"புஷ்பிதா"- அருமையான வாழைப்பூ ரெசிபி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:44 | Best Blogger Tips





"புஷ்பிதா"- அருமையான வாழைப்பூ ரெசிபி

புஷ்பிதா என்னும் ரெசிபி ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. ஏனெனில் இதில் வாழைப்பூ மற்றும் வாழை இலையை பயன்படுத்தி செய்வதால், இதன் சுவையானது அதிகம் இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் உள்ளது. மேலும்வாழைப்பூவில் நார்ச்சத்துடன், வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் நிறைந்திருப்பதால், இது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும்.

குறிப்பாக பைல்ஸ், மலச்சிக்கல் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புஷ்பிதா ரெசிபி மிகவும் நல்லது. இங்கு அந்த புஷ்பிதா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 2
இஞ்சி - 4-6 டேபிள் ஸ்பூன் (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் + 2 சிவப்பு மிளகாய் - 4 (விதை நீக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 1 இன்ச்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை

முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை உடனே வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2-3 மணிநேரம் ஆனப் பின்னர், நீரை வடித்துவிட்டு, குளிர்ச்சியான நீரில் உடனே அலசி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, வெந்தயம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சிறிது தூவி, நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து 1/2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வாழைப்பூ வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (அதிகப்படியான தண்ணீரை ஊற்றி விட வேண்டாம்), குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசிலானது போனதும், குக்கரை திறந்து குளிர வைத்து, 1/4 டீஸ்பூன் மசாலா பொடியை தூவி, 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி, சுவை பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் வாழை இலையை எடுத்து, அதில் சிறிது வாழைப்பூ கலவையை வைத்து மடித்து, நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அடுப்பில் ஒரு நாண் ஸ்டிக் பேன் வைத்து நன்கு சூடானதும், அதில் சிறிது நெய்யை தடவி, அதன் மேல் வாழை இலை பார்சலை வைத்து, 5 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து வாழை இலை பார்சலையும் செய்ய வேண்டும்.

இப்போது வாழை இலையை திறந்தால், சுவையான "புஷ்பிதா" ரெசிபி ரெடி!!!

குறிப்பு

* புஷ்பிதா ரெசிபியில் நெய்க்கு பதிலாக, விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்தும் செய்யலாம்.

* வாழைப்பூவை சுத்தம் செய்யும் போது, கையில் சிறிது தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு சுத்தம் செய்தால், கையில் கறை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* கர்ப்பிணிகள் இந்த ரெசிபியை சமைத்து சாப்பிடும் போது, பெருங்காயத் தூள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* புஷ்பிதா ரெசிபியை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
 (10 photos)
புஷ்பிதா என்னும் ரெசிபி ஒரு வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. ஏனெனில் இதில் வாழைப்பூ மற்றும் வாழை இலையை பயன்படுத்தி செய்வதால், இதன் சுவையானது அதிகம் இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் உள்ளது. மேலும்வாழைப்பூவில் நார்ச்சத்துடன், வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை அதிகம் நிறைந்திருப்பதால், இது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும்.

குறிப்பாக பைல்ஸ், மலச்சிக்கல் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புஷ்பிதா ரெசிபி மிகவும் நல்லது. இங்கு அந்த புஷ்பிதா ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 2
இஞ்சி - 4-6 டேபிள் ஸ்பூன் (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் + 2 சிவப்பு மிளகாய் - 4 (விதை நீக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 4
பட்டை - 1 இன்ச்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நாட்டுச்சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

செய்முறை

முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை உடனே வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* 2-3 மணிநேரம் ஆனப் பின்னர், நீரை வடித்துவிட்டு, குளிர்ச்சியான நீரில் உடனே அலசி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, வெந்தயம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சிறிது தூவி, நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து 1/2 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வாழைப்பூ வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (அதிகப்படியான தண்ணீரை ஊற்றி விட வேண்டாம்), குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசிலானது போனதும், குக்கரை திறந்து குளிர வைத்து, 1/4 டீஸ்பூன் மசாலா பொடியை தூவி, 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி, சுவை பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் வாழை இலையை எடுத்து, அதில் சிறிது வாழைப்பூ கலவையை வைத்து மடித்து, நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அடுப்பில் ஒரு நாண் ஸ்டிக் பேன் வைத்து நன்கு சூடானதும், அதில் சிறிது நெய்யை தடவி, அதன் மேல் வாழை இலை பார்சலை வைத்து, 5 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து இறக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து வாழை இலை பார்சலையும் செய்ய வேண்டும்.

இப்போது வாழை இலையை திறந்தால், சுவையான "புஷ்பிதா" ரெசிபி ரெடி!!!

குறிப்பு

* புஷ்பிதா ரெசிபியில் நெய்க்கு பதிலாக, விர்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்தும் செய்யலாம்.

* வாழைப்பூவை சுத்தம் செய்யும் போது, கையில் சிறிது தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு சுத்தம் செய்தால், கையில் கறை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* கர்ப்பிணிகள் இந்த ரெசிபியை சமைத்து சாப்பிடும் போது, பெருங்காயத் தூள் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

* புஷ்பிதா ரெசிபியை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

Via Fb ஆரோக்கியமான வாழ்வு

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:32 | Best Blogger Tips


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது....

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.



தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.





தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்



இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரகளுக்கு பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்தவதால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு