யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள்🧬⚡

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips


யாரும் சொல்லாத உடல் ரகசியங்கள் — இதை தெரிஞ்சுக்கிட்டா வாழ்க்கையே மாறும்! 🧬⚡

நண்பர்களே,

டாக்டர் கிட்ட போவோம். மாத்திரை வாங்குவோம். சாப்பிடுவோம். மறுபடியும் அதே பிரச்சனை வருகிறது.

ஏன் தெரியுமா?

நாம் அறிகுறியை சரிசெய்கிறோம். காரணத்தை சரிசெய்வதில்லை! 😔

இதோ சில அதிர்ச்சியான உண்மைகளும் எளிய தீர்வுகளும் 👇

😮‍💨 மூச்சு விட சிரமப்படுகிறாயா (Breathlessness)?


➡️ மூக்கால் மட்டும் மூச்சு விடு! (Nose breathing only)

பெரும்பாலான மனிதர்கள் வாயால் மூச்சு விடுகிறார்கள். இது தவறு! மூக்கால் மூச்சு விடும்போது காற்று வடிகட்டப்படுகிறது, சூடாக்கப்படுகிறது, Nitric Oxide சுரக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நுரையீரல் வலுவடையும். தினமும் மூக்கால் மட்டும் மூச்சு விடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்!

🫃 வயிறு எப்போதும் பெரிதாக இருக்கிறதா 

(Belly fat)?
➡️ சாப்பிடும் நேரத்தை சரிசெய்! (Fix your eating window)

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். காலை 8 மணிக்கு சாப்பிட தொடங்கி இரவு 8 மணிக்குள் முடி. இரவு தாமதமாக சாப்பிடுவதை நிறுத்து. இந்த ஒரு மாற்றமே வயிறு சுற்றளவை குறைக்கும்!

🧠 மூளை மழுங்கலாக இருக்கிறதா (Brain fog)?
➡️ குளிர்ந்த நீரில் குளி! (Cold shower)

வெதுவெதுப்பான நீரில் குளித்து முடிக்கும்போது 30 நொடி குளிர்ந்த நீரை விடு. இது Norepinephrine என்ற ஹார்மோனை 300% வரை அதிகரிக்கும். மூளை திடீரென விழிப்படையும். கவனிக்கும் திறன் கூடும். ஒரு கோப்பை காபியை விட இது நூறு மடங்கு சக்திவாய்ந்தது!

💔 இதயம் வேகமாக துடிக்கிறதா (Heart racing)?
➡️ இடது பக்கமாக படு! (Sleep on left side)

இரவில் இடது பக்கமாக படுத்து தூங்கு. இது இதயத்திற்கான அழுத்தத்தை குறைக்கும். செரிமானம் சீராகும். Acid reflux குறையும். நம் ஆயுர்வேதமும் இந்த வாமக்குக்சி தூக்கத்தை பல நூறு ஆண்டுகளாக பரிந்துரைக்கிறது!

🦷 பல் சொத்தையும் ஈறு பிரச்சனையும் வருகிறதா (Dental issues)?
➡️ எண்ணெய் கொப்பளி! (Oil pulling)

காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடு. 10 முதல் 15 நிமிடம் வாயில் சுழற்று. துப்பு. வாயில் உள்ள கிருமிகள் அழியும். ஈறு வலுவடையும். பல் வலி குறையும். இது நம் சித்தர்கள் காலத்திலிருந்து வரும் அற்புத மருத்துவம்!

👃 மூக்கு அடைப்பாக இருக்கிறதா (Blocked nose)?
➡️ மூச்சை நிறுத்தி தலையை அசை! (Breath hold + head nod)

மூச்சை உள்ளே இழுத்து பிடி. தலையை மேலும் கீழும் மெதுவாக அசை. மூச்சு தாங்காத வரை பிடி. விடு. மூக்கு 10 நொடியில் திறக்கும். இது மூக்கில் Nitric Oxide அளவை அதிகரிக்கும். எந்த மருந்தும் வேண்டாம்!

😓 அதிகமாக வியர்க்கிறதா (Excessive sweating)?
➡️ மெக்னீசியம் நிறைந்த உணவு சாப்பிடு! (Eat magnesium-rich food)

உடலில் மெக்னீசியம் குறைந்தால் நரம்பு மண்டலம் அதிக உணர்திறன் அடையும். அதிக வியர்வை, கால் பிடிப்பு, தூக்கமின்மை எல்லாம் வரும். பாதாம், வால்நட், இலை கீரைகள், வாழைப்பழம் — இவை தினமும் சாப்பிடு!

🌟 இன்றைய மிக முக்கியமான செய்தி:

உன் உடல் உனக்கு எதிரி அல்ல.
உன் உடல் உன் மிகப்பெரிய நண்பன்.

அது தினமும் உனக்காக போரிடுகிறது.
அது தினமும் உன்னை காக்கிறது.
அது தினமும் உன்னிடம் உதவி கேட்கிறது.

கொஞ்சம் கவனி. கொஞ்சம் கேள். கொஞ்சம் அன்பு செலுத்து. 🙏💛

📋 சுருக்கமாக நினைவில் வைத்துக்கொள்:

😮‍💨 மூச்சு சிரமம் → 👃 மூக்கால் மட்டும் மூச்சு விடு
🫃 வயிறு கொழுப்பு → ⏰ சாப்பிடும் நேரம் சரிசெய்
🧠 மூளை மழுங்கல் → 🚿 குளிர்ந்த நீர் குளியல்
💔 இதயம் வேகம் → 🛏️ இடது பக்கம் படு
🦷 பல் பிரச்சனை → 🥥 எண்ணெய் கொப்பளி
👃 மூக்கு அடைப்பு → 🌬️ மூச்சு நிறுத்தி தலை அசை
😓 அதிக வியர்வை → 🥜 மெக்னீசியம் உணவு

💬 இதில் உங்களுக்கு எந்த பிரச்சனை அதிகமாக வருகிறது? இந்த வழிகளை முயற்சி செய்வீர்களா?  👇

உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips

 May be an image of monument, temple and crowd

 

#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன?
 
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*
அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
 தமிழ்நாட்டிலேயே பணக்கார கோயில் எது ...
*#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*
 
இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
 
*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 ...
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
 
*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*
 richest temples: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார ...
மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
 
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
 
*ஏன் கோவிலை கட்டினார்கள்?*
 
*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?
 
தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 ...
*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?
 
*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.
 
இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.
 
*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 பணக்கார  கோவில்கள்...முதலிடம் எந்த கோவிலுக்கு தெரியுமா ?
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
 
*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*
 
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
 
*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம்.
 
 அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
 
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
 
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
 
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
 top 10 temples in tamilandu : தமிழகத்தின் டாப் 10 பணக்கார கோவில்கள்...முதலிடம்  எந்த கோவிலுக்கு தெரியுமா ?
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
 
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
 
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை.
 
 ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
 
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
 
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
 
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.
 
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,*
 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
 
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
 
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
 
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
 
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
 
வாழிய பைந்தமிழ் நாடு...
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**
 
வழிபாடே இல்லாமல் இருக்கும் சிவ ஆலயங்களில் அபிடேக வழிபாடு செய்வது பல மடங்கு பயனை தரும்.
 
வழிபாடு செய்ய அடியார்களே வாரீர்......
.
திருச்சிற்றம்பலம்
**ஈசன்**
**அடி**
**தேடி**
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்....
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழமையான சிவனார் ஆலயத்தில் உழவாரம்,
திருவாச முற்றோதுதல், தமிழ் முறையில் சிவவேள்வி, திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி உலா, மற்றும்
108மூலிகை
பொடிகளால் அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
அனைவரும் வருக...
**தற்போது தென்தமிழ்நாட்டில் உள்ள யாரும் அதிகமாக அறியப்படாத சிவனார் ஆலயங்களை நோக்கி எமது வழிபாடுகள் ஆலயப்
பயணங்கள்...
வாருங்கள் நம் முன்னோர்கள்
எதிர்கால சந்ததிக்காக
பாதுகாத்து வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயங்களை நாமும் பாதுகாத்து வழிபடுவோம்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

 
 

"விண்ணிழி விமானம்"

மணக்கால் அய்யம்பேட்டை | 3:48 PM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "ば SA チ k-N3s aika મંલલીં ஙங்க கோபுர தரிசனம் GOLDEN TOWER GOLDENTOWERVIEW VIEW"

மதுரை சொக்கநாத பெருமான் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் மறைந்துள்ள ஒரு அபூர்வ ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
"விண்ணிழி விமானம்" என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
 
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேலே அமைந்துள்ள உள்ள தங்க கோபுர விமானம் விண்ணில் இருந்து வந்த விண்கல்லால் ஆன ஒரு விண்பொருள் என்பது நமக்கு தெரியாத தேவ ரகசியமாகும். 
 
தேவர்களின் தலைவனான இந்திரன் தன்மீது ஏற்பட்ட கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டான். 
 
அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான்.
இந்த சுயம்புலிங்கத்தை வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. 
 
எனவே இந்திரன், அச்சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.
தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து
சுயம்புலிங்கத்திற்கு
மேலே விமானமாக அமைத்தான். 
 
இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்று முதலாவதாக இருந்த காரணப் பெயர் பிற்காலத்தில் மறைந்து இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது.
 
இதற்கு ஆதாரமாக மதுரை கோவில் புராங்களிலுள்ள கீழ்க்கண்ட இரண்டு பாடல்கள் இதை உறுதிபடுத்துகின்றது.
 
(1)திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது
திருவாலவாயான படலம்
 
“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
'வானிழி விமானம்'
பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“
 
(2) திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340
“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமான
நின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப் புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
சொக்கநாத பெருமானின் இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
 
முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது.
அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை.
 
மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது.
இந்தக் கடம்ப வனத்தை அழித்து 'வங்கிய சேகர பாண்டியன்' என்பவன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
அப்போது மதுரையின் பழைய எல்லைகளை காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான்.
 
மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார். 
 
சிவபெருமான் சித்தராக தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும் என்பது பரம ரகசியமாகும்.
 
சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமான மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைப் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோம்.
 
(இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும்)
 
திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அர்ச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் திருவீழிமிழலை கோவில் புராணம் கூறுகிறது)
 
ஆதாரம்:திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
 
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.
 
எவ்விதமான விஞ்ஞான வளர்ச்சியும்அடையாத அந்தக் காலத்திலேயே
இந்த விமானத்தை
பார்ப்பதற்கு ஏதுவாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் மக்கள் நடந்து செல்லும் வழியில் சண்டிகேசுவரர்
சன்னதிக்குஅருகிலும், வெளிப்பிரகாரத்தில்
உள்ள நந்தி மண்டபம் அருகிலும் தரைப்பகுதியில் உள்ள கற்களில் நமது சிற்பிகள் பூப்போன்று வட்டமாகச் செதுக்கி அடையாளப்படுத்தி வைத்துள்ளார்கள்.
 
அந்த இடத்தில்
நின்று பார்த்தால் மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தின்
கருவறையின் தங்கவிமானத்தை காணலாம்.
இந்த தங்கவிமானத்தைக்
கண்டு வணங்கிட
விரும்புபவர்கள்,
 
இந்த இடத்தைத்
தேடிச்சென்று, அந்தப்
பூவின் மீது நின்று
பார்த்து வழிபடலாம்.
ஆனால், இந்த அமைப்பு
முறையானது நாள்தோறும் நாடெங்கிலும் இருந்து எத்தனையோ பக்தர்கள் அன்னை
மீனாட்சியையும், ஐயன்
சோமசுந்தரேசுவரரையும்
வணங்கிச்செல்கின்ற பக்தர்கள் அனைவருக்கும்
தெரியாமல் உள்ளது. 
 
இவர்கள் அனைவரும்
இந்த எளிய வசதியை
பயன்படுத்தி கொள்ளும்
வகையில் இதுபோன்ற
இடங்கள் குறித்து கோயில்
புத்தகங்களிலும், தகவல்
பக்கங்களிலும் இடம் பெறச்
செய்தால் பக்தர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் செல்வோர் தவறாமல் இந்த இடங்களில் நின்று விண்ணிழி விமானத்தை வணங்கி சிவபெருமானிடம் வேண்டிய வரங்களை பெற்றுக்கொள்வோம்.
 
அறிவியல் அடிப்படையில் திருவிளையாடற் புராணக் கருத்தை நோக்கினால்,
சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
 
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை 🥹🥹

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

உள்ளத்திலே கோவில் கட்டிய மகா யோகி....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips

 May be an image of temple and text

சிவனை அடைய வேண்டுமென்றால், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டுமென்றால் பொன்னும், பொருளும் தேவையில்லை. தூய்மையான அன்பும், பக்தியும் இருந்தாலே போதும் என்று உலகிற்கு உணர்த்தியவர் தான் தனது பக்தியால் உள்ளத்திலே கோவில் கட்டிய மகா யோகி பூசலார் நாயனார்.
பூசலார் (Poosalar): தன் இதயத்தில் கோவில் கட்டிய பக்தர்
 இவரது வரலாறு பக்தியின் உச்சத்தை விவரிப்பதாகும்.
May be an image of ‎temple and ‎text that says "‎200 IBCC اهتد குர்கார்கிருதயாலீல்வர்தகுள திரு திருக்ககயபில் அருள்மிு்ரீ அருள் திருநின்றவூர். ៉ហ திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் இதய நோய் தீர்த்து வைக்கும் திருத்தலம் 電 ibcbakthi.com O ibcbakthi f ibcbakthi t.me/ibcbhakthi‎"‎‎
​1. பிறப்பு மற்றும் இளமை:
சென்னைக்கு அருகில் இருக்கும் அழகிய திருநின்றவூர் என்னும் ஊரில் ஒரு அந்தணர் குலத்தில் பிறந்தார் பூசலார். இவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

​2. கோயில் கட்டும் ஆசை:
சிவபெருமானுக்கு ஒரு அழகான கற்கோயில் கட்ட வேண்டும் என்பது பூசலாரின் நீண்ட கால ஆசையாக இருந்தது. ஆனால், அவரிடம் அதற்கான வசதியோ அல்லது பணமோ இல்லை. செல்வந்தர்களிடம் உதவி கேட்டும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.

​3. மனக்கோயில் (மனதிற்குள் கோயில்):
பணம் இல்லையென்றால் என்ன? என் பக்தியால் சிவனுக்கு கோயில் கட்டுவேன் என்று முடிவு செய்தார். தன் மனதையே கருவறையாக்கி, மனதிற்குள்ளேயே கோயில் கட்டும் பணியைத் தொடங்கினார்.

பூசலார் நாயனார்
​ஆகம விதிகளின்படி ஒவ்வொரு கல்லாக மனக்கண்ணால் செதுக்கினார்.
​அஸ்திவாரம் இடுவது முதல், கோபுரம் கட்டுவது வரை அனைத்துப் பணிகளையும் தியானத்திலேயே ஒவ்வொன்றாகச் செய்து முடித்தார்.
​கோயிலுக்குக் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்ய ஒரு தேதியையும் குறித்துக்கொண்டார்.

​4. காஞ்சி மன்னனின் சிவபக்தி:
அதே காலகட்டத்தில், காஞ்சியை ஆண்ட ராஜசிம்ம பல்லவன் என்னும் அரசன், மிகப்பிரம்மாண்டமான கயிலாயநாதர் கோயிலை (Kanchi Kailasanathar Temple) கட்டி முடித்திருந்தான். அவனும் தனது கோயிலுக்குக் குடமுழுக்கு செய்ய அதே தேதியைத் தேர்ந்தெடுத்தான்.

​5. சிவபெருமானின் திருவிளையாடல்:
குடமுழுக்கிற்கு முந்தைய நாள் இரவு, சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றினார். அவர் மன்னனிடம், "நாளை திருநின்றவூரில் பூசலார் கட்டிய கோயிலுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. எனவே உன் கோயில் குடமுழுக்கை வேறொரு தேதிக்கு மாற்றிக்கொள்" என்று கூறினார்.
​மன்னன் திடுக்கிட்டு விழித்தான். "தன்னை விடப் பெரிய கோயிலை திருநின்றவூரில் யார் கட்டியது?" என்று வியந்து, உடனே தனது படைகளுடன் திருநின்றவூர் சென்றான்.
ஈசனுக்கு மிக உகந்தது அடியவரின் மனக்கோயிலா? மன்னரின் மகாகோயிலா?
​6. மன்னனின் வியப்பு:
திருநின்றவூர் வந்த மன்னன், ஊர் மக்களிடம் பூசலார் கட்டிய கோயில் எங்கே என்று கேட்டான். ஆனால் அங்கிருந்தவர்களுக்கு அப்படி ஒரு கோயில் இருப்பதே தெரியவில்லை. இறுதியாக ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் கண் மூடி அமர்ந்திருந்த பூசலாரைக் கண்டுபிடித்து அவரிடம் கேட்டபோது, பூசலார் கண்கலங்கி,

"அரசே! நான் என் மனதிற்குள்ளே தான் அந்தக் கோயிலைக் கட்டினேன்" என்று உண்மையைச் சொன்னார்.
மனக்கோயில் கட்டிய பூசலார் நாயனார் குருபூஜை... உள்ளத்தில் ஈசனைவைத்து வழிபட  உகந்த தினம்! |Poosalar Nayanar Guru poojai festival - Vikatan
​பூசலாரின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு மன்னன் மெய்சிலிர்த்துப் போனான். மனக்கோயிலை நேரில் காண முடியாது என்றாலும், இறைவனே இறங்கி வரும் அளவுக்குப் பெரிய கோயில் அது என்பதை உணர்ந்து பூசலாரை வணங்கினான்.

​அன்பே சிவம்: இறைவன் எதிர்பார்ப்பது பொருளுதவியோ, தங்கமோ அல்ல; உண்மையான அன்பை மட்டுமே.

​நாயன்மார் அந்தஸ்து: பூசலார் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

​திருக்கோயில்: இன்றும் திருநின்றவூரில் பூசலார் நாயனாருக்காகவும், அவர் மனதிற்குள் கட்டிய கோயிலை நினைவுகூரும் வகையிலும் இருதயாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
​பக்தியின் வலிமைக்கு பூசலாரின் இந்த வரலாறு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

சிவ சிவ 🔥
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

🕉🔱ஸ்ரீ சரபேஸ்வரர்🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 11:36 AM | Best Blogger Tips

 Sri Sarabeswarar who pacified Lord Narasimha


-இறைவனின் வேக வடிவம் இது

திரு உருவச் சிறப்புகள் 
​சிவனடியார்கள் போற்றும் மகா சக்தி வாய்ந்த வடிவம் சரபேஸ்வரர்.
Sarabeswarar Temple 🛕 #temple #temples #templesoftamilnadu  #templesofsouthindia #templesofindia #shiva #omnamashivaya #harharmahadev  #thirubhuvanam #kumbakonam #tamilnadu #india #instagram #swipe #swipeleft  #apple #shotoniphone
இவர் ஆகாச பைரவர் என்று அழைக்கப் படுகின்றார். 

நரசிம்மரின் சினம் தணிக்க சிவன் எடுத்த அவதாரமே இது.

​திருமேனி அமைப்பு:
​பறவை + விலங்கு + மனிதன். 
SARABESWARAR Worship Lord Shiva(sarabeswarar)
சரபேஸ்வரர் மனித உடல், சிங்கம் போன்ற தலை, மற்றும் இரண்டு இறக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட வடிவம் கொண்டவர்.
​எட்டு கால்கள்: 

இவர் எட்டு கால்களை உடையவர் (அஷ்டபாதர்).

​இறக்கைகளில் இரண்டு சக்தி கள் இருக்கின்றார்கள்: 
Kampaheswarar temple in Thirubuvanam, Tamil Nadu, India
இவரது ஒரு இறக்கையில் பிரத்யங்கிரா தேவியும், 

மற்றொரு இறக்கையில் சூலினி துர்க்கையும் வாசம் செய்கின்றனர்.
📌 Thirubuvanam Sarabeswarar Darisanam 🙏🙏
​கைகளில் ஆயுதங்கள்: நான்கு கரங்களில் மான், மழு, சர்ப்பம் (பாம்பு) மற்றும் தீப்பிழம்பு ஆகியவற்றை ஏந்தியிருப்பார்.

​நரசிம்மரை அடக்குதல்: தனது நகங்களால் நரசிம்மரை பற்றிப் பிடித்து, அவரது உக்கிரத்தைத் தணித்து அமைதிப்படுத்திய கோலம் இது.

​முக்கியத்துவம்:

​துன்பம் நீக்குபவர்: தீராத நோய்கள், ஏவல், பில்லி சூனியம் மற்றும் எதிரிகள் தொல்லை யிலிருந்து காக்கும் கடவுளாகக் கருதப்படுகிறார்.
6 Photos of Sri Sarabeshwarar Temple in Tirubuvanam, Kumbakonam - Justdial
​சிறப்புத் தலம்: 

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு மிக முக்கியமானவை.

​வழிபாட்டு நேரம்: 

ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் சரபேஸ்வரரை வழிபடுவது மிகவும் விசேஷம். 


ஷம்போ🙏


திருச்சிற்றம்பலம்🙏 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

சிரிப்போடு கண்ணீர் வரும்!! உலகிலுள்ள அத்துனை வசதிகளும்....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmDBn-wvDtPv3QL7A6VtDj1lV9QcOVfBYvJk0HrQ5Zb6bUrIKhpJX0ZZUBFhGqhKaRB_gRgSbYN6npJuO9CMKwyqJpQRo6gjB5getbRC9AA7FWYrJ-Xk3w4nvZfbZb_y8CFG6YWwBPuw/s1600/download+%25281%2529.jpg
 

#படித்தது!


[1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!]
1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு  கண்ணீர் வரும்!! 👉 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே ...
 ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்

 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…
தூர்தர்ஷன் - தமிழ் விக்கிப்பீடியா
 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 
ஆடி காளியம்மன் திருவிழாசாமிக்கொடை, தீபாவளி பொங்கல் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்
தீபாவளி: இந்து, சீக்கிய, சமண மதங்களில் உள்ள வெவ்வேறு பின்னணிக் கதைகள் என்ன?  - BBC News தமிழ்
 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…
மறைந்து போகும் வாழ்த்து அட்டைகளை பண்டிகைக் காலங்களில் பயன்படுத்தும்  வழக்கம்! | Greeting Cards Story
 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…
இளம் பெண்கள் ஏன் தாவணி அணிய வேண்டும்?
 வயசுப் பெண்களில், 10ல் 8 பேர்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…
Dhoti cool - தி இந்து
 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்

 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது… பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது… அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை

 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்… 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்     




       🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷