ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும்மருத்துவமனைஇல்லாமலே

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of text that says "Femoral artery Catheter insertion"

ஆஞ்சியோகிராம் இல்லாமல் மற்றும்மருத்துவமனைஇல்லாமலே ,இரண்டேநிமிடத்தில்,இருதயஅடைப்பை கண்டறியக் கூடியஅதி நவீன CT -700 என்றஇயந்திரம்கண்டறியப்பட்டு உள்ளது.
இது சென்னையில் இரண்டு இடங்களில் உள்ளது. இதற்கு செலவோ மிகக் குறைவு.
முன் கூட்டியே இருதய அடைப்பை கண்டறியும் போது ஆரம்ப கட்டத்தில் மாத்திரைகள் மூலமாகவே அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதன் மூலமாக பல லட்சக்கணக்கான சக்கரை நோயாளிகளை மாரடைப்பு இல்லாமல் காப்பாற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு,
DR. Vivekanandan,
Sri Vivekananda Hospitals,
No. 15, P. S. Siva Samy Street,
Mylapore.
(Opposite to ICICI Bank, Back Side of Nilgiri's)
Tel: 95000 37040, 72006 48296, 98401 25472, 44 4319 2129, Chennai.
எவருக்கு தேவையோ, அவருக்கு இந்த பகிர்வு உதவியாக இருக்க கூடும்.
உங்களுக்காக...
✍️ மதுரை., இஸ்மாயில்.

மனித உடலை பாதுகாக்க முன்னோர்கள் சொன்ன உணவு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips

 No photo description available.

 

மனித உடலை பாதுகாக்க முன்னோர்கள் சொன்ன உணவு முறைகள்:
மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்
மூளை
-----------------
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.
குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.
வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
கண்கள்
------------------
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.
தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.
அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.
வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டைகாய் மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.
தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.
தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும் கண் பலப்படும்.
பற்கள்
--------------
மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.
கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
செவ் வாழைப்பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.
பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நரம்புகள்
-------------------
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.
இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும்
மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வர நரம்புகள் வலுப்பெறும்.
இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வர நரம்புகள் பலம் பெறும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்புகளுக்கு நல்லது.
ரத்தம்
-------------
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.
திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
சருமம்
---------------
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.
முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்
சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.
ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வர வேண்டும்.
நுரையீரல் & இதயம்
---------------------------------------
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.
ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்
இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.
சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கருப்பு திராட்சை ஜூஸ், கருப்பு உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.
முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.
ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது
வயிறு
---------------
காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.
மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.
சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.
வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.
வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.
கல்லீரல் & மண்ணீரல்
-----------------------------
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.
மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.
திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
மலக்குடல்
-----------------------
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.
பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.
மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.
மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்
லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.
வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.
இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.....!

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

எலும்பை #பலப்படுத்தும் இந்த 2 பொருள்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

 May be an image of bone and x-ray

எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருள்கள்... இப்படி சாப்பிட்டு பாருங்க:
 
எலும்பை பலப்படுத்தும் இந்த 2 பொருட்களை தினமும் எடுத்துக்கொண்டால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்
 
“தினமும் அரை ஸ்பூன் அளவு வெள்ளை எள் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் வெள்ளை எள் அரை ஸ்பூன் அளவு வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ப்ளர் வெநீர் குடிக்க வேண்டும். இப்படி தினமும் வெள்ளை எள் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் நோய் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
அதே போல, தினமும் காலையில் பல் துலக்கிய பிறகு, #தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானம் பிரச்னை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேங்காயை துருவலாகவும் சாப்பிடலாம்.
 கருவேப்பிலை Curry Leaves (Bunch) - Otrumai - Online store for Grocery and  Gourmet Foods
அடுத்தது, #கருவேப்பிலை, ஒரு இனுக்கு கருவேப்பிலை எடுத்து தண்ணீரில் கழுவிவிட்டு அதை வாயில் போட்டு மென்னு சாப்பிட்டுவிட்டு கூட ஒரு டம்ப்ளர் வெந்நீர் குடித்துவிட்டால் போதுமானது.
 பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் | health  benefits of drinking almond milk in tamil | HerZindagi Tamil
அடுத்தது, #பாதாம் #பால், இதை நம் வீட்டிலேயே தயார் பண்ண வேண்டும். தினமும் காலையில் 6-7 பாதாம் பருப்பை தண்ணீரில் 
 
ஊறவைத்துவிடுங்கள். சாயந்திரம் பாதாம் பருப்பு தோலை உரித்துவிட்டு நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துவிடுங்கள். அதனுடன் நீங்கள் வெதுவெதுப்பாக பால் சேர்த்து, கொஞ்சம் சுக்குபொடி போட்டு இரவு தூங்குவதற்கு முன்பு குடியுங்கள். இப்படி பாதாம் பால் குடித்துவந்தால், மூட்டுகளில் வரக்கூடிய வலி படிப்படியாக குறையும். எலும்புகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரொம்ப உதவியாக இருக்கும்.”

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

40- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:03 AM | Best Blogger Tips

 40 வயதுக்கு மேல் சேமிப்பைத் தொடங்கும்போது கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! 7  Things to Consider When Starting Savings Over 40!

 

*40- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்* *குறிப்பாக 45 வயதிற்கு மேலே உள்ள நமது குரூப்பில் உள்ள அங்கிள்ஸ் அனைவரும் கட்டாயம் இந்த குறிப்புகளை தயவுசெய்து படித்து பின்பற்றவும்*
******************
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
::::::::::::::::::::::::::::::::::
உங்கள் தேநீரில் *பால்* குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, *எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு* சேர்க்கவும்.
~~~~~~~~~~~~~~~
பகல் நேரத்தில், *அதிக தண்ணீர்* குடிக்கவும்; இரவு நேரத்தில், *குறைவாக* குடிக்கவும்.
~~~~~~~~~~~~~~~
பகலில் *2 கப் காபிக்கு* மேல் குடிக்க வேண்டாம் அல்லது முற்றிலும் *நிறுத்தவும்* என அறிவுறுத்தப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~
*எண்ணெய் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்* .
~~~~~~~~~~~~~~~
சிறந்த தூக்க நேரங்கள் *இரவு 10 மணி முதல் காலை 6* மணி வரை.
~~~~~~~~~~~~~~~
மாலையில், *மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு ஏதாவது சிறிது சாப்பிடுங்கள்.*
~~~~~~~~~~~~~
*குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்* . படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் *மருந்துகளை* எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக *படுத்துக்கொள்ளாதீர்கள்* .
~~~~~~~~~~~~~~~
நீங்கள் மேலும் ​​​​ *குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள்* ஆனால் *அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே* குடிக்கவும்
~~~~~~~~~~~~~~~
ஒரு நாளைக்கு *குறைந்தது 8 மணிநேரம் தூங்க* முயற்சி செய்யுங்கள்.
~~~~~~~~~~~~~~~
முடிந்தால் மதியம் முதல் *மாலை 3 மணி வரை அரை மணி* நேரம் தூங்குவது, *மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும்* , எளிதில் வயதாகாமல் இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
உங்கள் மொபைல் ஃபோன் *பேட்டரியில் குறைவான சார்ஜில்* அழைப்புகளை செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட *பல மடங்கு* அதிகமாக இருக்கும்.
~~~~~~~~~~~~~~~
*செல் போன் பேச பதிலளிக்க* உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் *மூளையை நேரடியாகப் பாதிக்கும்* . அழைப்புகளுக்குப் பதிலளிக்க *ஒயருடன் கூடிய இயர்போன்களைப்* பயன்படுத்துவது இன்னும் சிறந்தது, *புளூ டூத் இயர்ஃபோன்களை கட்டாயம் தவிர்க்க.*
~~~~~~~~~~~~~~~
உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:
(1) உங்கள் *இரத்த அழுத்தம்*
(2) உங்கள் *இரத்த சர்க்கரை.*
(3)தேவை ஏற்படின் *யூரியா கிரியாட்டினின்* அளவு ~~~~~~~~~~~~~~~
*உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக* குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:
(1) *உப்பு*
(2) *சர்க்கரை*
(3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
(4) *குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி*
(5) பால் பொருட்கள்
(6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
~~~~~~~~~~~~~~~
உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:
(1) *கீரைகள்/* காய்கறிகள்
(2) *பீன்ஸ்*
(3) *பழங்கள்*
(4)கொட்டைகள்
~~~~~~~~~~~~~~~
நீங்கள் மறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:
(1) *உங்கள் வயது*
(2) *உங்கள் கடந்த காலம்*
(3) *உங்கள் கவலைகள்/குறைகள்*
(4) *மது புகை மாது சூது (5)அடுத்தவர்களை பார்த்து இலக்கு நிர்ணயிப்பது ~~~~~~*~~~~~~~~~
நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:
(1) *உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்*
(2) *அக்கறையுள்ள குடும்பம்*
(3) *நேர்மறை எண்ணங்கள்* ~~~~~~~~~~~~~~~
ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:
(1) *பாடுதல்*
(2) *நடனம்*
(3) *உண்ணாவிரதம்*
(4) *புன்னகை/சிரித்தல்*
(5) *மலையேற்றம்/உடற்பயிற்சி*
(6) *உங்கள் எடையைக் குறைக்கவும்.*
~~~~~~~~~~~~~~~
நீங்கள் *காத்திருக்க கூடாத* ஐந்து விஷயங்கள்:
(1) *நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்*
(2) *நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்*
(3) *நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்*
(4) *நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்*
(5) *மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை* காத்திருக்காதீர்கள், இல்லையெனில் *வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்* .
~~~~~~~~~~~~~~~
இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று:
(1) இதை உங்கள் *அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தயவுசெய்து கட்டாயம் பகிருங்கள்,* நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​ உங்களுடைய *சமுதாயம் ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும்.*
=================
உங்களின் இயல்பான *பணிகளை,வியாபாரத்தை* மேற்கொள்ளும் போது, ​​நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் உங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள்,
மருத்துவ தகுதிகள்:
உயர் இரத்த அழுத்தம்
----------
*120/80 -- இயல்பானது*
*130/85 --இயல்பான (கட்டுப்பாடு)*
*140/90 -- உயர்*
*150/95 -- மிக அதிகம்*
----------------------------
*பல்ஸ்*
----------
நிமிடத்திற்கு 72 (தரநிலை)
60 --- 80 p.m. (சாதாரண)
*40 -- 180 p.m.(அசாதாரண)*
----------------------------
*உடல் வெப்ப நிலை*
-------------------
98.4 F (சாதாரண)
*99.0 F மேலே (* காய்ச்சல்)
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்....
*மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது* ஒரு கிளாஸ் *வெதுவெதுப்பான* நீரைக் குடிக்கவும்.
தயவு செய்து உங்கள் *குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையை பகிரவும்.*
*நன்றி.*

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:51 AM | Best Blogger Tips

 May be an image of temple and text

 

#காலை_கோபுர_தரிசனம்_கோடி_புண்ணியம்...

சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது.

மூலவர் - சாரங்கபாணி, ஆராவமுதன்

தாயார் - கோமளவல்லி

தீர்த்தம் - ஹேமவல்லி புஷ்கரிணி, காவிரி, அரசலாறு

பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்

சிறப்பு :

இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தாயாரை வணங்கிய பிறகே பெருமாளை வணங்க வேண்டும். இத்தலத்தைப் பொறுத்தவரை, தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது.

பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் சாரங்கபாணி கோவில் | kumbakonam  sarangapani temple

லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும் என்றார். லட்சுமி தாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி பிருகு, புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து

இருவாசல்கள்... ஒரு கருவறை... கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் |  tamil news sarangapani temple kumbakonam

 திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷