ஓய்வு அறியாத பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:52 | Best Blogger Tips
Image may contain: one or more people


அன்பார்ந்த மோடி அவர்களே
உங்களை பிரதமராக கொள்வதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் உங்கள் உழைப்பை மதிப்பதில்லை
ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கிறீர்கள்
இந்த நாட்டின் நலனுக்காக தூக்கத்தை கூட தியாகம் செய்கிறீர்கள்
எங்களுக்கு பழக்கமான தூங்கி வழியும் தேவ கவுடாவாகவோ பப்புவாகவோ இல்லையே தங்களை
அதற்காக தங்களை யாரும் பாராட்டப்போவதில்லை
சாதாரண விஷயங்களில் கூட உங்களை தூக்கில் போட ஒரு பெரும் கூட்டம் அலைகிறது
இந்த தேசத்து மக்கள் 60 ஆண்டுகளாக தங்களை கொள்ளையடித்த ஒரு குடும்பத்திடம் மீண்டும் கொடுப்பார்களே ஒழிய உங்களை 5 வருடங்கள் அமைதியாக ஆள விடமாட்டார்கள்
காரணம் இந்த தேசம் தற்போது முட்டாள்களான அறிவுஜீவிகளாலும் சோம்பேறிகளாலும் மட்டுமே நிறைந்து இருக்கிறது
நான்கு பேர் கொண்ட ஒரு சிறு குடும்பத்தை கூட வழி நடத்த முடியாதவர்கள் இந்த நாட்டை எப்படி நடத்துவது என்று ஆலோசனை கூற வருகிறார்கள்
நாட்டின் பிரதமராகிவிட்டீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக தங்களை பழிவாங்க ரத்த வெறிபிடித்த
ஒநாய்களாக அலைகிறது ஒரு கூட்டம்
இப்போது தேர்தல் வைத்தால் மோடி மீண்டும் வரவாய்ப்பில்லை என்ற குரல்களை கேட்கிறேன்
ஓய்வு அறியாமல் உழைக்கும் மனிதனுக்கு இது தான் பரிசு போலும்
அவர்களால் இந்த நாடு முன்னேறுவதை பொறுத்து கொள்ளமுடியவில்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் துவரம்பருப்பு கிலோ ஒரு ரூபாயக்கும் இலவசமாக வெங்காயமும்
இதை மட்டும் செய்து பாருங்கள் உங்களை அவர்கள் எங்கு கொண்டு வைக்கிறார்கள் என்று
ஊழலை ஏற்று கொண்ட அவர்களால் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சரியான மாற்றங்களை ஏற்று கொள்ளமுடியவில்லை
வருத்தமாகவே இருக்கிறது
2019 ல் நீங்கள் மீண்டும் வருவீர்களா என சந்தேகம் இருக்கிறது
என்ன செய்வது சார்
இவர்களுக்கு தேவை எல்லாம் பப்பு போன்ற முட்டாளே
அவர்களுக்கு தேவை எல்லாம் இலவச சோறு மட்டுமே
சரித்திரம் இதை தான் அவர்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறது
யாரும் மாற்றத்திற்கு தயாராக இல்லை
3 G ஸ்மார்ட் போன் களை கையில் வைத்துக்கொண்டு அதற்கு 300 வரை ரீசார்ஜ் செய்து கொண்டு பருப்பு விலை ஒரு ரூபாய் ஏறிவிட்டது என கூப்பாடு போடும் முட்டாள்களை என்ன செய்வது Bloody
Scoundrels
இவர்களை இப்படி சொல்வதை விட வேறு வார்த்தைகள் தெரியவில்லை
உலகத்தின் 10 சக்திவாய்ந்த தலைவர்களில் தாங்களும் ஒருவர்
ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை
பெரும்பான்மையான மக்கள் ஊமை களாகவும் குருடர்களாகவும் இருப்பது புதிதில்லையே
தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும்
உங்கள் கடுமையான உழைப்பு அர்ப்பணிப்பு இவை எல்லாம் இந்த முட்டாள்களுக்கு தேவை இல்லை
அவர்களுக்கு தேவை எல்லாம் அடிமைத்தனம்
நீங்கள் ஜனநாயக தலைவராக இருக்க வேண்டாம்
சர்வாதிகார தலைவனாக மாறுவதே என் போன்ற சாமானியர்களின் வேண்டுகோள்
செய்வீர்களா மோடி
இது பிச்சைக்காரர்களின் தேசம்
என் எதிர்பார்ப்பு நிறைவேறுமா தெரியவில்லை
போய் வாருங்கள் மோடி
தகுதியற்ற தேசம் நாசமாக போகட்டும்

நன்றி இணையம்

நேசிப்போம்...மதிப்போம்...வாழ்வளிப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:00 | Best Blogger Tips


"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?"
"முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே,
"
அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...
வேலையை ஆரம்பித்தார்...
'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...
"ஏன்டா! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
நேசிப்போம்...மதிப்போம்...வாழ்வளிப்போம்... க்கான பட முடிவு
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"
இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"
சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"
மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...
அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"
சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'
வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"
இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...
முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...
அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...
*"நம்முடைய அறிவும்...*
*
புத்தியும்...*
*
திறமையும்...*
*
அதிகாரமும்...*
*
அந்தஸ்தும்...*
*
பொருளும்...*
*
மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...
*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*
*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*
*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*
*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*
ஆகவே,
*
இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
*
மதிப்போம்...*
*
வாழ்வளிப்போம்...*




 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
🌴🍃 *வாழ்க வளமுடன்


நன்றி இணையம்