மனைவிக்காக பெற்றோர்களை ஒதுக்காதீர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:10 | Best Blogger Tips

 510+ Husband Wife And Mother In Law Stock Photos, Pictures ...



தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்...
42 Simple Pencil Sketches Of Couples In Love - Artistic Haven | Sketches of  love, Couple sketch, Pencil drawings of love

நேன்று மாலை, குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கலாம் என்று அவரிடம் ஒரு வெள்ளை நிற பூனை பொம்மை கொடுங்கய்யா என்றேன்.

அவர் 80 ரூபாய் என்றார், பணக்கார கடைகளில் பேரம் பேசாமல் ஏழைகளிடம் தானே நாம் பேரம் பேசுவோம், அதுதானே சராசரி மனிதர்களின் இயல்பு.
Parents Love#Sailu_Arts | Book art drawings, Drawings, Art
அதனால் நான் என்னங்கைய்யா ஒரு குழந்தை பொம்மை 80 ரூபாயா, 70 ரூபாய்க்கு கொடுங்க என்றேன், அவர் என் கண்களை உற்றுப்பார்த்து இதை குழந்தைகளுக்கா வாங்குறீங்க என்றார் .

நான் ஆமாம் என்றேன்... அவர் கொஞ்சம் மெதுவான குரலில் சரி ரூ .70 கொடுங்க என்றார் .
௲௱௨௰௯ - இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். -  காதல் சிறப்புரைத்தல் - காமத்துப்பால் - திருக்குறள்

அவர் கண்கள் லேசாக கலங்கியதை நான் கவனித்தேன். அது மனதை என்னவோ செய்ய, ஏன் ஐயா என்னாச்சு, ஏன் அழுறீங்கன்னு கேட்டேன், ஒன்னும் இல்ல தம்பி என்றார் , நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி கேட்க, அவர் மெதுவாக சொல்ல ஆரம்பித்தார் .

என் பெயர் நாகரெத்தினம் (77), என் மனைவியின் பெயர் புஸ்பாவதி (73) எங்களுக்கு 6 குழந்தைகள். மிகவும் ஏழ்மையான குடும்பம்.
Pencil drawing - babies hand, parents hand | Drawings, Art drawings  sketches simple, Cute baby drawings

மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பிள்ளைகளை வளர்த்தோம், பலநாட்கள் நானும், மனைவியும் சாப்பிடுவது கூட இல்லை, இருப்பதை பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவோம். பலநாள் இரவு பட்டினி இருந்திருக்கிறோம். ஒரு நாள் கூட என் மனைவி இதற்காக என்னோடு சண்டை போட்டதில்லை.

பிள்ளைகள் எல்லாம் திருமணம்
முடித்து அவரவர்கள் தனிகுடும்பமாகச் சென்று விட்டனர். எங்களுக்கோ தடுமாறும் வயது, அதனால் பெற்ற மக்களின் வீட்டில் போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில், மூத்த மகனிடம் விபரத்தைச் சொன்னேன்.

அதற்கு அவன், என்னால் இருவரையும் கூட்டிக் கொண்டு போய் வைத்து பராமரிக்க முடியாது, யாரவது ஒருவர் வரலாம் என்றான். அப்படி நான் மூத்த மகன் வீட்டிற்கும், மனைவி வேறு ஒரு மகன் வீட்டிற்கும் சென்றோம் வேறு வழியின்றி.

47 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்து தனிமையில் இருப்பது பிடிக்காமல் பல நாட்கள் அழுது இருக்கிறேன். மனைவியின் நினைவுகள் மனதில் போராட இறுதியில் என் மனைவி இருக்கும் மகன் ஊருக்குச் சென்றேன்.

என் மனைவியிடம் சொன்னேன்,

நாம் இருவரும் ஒன்றாக வேறு எங்காவது போய் விடலாமா என்று, மனைவியும் அழுது கொண்டே சம்மதித்தாள். மகன்கள் வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வந்து ஒரு வருடமாகிறது.

பிழைப்புக்காக நான் குழந்தைகளின் பொம்மைகளை நடந்து சென்று விற்கிறேன், தினமும் 80 ரூபாய் முதல் 100 வரை லாபம் கிடைக்கும், இதை வைத்துக் கொண்டு ஜீவனாம்சம் செய்து கொண்டுள்ளோம், இப்போது எனக்கு வயது 77 ஆகிறது, எப்போது வேண்டுமானாலும் நான் இறந்து போகலாம்.

வரும் 100 ரூபாய் வருமானத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து சேமிக்கிறேன், அது எங்கள் மரண செலவிற்க்கு, என் பிள்ளைகளுக்கு அந்த செலவுத் தொந்தரவுகூட வேண்டாம் என அதை மனைவியிடம் கொடுத்து வைக்கிறேன் .

ஒரு நாள், இந்தப் பணம் எதற்கு சேமிக்கிறீர்கள் என்று என் மனைவி
கேட்டாள். நம் மரணச்செலவிற்கு
என்றேன், சத்தமாக கத்தி அழுது விட்டாள். இப்போது என்மனைவியின் பிரார்த்தனை, என் கணவர் மரணிக்கும் அதே நேரத்தில் எனக்கும் "மரணத்தைக் கொடுத்து விடு கடவுளே என்று"

"என் பிரார்த்தனையும் அதுவே தான்" என்று அவர் சொல்லவும் ,

இதை கேட்டுக்கொண்டிருந்த நான் மனதால் நொறுங்கிப் போனேன் .

நீங்கள் இங்கே இருப்பது உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா என்றேன் ?

அவர்களுக்குத் தெரியாது என்றார்.

எனக்கு மனம் கனத்துப் போனது.

சாதாரண மக்களிடம்தான் எத்தனை எத்தனை வலிகள் மனதில் புதைந்திருக்கின்றன.

சின்ன சின்ன வியாபாரிகளிடமும் பழக்கடைக்காரர்களிடமும் பேரம் பேசாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற படிப்பினையை நான் இம் முதியவரிடம் உரையாடியதன் மூலம் தெரிந்து கொண்டேன்...!

கண்கலங்கினால் பகிரவும், தவறை குறைப்போம்...✍🏼🌹

From Facebook

“மாசி மகம்”

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:04 | Best Blogger Tips

 


 

இன்று “மாசி மகம்”....✍🏼🌹

தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது.
ஏனென்றால், பௌர்ணமியுடன்
மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தான் நாம் ‘மாசி மகம்’ திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

மேலும் இந்நாளில் பல கோவில்களில் தீர்த்த உச்சவம் நடைபெறும்.

பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8.40 மணி முதல் பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது.

எனவே, பிப்ரவரி 24ஆம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், ஆறு மற்றும் குளங்களுக்கு சென்று புனித நீராடலாம்.

சிவபெருமான் வருணனுக்கு
சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான்.
இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம்.

உமா தேவி , மாசி மாதம்
மக நட்சத்திரத்தில் தான் ,
தட்சனின் மகள் தாட்சாயணியாக
அவதரித்தார் , என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது ,
இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.

தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று
இந்நாளைக் கொண்டாடுவர்.

 

மாசி மகம் 2024 உண்டு நதிகளில் புனித நீராடிய பலனை வீட்டிலேயே எப்படி பெறலாம்......

 

 

 

மாசி மகம் 2024 :

 

நட்சத்திரங்களில் மகம் நட்சத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இது பலவிதமான தோஷங்களையும், பாவங்களையும் நீக்கக் கூடிய சிறப்பான நட்சத்திரமாகும். அதிலும் மாசி மாதத்தில் பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணையும் நாள் மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளையே நாம் மாசி மகம் திருநாளாக கொண்டாடுகிறோம். மாசி மகம் என்பது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், முன்னோர்களை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். மாசி மகத்தன்று நதிகள், கடல், குளங்கள் ஆகியவற்றில் நீராடுவது புண்ணிய பலன்களை தரும். இந்த ஆண்டு மாசி மகத் திருநாள் பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது.

 

 

 

மாசி மகம் சிறப்புகள் :

 

மாசி மகம் சிறப்புகள் :

மாசி மகம் என்பது வருண பகவானுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் வருணனுக்கு அருள் செய்த தினமாகும். தான் நலன் பெற்றதை போல் இந்த நாளில் புனித நீராடு வழிபடுபவர்களின் பாவங்களும் தோஷங்களும் தீர வேண்டும் என வருண பகவான் வேண்டிக் கொண்டதாலேயே இந்த நாள் புனித நீராடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் கோவில்களில் தீர்த்த உற்சவம் இந்த நாளில் நடத்தப்படுவதும் வழக்கமானது. மற்ற இடங்களில் நீராடுவதை விட கும்பகோணம் மகாமகம் குளத்தில் மாசி மகத்தன்று நீராடுவது சிறப்பானதாகும். மற்ற இடங்களில் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்காக அனைவரும் கங்கையில் சென்று நீராடுகின்றனர். ஆனால் அந்த கங்கையே தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்ள மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருளுவதாக ஐதீகம்.

 

 

 

மகாமகம் குளத்தில் நீராட காரணம் :

 

மகாமகம் குளத்தில் நீராட காரணம் :

கும்பகோணம் மகாமகம் குளத்தில் வருடந்தோறும் நடைபெறுவதை மாசிமக நீராடல் என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மகத்தை மகாமகம் என்றும் கொண்டாடுகிறோம். அதனால் கங்கையை விட புனிதமானது கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது. மாசி மகத்தன்று நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவங்களை போக்கி, புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக மகாமகம் குளத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். அன்றைய தினம் மகாமகம் குளத்தில் நீராடுபவர்களுக்கு இந்த 9 நதிகளும் அனைத்து நலன்களையும் வழங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனைவராலும் கும்பகோணம் சென்று மகாமகம் குளத்தில் மாசிமகத்தன்று நீராட முடியாது. இப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நவநதிகளில் நீராடிய பலன்களை பெற முடியும்.

 

வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெற :

 

வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெற :

கங்கை, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவேரி, சரஸ்வதி, துங்கபத்ரா, சரயு ஆகியவையே நவ நதிகளாக போற்றப்படுகின்றன. இந்த 9 நதிகளிலும் நீராடிய பலனை பெறு வேண்டும் என்றால் மாசி மகம் தினத்தன்று காலையில் எழுந்து பல் துலக்கி, முகம் கழுவி விட்டு, ஒரு செம்பில் முழுவதும் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக், எவர்சில்வர் தவிர பித்தளை, செம்பு, மண் என ஏதாவது ஒன்றால் ஆன செம்பில் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். இதில் வாசனை திரவியப் பொடி இருந்தால் அதை சிறிது போடலாம். இல்லை என்றால் சிறிது மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், ஏலக்காய் தூள் ஆகியவற்றை கலந்து, அதன் மீது இரண்டு பூக்களை போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

 

புனித நதிகளை வழிபடும் முறை :

 

புனித நதிகளை வழிபடும் முறை :

கங்கை, யமுனை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, சரஸ்வதி, சரயு ஆகிய நதிகளே எங்களால் நேரில் வந்து உங்களை தரிசித்து, நீராட முடியாது. அதனால் நீங்கள் எங்கள் வீட்டில் உள்ள இந்த செம்பு தண்ணீரில் எழுந்தருளி, புனித நீராடிய பலனை எங்களுக்கு அருளி, எங்களின் பாவங்கள், தோஷங்களை நீக்கி அருள வேண்டும்என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த செம்பு தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரும் சிறிதளவு தங்களின் தலையில் தெளித்துக் கொண்டு குளிக்கலாம். அல்லது அந்த தண்ணீரை வீட்டில் உள்ள அனைவரையும் பகிர்ந்து தாங்கள் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். இப்படி செய்வதால் 9 புனித நதிகளில் நீராடிய பலனை வீட்டில் இருந்தே பெற முடியும்.

 

 

தெரிந்து கொள்ளுங்கள்....✍🏼🌹....✍🏼🌹....✍🏼🌹....✍🏼🌹

 


🙏🙏🙏  நன்றி இணையம்