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:39 | Best Blogger Tips

 May be an image of temple

சுயம்புவாய் தோன்றிய *கோனேரிராஜபுரம்* *நடராஜர்* !

எட்டு  (😎 அடி உயரம்... கைரேகைகள், தேமல், மச்சம்... என மனிதருக்கே உரிய அங்க அடையாளங்களுடன் திகழும் விக்கிரகத் திருமேனி... நான்கு திருக்கரங்களும் விரிசடையுமாக, தரிசிக்கும் நம்மை வியக்க வைக்கிறார் கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜபெருமான்!

சோழ தேசமெங்கும் பல ஆலயங்களில் கலையம்சத்துடன்கூடிய தெய்வ விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வந்தார்கள் சக்கரவர்த்தி கண்டராதித்தரும் அவருடைய மனைவி செம்பியன்மாதேவியும். கோனேரிராஜபுரம் கோயிலிலும் ஸ்ரீநடராஜ சிற்பம் அமைக்க தீர்மானித்து, ஸ்தபதி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

நாட்கள் நகர்ந்தன... எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் பணி இழுத்துக் கொண்டே போக, செய்வதறியாமல் திகைத்தார் ஸ்தபதி. பணி தாமதமாவதை அறிந்த மன்னன், ஸ்தபதியை கடிந்துகொண்டான். ‘நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம்என்று எச்சரித்தான்.

ஸ்தபதியும் அவருடைய மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அப்போது, அவர்களது இல்லத்தைத் தேடி வந்த வயதான கணவனும் மனைவியும் ‘’உண்ணவோ பருகவோ ஏதேனும் கிடைக்குமா’’ என்று கேட்டனர். ஸ்தபதியோ விரக்தியுடன், ‘’காய்ச்சி உருக்கிய உலோகக் குழம்பைத் தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றான் விரக்தியாக! அத்துடன் தனது நிலையையும் விவரித்தான்.

இதைக்கேட்ட அந்தத் தம்பதி, சிலை வடிக்க வைத்திருந்த உலோகக் குழம்பை அப்படியே எடுத்துப் பருகினர். மறுகணம்... அங்கே இரண்டு விக்கிரகங்களாக மாறினர். ஆமாம்! ஸ்தபதி எதிர்பார்த்தது போன்றே அழகிய விக்கிரகங்களாக காட்சி தந்தனர். வந்தது சிவ பார்வதி என்பதை அறிந்து சிலிர்த்தான் ஸ்தபதி.

விக்கிரகங்கள் தயார் என்பதை அறிந்த மன்னன், அவற்றைக் காண ஓடோடி வந்தான். அவனிடம், விக்கிரகங்கள் சுயம்புவாகத் தோன்றியதை ஸ்தபதி விவரிக்க... அதை நம்பாத மன்னன், உளியால் விக்கிரகத்தைத் தட்டினான். மறுகணம் விக்கிரகத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. மன்னனின் கை-கால்கள் செயலிழந்தன. தவறை உணர்ந்த மன்னன், ஆலயம் சென்று வலம் வந்து இறைவனை வேண்ட, அவனது அங்கங்கள் குணம் பெற்றன.

கோனேரிராஜபுரம் ஸ்ரீநடராஜர் விக்கிரகம் உருவானது இப்படித்தான். தானே தோன்றியவர் என்பதால், தம்முடைய மேனியில், மனிதனுக்கு உள்ளது போன்றே ரேகைகள், மச்சங்களுடன் திகழ்கிறாராம்! ருத்ராட்ச பந்தலின் கீழ், ஸ்வாமி தெற்கு நோக்கி அருள, இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.

ஆனித் திருமஞ்சனத் திருநாளில் இங்கு வந்து ஸ்ரீநடராஜரையும் ஆலயத்தின் மூலவர் ஸ்ரீபூமிநாதரையும் வழிபடுவது வளம் தரும்.

இத்தகைய சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் மாசி மகம் அன்று மலர் அலங்காரத்துடன், நடன சபாபதி

 

😎 🙏

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸 

 

 

 

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️