ஒரு தளிகையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:23 PM | Best Blogger Tips

 

 

 . அருமையாக கூறி உள்ள தகவல்;-   
ஒரு தளிகையில்   
🥥🍅🫛🍅🧅🫒🌶️       ஒரு திவ்ய தேசம்
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

ஸ்ரீவைஷ்ணவரே!
இன்று உமக்கான தளிகை
எங்கள் திருமாளிகையில்தான்!
மறுக்காமல், மறக்காமல்
ஆத்துக்காரியும் அழைச்சுண்டு
இன்று மதியம் எங்கள்
அகத்திற்கு வாரும்!!🌷

பாகவத பிரசாதம்!
மறுக்கத்தான் முடியுமா?🌷

தன்னவளையும்
தன்னுடன் அழைத்துக் கொண்டு
அழைத்தவர் வீட்டிற்கு
விருந்துண்ணச் சென்றார்
அந்த ஸ்ரீவைஷ்ணவர்!!🌷

நல்ல மரியாதை செய்து
இருவரையும் அமர வைத்து
விருந்துண்ணச் செய்தார்
அழைத்த வைஷ்ணவர்!!🌷

வயிறு நிரம்பியதா?
ஸ்ரீவைஷ்ணவரே!🌷

மனதும் நிரம்பியது!
வைஷ்ணவரே!
விழுந்து விழுந்து கவனித்த
உம் பேரன்பிலே
நாங்கள் விழுந்தே போனோம்!!🌷

எங்காத்து
தளிகை எப்படி?🌷

பகவானின் பிரசாதம் அது!
வார்த்தைகளுக்குள் அடங்காதது!
அருமை என்ற
ஒற்றைச் சொல்லில்
அதன் சுவையை நான்
உணர்த்திவிட முடியாது!
கவியாகப் பாடட்டுமா?🌷

அத்தனைச் சிறப்பாய்
இருந்ததா தளிகை?
ஓய்! பொய்யொன்றும் இல்லையே?
கவிதைக்கு பொய் அழகு!
அதனை நானும் அறிந்துள்ளேன்!
உம் கவியும் பொய்தானோ?🌷

அதில் பொய்யே இருக்காது!
கேட்டுத்தான் பாருமே!🌷

"கண்ணமுது கோவில்!
கறியமுது விண்ணகர்!
அன்னமுது
வில்லிப்புத்தூர் ஆனதே!
எண்ணும் சாற்றமுது மல்லை!
குழம்புமது குருகூர்!
பருப்பதனில்
திருமலையே பார்!!🌷"

அவரது திருவடிகளில்
விழுந்து சேவித்தார்
விருந்து  கொடுத்தவர்!🌷

எங்காத்து தளிகையில்
இத்தனைத் திவ்யதேசமா?🌷

கண்களில் நீர் பனிக்க
வந்தவர்களை
வழியனுப்பி வைத்தார்!🌷

ஸ்ரீ வைஷ்ணவரின் அகத்துக்காரம்மா கேட்டார்,

கோபிச்சுக்காதீங்கோ!
கவி பாடும் அளவிற்கா
அவாத்து தளிகை இருந்தது?
நானும்தான் தினமும்
எத்தனையோ செய்கிறேன்!
ஒரு திவ்யதேசமும் காணோமே?🌷

அதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்
அடியே மண்டு!
நமக்கு நாமே
பாராட்டிக் கொள்வதற்கு
பெயரா தாம்பத்யம்?
என் சுவை நீயறிவாய்!
உன் குறை நானறியேன்!
அந்தப் பாட்டுக்கு உனக்கு
அர்த்தம் புரியலையா?🌷

 அகத்துக்காரம்மா:-
அந்த அளவுக்கு
ஞானம் இருந்தால்
உங்காத்துக்கு நான் ஏன்
வாக்கப்பட போகிறேன்?
நான் மண்டுதான்!
நீங்களே சொல்லுங்கோ!!🌷

கண்ணமுது கோவில்!
கண்ணமுது என்றால் பாயசம்!
கோவில் என்றால் ஸ்ரீரங்கம்!
அரங்கன் கோயிலில் பாயசம்
மண் சட்டியில்தான் வைப்பார்கள்!
அதனால் பாயசம்
சற்று அடிபிடிப்பது என்பது
அங்கே தவிர்க்க முடியாத ஒன்று!
இங்கேயும் பாயசம்
அடிப்பிடித்து இருந்ததால்
கண்ணமுது கோவில்!!🌷

அப்படியா 
அடுத்தது! அடுத்தது!!!!!🌷

கறியமுது விண்ணகர்!
கறியமுது என்றால்
காய்கறி வகைகள்!
விண்ணகர் இருக்கும்
ஒப்பில்லாத பெருமானுக்கு
நைவேத்தியம் எதுவிலும்
உப்பே சேர்க்க மாட்டார்கள்!
இவாத்து கறியமுதிலும்
இன்று உப்பில்லை!
அதனால் கறியமுது விண்ணகர்!!🌷

அருமை 
அப்புறம்... அப்புறம்...🌷

அன்னமது வில்லிபுத்தூர் ஆனதே!
ரங்கமன்னாரின் கோயிலிலே
அன்னம் குழைந்தே இருக்குமாம்!
இங்கேயும் சாதம்
குழைந்தே இருந்ததனால்
அன்னமது வில்லிபுத்தூர்!!🌷

இப்படியும் உண்டா?
அடுத்தது... அடுத்தது.....🌷

சாற்றமுது மல்லை!
சாற்றமுது என்றால் இரசம்!
மல்லை என்றாலோ கடல்!
கடல் நீரைப் போல
அவாத்து சாற்றமுதிலும்
உப்பே அதிகம்!!🌷

கொஞ்சம் அதிகமாத்தான் போறீங்க!
அடுத்தது என்ன?🌷

குழம்பது குருகூர்!
குருகூரிலே எது பிரசித்தம்?
நம் ஆழ்வான் இருந்த
புளியமரம்தானே!
குருகூர் என்றாலே புளிதான்!
அவாத்து குழம்பிலும்
வெறும் புளிதான்!!🌷

கடைசியையும்
சொல்லிவிடுங்கள்!!🌷

பருப்பதில் திருமலை!
திருமலை முழுவதும் கல்தான்!
அவாத்து பருப்பு
முழுதும் கல்லும் இருந்ததே?🌷

இப்படியா பாடிவிட்டு வருவீர்?
அர்த்தம் புரிந்தால்
அவர்கள் தவறாக உம்மை
எண்ண மாட்டாரோ?🌷

அடியே!
கட்டாயம் எண்ண மாட்டார்!
பாகவத சேஷம் என்று
அந்த உணவினை
அவர்கள் குடும்பம் முழுதும்
இந்நேரம் உண்டிருப்பர்!
அந்த உணவினில் அவர்கள்
சுவைகளைக் கட்டாயம்
கண்டிருக்க மாட்டார்கள்!
நான் சொல்லி வந்த
திவ்ய தேசங்கள் மட்டுமே
அவர்கள் எண்ணத்தில் இருக்கும்!🌷

வெறும் சாதமல்ல அது!
இந்நேரம் அது
பிரசாதமாய் மாறியிருக்கும்!!🌷

என்னை மன்னித்து விடுங்கள்!
ஒன்று கேட்கிறேன்!
கட்டாயம் செய்வீர்களா?🌷

கட்டாயம் செய்கிறேன்!
என்ன வேண்டும் உனக்கு?🌷

நல்ல தமிழ் 
சொல்லித் தருகின்ற
ஒரு ஆசான் வேண்டும்!
நான் தமிழ் கற்க வேண்டும்!
நாளை என் சமையலில்
எந்தத் திவ்யதேசம்
மறைந்து வருகிறது என
நானும் அறிய வேணடும்!!🌷

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷