பொதுவாகவே பத்து ரூபாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:29 AM | Best Blogger Tips

 May be an image of one or more people, crowd, temple, street and text

பொதுவாகவே பத்து ரூபாய் 

சாப்பாட்டுக்கடையில் மதியம் உணவு வழங்கும் நேரமான 12 மணியிலிருந்து 1.30 மணி வரை பெரும்பாலும் எந்த மொபைல் அழைப்பையும் ஏற்க மாட்டேன். 


பசியுடன் வருபவர்களை சரியாக கவனித்து உபசரிக்க முடியாது என்பதால்.. உணவு வழங்கும் நேரத்தில் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து விடுவேன்.

உணவு வழங்கி முடித்த பிறகு 1.30 மணிக்கு மேல் தவறவிட்ட அனைத்து அழைப்புகளை கவனித்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி விடுவதை வழக்கமான வைத்திருக்கிறேன்.

இன்றும் மதியம் சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த போது..
சுமார் ஒரு மணியளவில் வந்த ஒரு அழைப்பை கவனித்தேன். 


ஏனோ அந்த அழைப்பை தவிர்க்க வேண்டாம் என்று மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய குரல் அசரீரியாக ஒலிக்க..
அந்த அழைப்பை உயிர்ப்பித்து 'வணக்கம்' சொன்னேன்.

எதிர்பக்கம் சில கண நொடிகள் அமைதி காத்தபின் 30 - 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பேசினார்.
''சார்.. நான் ராஜேஷ், காளையார்கோவிலிருந்து (பெயர் ஊர் மாற்றப்பட்டுள்ளன) பேசறேன். சமீபத்தில் ஒரு மாசமாகவே பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடை ரீல்ஸ் எல்லாம் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பார்த்துக்கிட்டிருக்கேன்.
அங்கே சாப்பிட வர்றவங்களுக்கு நானும் சாப்பாடு கொடுக்கணும்னு ஆசைப்படறேன். நான் பணம் அனுப்பிச்சா.. நீங்க சாப்பாடு கொடுத்துடுவீங்களா, சார்..?''
என்று தயக்கத்துடன் கேட்க..

''சரிங்க தம்பி.. கொடுத்துடலாம்..''
என்று (எதிரே வந்து நின்ற மூட்டை தூக்கும் வேலை செய்யும் வயதான பெரியவர் ஒருவர் அணிந்திருந்த மொத்தமான டிராயர் கிழிந்திருப்பதை கவனித்துக்கொண்டே) நான் சொன்னதும்..

''எவ்வளவு சார் பணம் அனுப்பணும்..? சொன்னீங்கன்னா இப்போ அனுப்பிடறேன்..!''
என்று தொடர்ந்த தயக்கத்துடன் எதிர்பக்கம் குரல் ஒலித்ததை கவனித்தேன்.

எதிரே நின்ற பெரியவருக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கைலிகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, அவரிடம் பிங்க் கலர் டோக்கனை கொடுத்து அவரை சாப்பிட அனுப்பி விட்டு..
மொபைலில், ''நீங்க எத்தனை பேருக்கு சாப்பாடு கொடுக்கணும்னு விரும்பறீங்களோ.. அது ஒருத்தராக இருந்தாலும் சரி.. பத்து பேராக இருந்தாலும் சரி.. நூறு பேராக இருந்தாலும் சரி.. அந்தளவுக்கு பணம் அனுப்பினால் போதும்ங்க தம்பி. நாம சாப்பாடு கொடுத்துடலாம்..!''
என்று சொன்னேன்.

''சரிங்க சார்.. ஐம்பது பேருக்கு சாப்பாடு கொடுக்கறதுக்கு பணம் இப்போ அனுப்பிடறேன் சார்.'
என்று சொன்ன குரலில் இப்போது தயக்கம் போய் தழுதழுப்பு பரவிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே..
''சரிங்க தம்பி. நீங்க இதே நம்பருக்கு வாட்ஸ் அப் இருக்கு. அதுல உங்க பேரையும் உங்க பேமிலி பேர்களையும் அனுப்பிடுங்க.
நாளைக்கு நாம சாப்பாடு கொடுத்துடலாம்..''
என்றேன்..

அதிகமான சதவீத தழுதழுப்பான குரலில்..
''சார்.. என்னோட வொய்ப் பேரு சங்கரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவங்க பேருல சாப்பாடு கொடுத்துடலாம் சார்..''
என்று சொல்லும்போதே அந்த பக்கம் அந்த ராஜேஷ் உடைந்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சமையலறையில் இருந்த விஜியை அழைத்து வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க சைகையால் சொல்லி விட்டு..
கடைக்கு வெளியே வந்து போக்குவரத்து நிறைந்த சாலையை கடந்து எதிரே இருந்த ஹவுசிங் போர்டு கட்டிட நிழலில் போய் நின்று..
''தம்பி.. உங்க ரெண்டு பேர் பேர்லேயும் கொடுத்துடலாமே..?
ஏன் அவங்க பேர்ல மட்டும் கொடுக்க சொல்றீங்க..?''
என்று யோசனையுடன் நான் கேட்டதும்..

கரகரத்த குரலில் ராஜேஷ், '' சார்.. நான் நல்லா வசதியோடு இருந்தேன். பிஸினஸ்ல நஷ்டமாகி கோடிக்கணக்கான பணத்தை கோட்டை விட்டுட்டேன் சார். இதனால என்கிட்டே என் வொய்ப் கோவிச்சுக்கிட்டு போய் மூணு வருஷமாச்சு.. இன்னிக்கு வரைக்கும் நான் எத்தனையோ தடவை போன் செஞ்சும் எடுக்க மாட்டேங்கறாங்க. மெசேஜ் அனுப்பிச்சாலும் ரிப்ளை செய்ய மாட்டேங்கறாங்க.. டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க சார்.
நான் ஒத்துக்காம இருக்கேன்.
ஆனாலும் என்னோட உயிரே அவங்கதான் சார்.
நாளைக்கு அவங்க பிறந்த நாள் சார்..
என்கிட்டே இப்போ கொஞ்சமாத்தான் பணம் இருக்கு. அதை அனுப்பறேன். அவங்க பேர்ல அங்கே பசியோட வர்றவங்களுக்கு சாப்பாடு கொடுங்க சார்.. சாப்பிடறவங்களோட வாழ்த்து அவங்களுக்கு கிடைக்கட்டும் சார்..
அது போதும் எனக்கு..
அவங்கதான் சார் எனக்கு எல்லாமே..''
என்று சொல்லும்போதே முழுமையாக உடைந்து அழ ஆரம்பிக்க..

எனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த நான்..
அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு..

மீண்டும் சாலையை கடந்து பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடைக்குள் வந்து..
சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க ஆரம்பித்தேன்.

சில நிமிடங்கள் கழித்து,
ராஜேஷ் வாட்ஸ் அப் எண்ணிற்கு
'நாளை உங்க மனைவியின் பெயரில் உணவு வழங்கி விடுவோம்.
இனி உங்கள் வாழ்வில் உங்கள் விருப்பம் போல அனைத்தும் மாறும். அனைத்தும் நிகழும்..
உங்கள் பொருளாதார சூழலும்..உங்கள் மனைவியின் மனமும் மாறலாம்.
இதை நான் ஃபார்மாலிட்டிக்காக சொல்லவில்லை.
பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடையின் அனுபவத்தில் சொல்கிறேன், தம்பி..!''
என்று என் மனதில் அந்த நிமிடம் தோன்றியதை மெசேஜாக அனுப்பி விட்டு..

எதிரே தட்டுத்தடுமாறி தள்ளாடியவாறு படியேறி வந்து நின்ற (வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் எண்பது வயதிற்கு மேல் இருக்கும்) அந்த நலிந்த தேகம் கொண்ட பெண்மணியிடம்..
''என்னம்மா சாப்பிட்டீங்களா..? சாப்பிடுறீங்களா..?''
என்று அவருக்கு கொடுக்க பிங்க் கலர் டோக்கனை எடுத்துக்கொண்டிருக்கும்போதே..

அந்த வயதான பெண்மணி என்னருகில் வந்து நடுநடுங்கும் தன்னுடைய கைகளால் என்னுடைய தலையை தடவி கொடுத்து..


''வயிறார சாப்பிட்டுட்டேன் கண்ணு. நீ உன் மனசில நினைச்சது எல்லாம் நிறைவேறி சந்தோசமாக இருப்பே..!''
என்று சொல்ல சொல்ல..

எனக்கு அந்த ராஜேஸும் சங்கரியும் நினைவுக்கு வந்தனர்..!
 

 May be an image of one or more people, temple and text that says "வாங்க.. சாப்பிடலாம்.. neched रेबा 10 சாப்பாடுக்டை டுக்டை KPR சேவா் சேவ лBT ரே எ தாக்கதடப வாங்கா சாப்பிடனா் 10 ரூபாய் சாப்பாட்டு អចយ័ល சமிடனாம ரூர ROTSH 08522 иEBO 89522 밀구로" 

 

Copy from FB 

 

செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:53 AM | Best Blogger Tips

T.N. Budget 2025-26: Tamil Nadu to set up 25 Anbucholai centres for the  elderly - The Hindu 

செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்

“சேமித்த வாழ்க்கை ஆனால் வாழ மறந்த வாழ்க்கை!”

இந்தியாவின் பல ஓய்வுபெற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு வியப்பான முரண்பாடு உள்ளது.


அவர்களிடம் பணம் இருக்கிறது… சொத்து இருக்கிறது… பாதுகாப்பு இருக்கிறது…
ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கும் மனநிலை இல்லை.
Bengaluru: Determined to stay fit, senior citizen brisk-walks 200m to  victory | Bengaluru News - Times of India
திரு. சர்மா — இது ஒரு பெயர் மட்டும் அல்ல.


உங்கள் தந்தை, மாமா, அயலவர்… அல்லது  நாமே கூட இருக்கலாம்.
அவர் வளர்ந்த காலம் பற்றாக்குறையின் காலம்.
ரேஷன் கடை வரிசை, சேமிப்பு தான் பாதுகாப்பு, அரசு வேலை தான் கனவு — அந்த தலைமுறை.
40 ஆண்டுகள் அவர் உழைத்தார்.

டாக்ஸி கட்டணம் / ஆட்டோ கட்டணம் தவிர்க்க பஸ்ஸில் சென்றார்

பேருந்து கட்டணம் மிச்சப்படுத்த நடந்தார்

கிழிந்த காலர் சட்டையையும் மாற்றாமல் அணிந்தார்.
தனது ஆசைகளை தள்ளிவைத்து குழந்தைகளின் கல்வி, திருமணம், குடும்பத்தின் எதிர்காலம் என்பதற்காக வாழ்ந்தார்.
இன்று அவருக்கு:
EMI இல்லாத வீடு,
FD,  போன்ற சேமிப்புகள்,
மாதாந்திர ஓய்வூதியம்,
வங்கியில் பணம்
எல்லாமே இருக்கிறது.
ஆனால், மே மாத வெப்பத்தில் கூட

“மின்சாரம் வீண்  செலவு…” என்று ஏசியை அணைத்து விட்டு வியர்த்து தூங்குகிறார்.
இதுதான் இந்திய ஓய்வுபெற்றவர்களின் மிகப் பெரிய சோகமான உண்மை.

“Switch Failure” — சேமிப்பிலிருந்து செலவிற்கு மாற முடியாத மனநிலை
நிதி உளவியல் வல்லுநர்கள் இதை
“Switch Failure” என்று கூறுகிறார்கள்.
Repair Window Switch: Quick Guide to repair window switch Like a Pro – T1A  Auto
40 வருடங்கள் மனதில் ஒரே கட்டளை:
“சேமிப்பு,  சேமிப்பு இன்னும் 
அந்த மனநிலை பாதுகாப்பாக மாறிவிடுகிறது.
 

அதனால் ஓய்வுக்குப் பிறகு:
“இப்போது செலவழித்து வாழ்க்கையை அனுபவி”
என்று சொன்னாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.
பணம் செலவிடுவது கூட அவர்களுக்கு தவறு செய்த உணர்வை தருகிறது.

இந்திய குடும்பங்களில் தினமும் நடக்கும் சில உண்மைகள்
FD வட்டியை மட்டும் பயன்படுத்துவது
வட்டியை செலவிடுவார்கள்.
ஆனால் முதல்தொகையை தொடவே மாட்டார்கள்.
“அது குழந்தைகளுக்காக…”
“அவசரத்திற்கு…”
என்று வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் பணவீக்கம் மெதுவாக அவர்களின் வாழ்க்கை தரத்தை சுருக்கிக் கொண்டே போகும்.
ATTR-CM முதுகுவலி: ஸ்பைனல் ஸ்டெனோசிஸை எவ்வாறு நிர்வகிப்பது
மருத்துவ சிகிச்சையையும் தள்ளிப்போடுவது
வங்கியில் பணம் இருந்தாலும்:
முழங்கால் அறுவை சிகிச்சை,
கண் அறுவை சிகிச்சை,
நல்ல மருத்துவ வசதி
இவற்றை “செலவு அதிகம்” என்று ஒத்திவைப்பார்கள்.
ஆரோக்கியத்தை விட பணத்தை பாதுகாக்க முயற்சிப்பார்கள்.

பயணத்திலும் அதே மனநிலை
70 வயதிலும்:
AC Coach வேண்டாம்,
Flight வேண்டாம்,
நல்ல ஹோட்டல், ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்…
“சில ரூபாய் மிச்சமாகட்டும்” என்பதற்காக உடலை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள்.

குழந்தைகளுக்காக எல்லாம் விட்டுச் செல்லும் மனநிலை
“நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பிள்ளைகளுக்குத்தான்…”
இந்த எண்ணம் பல பெற்றோரின் மனதில் ஆழமாக உள்ளது.
ஆனால் சில நேரங்களில்: தாங்கள் வாழாமல், அவர்களுக்காக மட்டும் சேமித்து, இறுதியில் வாழ்க்கையே அனுபவிக்காமல் போகிறது.

அவர்களின் மிகப் பெரிய பயம் என்ன?
“நான் இன்னும் 20 வருடம் வாழ்ந்தால்…?”
பணம் தீர்ந்து போகுமோ என்ற பயம்.
ஏனெனில் அவர்கள்:
பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பை சுருக்கியது,
வாழ்க்கைச் செலவு எப்படி உயர்ந்தது
என்பதை நேரில் பார்த்தவர்கள்.
அதனால் மிக மோசமான நாளுக்காக தயார் செய்கிறார்கள்.

ஆனால் அதற்குள், நல்ல நாட்களை வாழ மறந்துவிடுகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கிறது?
ஒரு நாள் அவர்கள் இல்லாமல் போகிறார்கள்.
பின்னால்:
வங்கியில் உள்ள தொகை,
பயன்படுத்தாத நகைகள்,
காலியாக இருக்கும் பெரிய வீடு
இவை மட்டும் இருக்கும்.
ஆனால் அவர்களுடன் சேர்ந்து புதையுண்டு போவது:
செல்லாத சுற்றுலாக்கள்,
வாங்காத சிறிய ஆசைகள்,
குடும்பத்துடன் செலவிடாத தருணங்கள்,
சொல்லாமல் விட்ட அன்பு.

முடிவுரை
சேமிப்பு மிக முக்கியம்.


ஆனால் வாழ்க்கையை முழுவதும் சேமிப்பதற்காக மட்டும் வாழக் கூடாது.
பணம் என்பது


“பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொருள்” மட்டும் அல்ல…


வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்த வேண்டிய கருவி” கூட.
ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது:


மெதுவாக வாழ,
உடலை கவனிக்க,
விருப்பங்களை நிறைவேற்ற,
குடும்பத்துடன் நேரம் செலவிட,
மனநிம்மதியை அனுபவிக்க
கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு.
இறுதியில் மனிதர்கள் நினைவில் வைத்துக் கொள்வது


நீங்கள் எவ்வளவு பணம் சேமித்தீர்கள் என்பதல்ல…


நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தீர்கள் என்பதுதான்.


எனவே இன்றைய 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்கள் தேவைகளுக்கு செலவழியுங்கள், வாழ்க்கையை மகிழ்வோடு வாழுங்கள், சந்தோஷமாக இருங்கள் 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷