கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து ஐந்தாவது முறையாக யோகி ஆதித்யநாத் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக வேண்டும் என்பதற்கான ஆதரவு சென்ற ஆண்டு முதலே பரவலாகக் காணப்பட்டது.

பட மூலாதாரம், facebook adityanath
இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோரக்நாத் ஆலயத்தால் நடத்தப்பட்டுவரும் கல்லூரியின் சில மாணவர்கள், துணி வாங்க கடைக்கு வந்தபோது, கடைக்காரருடன் சச்சரவு ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. கடைக்காரர் கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டினார்.
சம்பவம்
நிகழ்ந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, ஒரு சன்னியாசியின் தலைமையில்,
கடைக்காரருக்கு எதிராக தீவிரமான போராட்டம் வெடித்ததாக அந்த பகுதியின்
காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அந்த
சன்னியாசி வேறு யாருமில்லை, யோகி ஆதித்யநாத் தான். இந்த சம்பவத்திற்கு
சிறிது காலத்திற்கு முன்பு, அதாவது, 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி
தான் "நாத் சம்பிரதாயத்தின்" தலைமை மடமான கோரக்பூர் ஆலயத்தின் தலைமையை
ஏற்றுக் கொண்டு, தனது குருவான அவைத்யநாத்திடம் தீக்க்ஷை பெற்றார்.பட மூலாதாரம், WWW.YOGIADITYANATH.IN
கோபக் கனல் வீசும் இளைஞராக, கோரக்பூரின் அரசியலில் யோகி ஆதித்யநாத் அதிரடியாக நுழைந்தார்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷