என்னோட வாழ்க்கையை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:11 | Best Blogger Tips


🌹🍁🌹🍁🌹🍁🌹

நான் கடவுளிடம் கேட்டேன்,

"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,🍁🌹



🌹🍁கடவுள் சொன்னார்,

உன் அறையை செக் பண்ணு, என்று🍁🌹



🌹🍁என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது🍁🌹.



🌹🍁🌹🍁🌹🍁🌹



🍄🍃மேற் கூரை சொன்னதாம்,

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று🍃🍄.



🍄🍃காத்தாடி சொன்னதாம்,

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று🍃🍄.



🍄🍃கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று🍃🍄.



🍄🍃காலண்டர் சொன்னதாம், என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்

என்று🍃🍄.



🍄🍃மணிபர்ஸ் சொன்னதாம் ,

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று🍃🍄.



🍄🍃கண்ணாடி சொன்னதாம்,

உன்னை மட்டும் பார் என்று🍃🍄.


🍄🍃விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று

என்று🍃🍄.



🍄🍃ஜன்னல் சொன்னதாம், பரந்த மனப்பான்மையாக இரு என்று🍃🍄.



🍄🍃தரை சொன்னதாம்,

எப்பவும் கீழே பணிவாக இரு என்று🍃🍄.


🍄🍃படிக்கட்டு சொன்னதாம்,

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை

என்று🍃🍄.


🌹🍁🌹🍁🌹🍁🌹

இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.



*அன்புடன் ரமேஷ் ராமலிங்கம்*

🌹🍁🌹🍁🌹🍁🌹


நன்றி இணையம்

_திருமணத்தில் மணமக்களுக்கு ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 7:39 | Best Blogger Tips


*பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_*

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

*_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.*.


நன்றி இணையம்