மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மனைவியை நேசித்துப்பார்❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 கானல் நீர் (சிறுகதை) - ✍ ருக்மணி வெங்கட்ராமன் - sahanamag.com

எழுபத்தைந்து வயதில் ஆதரவு
இன்றி நிக்குது மனசு...
 
நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
 Pin by Harshna Sharma on Owns in 2025 | Village scene drawing ...
என் கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
 ab7dd6090a77475441eb4e51b15b41bf.jpg
அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..
 Anant Patil (patilanant88) – Profile | Pinterest
ஒரு நாளாவது நான் சமையல் செய்து
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..
 
ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..
 உங்கள் குடும்பத்தில் வீசுவது ...
ஒரு நாளாவது TV யையும்,
Mobil லையும் அணைத்துவிட்டு,
 
அவளை கொஞ்சி இருக்கலாம்..
 
ஒரு நாளாவது வேலை தளத்தின்
கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
 
ஒரு நாளாவது- என் விடுமுறை நாட்களில் - அவளை சினிமாவுக்கு அழைத்து சென்று இருக்கலாம்..
 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSwL3c4hOZzGgT_btnNB7PCbMQfdWH0W6Rrgg&s
ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
 
அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து
இருக்கலாம்.
 
ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து 
 
இருக்கலாம்....
 
ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
 கணவனும், மனைவியும் சந்தோஷமாக ...
நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
 
நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..
 
அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
 Husband And Wife Silhouette Images – Browse 65,026 Stock Photos, Vectors,  and Video | Adobe Stock
அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை கவனித்து இருக்கலாம்..
 
அவள் நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்...
 
என் தாயே! என் தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
 
நீ என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...
 32,000+ Romantic Couple Silhouette Stock Photos, Pictures & Royalty-Free  Images - iStock | Elegant couple
என்னை தூக்கி விடவும்
மூத்தவனுக்கு நேரம் இல்லை...
 South indian family painting...........
தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும்
சினம் வருது...
 
என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும் ...
 
நான் தவறுகள் இழைத்ததற்கு
என்னை நீ மன்னித்து விடு...
 
ஒரு முழப் பூவாவது ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன் நான்...
 
மூச்சு இழந்த - உன்
புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு
உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
 
மனைவியே! 
 
என்னை மன்னித்து விடு..
 
என்னுடைய இடத்தில் இருந்து உன்னை பார்க்கையில் கோபங்கள் எனக்குள் அதிகம்.. 
 Couple Lovers Silhouette Sunset Stock Footage Video (100% Royalty-free)  23476960 | Shutterstock
ஆனால் உன்னுடைய இடத்தில் நான் சேரும் போது தான் எவ்வளவு வலியில் எனக்கு புன்னகை செய்தாய்.. 
 
மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு. நான் உன்னை கொண்டாட வேண்டும்..
 
எழுபத்தைந்து வயதில்.....
 
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும்
நீங்கள் நேசியுங்கள்!!!
 
வாழ்க்கை வசந்தமாகும்

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 
 

 
 

🛑"#அம்மாவின்_ஐந்து_அட்வைஸ்"🛑🥰💚🥰

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and text that says "புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் ஐந்து அறிவுரை.!"

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
 
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...
உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.
உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க. 
 
 
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். 
 
அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
 
♥2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
 
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
 
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை.
ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.
நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.
 
♥3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
 
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.
அவளை மதிக்கவேண்டும். 
 
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.
அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!
 
♥4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
 
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...
அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. 
 
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..
அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!
 
♥5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
 
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..
 
சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
 
♥ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!
 
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!
 
உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்.….🥰

🙏

Thanks from Web

நாட்டு மருந்து சித்த மருத்துவம்

*மனைவியின் சாமர்த்தியம்..!!* அறிவுரைகளும்*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

 



*மனைவியின் சாமர்த்தியம்..!!*

*மனைவியின் அறிவுரைகளும்*

*ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன*

*அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான்*

*ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்*

*அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான். அவரும், இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்என்று ஆசி கூறினார்*

*அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன*

*எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது*

*இரண்டு மாடுகள் நாலாகி, நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள்*

*சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது*

*திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை. ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார்*


*தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்*

*அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை.! மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம்*

*இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார்*

*அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான்*

*அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள். அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்*

*ஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம். காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே.! இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும்.! சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்*

*அவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான்.ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான். கொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான்*

*என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே.! என்று புலம்பினான்*

*அவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள், இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க*

*அவனுக்கு மேலும் குழப்பம் வந்தது மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய.! இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே என்றான்*

*மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். சரி போ. நடக்கறது நடக்கட்டும் என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்*

*நன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது*

*மனது கணக்க, கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள்*

*குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.! அவளாகவே சொன்னாள்*

*கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள். போய் பார்த்தான்.*

*அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள்.கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான்.*

*மனைவி சொன்னாள், எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம்.!*

*அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா...!*

*அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது.*

*அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.*

*சில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.*

*வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும்.சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டு போவதில்லை

இப்படி ஒரு அறிவாற்றல் உள்ள பெண் எல்லோருக்கும் கிடைப்பதில்லை 😊மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🌹🌹

 

 நன்றி இணையம்

எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம் ...........?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips
Image result for எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம்


பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில்
ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு
சம்பவம் நடந்த்து.....
தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்
அனைவரும் தப்பித்தனர்....
ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...
ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....
காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!
(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும் என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....
ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்
பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)
எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....
அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....
கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......
அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....
அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது
விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது
உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...
உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....
பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...
அவர் மறுத்துவிட்டார்...
எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...
அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....
ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....
அதற்க்கு அவர்...சொன்னார்....
இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....
அவள் சொல்வாள்....
"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...
அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்
அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
Image result for எவ்வளவு முயன்றாலும் மனைவியிடம்
ஹாஹாஹாஹா......

 நன்றி இணையம்