மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் இந்து மதம்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:57 PM | Best Blogger Tips

 



மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் இந்து மதம்?

 

 உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது.

 ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு

 நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய

 நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிர வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே

 அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்

 மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

 


 உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டு முதல்  பதிமூன்றாம் நூற்றாண்டுவரை ஜரோப்பா மற்றும் பல நாடுகளிலும், பதிநான்காம் நூற்றாண்டிலிருந்து  இஸ்லாமியர்களுக்கு போட்டியாக ஐரோப்பிய கிருஷ்தவர்கள பல நாடுகளுக்கும் சென்று துப்பாக்கியால் அமெரிக்கா, ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு மக்களைக் கொன்று நாடுகளையும் அபகரித்து மதத்தையும் பரப்பினர். ஸ்பானியர் அமரிக்காவில்  கல்கட்டிடங்கள் கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து விவசாயம் செய்து வாழந்த இன்காமக்களை அழித்துவிட்டு மீநதவரை விரட்டினர்.

 இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை

 உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்

 மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

 


 கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு

 ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று

 பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி

 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,

 கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்

 ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

 

 இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகள் நல்ல இயற்கை வளம் இருந்தும் வறுமையில் இருந்தவை. அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ

 அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க

 முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள

 மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே

 இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

 

 இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து

 வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்

 கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2

 லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக

 இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780  உள்ளன. இது

 போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்

 தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட

 வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது. ஜெகமோகன் பல சலுகைகளை செய்கிறார்.

 

 இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்

 ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.

 யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்

 எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே

 மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.

 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்

 ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு

 விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்

 பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை

 கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்

 இருக்கும்.

 

 சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்

 செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்

 கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக

 வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

 1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று

 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட

 வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே

 நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை

 போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

 

 *

 *==============

 மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்

 படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு

 படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்

 கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே

 பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை

 யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்

 கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

 

 யோசியுங்கள்...

 

 இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி

 இஸ்லாத்தில்

 தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால

 பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை

 அவமதித்துப் பேசுகிறார்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து

 தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.

 அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க

 முற்ப்படுகிறார்கள்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த

 சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்

 பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக

 தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

 அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்

 காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது

 செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்

 என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்

 கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்

 வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்

 நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்

 வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

 

 யோசியுங்கள்...

 

 குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே

 காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,

 பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்

 மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்

 தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

 இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

 

 யோசியுங்கள்...

 

 இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

 

 யோசியுங்கள்...

 

 வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்

 ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்

 என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்

 அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

 

 ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக

 நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே

 வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்

 என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு

 ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

 

 இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

 

 நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்

 அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது

 பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

 

 இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய

 அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை

 பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை

 காப்பாற்றிக்கொள்வோம்

 

 *

 ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்

 ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து

 சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது

 இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

 

 

 யோசியுங்கள்.... !!!


நன்றி இணையம்