சுவை மிகு ராகி அதிரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:42 | Best Blogger Tips
இந்த வருட தீபாவளிக்கு:

தீபாவளி வந்து விட்டால் பலகாரம் என்ன செய்வது என்ற திணறலும் கூடவே வந்து நிற்கும். நம்முடைய அம்மாக்கள், பாட்டிகள் காலத்தில் எல்லாம் சில நாட்களுக்கு முன்பாகவே பலகாரங்களை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள். நாமெல்லாம் குட்டிப் பையன்களாக அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஆர்வத்தோடு பார்த்து ரசிப்போம். 

சுட்டு அடுக்கும்போது நைசாக இரண்டைத் தூக்கிக் கொண்டு ஓடவும் செய்வோம். ஆனால் இன்று அபார்ட்மென்ட் காலம். ஏதாவது வேண்டும் என்றால் பைசா கொடுத்து வாங்கி என்ஜாய் பண்ணப் பழகி விட்டோம். உட்கார்ந்து ஆற அமர பலகாரம் சுடுவதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை, இன்டரஸ்ட்டும் குறைந்து போய் விட்டது. இருந்தாலும், தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான். இந்த தீபாவளிக்கு படு சுவாரஸ்யமான அதிரசம் செய்து சாப்பிடுங்களேன்.

சுவை மிகு ராகி அதிரசம்:

அதிரசம் பொதுவாக அரிசி மாவில் தான் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யலாமே

தேவையானவை
கேழ்வரகு மாவு--- 1கப்
வெல்லம் ---1 12 கப்
நெய் ---2 ஸ்பூன்
ஏலப்பொடி சிறிது
எண்ணெய் பொரிப்பதற்கு



step--1வெல்லத்தை தூளாக்கி, தண்ணீரில் கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும். 
step --2 அதை பாகு போல் காய்ச்சவும். உருட்டினால் உருண்டு வர வேண்டும் .அது தான் பாகிற்கான பதம்.


step---3 அடுப்பை அணைத்து விட்டு .அதோடு, கேழ்வரகு மாவை போட்டு 
கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.
step--4 மாவு இளஞ்சூடாக இருக்கும் போது நெய் சேர்த்து நன்கு பிசைந்து ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
step --5 சுவையான, சத்தான கேழ்வரகு அதிரசம் சாப்பிட தயார்.
நன்றி: krishnan - natue - blogspot

அதிரசம் பொதுவாக அரிசி மாவில் தான் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யலாமே

தேவையானவை
கேழ்வரகு மாவு--- 1கப்
வெல்லம் ---1 12 கப்
நெய் ---2 ஸ்பூன்
ஏலப்பொடி சிறிது
எண்ணெய் பொரிப்பதற்கு



step--1வெல்லத்தை தூளாக்கி, தண்ணீரில் கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.
step --2 அதை பாகு போல் காய்ச்சவும். உருட்டினால் உருண்டு வர வேண்டும் .அது தான் பாகிற்கான பதம்.


step---3 அடுப்பை அணைத்து விட்டு .அதோடு, கேழ்வரகு மாவை போட்டு
கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.
step--4 மாவு இளஞ்சூடாக இருக்கும் போது நெய் சேர்த்து நன்கு பிசைந்து ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
step --5 சுவையான, சத்தான கேழ்வரகு அதிரசம் சாப்பிட தயார்..

நன்றி: krishnan - natue - blogspot

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:06 | Best Blogger Tips
108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.
Via FB Gnanayohi Yohi
 

சேமியா கேசரி செய்யும் முறை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:01 | Best Blogger Tips
Photo: சேமியா கேசரி செய்யும் முறை

தேவையான பொருட்கள்

சேமியா - கால் கிலோ
நெய், சீனி - தேவைக்கேற்ப
பாதாம், முந்திரி, திராட்சை - தலா 5
ஏலம், கிராம்பு - தலா 3
பட்டை - ஒன்று
பால், தண்ணீர் - அரை கப்
பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை மூடி
உப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை : 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் பாதாம், முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.

வறுப்பட்டதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பால், தண்ணீர், சிறிதளவு உப்பு, கேசரி பவுடர் அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு சேமியா வறுப்பட்டதும் அதில் ஊற்றிவிட வேண்டும்.

சேமியா நன்கு வெந்ததும் தேவையான அளவு சீனி சேர்த்து கிளற வேண்டும்.

சுருண்டு வரும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக பன்னீர் சேர்த்து இறக்க வேண்டும்.

சுவையான சேமியா கேசரி ரெடி.

தயாரிப்பு : ஹசீனா

நன்றி :
சமையல் செய்வது எப்படி

கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/Kadhambam
தேவையான பொருட்கள்

சேமியா - கால் கிலோ
நெய், சீனி - தேவைக்கேற்ப
பாதாம், முந்திரி, திராட்சை - தலா 5
ஏலம், கிராம்பு - தலா 3
பட்டை - ஒன்று
பால், தண்ணீர் - அரை கப்
பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை மூடி
உப்பு - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை :

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் பாதாம், முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.

வறுப்பட்டதும் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பால், தண்ணீர், சிறிதளவு உப்பு, கேசரி பவுடர் அனைத்தையும் கலந்து வைத்துக் கொண்டு சேமியா வறுப்பட்டதும் அதில் ஊற்றிவிட வேண்டும்.

சேமியா நன்கு வெந்ததும் தேவையான அளவு சீனி சேர்த்து கிளற வேண்டும்.

சுருண்டு வரும் போது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக பன்னீர் சேர்த்து இறக்க வேண்டும்.

சுவையான சேமியா கேசரி ரெடி.

தயாரிப்பு : ஹசீனா

நன்றி :

சமையல் செய்வது எப்படி &   கதம்பம்....

கழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:45 | Best Blogger Tips
கழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.


சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:44 | Best Blogger Tips
கோமாதாவை போற்றி வணங்குவது ஏன்?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ" என்றால் பசு, மாதா" என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.

பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது. துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

மேலும் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது. கோமாதா = கோ" என்றால் பசு, மாதா" என்றால் அன்னை. அன்னைக்கு நிகரான பயன்தருவதால் இந்துக்கள் கோமாதாவை போற்றி வணங்குகிறோம்.

பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி நிபுணர்கள் கூறியதாவது: உறக்கத்தை நிச்சயிப்பது மெலடோனின் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோனில் குறைபாடு ஏற்படும்போது உறக்கம் பாதிக்கப்படும். மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது பசும்பால். தூக்கம் வராமல் சிரமப்பட்டவர்களுக்கு பசும்பால் கொடுத்து சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது.அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கறக்கப்படும் பசும்பாலில் மெலடோனின் அதிகம் இருக்கும். இதை பதப்படுத்தி பாதுகாக்கவும் முடியும். சத்துக்கள் அழியாது. சுகாதாரமான சூழ்நிலை, ஆரோக்கியமான உணவு கிடைக்கும் மாடுகளின் பாலில் மெலடோனின் சத்து அதிகம் இருக்கும்.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism
 

இன்று கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாள்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:33 | Best Blogger Tips
இன்று கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்த நாள். இவர் வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில், ஆக., 25, 1906ல் பிறந்தார் வாரியார். இவரது பெற்றோரின், 11 குழந்தைகளில், இவர் நான்காமவர். பள்ளிக்கு செல்வதற்கு பதில், மூன்றாவது வயது முதல், தந்தையை குருவாக ஏற்று, அவரிடம் சகலமும் கற்று தேர்ந்தார்.

தன் 19வது வயதில், தாய்மாமன் மகளை மணந்தார். ஆனால், குழந்தை பாக்கியம் இல்லை. தந்தையார் சொற்பொழிவு ஆற்ற, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, வாரியாரையும் அழைத்துச் சென்று, புராண பிரசங்கத்தில் பங்கு பெற வைத்தார். காலப்போக்கில், வாரியார் நிகழ்ச்சிகளுக்கு, வயது வித்தியாசமின்றி மக்கள் திரண்டனர்.

ஆண்டு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பக்தி சொற்பொழிவு ஆற்றி, அதன் மூலம் நன்கொடை வசூலித்து, பல கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகங்கள் நடத்தினார். இவரது உதவியால் படித்த பல ஏழை மாணவர்கள், பெரும் பதவிகளிலும், பெரிய பொறுப்பிலும் உள்ளனர்.

ஒரு முறை வாரியாரை பத்திரிகைக்காக பேட்டி எடுக்க விரும்பி, மதுரை நவபத்கானா தெருவில் வாரியார் தங்கியிருந்த வீட்டிற்கு கேமரா, டேப்ரிகார்டருடன் காலையிலேயே, என் நண்பர் கோபுவையும் அழைத்துச் சென்றேன்.

வாரியாரின் நண்பர், சுந்தரமகாலிங்கம் என்பவரிடம், வந்த விஷயத்தை கூறினோம். அவர், "சுவாமிகள் பூஜை செய்ய அமர்ந்து விட்டார், ஒரு மணி நேரமாவது ஆகும். பூஜை முடிந்த பின், பேட்டி தருவார். அதுவரை, வேறு வேலை இருந்தால் முடித்துவிட்டு வாருங்கள் அல்லது பூஜையில் நீங்களும் கலந்து கொள்வதென்றாலும் ஆட்சேபணை இல்லை...' என்றார்.

கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, பூஜை அறைக்கு சென்றோம். அவரைப் பார்த்ததும், "நமஸ்காரம்' என்றேன். அவரும், "நல்லாயிரு தம்பி...' என வாழ்த்தினார்.

ஒரு அலமாரி போன்று, இரு கதவுகள் கொண்ட பெட்டி, அதற்குள் அழகான முருகன் விக்கிரகம் இருந்தது. அதை கீழே இறக்கி வைத்து, அதன் மேல் பக்தர்கள் கொடுத்த இளநீர், பால், விபூதியால் அபிஷேகம் செய்து, திருப்புகழ் பாடியவாறு, ஒரு மணிநேரத்திற்குப் பின், இறுதியாக கற்பூரம் காண்பித்து, எங்களுக்கு விபூதி வழங்கினார்.

எங்கு சென்றாலும், அந்த விக்கிரகம் உள்ள பெட்டியை, கூடவே எடுத்துச் சென்று, தங்குமிடத்தில் வைத்து, பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பூஜை முடிந்ததும் அவரிடம், "சரி சுவாமி பேட்டிக்கு செல்லலாமா?' என்றேன். அவர், "நீங்கள் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டார். நேரமின்மையால், சாப்பிடாமலே சென்று விட்டோம். இதை எப்படி சொல்வது என யோசிக்கையில், அவரே, "வாங்க என்னுடன் அமர்ந்து ஏதாவது சாப்பிடுங்கள், பிறகு பேட்டி...' என்றார். அவருடன் சாப்பிட அமர்ந்தோம்.

காலை சிற்றுண்டி, கோவில் பிரசாதம் போன்று, நம் டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத அயிட்டமாக இருந்தது. இருப்பினும், அதை காட்டிக் கொள்ளாமல், டிபனை முடித்தோம். உணவு விஷயத்தில், வாரியார் மிகவும் கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருந்தார். அவரது ஆரோக்கியத்திற்கு, இதுவும் ஒரு காரணம் எனலாம்.

"சரிப்பா... ஏதோ பேட்டின்னியே, கேளுப்பா...' என்றார். நான் டேப்ரிகார்டரை ஆன் செய்து, அவரிடம், சராசரி மனிதனுக்கு, ஆன்மிக விஷயத்தில் என்ன சந்தேகம் வருமோ, அதையே தான் கேட்டேன்.

"மனித குலத்தில், ஜாதி என்பது எப்படி வந்தது? மகாபாரதம், ராமாயணம் வெறும் கதையா உண்மையிலேயே நடந்ததா?' என்றெல்லாம் கேட்டேன். கடவுள் இல்லையென்று கிண்டல் செய்பவர்களை பற்றி குறிப்பிடும் போது, அவர், "இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, அந்த காலத்திலேயே இரணியன் இருந்தாரில்லே கேள்விப்படலையா?' என்று திருப்பிக் கேட்டார்.

பேட்டியின் போது, வாரியார், எல்லா கேள்விக்கும் சிரித்துக் கொண்டே பதில் கூறினார். மேடையில் சிம்ம கர்ஜனை போன்று, உரத்த குரலில் கதை சொல்லும் அவர், நேரில் பேசும் போது, மெதுவான குரலில் தான் பேசினார்.

அத்தனைக்கும் மேலாக, சில மதத் தலைவர்கள் உணவருந்தும் போது, யாரையும் அனுமதிப்பதில்லை; இவர், விதிவிலக்கு எனலாம். விருந்தினர்களை அருகே அமர வைத்து, வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் நடத்திய வாரியார், உண்மையிலேயே மதிக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை.

வாரியாரின் சொற்பொழிவில் கிடைத்த சில துணுக்கு செய்திகள்...
--------------------------------------------------------------------------------------

*வரவர நாட்டில் நல்லவர்கள் மிக குறைந்து வருகின்றனர். ஏன்... அன்றே பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள், 100 பேர். 100க்கு, ஐந்து பேர் தான் நல்லவர் இருந்திருக்கின்றனர்.

*யாராயிருந்தாலும், பதவியில் இருந்தால் தான், பிறந்த நாள் விழா, பாராட்டு எல்லாம். பதவி போய் விட்டால், அதோடு விழா எல்லாம் மறைந்து விடும். (இது இந்த கால அரசியல் தலைவருக்கும் பொருந்தும்.) தருமன் பதவியில் இல்லாத போது, யாரும் எந்த விழாவும் எடுக்க முன்வரவில்லை.

*முதன்முதலாக கூட்டணியை கண்டு பிடித்தவர் பெருமாள்தான். எப்படியென்றால், நரனுக்கு அறிவு அதிகம்; சிங்கத்திற்கு ஆற்றல் அதிகம். இவை இரண்டு சேர்ந்த, நரசிம்ம அவதாரம் எடுத்து தானே, இரணியனை கொன்றான்.

*வீட்டில் சாப்பிடுவது சாதம்; கோவிலில் கொடுத்து சாப்பிட்டால் அது பிரசாதம்.

*ராமர் கானகம் போனபோது, மகன் பிரிவை தாளாது மாண்டார், தந்தை தசரதர். ராமரை சுமந்து பெற்ற தாயார் கோசலை, மாளவில்லை. ஏன்? மகன்மேல் ஆசை வைத்தார் தசரதர்; அன்பு வைத்தாள் கோசலை. ஆசை, மனிதனை மாள வைக்கும்; அன்பு, வாழ வைக்கும். இது தான், இரண்டிற்கும் வித்தியாசம்.


Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:13 | Best Blogger Tips
அன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி

 
ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும்

இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை

TO READ MORE { Ombudsman }

http://www.rbi.org.in/scripts/AboutUsDisplay.aspx?pg=BankingOmbudsmen.htm



PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

Thanks & via ரிலாக்ஸ் ப்ளீஸ்