*தொலைவு..!!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:18 | Best Blogger Tips

 


என்னங்க, உங்க அம்மாவோட எழுபதாவது பிறந்தநாளைக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுக்கலாம்கஎன்றாள் வசந்தின் மனைவி அகிலா. வசந்த் ஒரு நிறுவனத்தின் மேலாளர்.

வீட்டுக்கு மூத்தவன். தந்தையின் மறைவுக்கு பின் அவன் இரு இளைய சகோதரிகளுக்கும் உள்ளூரிலே திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டான்.

சகோதரிகளும் அவர்கள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருந்தனர். வசந்தும், அகிலாவும் வேலைக்குச் சென்றபின் அம்மா மட்டும் தனியே வீட்டில் டிவி பார்த்துகொண்டோ, கோவிலுக்கு சென்றோ பொழுதை போக்குவாள். அவ்வப்போது மகள்களும், பேரக் குழந்தைகளும் அவளை பார்க்க வந்து போவார்கள்.


வசந்துக்கும் அகிலா சொல்வது சரியெனப் பட்டது. அம்மாவுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தால் அவளது தனிமை குறையும். மகள்கள், பேரனுடன் பேசிக் கொள்வாள்.

அம்மாவின் பிறந்த நாள் அன்று, “அம்மா, இதோ உனக்கு ஏத்தமாதிரி ஒரு போன்என்று பரிசுப் பொட்டலத்தை நீட்டினான்.



அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அவளுக்கு போனை எப்படி இயக்குவது என்று ஒருவாரம் எல்லோருமாக சேர்ந்து சொல்லித் தந்தனர்.

அவளும் மகள்களுடன் உற்சாகமாக பேசிவந்தாள். அதைப் பார்த்து வசந்த் சந்தோஷப்பட்டான். மகள்களும், “அம்மா, வத்தல் குழம்புக்கு என்ன மசாலா போடுவீங்க?” என்று எல்லாவற்றிக்கும் போனில் கூப்பிடுவார்கள்.

ஒரு மாதம் கழிந்தது. அம்மா வாட்டமாக இருப்பதாக உணர்ந்தான் வசந்த். கேட்டதற்கு ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டாள்.

ஒரு காலை அம்மாவே வசந்திடம், “இனிமேல் எனக்கு இந்த போன் வேண்டாம்டாஎன்று கூறினாள்.

புரியாமல் விழித்த வசந்த்திடம், “நான் எல்லார்கிட்டயும் பேசணும்னுதான் போன் வாங்கி கொடுத்தே. ஆனா, போன் வந்தப்புறம், யாருமே என்னைப் பாக்க வீட்டுக்கு வரமாட்டேங்கிறாங்கடா. எல்லாத்தையும் போன்லயே பேசிடறாங்க. என் பேரன் கூட முன்ன வாரத்துக்கு ஒரு தடவை வருவான்.

இப்ப வர்றதில்லை. கேட்டா, அதான் போன்ல பேசறேனே பாட்டின்னு சொல்றான். இந்த போனால, என் சொந்தமெல்லாம் இன்னும் தூரமா போயிடுமோனு இருக்கு. இத நீயே வச்சுக்கோ. அவங்க எப்பவும் போல என்னை நேரா வந்து பாக்கட்டும்என்றாள்.

அம்மா சொல்வது வசந்துக்கும் சரியெனப்பட்டது. 


 நன்றி இணையம்

இந்த கோவிலைப் பற்றி யாருக்காவது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:15 | Best Blogger Tips

 



#பஞ்சவர்ன்ஸ்வாமி_கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ளது. தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.

கோவில் சுவர்களில் ஒரு சைக்கிள், ஒரு விண்வெளி வீரர் மற்றும் ஒரு செல்போன் செதுக்கப்பட்டுள்ளது. நவீன விஞ்ஞானம் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மெக்மில்லனால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறது.

#கோயில்_தகவல்:

பஞ்சவர்ணசாமி கோயில் (பொதுவாக பஞ்சவர்ணசாமி கோயில்) என்பது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஹிந்து ஆலயமாகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரத்தின் புறநகர்ப் பகுதியான உறையூரில் அமைந்துள்ளது.



சிவன் ஐந்து வெவ்வேறு வண்ணங்களை சித்தரிப்பார் என்று நம்பப்படுகிறது, இது பஞ்சவர்ணசாமி என்ற தெய்வத்தின் பெயரைக் கொடுக்கும். பஞ்சவர்ணசாமி 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் சைவ நியமனப் படைப்பான தேவரம், நயனார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் புனித கவிஞர்களால் எழுதப்பட்டு பாடல் பெட்ரா ஸ்தலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

So called westerners inventions are not at all inventions , its nothing but reproduction,

- பரமபூஜன்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ.முத்துராமலிங்க தேவர் , 1952 ல் நடந்த ஏரோநாட்டிகள் மாநாட்டில் சொன்னது .

நம்மிடம் இருந்த ஞானத்தை திருடிசென்று அவர்கள் கண்டுபிடித்தார்கள் .

நம்மிடம் இருந்ததை நாம் தக்கவைத்து கொள்ளவில்லை

 

 நன்றி இணையம்