சுவாமி விவேகானந்தர் தன் உரையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:55 PM | Best Blogger Tips

 தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை - Mediyaan

சுவாமி விவேகானந்தர் தன் உரையில் சொல்வார்

"இந்த உலகில் ஆன்மீக அலையும் லவுகீக அலையும் மாறி  மாறி எழும், பொருளாதாரத்துக்கான இந்த மொதல்கள் முடிந்தபின் அரசுகள் மாறியபின் ஆன்மீக அலை மீண்டும் எழும்"

இதோ அவர் வாக்கு பலித்துவிட்டது, இந்துமதம் தான் மீண்டெழுவதை பல இடங்களில் காட்டுகின்றது, ஆலயங்களில், அரசியலில், ஊடகங்களி, வாழ்க்கை பாணியில், பொது இடத்தில் என எல்லா இடத்திலும் காட்டுகின்றது

விடிவெள்ளியினை காட்டியிருக்கும் இந்துமதம், அயோத்தி துலங்கி அங்கே அந்த ஆலய மணியோசை கேட்க தொடங்கும்போது முழு கதிரவனாக மெல்ல மெல்ல வெளிபட்டு துலங்கி உலகுக்கே ஒளிகொடுக்கும்

இனி எதைகண்டும் அஞ்சவேண்டியதில்லை, கவலையுற வேண்டியதில்லை பிரபஞ்சம் தன் அலையினை அடிக்க ஆரம்பித்துவிட்டது அங்கு எல்லோரும் வெறும் கருவிகளே

அமைதியாக பிரபஞ்சத்தை உற்று கவனியுங்கள், அது மவுனமாக பேசுவதை கவனியுங்கள், அது மெல்ல வைக்கும் புள்ளிகளையும் அது இழுக்கும் கோடுகளையும் கவனியுங்கள், பெரும் மாற்றத்துக்கு தேசம் மவுனமாக தயாராகிகொண்டிருப்பது புரியும்

காலதேவனே சக்திவாய்ந்தவன் அவன் கண்விழித்திருப்பது மிகபெரும் ஆறுதல்...
🎊🤝🎊
நன்றி இணையம்

மக்கள் மனமும் சிந்தையும் மாறிகொண்டிருப்பதையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips

 


சமீப நாட்களாக நடப்பதை கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது, அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌

இது அரசியலில் மட்டுமல்ல ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம் அலங்காரம் விளையாட்டு என பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது, கொஞ்ச கூர்ந்து பார்த்தால் அது புரியும்

காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்தது, இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான பெரும் சன்னதிகளும் எழுப்பபடுகின்றன‌

காசி துலங்கியதில் இருந்து இதனை அறியமுடிகின்றது, கால பைரவர் வழிபாடுகள் பெருக பெருக பல மாற்றங்களை உணரமுடிகின்றது

காவி நிறம் ரயில் முதல் பல இடங்களில் வருகின்றது, டெல்லியில் நடராஜர் சிலை எழுகினறது

வராஹி என்றொரு தெய்வம் பற்றி இங்கே முன்பு பரபரப்பில்லை, இப்போது வராஹி தெய்வ வழிபாடுகள் காணுமிடமெல்லாம் நடக்கின்றன‌

தெரிந்தோ தெரியாமலோ மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் கூட அது காட்டபட்டது, அவரை மீறி அக்காட்சி வந்ததுதான் ஆச்சரியம்

முன்பெல்லாம் கேட்ட குரல்கள் அதாவது இந்து துவேஷம், சனாதன ஒழிப்பு இவை எல்லாம் இப்போது கேட்பதிலை மெல்ல அடங்குகின்றன‌

மக்களிடம் இந்து அறநிலையதுறை பற்றி கேள்விகளும், இந்து ஆலயம் பற்றி அக்கறைகளும் வருகின்றன‌

எல்லா இந்து ஆலயங்களும் நிரம்பி வழிகின்றன, மக்களிடம் பெரும் மாற்றம் வந்திருக்கின்றது

இந்துக்களின் எழுச்சி நம்பமுடியாத சிலிர்ப்பு, இந்துமதம் வேகமாக எழுவதும் அது தன் முழு பலத்தோடு சீறுவதும் இதுவரை நடந்திராத ஆச்சரியம்

அந்த செய்தி உண்மையா பொய்யா தெரியவில்லை ஆனால் "கருங்காலி மாலை" என வந்த அலையும் சாதாணமாக கடந்து செல்ல முடியாதது

சுரங்கததில் சிக்கியவர்களை மீட்ட அந்நியதேச கிறிஸ்தவனே காளியினை வணங்கிகொண்டிருப்பது உலகளவில் பெரும் கவனம் பெற்றது

மோடியால் மட்டுமல்ல அவரை தாண்டி ரிஷி சுணக், அமெரிக்காவில் விவேக் ராம்சாமி போன்றோர் இந்துமதத்தை பெரும் இடத்துக்கு அழைத்து செல்கின்றார்கள்

அமெரிக்காவில் மிகபெரிய இந்து ஆலயம் திறக்கபடுகின்றது

இந்தியாவினுள் இதுகாலம் இல்லாத பெரும் மாற்றங்களை இந்து அடையாளங்களுடன் காணமுடிகின்றது, தேசமும் தேச மக்களும் ஒரு ஆன்மீக அலையில் மூழ்கிகொண்டிருக்கின்றார்கள்

கம்யுனிஸ்ட், நக்சலைட், மதசார்பற்ற காங்கிரஸ் என எல்லாமும் தடம் மாறுவதையும், காலம் மாறுவதை புரிந்தம் புரியாமலும் திமுக தடுமாறுவதையும் கவனிக்க முடிகின்றது

வீட்டு உள் அலங்காரமெல்லாம் இப்போது இந்து பாணி சாயலில் இருப்பது பேஷனாகின்றது, இந்து சாயல்கள் பல இடங்களில் வருகின்றன‌

இந்து உடைகள் இப்போது நாகரீகமாகின்றன‌

உலகெல்லாம் கரும்பச்சை நிறம் எனும் ராமனின் நிறம் விருப்ப நிறமாகின்றது

இந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு விஷயத்தை மவுனத்தால் சொல்கின்றது, காலம் மாறுவதையும் ஆன்மீக எழுவதையும் இந்துமதம் மேல் எழுவதையும் மெல்லிய வெளிச்சமாக காட்டுகின்றது

எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் இந்துமதம் மேல் எழுகின்றது.. அரசியல், சட்டம், ஊடகம், மக்கள் மன்றம், சமூகம் இன்னும் எல்லா துறைகளிலும் அது தன் மறுமலர்ச்சியினை காட்டுகின்றது

இதை ஆழ கவனித்தால் உங்களுக்கே புரியும், இனி இந்துமதம் மேல் எழும் எதைபற்றியும் அஞ்சவேண்டியதில்லை

தர்மம் கால பைரவர் வடிவிலும், வராஹி வடிவிலும் அது பலத்த எச்சரிக்கையினை செய்கின்றது

வராஹி என்றால் போர் கடவுள், "வார்" என்பதோடு  வாராஹி எனும் அந்த சொல்லை சேர்த்துபார்த்தால் பொருள் விளங்கும், மூலச்சொல் வராஹிதான்

வராஹி கண்விழித்தபின்புதான் இங்கே இதுவரை ஆடிய அராஜக கும்பல்கள் மெல்ல அடங்குகின்றன, தர்மத்துக்கான் போரை அவளே செய்துகொண்டிருக்கின்றாள்

கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் அந்த கார் ஏன் வெடிக்கவேண்டும் என்பதையும் இன்னும் பல மெய்சிலிர்க்கும் சம்பவங்களையும் கண்டால் உங்களுக்கே புரியும்

அவளின் பெரும் போர் தொடங்கிவிட்டது

இந்துமத ,  இந்திய எதிரிகளெல்லாம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முழுக்க அடக்கபடுவதை கண்டால் வராஹி வந்துவிட்டதை இதைவிட என்ன ஆதாரத்தை சொல்லி விளக்கமுடியும் எனும் அற்புதமான பதிலும் வருகின்றது

காலபைரவரே தீர்ப்புகளை சொல்ல தொடங்குகின்றார் இனி இங்கு மோசடி அரசியல், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மர்ம சக்தி ஆட்டம், பொய்யிலும் புரட்டிலும் செய்யும் அட்டகாசமெல்லாம் இனி எடுபடாது, அவரவர்க்கான தண்டனையினை அவரவர் பெற்றே தீருவர், கால பைரவர் அதை செய்வார்

காசி துலங்கிவிட்டது இன்னும் சில விஷயம் மட்டும் பாக்கி இருக்கின்றது, மதுரா துலங்க தயாராகின்றது

மானுடன் எவ்வளவுதான் முயன்றாலும் காலம் ஒத்துழைக்காமல் எதுவும் சாத்தியமில்லை, அவ்வகையில் கால பைரவரின் எழுச்சி தேசத்தையும் மதத்தையும் காக்க உருவாகிவிட்டது

மக்கள் மனமும் சிந்தையும் மாறிகொண்டிருப்பதையும், இந்து மதம்பால் பெரும் பற்றோடு அவர்கள் நாடிவந்து அணைப்பதையும் உலகம் அமைதியாக காண்கின்றது


நன்றி இணையம்

மனித இயக்கத்தின் ஏழு ஆற்றல் சக்கரங்கள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips

 The seven chakras that give spiritual power | ஆன்மிக சக்தியை அளிக்கும் ஏழு  சக்கரங்கள்



1. மூலாதாரம்:
7 சக்கரங்கள் - மூலாதாரம் ஏன் முக்கியமானது? | Isha Tamil Blog
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது.

உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2. சுவாதிஷ்டானம் :- 

ஆறு சக்கரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.

பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.

மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.

பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம் :- 

மணிப்பூரக சக்கரம் இயங்கும் போது | Mani puraga chakra - YouTube

நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.

தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.

உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.

கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன.

கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்: 

போகரேழாயிரம்.14- அனாகதம் விளக்கம் - YouTube

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு.

மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது.

அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. விசுத்தி:-
Muladhara Chakra Healing Services at Rs 2000/person in Mumbai | ID:  21154750155

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு.

இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது.

தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை.

 
நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்கினை :
ஆக்கினைத் தவம் - Vazhga Valamudan

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள்.

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது.

தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.

இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. தூரியம் :-

Turiyam Consultancy Overview | SignalHire Company Profile

இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு.

இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது.

இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது.

என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறது.

ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருக்கிறார்கள்..

ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது.

குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
🙏🏾🙏🏾🙏🏾


நன்றி இணையம்

அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

 


🍁ஆடு மாடு கோழி மீன் லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு  காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு...

🍁ஆனால்
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும்
உன் பிணத்தை  வாங்கமாட்டான்.

🍁
நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்.

How to change the unwanted things in your life

🍁நீ வாங்கிய
Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளியே கிடக்கும்.

🍁இப்படி
யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்

🍁
நான் யார் தெரியுமா
நான் அப்படி நான் இப்படி என்று
சுயதம்பட்டம் அளப்பரைகள்
Nadar Uvari Tirunelveli - 💐18 தித்தரர்களில் இவர் பதிமூன்றாவது  சித்தராவார்💐 💐பாம்பாட்டி சித்தர் குரு:சட்டைமுனி காலம்:123 ஆண்டுகள், 32  நாட்கள் சீடர்கள் ...

🍁
விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா

🍁
விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு
வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா

🍁
உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள் அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்

🍁பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை
போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு

ஆனால்...

அந்த
பிரபலங்களின் பிணத்தை வாங்க எவர் உண்டு??

🍁இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது
அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார்...✍🏼🌹

பிரதமர் மோடியின் புரிதல் ....முதிர்ச்சியையும், ஞானத்தினையுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 12:32 PM | Best Blogger Tips

 தமிழகத்திற்கு பிரதமர் என்ன செய்துள்ளார் என மனசாட்சியோடு பதில் சொல்லட்டும் |  Tamil News Kanimozhi answer with conscience what the Prime Minister has  done for Tamil Nadu.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தபோது,
"எப்போதும் சோர்வடையாமல் நீங்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி?" என்று  கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி

"நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன்.

அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான்.
வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்  மோடி – News18 தமிழ்

ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்  என்று கூறினார்.

இதுகுறித்து கிண்டலாக பல்வேறு விமர்சனங்கள் பேசப்படுகிறது.
ஆனால் அந்த பரமாத்மா கீதையில் சொல்கின்றார்...
Prime Minister Narendra Modi during a visit to Arichal Munai point

'அர்ஜுனா! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் நானே.'

'எதெல்லாம் பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.'

'நான் பிறப்பில்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என உணர்பவன் மனிதரில் தெளிவுபெற்றவன் பாவம் அனைத்தும் அகன்றவன்' என்று.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற இந்திய வம்சாவளியை சார்ந்த விவேக் ராமசாமி ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
"எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்துக்காக இங்கே இருக்கிறார்கள் என்பதும், அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மிக கடமை என்பதும் எனது புரிதல். ஏனெனில், கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். நம் மூலம் பல்வேறு வழிகளில் அவர் செயல்படுகிறார்" என்றார்.

பிரதமர் மோடியின் புரிதல் இதனுடைய அடுத்த நிலை.  ஆன்மீகரீதியாக மோடி அடைந்திருக்கும் முதிர்ச்சியையும், ஞானத்தினையுமே இது நமக்கு உணர்த்துகிறது.


நன்றி இணையம் வைரவேல் சுப்பையா

கணக்கதிகாரமும் பலாப்பழமும்:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips

 i'm shiyan: பலாப்பழத்தில் உள்ள சுளைகள் எண்ணிக்கை அறிய!!!

 

கணக்கதிகாரமும் பலாப்பழமும்:

என் தந்தையின் அப்பா, குமாரசாமி அவர்களும் அவரது சகோதரர்களும் சில கணிக்கும் திறமைகள் இருந்ததாகச் சொல்வார்கள். அதாவது நிலக்கடலை விளைந்த காட்டில் மூலை மூலைக்கு ஒரு செடியை பறித்து அதில் உள்ள காய்களின் எண்ணிக்கை மற்றும் பருப்பின் திரட்சியை கணக்கிட்டு, அந்த நிலத்தில் இருந்து எத்தனை மூடை கடலை கிடைக்கும் என்பதை துள்ளியமாக சொல்வாராம். அது போலவே அவரது சகோதரர் சங்கரலிங்கம் அவர்கள், அன்றைய அணாக்களை (ஓட்டைகாசு) கைப்பிடி எடுத்து அது இரண்டு /மூன்று / ஐந்து ரூபாய் எனச் சரியாக சொல்வாராம். இப்படி நம் முன்னோர்கள் நேரத்தை, தண்ணீரை, ஆடு/ மாடுகளின் எண்ணிக்கையை சரியாக  கணக்கிடும் திறமைகளை வைத்திருந்தார்கள்.

இதற்கு பின் அவர்களின் தனித்திறமை இருந்தாலும், இதுபோன்ற  கணிப்புகளுக்கு பல சூத்திரங்களும் உண்டு. அதைப்பற்றி விளக்குவதே 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த "காரி" என்ற  புலவர் எழுதிவைத்த "கணக்கதிகாரம்" என்ற நூல்.

இன்று எங்கள் வீட்டில் அந்த பழங்கால கணிப்பு விளையாட்டு ஒன்றை பரிசோதனை செய்தோம். அது, பலா பழம் ஒன்றை வெட்டாமல் உள்ளே இருக்கும் சுளைகளின் எண்ணிகையை கணக்கிடும் கணிப்பு முறை.

என் மனைவி மீனா, காலையில் ஒரு சிறிய பலா பழம் ஒன்றை உள்ளூர் விவசாயிடம் வாங்கினார்.

உடனே எங்கள் கணிப்பு விளையாட்டு தொடங்கியது. நாங்கள் பழத்தை வெட்டாமல், சொல்லப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில், 57 சுளைகள் இருக்கும் என கணித்தோம். பிறகு நானும் மகன்களும் ஊர்சுற்ற பக்கத்தில் உள்ள அணைக்கட்டு வரை சென்றுவிட்டோம். (அங்கே கற்றது தனி பதிவில் வரும்). நாங்கள் திரும்பி வருவதற்குள் எங்களுக்கு காலைச் சிற்றுண்டி தயார் செய்து விட்டு, பலா பழத்தை வெட்டி வைத்த மனைவி, வந்ததும் எங்களை எண்ணிப்பார்க்க கட்டளையிட்டார்.

அட ஆமாங்க, நாங்கள் கணிய்தது போலவே சரியாக 57 சுளைகள் இருந்தன.

இது சாத்தியம், அந்த சூத்திரம் இதோ...

பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி –வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை
- கணக்கதிகாரம், காரி நாயனார்

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கியபின், அதை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.

காம்பு அருகில் உள்ள முட்களின் எண்ணிக்கை 47

அதை 6 ஆல் பெருக்கிய எண் 47×6 = 282

வந்த எண்ணை 5 ஆல் வகுத்தால் 282/5 = 56.4

ஆக 56 அல்லது 57 சுளைகள் இருக்க வேண்டும்.

எங்களுக்கு கிடைத்த சுளைகள் 57.

*

இது பலா பழம் கிடைக்கும் பருவம், நீங்களும் ஒரு சிறிய பழம் வாங்கி (காம்பு அருகில் உள்ள முட்களை எண்ண ஏதுவாக இருக்கும் பழம்) பரிசோதித்து, நம் முன்னோர்கள் கணக்கியல் திறமையை உணர்ந்து மகிழுங்கள்.

பதிவு- யாதும் முத்து

 

நன்றி இணையம்

மதன்லால் திங்ரா!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips

 


🔥🔥🔥  கண்டிப்பாக படியுங்கள் 🔥🔥🔥
மதன்லால் திங்ரா!

பிரிட்டிஷ் சிறையில் அந்தக் ‘கொலைகாரனை’ப் பார்க்க ஒரு ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். “நான் தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்க்க அனுமதியுடன் வந்திருக்கிறேன்.” கைதியிடம் அழைத்துச் செல்லப்பட்டார் அந்த மனிதர்.

சிறைக் கம்பிகளுக்கு இரு புறங்களிலும் நின்ற அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்தை யாசித்து வந்திருக்கிறேன்… நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்றார் பார்க்க வந்தவர். சிறைக்குள் இருந்தவரோ, “தயவு செய்து ஒரு சீப்பு தரமுடியுமா? நாளை என் மணப்பெண்ணை முத்தமிடும் போது கலைந்த தலையுடன் இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார். சீப்பும் சில தாள்களும் கைமாறின.

சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் விடைபெற்ற அந்த மனிதர் வீர சாவர்க்கர்...

மதன்லால் திங்ரா!

1909 ஜூன் 20ல் நடந்த கூட்டத்தில் கணேக்ஷ் சாவர்க்கருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காகவும், வங்காளத்தை பிரித்த இந்திய மந்திரியின் ஆலோசகரான சர் கர்சன் வில்லியை தீர்த்துக் கட்டி பழி முடிக்கிறேன் என்று மதன்லால் திங்ரா என்ற இளைஞன் வீர முழக்கமிட்டார்.

திங்ராவின் தந்தை பியாரிலால் திங்ரா கர்சன் வில்லியின் குடும்பநண்பர். குடும்பமே ஆங்கில அரசுக்கு விசுவாசமானவர்கள்.

பின்னர் கர்சன் வில்லியை லண்டன் மாநகரிலேயே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டது. அதில் சாவர்க்கர், வ.வே.சு. ஐயரும் கலந்து கொண்டனர்.

1909 ஜூலை முதல் தேதியில் லண்டன் இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர கூட்டம் ஜஹாங்கீர் மாளிகையில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் நடைபெறும் என்ற தகவல் கிடைத்தது.

அந்த நாளும் வந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் பிரதான விருந்தாளியான கர்சன் வில்லி அரங்கில் உள்ளவர்களை நலம் விசாரித்துக் கொண்டே மேடைக்கு சென்று கொண்டிருந்தார். மதன்லால் திங்ராவின் அருகில் வந்ததும் “ஓ! … மை டியர் ஜூனியர் திங்ரா! யூ ஆர் ஹியர்?” என்று வியப்புடன் மகிழ்ச்சியுற்ற கர்சன் வில்லி மதன்லால் திங்ராவுடன் கைகுலுக்க தன் கையை நீட்டினார்.

திங்ராவோ தன் கோட்டுப் பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து கர்சன் வில்லியை ஐந்து முறை சுட்டார் அதே இடத்தில் பிணமானார். ஐந்து குண்டுகளும் கர்சன் வில்லியின் முகத்தில் பாய்ந்து அடையாளம் தெரியாத வகைக்கு சிதைத்தன. கூட்டம் சிதறி ஓடியது. பம்பாயை சேர்ந்த பார்சி வழக்கறிஞரான கவாஸ்லால் காகா என்பவர் மதன்லால் திங்ராவை தடுக்க முயன்று ஆறாவது குண்டுக்கு பலியானார்.

பல பேர் ஒரே நேரத்தில் திங்ராவை அமுக்க “ம். கொஞ்சம் பொறுங்கள்! என் மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொள்கிறேன். அப்புறம் பிடியுங்கள்” என்றார். திங்ரா நிதானமாக.

ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் தலைநகரிலேயே இந்திய மந்திரியின் நேரடி ஆலோசகரை குருவி சுடுவது போல இந்திய இளைஞன் ஒருவன் நேருக்கு நேராக சுட்டுக் கொன்றது ஆங்கிலேய அரசை ஆட்டியது.

திங்ரா நீதிமன்றத்தில், “வில்லியை நானே சுட்டேன். அது என் கடமை. ஆனால் வழக்கறிஞர் கவாஸ்லால் காகாவை நான் வேண்டுமென்றே சுடவில்லை. அவராக வலிய வந்து என்மேல் பாய்ந்ததால் தற்காப்புக்காக சுடநேர்ந்தது..” என்றார்...

வழக்கின் முடிவில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட ஆகஸ்ட் 17, 1909 காலை 9:00 மணி இலண்டனின் பெண்டோன்வில்லி சிறையில் மதன்லால் திங்க்ரா அவரது இறுதிப் பயணத்தை மேற்கொண்டார். ஹட்ஸன் எனும் ஒரு கிறிஸ்தவ பாதிரி வழக்கம்போல அவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வந்தார். “நான் ஒரு ஹிந்து; உங்கள் பிரார்த்தனை எனக்குத் தேவையில்லை” எனப் புன்னகையுடன் மறுத்துவிட்டார் திங்க்ரா.

திங்ரா தூக்கிலிடப்படும் திங்ராவின் அறிக்கை ‘டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய அந்த அறிக்கையின் சாரம் கீழே.

எனது சவால்!

”கர்சன் வில்லி என்ற ஆங்கிலேயரை சுட்டுக் கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கிலேய ரத்தத்தை சொட்ட வைத்தேன்.”

”என் தாய் நாட்டு தேச பக்தர்களையும், இளம் சிங்கங்களையும் மிருகங்களைப் போல வேட்டையாடி, மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப் படுத்தி வரும் ஆங்கிலேயப் பேராட்சியின் அடக்கு முறைக்கு எனது எளிய பழிவாங்கும் பதிலடியே இது.”

”நான்காண்டுகளுக்கு முன் எங்கள் தங்க வங்க மாநிலத்தை (அமார் சோனார் பங்களா) இரண்டாகப் பிரித்த சண்டாளன் கர்சன் வில்லி. அவனுக்கு பாடம் கற்பிக்க இப்போதுதான் வாய்ப்புக் கிட்டியது.”

”என் தேசத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்,
கடவுளுக்கே இழைக்கப்பட்ட அவமானமாக கருதுகிறேன்.”

”என் தேச காரியம் ராமபிரானின் காரியம்!; என் தேச சேவை கிருக்ஷ்னனுக்கு செய்யும் சேவை. அறிவிலும் செல்வத்திலும் வறியவனான என் போன்ற ஏழை மகன் என் தேசத் தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது? ஏதும் இல்லாத போது என் சொந்த ரத்தத்தையே அவளது சன்னிதானத்தில் காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத் தான் செய்தேன்!”

”எமது நாடு விடுதலை பெறும்வரை கிருக்ஷ்ண பகவான் ஆயத்தத்துடனே நிற்பார். வென்றால் நமது பூமி நமக்கு திரும்பக் கிடைக்கும்.”

”கடவுளுடன் நான் இறைஞ்சிக் கேட்கும் பிரார்த்தனை இதுதான். நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாகப் பிறக்க வேண்டும். அப்போதும் அவள் அடிமையாகவே இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்! மனிதகுல நன்மைக்காகவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீர வேண்டும்!”..

வந்தே மாதரம்....

மதன்லால் திங்கரா பலிதான நாள் இன்று..

சிலிர்ப்பூட்டும் தியாகம் மதன்லால் திங்க்ராவுடையது.
அந்த மாவீரரின் இந்த தியாக நினைவு நம் அடுத்த தலைமுறையினரிடமும் தேச பக்தியை வளர்க்கட்டும்

🔥🔥🔥 வந்தே மாதரம் 🔥🔥🔥🔥 

 

நன்றி இணையம்

🎊✨🎊சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலய சிறப்புகள்🎊✨🎊

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில் | Pallikondeswara Temple  Surutapalli

 

🎊✨🎊சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலய சிறப்புகள்🎊✨🎊

சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல  படுத்திருக்கும் இடம்! | உழவாரப்பணி

🪄சிவபெருமானை நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ லிங்க வடிவிலோ தான் தரிசித்திருப்போம்.

🪄பெருமாளை மட்டும் தான் சயனக்கோலத்தில் பார்க்க முடியும்.ஆனால்,பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம்.அவரது திருநாமம் #பள்ளிகொண்டீஸ்வரர் என்பதாகும்.ஈசன் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் அறிய தலம் ஒன்று உண்டு என்றால் அது சுருட்டப்பள்ளி தான்.
VELUDHARAN TEMPLES VISIT : Sri Pallikondeswarar Temple / பள்ளிகொண்டீஸ்வரர்  கோயில், சுருட்டப்பள்ளி / Suruttapalli, Andhra Pradesh, India. - Tirupati  Pada Yathra 2017.
🪄இத்தலம் உருவானதே பிரதோஷத்தையொட்டி தான்.அதாவது அமுதம் வேண்டி தேவர்களும்,அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அகிலமே அதிர்ந்த போது,தாம் படைத்த ஜீவராசிகள் துன்புறுவதை பொறுக்காமல் ஈசன் அதை தானே உண்ண முன் வந்து விழுங்கினார்.அது கண்ட உமை,ஈசனின் கழுத்தை பிடித்து விஷம் உள்ளே இறங்காமல் தொண்டையிலேயே நிற்கும் படி செய்தார்.அதனாலேயே ஈசன் நீலகண்டன் ஆனார்.அந்த அமளி துமளியில் சற்றே ஓய்வு எடுக்க எண்ணிய ஈசன் உமையவள் மடி மீது தலை சாய்த்து பள்ளிகொண்டார்.அதுவே,சுருட்டப்பள்ளி தலத்து திருக்கோலம்.
சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்: சிவன், விஷ்ணு போல  படுத்திருக்கும் இடம்! | உழவாரப்பணி
🪄இங்கு பிரதோஷம் விசேஷமாகும்.எல்லா பிரதோஷ தினங்களிலுமே சுருட்டப்பள்ளியில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.அதிலும் சனி மகாப்பிரதோஷம் என்றால் கூட்டம் அலைமோதும்.

🪄பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது.அதனை அடுத்து அழகிய ராஜகோபுரம்.உள்ளே நுழைந்தால் கொடிமரம்,பலிபீடம் பிரதோஷ நந்தி என சிவாலயத்திற்கே உரிய எழிலுடன் விரிகிறது.

🪄பள்ளி கொண்டீசனால் பிரபலமான கோவில் என்றாலும்,மூலவர் வால்மீகேஸ்வரர் தான்.இத்தலத்தில் தவமிருந்த வால்மீகி முனிவருக்கு ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி கொடுத்து அருளிதால் இத் திருநாமம் ஏற்பட்டது.

🪄வால்மீகேஸ்வரர் சன்னிதி பின்புறம் உட்பிரகாரத்தில் வால்மீகி சன்னிதியும் உள்ளது.இன்னுமொரு விசேஷம்,மூலவர் எதிரே நந்திக்கும் முன்னால் ராமலிங்கேஸ்வரர் லிங்கம் அமைந்துள்ளது.அருகில் பர்வதவர்த்தினி அம்பாள் உள்ளார்.பக்கத்தில் ராமர் சன்னதி உள்ளது.சீதாபிராட்டி,லட்சுமணர்,ஆஞ்சநேயர்,பரதன்,சத்ருக்கன் உடன் உள்ளனர்.

சுருட்டப்பள்ளி: பள்ளி கொண்ட ஈசன் | சுருட்டப்பள்ளி: பள்ளி கொண்ட ஈசன் -  hindutamil.in

🪄இங்கு அம்பாள் #மரகதாம்பிகை சுவாமியின் வலது புறத்தில் வீற்றிருக்கிறார்.அம்மையின் எழிலான தோற்றம் மனதை கவர்கிறது.அவரது சன்னிதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் சங்க நிதியும்,இடப்புறம் பத்மநிதியும் தம்,மனைவியுடன் காட்சி தருகின்றனர்.உள்ளே கற்பகவிருட்சம்,காமதேனு ஆகியன உள்ளன.அருகே சாலக்கிராம விநாயகர் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

🪄திருச்சுற்றில் நால்வர்,சித்தி விநாயகர்,அதனையடுத்து ஒரே மேடையில் வரிசையாக ஜுவரஹரேஸ்வரர்,விஷ்ணு,பைரவர்,வால்மீகி,ஏகபாத திரிமூர்த்தி,பூர்ணகலா புஷ்பகலா சமேத தர்மசாஸ்தா ஆகியோரும் உள்ளனர்.அடுத்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் தென்முகமாக இருக்கிறார்.

🪄கோஷ்டத்தில் தெட்சணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பிரம்மா,துர்க்கை ஆகியோர் உள்ளனர்.அதில் தெட்சணாமூர்த்தி மிக விசேஷமானவர்.காரணம் அவரது வாமபாகத்தில் அம்பாள் அணைத்த படி இருப்பது அபூர்வமான ஒன்றாகும்.இப்படி தம்பதி சமேதராக தெட்சிணாமுர்த்தியை காண்பதறிது.

🪄பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரை அடுத்து காசி விஸ்வநாதர்,விசாலாட்சி,நந்தி, சன்னிதிகள் உள்ளன.அதனையடுத்து பள்ளி அறை,அதனருகே வேணுகோபாலர்,பைரவர்,லவகுசர்களின் திருப்பாதங்கள்,அதுவும் 12 ஜோடி சின்னஞ்சிறு பாதங்கள் பார்க்க அழகோ அழகு.

🪄ஈசனை பார்த்தபடி குபேரர் என்று எல்லாம் மனதிற்கினிதாக அமைந்துள்ளன.சந்திர,சூரியர் வெளிப்பிரகாரத்தில் சப்தமாதாக்கள்.

🪄வடக்கு பிரகாரத்தில் தனியே பள்ளிகொண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது.இங்கு சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.பள்ளி கொண்டுள்ள ஈசனுக்கு அருகே மகாவிஷ்ணு,மார்க்கண்டேயர்,நாரதர்,பிருகு மகரிஷி,பிரம்மா, சூரியன்,சந்திரன்,குபேரன்,சப்த ரிஷிகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள்,கின்னரர்,கிம்புருடர் ஆகிய அனைவரும் சிவனை வணங்குகின்றனர்.அரியதாக பள்ளி கொண்டுள்ள ஈசனை சுருட்டப்பள்ளி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

🪄பிரமாண்ட வடிவத்தில பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயன கோலத்தில் உள்ளார்.‘சர்வமங்களா’என்ற திருநாமம் பெற்று அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.இவளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும்.

🪄பள்ளிகொண்டீஸ்வரை தரிசித்து விட்டு வந்தால்,வாழ்வில் நலங்கள் பெருகும்.

🛤️அமைவிடம்🛤️
இத்தலம் தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டையை அடுத்து ஆந்திர எல்லையில் அமைந்த்துள்ளது.

🙏🏻🎊ௐ நமசிவாய🎊🙏🏻
🙏🏻✨#அன்பே #சிவம்✨🙏🏻


நன்றி இணையம்

 Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005