ஒரு தளிகையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:23 PM | Best Blogger Tips

 

 

 . அருமையாக கூறி உள்ள தகவல்;-   
ஒரு தளிகையில்   
🥥🍅🫛🍅🧅🫒🌶️       ஒரு திவ்ய தேசம்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

ஸ்ரீவைஷ்ணவரே!
இன்று உமக்கான தளிகை
எங்கள் திருமாளிகையில்தான்!
மறுக்காமல், மறக்காமல்
ஆத்துக்காரியும் அழைச்சுண்டு
இன்று மதியம் எங்கள்
அகத்திற்கு வாரும்!!🌷

பாகவத பிரசாதம்!
மறுக்கத்தான் முடியுமா?🌷

தன்னவளையும்
தன்னுடன் அழைத்துக் கொண்டு
அழைத்தவர் வீட்டிற்கு
விருந்துண்ணச் சென்றார்
அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!🌷

நல்ல மரியாதை செய்து
இருவரையும் அமர வைத்து
விருந்துண்ணச் செய்தார்
அழைத்த வைஷ்ணவர்!!🌷

வயிறு நிரம்பியதா?
ஸ்ரீவைஷ்ணவரே!🌷

மனதும் நிரம்பியது!
வைஷ்ணவரே!
விழுந்து விழுந்து கவனித்த
உம் பேரன்பிலே
நாங்கள் விழுந்தே போனோம்!!🌷

எங்காத்து
தளிகை எப்படி?🌷

பகவானின் பிரசாதம் அது!
வார்த்தைகளுக்குள் அடங்காதது!
அருமை என்ற
ஒற்றைச் சொல்லில்
அதன் சுவையை நான்
உணர்த்திவிட முடியாது!
கவியாகப் பாடட்டுமா?🌷

அத்தனைச் சிறப்பாய்
இருந்ததா தளிகை?
ஓய்! பொய்யொன்றும் இல்லையே?
கவிதைக்கு பொய் அழகு!
அதனை நானும் அறிந்துள்ளேன்!
உம் கவியும் பொய்தானோ?🌷

அதில் பொய்யே இருக்காது!
கேட்டுத்தான் பாருமே!🌷

"கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!!🌷"

அவரது திருவடிகளில்
விழுந்து சேவித்தார்
விருந்து  கொடுத்தவர்!🌷

எங்காத்து தளிகையில்
இத்தனைத் திவ்யதேசமா?🌷

கண்களில் நீர் பனிக்க
வந்தவர்களை
வழியனுப்பி வைத்தார்!🌷

ஸ்ரீ வைஷ்ணவரின் அகத்துக்காரம்மா கேட்டார்,

கோபிச்சுக்காதீங்கோ!
கவி பாடும் அளவிற்கா
அவாத்து தளிகை இருந்தது?
நானும்தான் தினமும்
எத்தனையோ செய்கிறேன்!
ஒரு திவ்யதேசமும் காணோமே?🌷

அதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்
அடியே மண்டு!
நமக்கு நாமே
பாராட்டிக் கொள்வதற்கு
பெயரா தாம்பத்யம்?
என் சுவை நீயறிவாய்!
உன் குறை நானறியேன்!
அந்தப் பாட்டுக்கு உனக்கு
அர்த்தம் புரியலையா?🌷

 அகத்துக்காரம்மா:-
அந்த அளவுக்கு
ஞானம் இருந்தால்
உங்காத்துக்கு நான் ஏன்
வாக்கப்பட போகிறேன்?
நான் மண்டுதான்!
நீங்களே சொல்லுங்கோ!!🌷

கண்ணமுது கோவில்!
கண்ணமுது என்றால் பாயசம்!
கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!
அரங்கன் கோயிலில் பாயசம்
மண் சட்டியில்தான் வைப்பார்கள்!
அதனால் பாயசம்
சற்று அடிபிடிப்பது என்பது
அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!
இங்கேயும் பாயசம்
அடிப்பிடித்து இருந்ததால்
கண்ணமுது கோவில்!!🌷

அப்படியா 
அடுத்தது! அடுத்தது!!!!!🌷

கறியமுது விண்ணகர்!
கறியமுது என்றால்
காய்கறி வகைகள்!
விண்ணகர் இருக்கும்
ஒப்பில்லாத பெருமானுக்கு
நைவேத்தியம் எதுவிலும்
உப்பே சேர்க்க மாட்டார்கள்!
இவாத்து கறியமுதிலும்
இன்று உப்பில்லை!
அதனால் கறியமுது விண்ணகர்!!🌷

அருமை 
அப்புறம்... அப்புறம்...🌷

அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!
ரங்கமன்னாரின் கோயிலிலே
அன்னம் குழைந்தே இருக்குமாம்!
இங்கேயும் சாதம்
குழைந்தே இருந்ததனால்
அன்னமது வில்லிபுத்தூர்!!🌷

இப்படியும் உண்டா?
அடுத்தது... அடுத்தது.....🌷

சாற்றமுது மல்லை!
சாற்றமுது என்றால் இரசம்!
மல்லை என்றாலோ கடல்!
கடல் நீரைப் போல
அவாத்து சாற்றமுதிலும்
உப்பே அதிகம்!!🌷

கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!
அடுத்தது என்ன?🌷

குழம்பது குருகூர்!
குருகூரிலே எது பிரசித்தம்?
நம் ஆழ்வான் இருந்த
புளியமரம்தானே!
குருகூர் என்றாலே புளிதான்!
அவாத்து குழம்பிலும்
வெறும் புளிதான்!!🌷

கடைசியையும்
சொல்லிவிடுங்கள்!!🌷

பருப்பதில் திருமலை!
திருமலை முழுவதும் கல்தான்!
அவாத்து பருப்பு
முழுதும் கல்லும் இருந்ததே?🌷

இப்படியா பாடிவிட்டு வருவீர்?
அர்த்தம் புரிந்தால்
அவர்கள் தவறாக உம்மை
எண்ண மாட்டாரோ?🌷

அடியே!
கட்டாயம் எண்ண மாட்டார்!
பாகவத சேஷம் என்று
அந்த உணவினை
அவர்கள் குடும்பம் முழுதும்
இந்நேரம் உண்டிருப்பர்!
அந்த உணவினில் அவர்கள்
சுவைகளைக் கட்டாயம்
கண்டிருக்க மாட்டார்கள்!
நான் சொல்லி வந்த
திவ்ய தேசங்கள் மட்டுமே
அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!🌷

வெறும் சாதமல்ல அது!
இந்நேரம் அது
பிரசாதமாய் மாறியிருக்கும்!!🌷

என்னை மன்னித்து விடுங்கள்!
ஒன்று கேட்கிறேன்!
கட்டாயம் செய்வீர்களா?🌷

கட்டாயம் செய்கிறேன்!
என்ன வேண்டும் உனக்கு?🌷

நல்ல தமிழ் 
சொல்லித் தருகின்ற
ஒரு ஆசான் வேண்டும்!
நான் தமிழ் கற்க வேண்டும்!
நாளை என் சமையலில்
எந்தத் திவ்யதேசம்
மறைந்து வருகிறது என
நானும் அறிய வேணடும்!!🌷

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

*எங்கிருந்தோ வந்தான்*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips

May be an image of 1 person

முதல்வர் : 12 ஆண்டுகள்
 
பிரதமர் : 11 ஆண்டுகள்
 
*ஊழல் : 0*
 
*சொத்து : 0*
 
*குடும்பத்திற்கான நன்மைகள் : 0*
 
மிகப்பெரிய குற்றச்சாட்டு : *ஒரு தீவிர தேசபக்தர்.*
 
நாட்டின் ஒரே தலைவர் *செல்வம் பெருகவும் இல்லை, குறையவும் இல்லை.*
 
குஜராத்தை விட்டு வெளியேறும் போது *தனது 15 வருட சம்பளத்தை நன்கொடையாக அளித்ததோடு, தற்போது தனது பெயரில் உள்ள ஒரே சொத்தையும் தானமாக அளித்துள்ளார்.*
 
*அத்தகைய தேச ஊழியரை நினைத்து நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.* 
 From Struggling in Flooded House to Road in Her Name: 100-yr Journey of Modi's  Mother on Her B'day | Politics News - News18
*ஒரு நாள் கூட லீவ் எடுத்தது இல்லை. தனது அம்மா இறந்த உடன் உடலை எரித்து விட்டு பிரதமர் அலுவலகம் வந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தார் !*
👌
*இப்படி ஒரு தலைவர் இதுவரை இருந்ததில்லை.*
 
*தேசபக்தி, மதபக்தி, ஆன்மீகம், தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த ஆளுமைக்கு வணக்கம்.*
🙏
*பொது நாலனுக்காக போற்றுவோர் போற்றட்டும்.*
 
*சுயநலனுக்காக தூற்றுவோர் தூற்றிக் கொண்டே இருக்கட்டும்.*
 Heeraben Modi passes away: Heart-warming pictures of PM Narendra Modi with  his mother
*எங்கிருந்தோ வந்தான்*
 
*இடை சாதி நான் என்றான்*
 
*இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..✍️* *நரேந்திர தாமோதர தாஸ்* *மோடி ஜி நமது பாரதம்* *காக்க*
 
*எங்கிருந்தோ வந்தார்*
 
🙏🙏🙏🙏🙏🙏🙏*

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, practising yoga, segway, grass and street🌷 🌷🌷 🌷

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரண்டு பிள்ளைகளுமே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

May be pop art of text 

ஆயிரம் #உறவுகள் அருகில் இருந்தாலும் ஆண் பிள்ளைகளுக்கு அம்மா இருந்தது போல் இருக்காது...
 
பெண் பிள்ளைகளுக்கு அப்பா இருந்தது போல் இருக்காது...
 
ஒரு #ஆண் பிள்ளைகளை அப்பா திட்டும் போது அம்மா தோள் மீது சாய்த்து கொள்வான்..‌
 
ஒரு #பெண் பிள்ளைகளை அம்மா திட்டும் போது அப்பா தோள் மீது சாய்ந்து கொள்ளுவாள்.....
 
ஆண் பிள்ளைகள் மீது அப்பா அதிகம் பாசம் காட்ட மாட்டார் .. இதற்கடுத்தாலும் திட்டுவார் ஏனென்றால் நான் பட்ட கஷ்டம் நீயும் படக்கூடாது என்ற காரணத்திற்காக 
 
அப்பா அடிக்கடி திட்டுவார் அது நம்முடைய நன்மைக்கு தான் என்று புரியாமல் அப்பா மீது ஆண் பிள்ளைகளுக்கு பாசம் குறைவாக இருக்கும்
 
ஆனால் அப்பா எப்போதும் பாசத்துடன் இருப்பார் மனதுக்குள்... நீ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறும்போது முதலில் ஆனந்தக் கண்ணீர் வடிப்பது உன்னுடைய அப்பாவாகத்தான் இருக்கும் என் பிள்ளை ஜெயிச்சுட்டாடா என்று...
 
பெண் பிள்ளைகள் மீது அம்மா அதிகம் பாசம் காட்ட மாட்டார்கள்..
 
அதற்காக பாசம் இல்லாமல் இல்லை அம்மாவும் அதிக பாசத்துடன் வளர்ப்பாள் 
 
இவ்வளவு பாசத்துடன் வளர்த்த பிள்ளை வேறொரு வீட்டுக்கு திருமணம் முடித்துப் போகும் போது அவளாள் தாங்கிக் கொள்ள முடியாது..
 
அம்மாக்கு தான் நல்லது எது? கெட்டது எது ??என்று எல்லாம் தெரியும் அதனால் தான் அம்மா பெண் பிள்ளைகளை அதிகமாக கண்டிப்பாள் அது பெண் பிள்ளைகளுக்கு பிடிக்காமல் அப்பா மீது பாசத்தை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்..
 
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரண்டு பிள்ளைகளுமே ஒன்றுதான்.....