பாரத தேசத்தின் பிதாமகனான அந்த நேதாஜி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

 Samriddhi Subhash Chandra Bose Poster Large Wall Paper Poster without Frame  Big Size Photo : Amazon.in: Home & Kitchen


நாட்டுக்காக அம்மனிதன் எப்டி பாடுபட்டான் என்றால் வங்கசிறையில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான் சென்று, அங்கிருந்து சோவியத் ரஷ்யா வழியாக ஜெர்மனியினை அடைந்தான்
Subhash Chandra Bose Birthday: PM Narendra Modi Tweet On Netaji Birth  Anniversary - नेताजी सुभाष चंद्र बोस जयंती पर पीएम नरेंद्र मोदी ने विडियो  ट्वीट कर दी श्रद्धांजलि
ஓயாத ஓட்டம், ஓயா பயணமென அவன் ஓடி ஓடி பனி,குளிர் வெயில் என எல்லாம் கடந்து ஓடி பல மாதம் விடாமல் ஓடி ஜெர்மனியினை அடைந்தான்
Liberals and 'white supremacists' suffer a massive heartburn as PM Modi  honours Netaji Subhas Chandra Bose
அங்கிருந்து ஒரு நீர்மூழ்கியில் ஜப்பானுக்கு சென்றான், அது அக்கால டீசல் நீர்மூழ்கி பெரும் புகை, மூச்சு முட்டல் மொத்தமே 6 பேர்தான் இருக்கமுடியும் எனும் அளவு சிக்கலான அக்கால நீர்மூழ்கி

அந்த டீசல் புகையில் ஜெர்மனில் இருந்து கிள்பி தென்பாப்ரிக்கா வந்து, பின் இலங்கைக்கு தெற்கே 800 கிமி தொலைவு சுற்றி மலாக்கா கடந்து ஜப்பானை அடையும் போது எட்டு மாதம் ஆயிற்று

எட்டுமாதம் சிறிய நீர்மூழ்கியில் டீசல் புகையில் சிக்கி அவன் பட்ட அவஸ்தை கொஞ்சமல்ல‌
PM Modi pays tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary
காந்தி ஆஹாகான் மாளிகையிலும், நேரு ஆனந்தபவனிலும் இருந்தது போல் சொகுசு சிறைவாழ்வு அல்ல அவனுடையது, காடு மலை பனி பாலைவனம் கடல் என எல்லாம் கடந்து ஓடி ஓடி உயிர்விட்ட உன்னத தியாகம் அவனுடையது

ஆம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பது ஒரு பெயர் அல்ல, ஒரு மனிதன் அல்ல அது நாட்டுக்காக எரிந்த வீர ஜோதி

இன்றும் என்றும் இந்தியரின் இதயத்தில் வாழும் தேச காவலன் அந்த மாவீரன்

ஆம், நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர்

அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும்,ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஜெர்மனை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று

அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான மரபெல்லாம் அவருக்கு ஒத்துவரவில்லை,

காந்தி வேறுமாதிரியானர். அவர் போராட்ட வடிவம் வேறு.

பிரிட்டிஷார் இப்படி சிந்தித்தான், “காந்தியால் நமக்கு பெரும் நெருக்கடி இல்லை, ஏதோ இவர் சொன்னால் மொத்த இந்திய மக்களும் கேட்கின்றார்கள், ஆனால் இவரை முடிந்தவரை சமாளித்துவிடலாம்,ஆனால் போஸ் அப்படி அல்ல, துடிப்பானவர், விட்டால் சட்டை காலரை பிடித்து உலுக்குவார், ம்ம்ம் தூக்கிபோடு உள்ளே”.எப்படியோ தப்பினார் போஸ்

ஆனால் உடனே படை திரட்டி, சயனைடை கழுத்தில் கட்டி, பின் வந்தவன் எல்லோர் மேலும் தற்கொலை குண்டுகட்டி ஏவி விடவில்லை. காந்தி மேலும், நேரு மேலும் அப்படியே மவுண்பாட்டன் மேலும் மனித குண்டுகளை அவர் ஏவவில்லை,
Subhas Chandra Bose: Material evidence suggests Netaji lived for many more  years than officially acknowledged
“இன‌ துரோகி” என பாருக்கும் பட்டம் கொடுக்கவும் இல்லை

அப்படி செய்திருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கும்,அது முட்டாள்களின் வேலை.காந்தி ஒருபக்கம் போராடட்டும், நாம் ஒரு பக்கம் போராடுவோம் என்பதுதான் அவர் வழி.

பிரிட்டன் பெரும் ராணுவம், இன்னொரு எதிரியுடன் சேர்ந்துதான் அவர்களை விரட்டவேண்டும் எனும் திட்டத்தோடு களமிறங்கினார், ஜெர்மனிடம் உதவி கோரினார். அக்கால ஜெர்மன் தலைவனை பொறுத்தவரை இந்தியர்கள் தலமைபதவிக்கு தகுதியற்றவர்கள்.

லண்டனை பிடித்தால் இந்தியா எனக்கு, இவர் யார் இடையில் ஆள்வதற்கு என்று கூட ஜெர்மானியர்கள் யோசித்தார்கள்

கூட்டணிக்காக அவர்கள் சுயநலத்தோடு போஸினை அரவணைத்தார்கள், வரலாறு அதையே சொல்கின்றது

ஜெர்மன் ஜப்பான் அவருக்கு ஆதரவளித்து, மலேய முற்றுகையின் போது, பயிற்சியும் அளித்து, கிட்டதட்ட வங்கத்தில் போஸ் படையோடு வந்துவிட்ட நிலையில்தான் அணுகுண்டு விழுந்து, ஜப்பான் ஓடிபோயிற்று,

போஸும் ராணுவத்தை கலைத்தார், அதோடு இந்திய சுதந்திர நாளும் நெருங்கிற்று, போஸ் தலைமறைவாக இருந்தார்.சுதந்திர இந்தியா தனக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இந்திய சுதந்திரபேச்சுவார்தை படி போஸ் என்பவர் நாசிக்களோடு , ஜப்பானியரோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்த போர் குற்றவாளி, அவரை ஒப்படைக்கவேண்டியது இந்திய கடமை என்ற அறிக்கைகள் வந்த கொஞ்சநாளில் போஸ் தைவானில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வந்ததன,

அதிலிருந்து தொடங்கின குழப்பம். உண்மையில் தைவான் பக்கம் அவர் தற்கொலை செய்தார் என ஒரு செய்தி உண்டு

அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுகுள்ளான ஜப்பானும் போஸை ஆதரிக்க தயக்கம் காட்டியது, போஸின் முடிவுக்கு அதுதான் பெரும் காரணம் என்பதும் ஒரு கோணம்

கிழக்காசியாவின் சில இடங்களில் அவர் பயிற்சிகொடுத்த இடங்கள் உண்டு, பார்த்திருக்கின்றோம், அன்று இளைஞர்களாக அவரோடு பழகிய இன்றைய முதியவர்கள் உண்டு அவர்களிடம் அவரை பற்றி கேட்டிருக்கின்றோம்

.அவர்களிடம் கதைகேட்டால் நேதாஜியின் நாட்டுபற்று அற்புதமாக விளங்கும், இப்படிபட்ட தேசஅபிமானியா நேதாஜி என மனம் உருகும்

நிச்சயம் இந்தியாவினை ஆளும் நிலை வந்திருந்தால் தேசபிரிவினை நடந்திருகாது, இந்த காஷ்மீர் போன்ற சர்ச்சைகள் வந்திருக்காது. ஒரே இந்தியாவினை தவிர ஏதும் விரும்பாத உன்னத தலைவன் அவர், சிந்து வங்கம் இப்படி உடைய விட்டிருக்கமட்டார் என்பது மட்டும் உண்மை

இந்தியாவினை ஆளும் தகுதிபடைத்த நபர்களில் போஸ் மகா முக்கியமானவர், முதன்மையானவர்

லீ குவான் யூ போலவோ, மாவோ போலவோ, ரஷ்ய ஸ்டாலின் போலவோ பெரும் உலக அடையாளமாய் மாறி இருந்திருக்க வேண்டியவர் துரோகத்தாலும் விதியாலும் சரிந்தது இந்த ஆகஸ்டு 18

நேதாஜி விபத்தில் இறந்தார் என்ற சர்ச்சை கிளம்பிய நாள் இது

நேதாஜியின் டெல்லி சலோ எனும் ஸ்லோகமும், இந்த நாட்டின் மீது அவருக்கு இருந்த பெரும் தேசபற்றும் எந்நாளும் வணங்கதக்கவை

இந்த ஆகஸ்டு 18 நேதாஜியின் நினைவு நாள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு பலம் பொருந்திய தலமை கிடைத்துவிட கூடாது என அன்றே உலக கருப்பு சக்திகள் திட்டமிட்ட செயல்படுத்திய நாள்.

இந்தியாவுக்கு வலுமிக்க தலைவன் கிடைக்கவே கூடாது என்பது அந்நிய சதி அதற்கு முதல் பலி நேதாஜி

பின் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என தேசம் சிலரை பலிகொடுத்தது

ஆனாலும் நேதாஜி பின்னாளில் மோடிஜியாக வந்தார் நிலைத்தார், இன்று மோடி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் மோடிக்கு வழிகாட்டியர் நேதாஜி

இந்த பாரத தேசத்தின் பிதாமகனான அந்த நேதாஜி

நேதாஜிக்கு அந்தமானில் சிலை வைத்ததும், டெல்லி இந்தியாகேட்டில் சிலை வைத்ததும் அந்த மோடிஜி, நேதாஜி வழியில் தேசத்தை காக்கும் அந்த் மாவீரன் மோடிஜி.

பிரம்மரிஷியார்.
🇦🇸🇦🇸🇦🇸👍👍👍🤩🤩👍🤩👍🤩👍🤩

🌷 🌷🌷 🌷  May be an image of 2 people and text 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹



உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறது? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:17 PM | Best Blogger Tips

 Siruneer Prachanai,சிறுநீர் இப்படி நுரையாக வருகிறதா? காரணம் என்ன? உடம்பில்  என்ன பிரச்சினை இருக்கும்? - here are 5 reasons why your urine is so foamy  like beer - Samayam Tamil

🟢🩺🟢🩺🟢🩺🟢🩺
உங்களுக்கு நுரையுடன் கூடிய யூரின் வெளியேறுகிறது? இதற்கான காரணங்களும் தீர்வுகளும்...

உடலில் இருக்கின்ற தேவையற்ற அழுக்கு,கழிவுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறுகிறது.வெள்ளை,வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரகத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஆனால் அடர் மஞ்சள் நிறத்தில் நுரையுடன் சிறுநீர் வெளியேறினால் அவை சாதாரண விஷயம் அல்ல.இவை சிறுநீரகத்தில் தொற்று இருப்பதற்கான அறிகுறிகளாகும்.அது மட்டுமின்றி உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் சிறுநீர் நுரைத்து போல் வெளியேறும்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது.காய்ச்சல்,பதட்டம்,மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நுரைத்த சிறுநீர் வெளியேறும்.சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் சிறுநீரகத்தில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிப்பதினால் சிறுநீரில் நுரை பொங்குகிறது.

அதிகளவு நீர் அருந்தி அடிக்கடி சிறுநீர் கழித்தல் சிறுநீர் பையில் நோய் தொற்று ஏற்படாது.அது மட்டுமின்றி உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.இதனால் சிறுநீரில் நுரை ஏற்படாது.சில ஆண்களுக்கு விந்து வெளியேறாமல் மீண்டும் சிறுநீர்ப்பைக்குள் சென்று விடும்.இதன் காரணமாக சிறுநீர் நுரையுடன் வெளியேறும்.

நீரிழவு நோய்,சிறுநீர் தொற்று,இரத்த சர்க்கரை உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுநீரில் நுரைத்து வெளியேறும்.

நுரைத்து வெளியேறும் சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு:

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விட வேண்டும்.

உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.


வாழ்க வளமுடன்

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and lake  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹



சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

 Foods For Kidney Health,சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட  வேண்டிய 17 உணவுகள் என்னென்ன?... - foods that are good for your kidneys in  tamil - Samayam Tamil

🟢🩺🟢🩺🟢🩺🟢🩺
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம்..

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது மோசமடையக்கூடுமோ என்ற அச்சம் எப்போதும் இருக்கும்.இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் நன்கு நிர்வகிக்க முடியும். உங்கள் சிறுநீரகத்தை கவனித்து சரியான உணவை உட்கொள்வது இதய பிரச்சனைகள், எலும்பு நோய் மற்றும் இரத்த சோகை போன்ற பிற உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். சிறுநீரக நோயைக் குணப்படுத்தும் போது, ​​தினசரி உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் உணவு முறையில் மாற்றங்களை செய்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
Foods For Kidney,கிட்னி ஆரோக்கியமா இருக்கணும்னா உணவில் இந்த காய், பழங்களை  அதிகமா சேர்த்துக்கோங்க... - 7 fruit and veggies to eat for a healthy kidney  in tamil - Samayam Tamil
சிறுநீரக நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் (Reasons and Symptoms of Kidney Diseases)

மோசமான வாழ்க்கை முறை, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக (Kidney) நோய் ஏற்படலாம். வாந்தி, பசியின்மை, சோர்வு, மன தீவிரம் குறைதல் மற்றும் பல அறிகுறிகள் இதற்கு உள்ளன. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினம், ஆனால் இந்த நோய் தீவிரமடைந்தால் உடலில் திரவங்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது.

தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிக்க, மக்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. ஆகையால் இது போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
சிறுநீரகத்திற்கான ஆரோக்கியமான உணவுகள் (Healthy Foods For Kidney)

மஞ்சள்
மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்...!!
மஞ்சள் (Turmeric) அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது தைராய்டு மற்றும் சிறுநீரகங்கள் இரண்டிற்கும் உதவும். இதில் குர்குமின் உள்ளது. இது ஆண்டி-ஆக்சிடெண்ட் விளைவுகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரக நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தயிர்
Yogurt that gives immunity | நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் தயிர்
இந்திய உணவுகளில் தயிர் (Curd) அயோடின் ஒரு நல்ல மூலமாகும். இது தைராய்டுக்கு அவசியம். சிறுநீரகத்திற்கு உகந்த உணவை உட்கொள்ள, குறைந்த கொழுப்புள்ள தயிரை தேர்வு செய்யவும். ஏனெனில் அதில் பாஸ்பரஸ் குறைவாக இருக்கும்.

பச்சை காய்கறிகள்
Eating vegetables does not prevent heart disease risk says an UK Research | பச்சை  காய்கறிகள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன! | Health News  in Tamil
பச்சை இலை காய்கறிகள் (Green Vegetables) மற்றும் கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு முழுமையான உணவாகும். அவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பயத்தம் பருப்பு
Health News| Amazing Health Benefits of Moong Dal | பாசிப்பருப்பு ஒரு  பொக்கிஷம்: பல உடல் பிரச்சனைகளின் ஒரே தீர்வு, விவரம் இதோ | Health News in  Tamil
புரதத்தின் வளமான ஆதாரமான பயத்தம் பருப்பில் (Moong Dal) பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

தினை
தினை பயன்கள் | Thinai benefits in Tamil | Thinai uses in Tamil
இந்த பாரம்பரிய தானியங்களில் மற்ற தானியங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. தினையை (Millets) ரொட்டி வடிவில் உணவில் சேர்க்கலாம் அல்லது இன்னும் பல வழிகளிலும் உட்கொள்ளலாம்.


வாழ்க வளமுடன் 

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and text  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - 
 
என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?
 
நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?
 காண்டீபதாரி அர்ஜுனன் - #கிருஷ்ணர்_கர்ணன் மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக்  கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் ...
பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?
 
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.
 
திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்
 
குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். 
 
இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்
 
அதற்கு கிருஷ்ணன் பதிலாக
 
"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
 
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. 
 
நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.
 நிராயுதபாணியை_கொன்றானா_அர்ஜூனன்_???... - காண்டீபதாரி அர்ஜுனன் | Facebook
நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் 
 
ஆனால் . 
 
நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன
 
நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்
 
நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!
 
நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.
 
ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!
 
துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், 
 
உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? 
 
கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்
 
கர்ணா ஒன்றை நினைவில் கொள் 
 
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.
 
வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை
 
ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.
 
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.
 
எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.
 
அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. 
 
இங்கு எல்லாம் சரியாக அமைந்த வாழ்க்கை யாருக்கும் இல்லை....
 
நல்லதே நடக்கும்.