💕எங்களை காப்பது இந்தியர்களின் கடமை - சொல்கிறது பாகிஸ்தான்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:19 | Best Blogger Tips

 




💕எங்களை காப்பது இந்தியர்களின் கடமை - சொல்கிறது பாகிஸ்தான்.

அநேகமாக பாகிஸ்தானிய வரலாற்றில் அடித்த மிகப்பெரிய அந்தர் பல்டி இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய 80 ஆண்டுக்கால வரலாற்று பகைமை பாராட்டிய பகுதி பின்னர் ஓர் அவர்களுக்கு என ஒரு தேசமாக பிரிந்து சென்றவர்கள், பிரிந்து சென்றதோடு இல்லாமல் வஞ்சனையில்லாமல் துவேஷம் பாராட்டி நின்றவர்கள் இன்று இறங்கி வந்து கதறும் நிலையில் இருக்கின்றார்கள்.

🍀💥🍀தற்போதைய இந்த தருணத்தில் தங்களை தொப்புள் கொடி உறவு என்கிறார்கள், உண்மை தான் என்ற போதிலும் அது இத்தனை காலமும் மறந்திருந்தவர்களுக்கு தற்சமயம் எப்படி ஞாபகம் வந்தது, அது ஏன் வந்தது என்று பார்ப்பதற்காக இப்பதிவு.

🔥ஒற்றை சொல்லில் சொன்னால் #பொருளாதாரம்.

உலகம் கொரானா காலத்தில் தடுமாறி தத்தளித்து கொண்டு இருக்கும் வேளையிலும் இந்தியா மாத்திரமே ஜாக்கிரதையாக முனைப்புடன் செயல்பட்டு,. பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

👉தடுப்பு மருந்து வரை இடைவிடாத ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்து வெற்றிகரமாக செயல்பாட்டில் கொண்டு வந்து விட்டது.

🎀இஃது உலக நாடுகள் பலவற்றில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி விட்டது. தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்தத்தோடு இல்லாமல் லாப நோக்கற்ற மருத்துவ சேவையாக கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் இலவசமாக வழங்கி பிரம்மிக்க வைத்திருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் இந்திய பொருளாதார வளர்ச்சி மிக குறுகிய காலத்தில் மீண்டெழுந்து முதன்மையாக திகழ்கிறது. இதனை நான்கு கால் பாய்ச்சல் என்பது சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.

🧲பல வளரும் நிறுவனங்களை, மிகப்பெரிய தொழிற்சாலைகளை புதிதாக உருவாக்கி தொழித்துறைக்கு உயிரூட்டி விட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம் சீனா செய்த கடந்த கால தவறுகளால் உலக நாடுகளின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள். அங்கு இயங்கி வந்த பல வர்த்தக தொழில்நுட்ப பிரிவினர் பலரும் இந்தியா பக்கம் வந்திரங்கியிருக்கிறார்கள். இதனாலும் இந்திய தொழில் துறை புதிய பரிமாணம் எட்டிப் பிடித்திருக்கிறது.

🍀💥ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தானிய பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது, இது அவர்களின் கடந்த கால தவறான கொள்கை ஒரு புறம் என்றாலும் தற்போது மனதளவில் நொருங்கி போய் இருக்கிறார்கள் பாகிஸ்தானிய மக்கள். தங்கள் தேசத்தில் ஒரு சிலர் வாழ, பலர் செத்து மடியும் இந்த போக்கை வெறுக்கிறார்கள். தங்களை அறியாமல் இந்திய உறவுகள் புதுப்பிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வளவு ஏன் பாகிஸ்தானிய கிராமம் ஒன்றில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து கடந்த காலத்தில் அங்கு இருந்த பழங்கால கோவில் ஒன்றை பழுது பார்த்து புதுப்பித்து வருகின்றனர், இதன் மூலம் தங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று திடமாக நம்புகிறோம் என்கிறார்கள்.

🍀🔥பாகிஸ்தானிய பணவீக்க விகிதம் உலக நாடுகளில் மிகப் பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. சுமார் 14.8% எனும் அளவை எட்டி பிடித்து இருக்கிறது. இவை போதாதென்று பாகிஸ்தானிய கடன் தொகை, 2019-2020 ஆண்டுகளில் உச்ச அளவாக 17 டிரில்லியன் டாலரை அளவை தாண்டி நாட்டின் மொத்த கடன் தொகை சுமார் 37 டிரில்லியன் டாலர்கள் என்கிற சரிசெய்ய முடியாத அளவினை எட்டிப்பிடித்திருக்கிறது. அதாவது நாட்டின் சொத்து மதிப்பை காட்டிலும் கடன் அதிகம் என்கிறார்கள்.

#FATF அலறிக் கொண்டு இருக்கிறது, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க அனைத்து தகுதிகளையும் அது ஏற்கனவே பெற்றுவிட்டது என்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் பெரிதும் நம்பிய சீனா கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானை கைக்கழுவி வருகிறது. போதாக்குறைக்கு அவர்கள் கொடுத்த தடுப்பூசி மருந்துகளை போட்டு கொண்டு இம்ரான்கானுக்கே நோய் தொற்று உறுதி செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்க பட்டு வருகிறார் என்கிற செய்தியே பாகிஸ்தானிய மக்களின் மன மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் என்கிறார்கள்.

❤️மற்றோர் காரணமும் இருக்கிறது. ஆசியாவின் வெல்ல முடியாத சக்தியாக இந்தியா உருமாறி விட்டது. தங்களை ஆபத்து காலத்தில் காக்கும் என நம்பியிருந்த சீனாவையே இந்தியர்கள் பந்தாடியவர்களுக்கு தாங்கள் எம்மாத்திரம் என்பது பாகிஸ்தானிய சாமானியனின் குரலாக ஒலிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே தற்போதைய இந்திய ஆளுமை மீது அச்சம் கொண்டு இருந்ததற்கான இரண்டு காரணங்களில் ஒன்று அபிநந்தன் விஷயத்தில் பாகிஸ்தானிய ராணுவம் பணிந்தது, மற்றோன்று புல்வாமா தாக்குதல் போது சொல்லாமல் கொள்ளாமல் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி ஜெய்ஷிமுகமது கும்பலை அடியோடு அழிந்தது. இவை இரண்டிற்குமே பாகிஸ்தானால் எதிர் வினையாற்ற முடியவில்லை என்பது அவர்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் தான் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களை ஓட ஓட அடித்து விரட்டியது இந்திய ராணுவம்.

இந்த நிமிஷம் வரை அவர்களாளுமே இதற்கு எதிர் வினையாற்ற முடியாமல் பத்து மாத முற்றுகையை எவ்வித நிபந்தனையும் இன்றி விலக்கிக் கொண்டார் என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தவர்களுக்கு இன்றைய தேதியில் தங்களுக்கு இந்திய அரசை விட்டால் வேறு கதியில்லை என்பதை வாய் விட்டு பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

🍀பாகிஸ்தானிய கடனை நாங்க பாத்துக்குறோம், இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியாக நீங்கள் தயாரா என அமித் ஷா பாகிஸ்தானிய மக்கள் பார்த்து கேட்பது போன்று இணையத்தில் வலம் வரும் மீம்ஸ் அங்கு மிக பிரபலம் தற்போது.😂

ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகள் பலவற்றில் கடன் வாங்கி விட்ட நிலையில் அவர்கள் தங்களின் பணத்தேவைக்கு பெரிதும் நம்பிய அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தற்போது கை விரித்து விட்டதை நன்கு உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சீனா தனது CPEC திட்டத்தையே நிறுத்தி வைத்து விட்டது. அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவி ஏற்றவர் கடந்த காலத்தில் நம் பாகிஸ்தானிய உச்ச விருதான இளம் பிறை பெற்றவர் என்பதால் உதவுவார் என்று நம்பினார்கள். ஆனால் கடந்த கால பைடன் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் அவர்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கடன் சுமை அழுத்தும் நிலையில் இந்தியாவால் மட்டுமே இந்த பிரச்சினையில் இருந்து தங்கள் காப்பற்ற முடியும் என்று கதறவே ஆரம்பித்து இருக்கிறார்கள் பாகிஸ்தானிய பிரஜைகள்.

பார்க்கலாம் இந்திய அரசு தலைமை எவ்வாறு இதனை அணுக போகிறது என்று. இவை குறித்தெல்லாம் ஏதும் தெரியாத இங்கு உள்ள கூபைகள் சிலர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிக்க கூடாது, பாரதமாதாகீ ஜெய் என கோஷம் போடக் கூடாது என்று அலப்பறை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு கொடி காத்த குமரன் குறித்து பாட புத்தகத்தில் படித்தது மறந்து போய் இருக்கக்கூடும், அன்று தேசிய கொடிக்காக உயிர் கொடுக்க துணிந்தவர்கள் இன்று தேசியத்திற்காக ஒன்று கூடவும் தயங்க மாட்டார்கள் என்பது புரியவில்லை. இனம், மதம், சமயம் என்பதை தாண்டி #தேசியம் என்று ஒன்றுபட்டால், பிரிவினை பேசும் சிலர் இருக்கவும் இடம் இல்லாத நிலை வரும் என்பது மறந்து விடாதீர்கள்.

நன்றி இணையம்