*மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது...*
*எனில்...*
*படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்..*
*எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?*
*பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...*
*கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?*
*நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?*
*தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...?*
*புரிதல் வேண்டும்...*
*பண்படுத்துவது என்பது*- *புண்படுத்துவது அல்ல என்ற புரிதல்*
*மாணவர்களுக்கு மட்டுமல்ல* -*
*மற்றவர்களுக்கும் வேண்டும்...!*
*ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...*
*குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?*
*ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்...*
*குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது...* *அவர்களுக்கான தண்டனை என்ன...?*

*குழந்தையின் நலன்கள் இரண்டு..*
*உடல் நலன்...*
*உள்ள நலன்...*
*உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...*
*"ஊசி குழந்தைக்கு வலிக்கும், மருந்து குழந்தைக்கு கசக்கும், அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்...*
*எனவே எல்லாவற்றையும் தவிர்த்து*
*குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி* *அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?*
*மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...*
*புரிதல் வேண்டும்...*
*அதே போல...*
*உள்ள நலனுக்கானது தான்* - *கல்விக்கூடங்கள்...*
*அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன...*/tamil-ie/media/media_files/uploads/2023/06/teacher.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2023/06/teacher.jpeg)
*விளைவு - நாம் பார்த்துக்* *கொண்டிருக்கி றோம்.*
*ஒரு கல்விக்கூடம்* *மூடப்பட்டால் - அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம்.*
*மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்...*
*ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே* *போதும்...*
*மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது*
*சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.*
*சிந்தியுங்கள்* *பெற்றோர்களே..….!*
*மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம் சார்பாக.*
*குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்காக பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கும்,* *மாணவர்களை தன் பிள்ளைகள் போல்* *நினைத்து*
*கற்பிப்பதுடன்,* *அவர்களை சிறந்த முறையில் வழிநடத்தி, அவர்களை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொரு ஆசிரிய/* *ஆசிரியைகளுக்கும்
இப்பதிவு அர்ப்பணிப்பு.*