🌐🔥கல்வியா , செல்வமா....

மணக்கால் அய்யம்பேட்டை | 3:16 PM | Best Blogger Tips

 கல்வியா... செல்வமா... வீரமா...?- விவாதத்தை கிளப்பிய எழுத்தாளர்கள்!

🍇💫🍇💫🍇💫🍇💫

🟢👑காலை நேர 
          சிந்தனை
            🍇💫🍇💫🍇💫🍇💫

🌐🔥கல்வியா , 
     செல்வமா....

🍇💫🍇💫🍇💫🍇💫 

🟤🌸முன்பெல்லாம் ஊரில் படித்தவர்கள் குறைவு.படித்தவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

🟤🌸பெரிய மனிதன் என்று அனைவராலும் போற்றப்பட்ட காலம். இன்று பணம் இருப்பவனே பெரிய மனிதன்.

🟤🌸தெருவுக்கு நாலு இஞ்சினீயர் இருக்கிறார்கள் இன்று. எல்லாரும் படிச்சு முன்னேறினா பெருமை தானே ........

🟤🌸எல்லோரும் படித்திருக்கிறார்கள் உண்மை தான்.ஆனா முன்னேறி இருக்கிறார்களா.....

🟤🌸ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயில் கட்டப் பட்டது. இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

🟤🌸1,30,000 டன் எடை கொண்ட கற்களால் கட்டப் பட்டது. பாறைகளே இல்லாத தஞ்சை மண்ணில்.

🟤🌸வெறும் ஏழு வருடங்களில் கட்டப் பட்டது. எவ்வளவு சிறந்த தொழில் நுட்பம்.எப்பேற்பட்ட கணித அறிவு.

🟤🌸இன்றைய இன்ஜினியர்களால் இதே போல் ஒன்று கட்ட முடியுமா?. ஒரு பாலம் கட்டவேண்டும் என்றாலே ஐந்து வருடம் ஆகும்.அதுவும் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

🟤🌸உண்மையில் அறிவு வளர்ந்திருக்கிறதா .சொல்லுங்கள்.

🟤🌸ஒரு செல் போனில் பத்து வருடங்களில் எத்தனை மாற்றங்கள்.அப்படியானால்  ஆயிரம் வருடங்களில் நமது அறிவு எத்தனை மேம்பட்டிருக்க வேண்டும்.

🟤🌸என்ன ஆச்சு!. எங்கே தவறு? ஏன் ? என்றாவது நாம் இதை பற்றி யோசித்தி ருப்போமா! .இல்லையே..........

🟤🌸நமது பண்டைய நாட்களில் அறிவு என்பது கல்வி,வேள்வி என்று இரு விதங்களில் அந்தணர் எனும் அறவோர் வசம் இருந்தது.

🟤🌸அவர்களுக்கு பொருள் மீது பற்று இல்லை.இன்பம் மீது ஆசையில்லை. அவர்கள் அறத்தின் (தர்மத்தின்)வழியில் மட்டுமே வாழ்ந்து வந்தார்கள்.

🟤🌸அவர்கள் தங்களிடம் இருந்த கல்வி,வேள்வி ஞானத்தை போற்றி பாதுகாத் தார்கள். தகுதியானவர்களுக்கு அதை கற்று தந்தார்கள்.

🟤🌸அந்த அறிவை அழியாது பாது காத்தார்கள்.அதுவே அவர்களின் தர்மமாக இருந்தது.

🟤🌸அவர்களில் பலர் அன்றாடம் காச்சிகள் . ஆள்வோரும் அரசும் அவர்களை பேணி வந்தார்கள். அவர்களுக்கு தகுந்த மரியாதையை அளித்து அவர்களை போற்றி வந்தார்கள்."

🟤🌸அன்று அனைத்து அறிவும் செவி வழி மட்டுமே.ஆசிரியர்கள் வாய் மொழி யாய் கூறி அதை சீடர்கள் செவி வழி கேட்டு அறிவை ஆய்ந்து வளர்த்து வந்தார்கள்.

🟤🌸அவையே வேதங்கள் என்று சொல்லப் பட்டன.பல குருகுலங்களில் பல விதமான அறிவு கற்றுத் தரப் பட்டன.

🟤🌸பின் வியாசர் அவைகளை தொகுத்து  அவற்றை நான்கு விதமாய் பிரித்து ஒழுங்கு படுத்தினர்.

🟤🌸பின் எழுத்தும் ஏடும் வந்தபின் ஏட்டில் எழுதி வைத்து ஆர்வமுள்ளவர்கள் எங்கிருந்தாலும் கற்றுக் கொள்ள முடிந்தது.

🟤🌸எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள இயலும் என்கிற போது தானே ஆர்வம் குறையும். அறிவின் தரமும் குறையும். இதுவே நியதி.

🟤🌸suply யில் தடை இல்லையேல் demond அதுவே குறையும்.

🟤🌸(முன்பெல்லாம் ஒரு நூறு போன் நம்பராவது எனக்கு ஞாபகம் இருக்கும்.பல ஊர்களுக்கு S.T.D code கூட தெரியும்.

🟤🌸இன்று செல் போனில் அத்தனையும் நினைவில் இருக்கிறது.ஆனால் எனது மூளையில் மற்றொரு சிம் நம்பர் கூட நினைவில் இல்லை. இது தான் யதார்த்தம்.)
கல்வியா செல்வமா வீரமா - Kalviya Selvama Veerama | சரஸ்வதி சபதம் | T.MS |  Uruvatti Naadu | 4K
🟤🌸அனைவர்க்கும் அனைத்தையும் அறியும் வாய்ப்பு வந்த பின் அந்தணர்க்கு பிழைப்புக்கு வழியில்லாமல் ஆயிற்று.

🟤🌸அவர்களும் நாட்டுக்குள் வந்தார்கள். வீட்டில் வாழ்ந்தார்கள்.அரசனுக்கு ஆலோசனை கூறும் ராஜ குரு ஆனார்கள்.அமைச்சர்களாக மாறினார்கள். ஆலயத்தை நிர்வகித்தார்கள்."

🟤🌸மன்னர்கள் மாறியதும் இவர்களும் சாதாரண clerk ஆனார்கள். சுதந்திரம் வந்தது. இவர்கள் அதிகாரிகள் ஆனார்கள்.

🟤🌸காலம் மாறியது இவர்கள் அறிவின் மூலம் கிடைத்த கல்வியில் அயல்நாடு சென்றார்கள்.

🟤🌸இன்று அந்தணன் என்னும் அறவோன் அறவே இல்லை.

🟤🌸பக்கத்து வீட்டு அய்யர் பையன் B.E படிச்சு அமெரிக்கா போயிட்டான். நீயும் படிடா என்று எல்லா வீட்டிலும் பற்றிக் கொண்டது.

🟤🌸அம்மா என்னால முடியல என்று பையன் சொன்னால் ,பத்து லட்சம் கொடு த்து  நல்ல காலேஜ் ஜில் பையனை சேர்க்க வேண்டியதாகி விட்டது.
Daycare, Preschool, or Kindergarten? Understanding Early Childhood Education
🟤🌸அப்புறமும் நல்ல மார்க் வாங்க டியூஷன் வேற. இதை பார்த்ததும் கள்ளப்பணம் அதிகம் கொண்ட அரசியல் வாதிகளும் கள்ள சாராய வியாபாரிகளும் கல்லூரி தொடங்கி விட்டார்கள்.

🟤🌸எங்ககிட்ட ஐந்து லட்சம் கொடுத்தா போதும் .வேலைக்கு நான் கியாரண்டி என்று வலையை வீசினார்கள்.

🟤🌸நல்ல வாத்தியாரை காசு கொடுத்து தூக்கி வந்தார்கள். நாளுக்கு நாள் பிசினெஸ் ஸும் கூடிச்சு.விலைவாசியும் கூடிடிச்சி.

🟤🌸இன்னைக்கி குழந்தை பிறந்த உடனேயே அட்மிஷன் போடணும். அட்வான்ஸ் சும்  குடுக்கணும்.
The importance of early childhood education
🟤🌸இல்லன்னா நல்ல ஸ்கூலில் படிக்க முடியாது. இதுவா நல்ல கல்வி. கல்வியே வியாபாரம் ஆகி விட்டது.

🟤🌸கல்வி என்பது அறத்தை சார்ந்து இருந்த பொழுது அறிவு இருந்தது. என்று கல்வி பொருளை சார்ந்து சென்றதோ அன்றே அதன் தரமும் தாழ்ந்தது.

🟤🌸பொருள்,இன்பம்.அறம் ,வீடு என்று படிப்படியாக வளர வேண்டிய நாம் , இன்று பொருள் என்ற ஒன்றை மட்டும் துரத்தி சென்று ஆரம்ப  நிலைக்கு நம்மை தரம் தாழ்த்தி விட்டோம்.

🟤🌸முன்றாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு செல்வது வளர்ச்சியா ! இல்லை வீழ்ச்சியா !

🟤🌸சிந்தியுங்கள்.



🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

🟤🌸முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

🟤🌸நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

🟤🌸இந்த நாள் இனிய நாளாகட்டும்

🟤🌸வாழ்க 🙌 வளமுடன்🎋🌴

🟤🌸அன்பே🔥சிவம்🌴🎋

🌴🎋🌴🎋🌴🎋🌴

நன்றி காரியாண்டி கணேஷ்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

 

'அப்ப நீங்கள்ளாம் பரதேசிகளா?'

மணக்கால் அய்யம்பேட்டை | 3:08 PM | Best Blogger Tips

 

'உங்கள் கணவர் சுதேசியா?' அம்புஜத்தைக் கோர்ட்டில் நிறுத்திக் கேட்கிறார்கள். 

'அப்ப நீங்கள்ளாம் பரதேசிகளா?' என்கிறாள் அம்புஜம்.

அம்புஜம் ஏன் கோர்ட்டிற்குப் போனாள் ? 

அம்புஜத்தின் கணவரின் மீது வழக்கு. 

கணவர் அப்படி என்ன செய்தார் ? 

மெட்ராஸ் ஸ்டாண்டர்டு என்னும் பத்திரிக்கையில் அவர் ஒரு தலையங்கம் எழுதினார். 

ஏதாவது விரசமாக எழுதிவிட்டாரா என்ன ? இல்லை. அர்பத்நாட் என்னும் வெள்ளைக்கார வங்கி திவால் ஆனதால் பொதுமக்கள் பணம் இழந்தார்கள். அதைப் பற்றி தலையங்கம் எழுதினார் அம்புஜத்தின் கணவர். 

இந்த விஷயமாகக் கோர்ட்டில் அம்புஜம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டர். அப்போது நடந்த சம்பாஷணை நீங்கள் மேலே கண்டது. 

சரி. அம்புஜத்தின் கணவர் யார் ? ஒரு தலையங்கத்திற்காக வழக்கு போட்டார்களா என்றால், இல்லை. அவருக்கு நெருக்கடி கொடுத்து, எப்படியாவது உள்ளே தள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வெள்ளைக்கார அரசு செய்த காரியம் அது. 

தலையங்கம் தவிர அம்புஜத்தின் கணவர் வேறன்ன செய்திருந்தார் ? 

வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா முதலியோருடன் சேர்ந்து திருநெல்வேலியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடினார். கோரல் மில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, வேலை நிறுத்தப் போராட்டம் செய்தார். அதில் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் திருநெல்வேலிக் கலவரம் நடந்தது. 

நமது விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வு அது. 

ஆகவே, அது நம் தமிழகப் பாடநூல்களில் தென்படாது. வைக்கத்தில் துவங்கி, ராபின்சன் பூங்காவில் முடியும் வரலாறு நம்முடையது. 

பாரத அரசின் பாட நூல்களிலும் தென்பட வாய்ப்பிருந்ததில்லை. ஆனால், 2014ற்குப் பிறகு மத்திய அரசின் தளங்களில் இந்த வரலாறு வெளியாகத் துவங்கியது. 75ம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் பயனாக இது வெளிவந்துள்ளது என்று புரிந்துகொள்ளலாம்.

அம்புஜத்தின் கணவரைப் பற்றி அரவிந்த கோஷ் இவ்வாறு எழுதுகிறார் :

“Madras has taken up the heroes out of our hands....... Gallant Chidambaram, brave Padmanabha, intrepid Shiva defying the threats of exile and imprisonment; fighting for the masses, for the nation, for the preparation of Swaraj, these are now in the forefront, the men of the future, the bearers of the standard.”
 
எல்லாம் சரி. அம்புஜத்தின் கணவர் பெயர் என்ன ? 

பத்மநாப ஐயங்கார். சுதேசி பத்மநாப ஐயங்கார் என்று வரலாறு சொல்கிறது.

--ஆமருவி
07-07-2023

#வரலாறு #AzadiKaAmritMahotsav 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷

 

மணக்கால்அய்யம்பேட்டை அகத்தீஸ்வரர் திருக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 PM | Best Blogger Tips

 No photo description available.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மணக்கால்அய்யம்பேட்டை அகத்தீஸ்வரர் திருக்கோயில்

Manakkal ayyampettai Agatheeswarar temple.

No photo description available. 

கும்பகோணம்திருவாரூர் நெடுஞ்சாலையில் திருவாரூரில் இருந்தது ௧௧/11கிமி தூரத்தில் இவ்வூர் உள்ளது. வெட்டாற்றின் வடக்கு கரையில் மணக்கால்அய்யம்பேட்டை அமைந்துள்ளது.

இவ்வூர் குலோத்துங்க சோழ வளநாட்டு வேளூர் நாட்டு திருப்பெருவேளூர் எனவும் அதற்கு முன்னர் ராஜேந்திரன் காலத்தில் திருப்பெருவேளூர் சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது. 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தின் பின்னரே மணக்கால் சிறுவேளூர் அய்யம்பேட்டை என பெயர் வந்துள்ளது

மகாமக குளத்தினை கட்டமைத்த தஞ்சையைச் சார்ந்த கோவிந்த தீட்சிதர் (கிபி 1515 -1635 ) அந்தக் காலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இவரை மக்கள் அன்புடன் மரியாதையாகவும் அய்யன், தீட்சிதர் என்று அழைப்பார்கள்..இந்த அய்யன் பெயர் நிலை பெற்று இன்றும் அப்பகுதிகளில் அய்யன் தெரு, ஐயங்குளம் அய்யம்பேட்டை, மணக்கால் அய்யம்பேட்டை என்று பெயரிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்வூருக்கு கோவிந்த தீட்சதர் பெயர் நிலைபெற்றுள்ளது

No photo description available. 

இவ்வூரில் முற்காலத்தில் 18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள் இருந்தன. தற்போது இவ்வூரில் அபிமுக்தீஸ்வரர், அகத்தீஸ்வரர், சேஷபுரீஸ்வரர், கங்காதீஸ்வரர், வைகுண்டபெருமாள் கோயில், ஶ்ரீ முத்துமகா காளியம்மன் ஆலயம், கீழத்தெரு ஶ்ரீ வாலை முக்கண்ணியம்மன் ஆலயம், ஐயனார் கோயிலும் உள்ளன. அதுமட்டுமல்லாது எட்டு விநாயகர் ஆலயங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன

No photo description available. 

இதோ இப்போது நாம் காணும் திருக்கோயில் பிரதான சாலையின் தெற்கில் உள்ளது.

இறைவன் - அகத்தீஸ்வரர். இறைவி - சௌந்தரநாயகி.

மேற்கு நோக்கிய சிவன் கோயில் ராஜகோபுரம் இல்லை, மொட்டை கோபுரத்தின் மேல் பஞ்சமூர்த்தி சுதைகள் அணி செய்கின்றன. வலது பக்கம் ஒம்காரகணபதியும் இடதுபுறம் கல்யாணசுப்ரமணியர் சன்னதியும் உள்ளது. இறைவன் மேற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார், பெரிய லிங்கமாக உள்ளார், அவரது பாணம் மட்டும் ஆவுடையாரில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது. அவரின் எதிரில் ஒரு சிறிய நந்தியும் முகமண்டபத்தில் சுவர் ஓவியங்கள் சோழர் காலத்தவை என கூறக்கேட்க மனம் நெகிழ்கின்றது.

No photo description available. 

முக மண்டபத்தில் கிழக்கு நோக்கிய மகாலிங்கம் ஒன்றும், மேற்கு நோக்கிய நர்த்தன விநாயகரும் உள்ளார்கள். முகமண்டபத்தின் முன்னர் 14 கால்கள் கொண்ட மகாமண்டபம் உள்ளது, அதில் பெரிய அதிகார நந்தி இறைவனை பார்த்தவாறு உள்ளது. அருகில் பைரவர், சனைச்சரன் மற்றும் சந்திரன் உள்ளனர். மகாமண்டபத்தின் ஒரு புறம் தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதி உள்ளது

No photo description available. 

கருவறை கோட்டத்தில் துர்க்கை உள்ளார். அடுத்துள்ள பிரம்மன் மாடம் காலியாக உள்ளது, பின்புறம் லிங்கோத்பவர் உள்ளார், தென்முகன் உள்ளார்.

இத்தலம் முன்னர் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் நால்வேதம் கற்ற பண்டிதர்களுக்கு உரித்ததாக இருந்துள்ளது

No photo description available. 

இறைவனின் திருமணக்கோலம் காண்பதற்கு அகத்திய முனிவர் இங்கு தவம் செய்தார் என கூறப்படுகிறது. இறைவனை வேண்டி பெருவேளுரில் தவம் செய்த அம்பிகை, திருக்கரவீரத்தில் இறைவனை மணம் புரிகிறார் பின்னர் ராப்பட்டீஸ்வரத்தில் இரவு தங்கியதால் அங்கே அம்பிகைக்கு அந்தப்புர நாயகி என பெயர் இந்த திருமணதிற்கு ஊரடைத்து பந்தலிட்டதால் மணக்கால் என பெயர் வந்ததாக புராண கதை உள்ளது.

No photo description available. 

இத்தலம் வைப்புத்தலமாக ஆறாம் நூறாண்டில் பாடப்பட்டதால் இது 1500 ஆண்டுகள் பழமையான தலம் என கொள்ளலாம். 108 அகத்தீஸ்வரர் கோயில்களில் இதுவும் ஒன்று. கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. எனினும் சேதமாகிய கல்வெட்டுக்கள் என்பதால் வரலாற்றினை அறிய இயலவில்லை என்கின்றனர்

No photo description available. 

பலகாலம் சிதிலமடைந்து இருந்த இக்கோயிலை தியாகேஸ்வரி எனும் சத்துணவு அமைப்பாளரால் முன்னின்று திருப்பணி நடத்தி குடமுழுக்கு செய்யப்பட்டது

No photo description available. 

தை மாதத்தில் சில நாட்கள் அஸ்தமன சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் மீது வீழ்ந்து வணங்கும் காட்சி அற்புதமானது

No photo description available. 

கோயிலின் எதிரிலேயே குருக்கள் குடியிருக்கிறார், அதனால் தரிசனம் செய்ய நல்ல வாய்ப்பு.

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

 No photo description available.No photo description available.No photo description available.

  

Thanks & Copy from : Kadambur Vijay

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷