சஞ்சீவி மலையும் - ஆடிட்டர் ........

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:53 | Best Blogger Tips

நான் நண்பரது வீட்டு 

விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது .

நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன் .


“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்ஃபுல்லானது. எங்களால்

ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் . 

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்

கேளுங்கள் .

இராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கிறான் இலட்சுமணன் . 


அவனைக் காப்பாற்ற சஞ்சீவி

மூலிகையைக் கொண்டு வரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான் . 

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் 

தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான் . 

இலட்சுமணன் பிழைத்துக் 

கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்குத்
திரும்புகின்றனர் .

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார் .

ஆனால் , அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது .

காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம் :


1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும் பயணத்திற்கு

முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை .

2. அனுமன் ஒரு 4th Grade Officer . 

எனவே அவருக்கு வான் வழிப்பயண அனுமதி இல்லை .

3. அனுமன் சஞ்சீவி பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage .

Excess luggage is not allowed .

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்

படுகிறது என்று எழுதிய ,

ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்

படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச் சொல்கிறார் .

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.


“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணிக்கப்பட்டேன் 




அதற்குக்கூட பயணப்படி கிடையாதா "


எனப் புலம்பிய அனுமனைத்

தேற்றிய ராமன் , கோப்பில் ,

‘please re examine ‘ என எழுதி

அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்குத் திருப்பி அனுப்புகிறார் .

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை

சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார் .

கவலையுடன் சென்ற அனுமன் 

ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப் பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை . 

இறுதியில்அனுமன்,

” இதோ பார் இந்த பயணப்படியை 
நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
என்று சொன்னவுடன் ,

சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது .


அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction

ஆகி அவருக்கு கிடைத்தது . ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் 

கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே

clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார் .

அந்த clarifications :


1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்

பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய இராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது .

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்

காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது .

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான

வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் .

எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்படுகிறது…”


என்று கதையை நண்பர் 

சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

இங்கே நிறைய விதிகளும் அதில் ஓட்டைகளும் உள்ளன . தப்பு செய்துவிட்டு தப்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன .





நன்றி

அன்புடன் 
குரும்பூர் S. ராம்குமார்

*#பணக்கார நாடு.* தமிழ்நாடு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:49 | Best Blogger Tips



சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

#சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். 
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #மூன்று போகச் சாகுபடிக்குக் #காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு #லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் #தமிழர்களே!


ஏழுமலையானும் சோழர்களும் 
என்ற நூலில் இருந்து...
இந்து தர்மமும்..
         இந்து கோவில்களும்..

#ஏன் #கோவிலை #கட்டினார்கள்?

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔🤔🤔🤔🤔

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை. 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம். 

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது



நன்றி இணையம்

கொரோனா🙏 ... ஆக்க சக்தியா இல்லை ..... ....???

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:55 | Best Blogger Tips

 இந்த கற்பனை பதிவு யார் உருவாக்கியது என்று தெரியவில்லை...
ஆனால்
என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பதால் நண்பர்களுக்கு பகிர்வு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

_________________________
*மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! 
------------------------------
நான் கொரோனா  பேசுகிறேன்  -----------------------------🎙🎙🎙🎙🎙🎙----

உங்களை அழிப்பது எப்போதும்
 என் நோக்கமல்ல, 

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, 

தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, 

மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது,   
ஆகவே

இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே 
என் நோக்கம் !!! 

*எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* 

எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், 

*அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! 

*அணுகுண்டு வைத்திருக்கும்*
 நாடு நாங்கள், 
யாரை வேண்டுமானாலும்
 அழித்துக் விடுவோம் 
என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! 

ஆயிரம் அணுகுண்டை வீசியாவது 
இப்பொது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம்!!! 

 *சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள்* 
*
ஆனால் உலகையே ஆண்ட
 பிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும்
ஒரு வேளை சோற்றுக்கே 
வழி இல்லாத பாமரனையும்
 நான் சமமாய் நடத்துகிறேன் .... 

ஆகவே 
உங்களை விட 
நான் மேன்மையானவனே!!! 

என்னை இகழ உங்களுக்கு 
ஒரு தகுதியும் இல்லை...

*மதங்களின் பெயரை சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள்*, 

மதத்தின் பெயரை சொல்லி
 பிழைப்பை நடத்தும் 
யாரேனும் ஒருவரை 
இப்போது அழைத்து

என்னை மறைய செய்யுங்கள் பார்க்கலாம்!!! 

இனியேனும் இது போன்ற
 மனித வைரஸ்களிடம் 
மாட்டிக் கொள்ளாமல் 
சுய அறிவோடு இருங்கள்...

*இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும்* *நான் அளித்திருக்கும் அன்பு பரிசு தான்*
இந்த ""தனிமை" 

அதில் சிறிது காலம் 
வாழ்ந்து பாருங்கள்!!!

 ஜாதி,  மதம்,  ஏழை,  பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளை துறந்து மனிதத்தை உணர்ந்து 
புதிய சிந்தனைகளோடு 
வெளியே வாருங்கள் ... 

*அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாய் விடை பெற்றிருப்பேன்*!!!

*இப்படிக்கு,* 

கொரோனா🙏