இந்து மத வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து மத வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று ஆவணி மூலம் : பிட்டுக்கு மண் சுமந்த

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips

 May be an image of flute and temple

 

இன்று ஆவணி மூலம் : பிட்டுக்கு மண் சுமந்த கதை
 
ஒரு சமயம் பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது. வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரைகள் வலுவிழக்கும் அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. எனவே மன்னன் ஆற்றின் கரையை செப்பனிடும் பணியை மேற்கொள்ள ஆயுத்தமானார்.
 May be an image of 4 people and temple
இப்பணியை தன் குடிமக்கள் அனைவருக்கும் எந்த பாராபட்சமும் இன்றி பகிர்ந்தளித்தார். எனவே மக்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்யலானர்.
 
அப்படியிருக்க அங்கே "வந்தி" என்று பெயருடைய பிட்டு விற்கும் ஒரு மூதாட்டி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில மண்ணை சுமந்து போட்டுக்கொண்டிருந்தார். முதுமையின் தள்ளாமையால் அவரால் மண்ணை சுமக்க முடியவில்லை.எனவே கடவுளிடம் வந்தி தன் நிலை குறித்து முறையிட்டார்.
May be an image of text 

வந்தியின் நிலையை கண்ட ஈசன் ஒரு கூலியாள் வடிவில் அங்கே தோன்றினார். கிழவியின் அருகே சென்று தாயே உங்களுக்கு பதில் நான் இந்த மண்ணை சுமக்கிறேன். அதற்கு பதிலாக நீ எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அந்த பிட்டு விற்கும் கிழவியோ, என்னிடம் கூலியாக கொடுக்க என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் உன் பசி போக்க இந்த பிட்டினை தருகிறேன். 
 
May be an image of 3 people 
என்று கூறினார். அதற்கு இசைந்த அவன் அந்த கிழவியிடம் பிட்டை வாங்கி உண்டு தன் பசியாரியவுடன் மண்ணை சுமக்க ஆற்றை நோக்கி சென்றார்.
 
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப பிட்டை உண்ட சொக்கருக்கும் அந்த மயக்கம் ஏற்பட்டது. அதனால் மன்ன சுமப்பதை மறந்து விட்டு ஆற்றங்கரையில் படுத்து உறங்கலானார்.
 
திடீரென அங்கே மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் ஒரு வேலையால் தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அவனை எழுப்பி வேலை பார்க்க சொல்லுமாறு ஆட்களை பணித்தார். உடனே அவர்கள் அவனை எழுப்பி வேலை பார்க்குமாறு கூறினார். ஆனால் சாமானியன் வடிவில் இருந்த ஈசனோ தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். கோபம் கொண்ட மன்னன் அவனை பிரம்பால் அடிக்க செய்தார். ஆட்களும் உடனே அவனை பிரம்பால் அடித்தனர்.
 
ஆனால் அவன் முதுகில் விழுந்த அடியை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் உணர்ந்தான். பின்னரே அங்கிருந்தது ஆசாமி அல்ல அந்த சொக்கனாதரே என்று உணரப்பெற்றான் . 
 
இந்த திருவிளையாடல் அரங்கேறியது ஆவணி மாத ஆரம்பத்தில். தன்னை தஞ்சம் என்று அடைந்தவரை தாமதிக்காமல் வந்தருளவும் , இவ்வுலக உயிர்கள் அனைத்தும் தன்னுள் அடக்கம் என்பதையும் விளக்கவே நடத்தப்பட்டது இத்திருவிளையாடல்.
 
இத்திருவிளையாடலை விளக்கவே மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று பிட்டுக்கு மண் சுமந்த விழா கொண்டாடப்படுகிறது. மதுரையில் அன்றைய தினம் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து சுந்தரேசர் கோயிலுக்கு எழுந்தருளுவர். வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் பிட்டு பிரசாதமாக வழங்கப்படும்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 6:21 PM | Best Blogger Tips

 காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு - BBC  News தமிழ்

 உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே 

ஆஸ்பத்திரிகளில் கூட்டம்

ஆலயங்களில் கூட்டம்

ஜோதிடர்களிடமும் கூட்டம்

எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.

ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். 
காசி – ஒப்பில்லாப் புனித நகரம் ...
அந்த இடம், தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். 

துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. 

அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 
மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.

இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை 
என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 
காசி – கயா – உண்மையைத் தேடி…
உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். 

ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை.

காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 

1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில்களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. 

எந்நேரமும் வெளிச்சம் !
( காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம் )

இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. 
உலகில் வாழும் மிகப் பழமையான நகரம் ...


இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! 
அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.
காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! 
வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். 
காசிக்குச் சென்றால் மோட்சம் கிடைக்குமா? Will you get Moksha if you go to  Kashi?
அஸி, கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்!
அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். 

இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. 

மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.

ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! 

இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி!

அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். 
தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

 இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.

இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று 
‘ கங்கா லாப் பவன் ’! 
இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது.

அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். 

கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள்.
இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். 

முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார்.

ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது.

 அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே ...
இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. 

அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது , உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, 

ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது.

இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. 

அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். 

எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு!

காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக 
‘அணையாத தீபம்’ 
எரிந்து கொண்டிருக்கிறது. 

அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள்.

தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. 

யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.

விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு.

தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.

அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.

கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு - மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் 
‘மணிகர்ணிகா கட்’ 
உள்ளது. 

இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். 

வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.

இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். 

அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது.

அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். 

அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.

அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள்.

 அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.
அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். 

மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.

இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த 
‘அரிச்சந்திர கட்’ 
கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. 

இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.

ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது.

 அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் 
‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ 
என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கிறது.

காசியில் எல்லாமுமே நம்பிக்கைதான்! 

நம்பிக்கையின்றி வேறு எதுவும் இல்லை 

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

பொங்கு சனி ஆலயம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:59 AM | Best Blogger Tips

 May be an image of temple


 
சனியை போல் கொடுப்பாரும் இல்லை,கெடுப்பாரும் இல்லை என ஒரு சொற்றொடர் உண்டு.நாம் வேண்டினால் நமக்கு செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு ஆல்யம் உண்டு தெரியுமா?
 திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் இருக்கும் ஶ்ரீஅக்னீஸ்வரர்கோவில் – பொங்கு  சனீஸ்வரர் கோவிலாகி பிரமலமடைய காரணம் ஜோதிடர்களா பக்தர்களா? (2 ...
அதுதான்“திருக்கொள்ளிக்காடுஅக்கினீஸ்வரர்”ஆலயம்.
”கொள்ளி”என்றால் நெருப்பு அந்த நெருப்பாகிய “அக்னி”வழிபட்ட தலம் இது.இந்த திருத்தலத்தில் மூலவர் அகினீஸ்வரராக இருந்தாலும் அந்த கோயில் வீற்றியிருக்கும் சனீஸ்வர பகவ்ான் மிகவும் தன்த்தை கொடுக்க கூடியவர்.
 Pongu Saneeswarar | மங்கலம் அருளும் பொங்கு சனீஸ்வரர்
பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் கையில் சூலம், வில், அம்பு என்று ஏதேனும் ஆயுதம் இருக்கும். ஆனால் இத்தலத்து சனி பகவானின் கைகளில் எந்த ஆயுதமும் கிடையாது. குபேரேன் வைத்திருப்பதுபோல் வலது மேல் கரத்தில் ஏர்கலப்பைத் தாங்கி அருள்பாலிக்கும் கடவுளாக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார்.
 திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில்!-highlights of thirukkollikadu  pongu saneeswaran temple - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
இங்கு சனி பகவான் இங்கு மகாலட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து சகல செல்வங்களையும் அளிக்கிறார்.
 
தம்மை நம்பி வழிபடுவோருக்கு தன பாக்கியத்தை அள்ளித் தருபவர் இவர். திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்ட நளனுக்கு சனி தோஷம் நீங்கியது. ஆனால் அவன் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திருக்கொள்ளிக்காடு சனி பகவானை வழிபட்ட பிறகே திரும்பப் பெற்றான் என்கிறது ஆலய வரலாறு.
 
*சனியினால் பாதிக்கப்பட்டவர்கள்,சனி இரண்டாவது சுற்று நடப்பவர்கள்,ஏழரை சனி,அஷ்டம சனி,அரிஷ்டாடம சனி,ஜீவன சனி பீடித்திருப்பவர்கள் இந்த ஆலயம் சென்று வழிபடலாம்.
 
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளிக்காடு போஸ்ட்-610 205 திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்.+91- 4369 - 237 454, +91- 4366 - 325 801.

🌷 🌷🌷 🌷 May be an image of 3 people, temple and text  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

 விஞ்ஞானயோகம் திவ்ய பிரபஞ்சதிரட்டு : எந்தெந்த திதியில் வெற்றி கிட்டும்Goddess | திதிகளின் தெய்வங்கள்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்*!
 
*1.பிரதமை் திதி:*
பிரதமை நல்ல நாளா...? - YouTube
 
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*
 
*2. துதியை திதி:*
திதி நித்யா தேவதைகள் –... - ஆதி பராசக்தி சங்கம கடல் | Facebook
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!
 
*3. திருதியை திதி:*
Bless you with joy tirutiyai thithi | ஆனந்தம் அருளும் திருதியை திதி
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!
 
*4. சதுர்த்தி திதி:*
சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்தது ஏன் தெரியுமா...?
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]
 
*5. பஞ்சமி திதி:*
பஞ்சமி திதி - வராஹி வழிபாடு! வராகி தேவியை வழிபட வேண்டிய நாள்!
 
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
 
*6.சஷ்டி திதி:*
ஆறுமுகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு !!
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!
 
*7. சப்தமி திதி:*
Saptami Tithi: பலன்களை அள்ளித் தரும் கமலா சப்தமி விரதம்!-here we will see  about the benefits of kamala saptami fast - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
 
*8.அஷ்டமி திதி:*
அஷ்டமி திதியை போற்றும் விரத வழிபாடுகள் | ashtami tithi viratham
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!
 
*9.நவமி திதி:*
today navami Tithi, Dos and don's | நவமி நாளில் தவிர்க்க முடியாத பணியை  தாராளமாக செய்யலாம்
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!
 
*10. தசமி திதி:*
தேய்பிறை தசமி திதி அம்பாள் வழிபாடு | Ambal vazhipadu
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !
 
*11.ஏகாதசி திதி:*
Varuthini ekadashi significance : வருத்தினி ஏகாதசி 2024 : ஆயிரம் ஆண்டுகள்  தவம் செய்த பலனை தரும் அற்புத ஏகாதசி
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!
 
*12. துவாதசி திதி:*
துவாதசியில் பெருமாளுக்கும் முன்னோர்களுக்கும் துளசி மாலை | dhuvadasi -  hindutamil.in
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]
 
*13.திரயோதசி திதி:*
திரயோதசி திதி பலன்கள், திரயோதசி திதியில் செய்ய வேண்டியவை
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!
 சதுர்த்தசி திதி பலன்கள், சதுர்த்தசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை
*14.சதுர்தசி திதி:*
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
 
தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!
வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
 
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
 
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , 
 
மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். 
 
மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
🌸 சர்வம் சிவார்பணம் 🙏 🙏 🌸

 

🌷 🌷🌷 🌷 May be an image of 4 people and temple  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹