இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:58 | Best Blogger Tips

 




இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை காட்டியுள்ளார் அவரின் மிகசிறந்த சர்வதேச அணுகுமுறை சரியான நேரத்தில் தேசத்துக்கு நல்வழி காட்டியிருக்கின்றது

 

பாரதம் உலகத்தில் ஒரு நாடு என்பதால் உலகளாவிய நெருக்கடிக்கு அதுவும் தப்பமுடியாதுஉலக பாதிப்புகளெல்லாம் தேசத்தை தாக்கியே தீரும் அதனை திறமையாக சமாளிப்பதுதான் தேசிய அரசின் கடமை அது திறமையும் கூட‌

 

அவ்வகையில் உக்ரைன் போரினால் எண்ணெய் விலை உலக சந்தையில் கணிசமாக எகிறியிருக்கின்றது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரலாறு காணா விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் அது உயரவேண்டும்

 

ஆனால் ஏற்கனவே எண்ணெய்விலை உச்சத்தில் இருக்கும் நாட்டில் இன்னும் உயர்த்த மோடி அரசு விரும்பவில்லை காரணம் அது மக்கள் நலமுள்ள அரசு, அரசியலை தாண்டி அவர்களுக்கு மக்கள் அபிமானம் எப்பொழுதும் அதிகம்

 


உபி தேர்தலுக்காக விலை ஏறவில்லை அதன் பின் விலை ஏறும்  என ராகுல் சொல்வதெல்லாம் அபத்தம் அதனால்தான் காங்கிரஸ் கட்சியினை மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்றனர், எந்த பிரதமர் என்றாலும் இந்த உலகளாவிய விலை உயர்வை தடுக்க முடியாது

 

மோடி அரசுக்கு இதில் ஒரு வாய்ப்பு அழகாக உருவாகின்றது அல்லது முன் கூட்டியே அவர் செய்த தீர்க்கதரிசனமான முடிவு

 

மோடி அரசு உலக அரங்கில் ரஷ்யாவின் பிடியில் இருந்து தன்னைவிடுவித்து அதனை தனக்கு ஏற்ற வகையில் பாவித்து கொண்டது

 

அதாவது முந்தைய காங்கிரஸ் அரசுகள் ரஷ்யாவின் முழுபிடியில் சிக்கியிருந்தன ரஷ்யா இன்று உக்ரைனில் தூர வீசி எறியும் பழைய ஆயுதங்களை இந்தியா தலையில் கட்டிவைத்து பெரும் பணம் பார்த்துகொண்டிருந்தது, இந்தியாவின் அணிசேரா கொள்கை முதல் பாகிஸ்தானின் அமெரிக்க நெருக்கம் வரை ரஷ்யாவுக்கு சாதகமாய் இருந்தது

 

மோடி அரசு அணிசேரா கொள்கையினை கடாசிவிட்டு இந்தியாவுக்கு எது நல்லதோ அதை அமெரிக்கா மற்று ரஷ்யாவிடம் இருந்து பெற்றுகொள்ள துணிச்சலாக முடிவெடுத்தது, சுமார் 60 ஆண்டுகால ரஷ்ய பிடியில் இருந்து வெளிவந்தது, இந்தியாவுக்கு நாங்கள் விரும்பியதெல்லாம் தருவோம் இந்தியா வாங்கி தீரவேண்டும் எனும் மிரட்டலில் இருந்து விலகி இந்தியாவுக்கு தேவையானதை மட்டும் வாங்குவோம் என ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மோடி அரசு

 

ரஷ்யாவிடம் இருந்து கவனமாக தேவைபடும் ஆயுதங்களை மட்டும் வாங்கிய இந்தியா இதர நாடுகளிலும் வாங்கியது தன்சொந்த உற்பத்தியில் இறங்கியது

 


அப்படியே அரபு நாடுகளை மட்டும் சாராமல் ரஷ்யாவில் இருந்தும் எண்ணெய் வாங்க ஒப்பந்தமிட்டது

 

ஆம் ரஷ்யா தன் பழைய காயலான் கடை குடோனாக , பழைய இரும்பு கடையாக மட்டும் பார்த்த ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அதன் ஆயுதங்களை குறைத்துவாங்கி எண்ணெயினை அதிகம் பெறும் வர்த்தகத்துக்கு மோடி அரசு மாறிற்று

 

இதனால் இரு அனுகூலங்கள் நிகழ்ந்தன‌

 

முதலாவது ரஷ்ய ஆயுத இறக்குமதி குறைந்தது இன்னொரு எண்ணெய் சந்தையினை தேசம் கண்டடைந்தது

 

அதுவரை இந்தியாவுக்கு தங்களைவிட்டால் யாருமில்லை என இறுமாந்திருந்த அரபுநாடுகள் இந்தியா எனும் பெரும் சந்தையினை இழக்க விரும்பாமல் இறங்கிவந்தன இன்று அரபுலகில் இந்திய செல்வாக்கு அதிகம் இருக்கின்றது

 

இந்த திட்டத்தில்தான் முன்பு மோடியும் புட்டீனும் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விலாடிவோஸ்டாக் நகரில் எண்ணெய் ஒப்பந்தம் செய்தனர், இதில் இன்னொரு அழகான திருப்பத்தை நாட்டுக்கு கொடுத்தார் மோடி

 

ஆம் அரபுலகில் இருந்து அரபுகடல் வழியாக‌ எண்ணெய் கப்பல் அதிகம் வருவதால் மும்பை குஜராத் உள்ளிட்ட மேற்கு கடற்கரைகள் வேகமாக வளர்ந்தன, கிழக்கே சென்னை, விசாகப்ட்டினம், பாரதீப் போன்றவை பெரும் வளர்ச்சி காணவில்லை காரணம் எண்ணெய் கப்பல் வரவில்லை

 

மோடி கிழக்கே ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக கப்பல் வரும்படி செய்து வங்க கடல் பாதையில் அதிக எண்ணெய் கப்பல் சுற்ற வழிவகுத்தார், இதனால் இனி நாட்டின் கிழக்கு கடற்கரை வளரும்

 

இந்த திட்டத்தின்படி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் தென் சீனகடல் வங்க கடல் வழியாக இந்தியா வரும்

 

இதனால் சீன கடல்பாதையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இந்த வர்த்தகம் ரூபாய் ரூபிளில் நடப்பதால் டாலர் பரிவர்த்தனை செலவு இல்லை இன்னும் பணம் மிச்சமாகும்

 

இது கடந்த டிசம்பரில் புட்டீன் இந்தியா வந்தபொழுது பூரணமானது., எண்ணெய் வரதொடங்கிய நேரத்தில்தான் பெரும் யுத்தம் உக்ரைனில் வெடித்தது ரஷ்யாமேல் தடைகள் வலுத்தன‌

 

ஐரோப்பிய நாடுகள் சந்தையினை இழந்த ரஷ்யா சீன இந்திய சந்தையினை பிடித்தால் போதும் சுமார் 250 கோடி மக்கள் கொண்ட இந்த இருநாட்டிலும் குறைந்த விலைக்கு எண்ணெய் விற்றாலும் ஐரோப்பிய லாப கணக்கை சரியாக எட்டலாம் என முனைந்தது

 

இங்கேதான் அமெரிக்க மிரட்டல் வரும் எனும் அச்சம் இருந்தது, ஆனால் நேற்று காட்சிகள் மாறின‌

 

ரஷ்ய எண்ணெயினை இந்தியா வாங்க தடை இல்லை என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது, உலக எண்ணெய் சந்தை டாலரில்தான் நடகக்வேண்டும் அதுவும் தன் கண்காணிப்பில்தான் நடக்கவேண்டும் என்ற கொள்கையுடைய அமெரிக்கா இந்த வர்த்தகத்தை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

 

ஆனால் ஆசியாவில் இந்தியாவினை இனி பகைக்கமுடியாது என உணர்ந்த அமெரிக்கா "ரஷ்ய தலமையினை ஆதரிப்பது வேறு, ரஷ்ய மக்களின் அடிப்படை தேவைக்கு உதவுவது வேறு" என விளக்கம் சொல்லி இந்தியாவுக்கு அனுமதிகொடுத்தாயிற்று

 

இனி ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் வரும் இதனால் நாடு அடையும் பயன்கள் ஏராளம்

 

எண்ணெய் விலை இனி நிலையாகும் , உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கிழக்கு கடற்கரை இனி வேகமாக வளரும் சென்னை போன்ற இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு பெரும் ஆலைகள் வரும்

 

அரேபியாவில் இருந்து எண்ணெய் குறையும் அந்நாடுகளுக்கு இந்தியாமேல் ஒரு மெல்லிய அச்சம் வரும், அவர்களும் இறங்கிவருவார்கள்

 

ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் சமமாக பேணபடும் இந்த உறவு நல்ல விஷயங்களை நாட்டுக்கு கொடுக்கும்

 

முன்பு இந்திரா அமெரிக்காவுக்கு அஞ்சி இந்திய பணத்தை சடுதியாக குறைத்தது போல் அல்லாமல், சோவியத்துக்கு அஞ்சி அதன் பழைய இரும்பை எல்லாம் வாங்கியது போல் அல்லாமல் அரபு நாட்டு மிரட்டலுக்கு அஞ்சி அவர்கள் எண்ணெயினை மட்டும் வாங்கி அடங்கியது போல் அல்லாமல் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கின்றது மோடி அரசு

 

இந்த மண் அரசியல் பெரும்ஞானி கண்ணபிரான் வாழ்ந்த மண், மோடியின் நடவடிக்கைகளெல்லாம் அந்த மாயகண்ணனின் சாயலில் நடப்பவை

 

ஆனால் சில இடங்களில் பலராமன் பாதையினையும் அவர் எடுப்பார், ஆம் அந்த பலராமன் மகாபாரத பெரும் போரில் கலந்துகொள்ளவில்லை, கண்ணன் தன் படை ஒரு பக்கம் தான் ஒரு பக்கம் என நின்றபொழுதும் பலராமனோ தவறு இருபக்கமும் உண்டு என யுத்தபக்கம் செல்லாமல் ஒருபக்கம் சாராமல் நடுநிலையாய் ஒதுங்கிநின்றார், அவர் ராஜ்ஜியம் வாழ்ந்தது

 

மோடி இப்பொழுது பலராமனின் பாதையில் நாட்டை நடத்துகின்றார், உலகம் முறுகலில் நிற்கும் பதற்றமான நேரம் முன்கூட்டியே பல காரியங்களை செய்து நாட்டை மிக சரியாக நடத்தி செல்லும் அந்த பெருமகனை ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றார்கள்

 

(காமராஜரின் காலத்துக்கு பின் பெரும் மத்திய அரசின் திட்டம் சென்னைக்கு வரவில்லை, மோடி அரசுதான் இப்பொழுது சென்னையினை மறுபடியும் உலக அரங்கின் முன்னணி நகரமாக்கும் காரியத்தை செய்கின்றது

 

பாஜக மத்திய அரசுதான் இப்பொழுது தமிழக சென்னைக்கு பெரும் திட்டம் கொண்டு வருகின்றது)

 

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்


நன்றி இணையம்

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் இந்து மதம்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:57 | Best Blogger Tips

 



மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் இந்து மதம்?

 

 உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.

 ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு

 நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய

 நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிர வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே

 அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்

 மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

 


 உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டு முதல்  பதிமூன்றாம் நூற்றாண்டுவரை ஜரோப்பா மற்றும் பல நாடுகளிலும், பதிநான்காம் நூற்றாண்டிலிருந்து  இஸ்லாமியர்களுக்கு போட்டியாக ஐரோப்பிய கிருஷ்தவர்கள பல நாடுகளுக்கும் சென்று துப்பாக்கியால் அமெரிக்கா, ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு மக்களைக் கொன்று நாடுகளையும் அபகரித்து மதத்தையும் பரப்பினர். ஸ்பானியர் அமரிக்காவில்  கல்கட்டிடங்கள் கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து விவசாயம் செய்து வாழந்த இன்காமக்களை அழித்துவிட்டு மீநதவரை விரட்டினர்.

 இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை

 உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்

 மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

 


 கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு

 ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று

 பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி

 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,

 கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்

 ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

 

 இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகள் நல்ல இயற்கை வளம் இருந்தும் வறுமையில் இருந்தவை. அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ

 அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க

 முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள

 மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே

 இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

 

 இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து

 வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்

 கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2

 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக

 இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780  உள்ளன. இது

 போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்

 தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட

 வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது. ஜெகமோகன் பல சலுகைகளை செய்கிறார்.

 

 இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்

 ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.

 யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்

 எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே

 மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.

 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்

 ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு

 விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்

 பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை

 கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்

 இருக்கும்.

 

 சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்

 செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்

 கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக

 வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

 1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று

 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட

 வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே

 நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை

 போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

 

 *

 *==============

 மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்

 படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு

 படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்

 கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே

 பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை

 யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்

 கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

 

 யோசியுங்கள்...

 

 இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி

 இஸ்லாத்தில்

 தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால

 பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை

 அவமதித்துப் பேசுகிறார்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து

 தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.

 அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க

 முற்ப்படுகிறார்கள்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த

 சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்

 பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக

 தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

 அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்

 காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது

 செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்

 என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்

 கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்

 வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்

 நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்

 வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே

 காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,

 பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்

 மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்

 தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

 

 யோசியுங்கள்...

 

 இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

 

 யோசியுங்கள்...

 

 வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்

 ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்

 என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்

 அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

 

 ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக

 நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே

 வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்

 என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு

 ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

 

 இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

 

 நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்

 அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது

 பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

 

 இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய

 அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை

 பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை

 காப்பாற்றிக்கொள்வோம்

 

 *

 ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்

 ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து

 சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது

 இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

 

 

 யோசியுங்கள்.... !!!


நன்றி இணையம்