
மணக்கால் அய்யம்பேட்டை
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை சென்ற வீராங்கனை – எஸ்.என். சுந்தரம்பாள்! 👧👶🇮🇳🙏🔥
வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கான கடல்வழியைக் "கண்டுபிடித்த கட்டுக்கதை.!?
வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கான கடல்வழியைக் "கண்டுபிடித்த கட்டுக்கதை.!?
பிரிட்டிஷ் வரலாற்றுப் புளுகர்கள் வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டுபிடித்ததாக எழுதிவைத்ததைப் இன்றும் படித்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையோ அதற்கு நேரெதிராக இருக்கிறது.
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் சென்ற மிளகு போன்ற பொருட்களின் வர்த்தகம் முழுவதும் அரேபியர்களின் வசம் இருந்தது. அரேபியாவிலிருந்து கேரளக்கரைக்கு கப்பலில் வந்த அரபிக்கள் அங்கிருந்து மசாலாப் பொருட்களை வாங்கிக் கொண்டு எகிப்திற்குக் கொண்டு சென்றார்கள். எகிப்திற்கு வரும் ஐரோப்பிய வியாபாரிகள் அரபிகளிடமிருந்து அந்தப் பொருட்களை வாங்கிச் சென்றார்கள்.
இந்தியாவிற்கு நேரடியாக அந்தப் பொருட்களை வாங்கினால் குறைந்த விலைக்கு வாங்கலாம் என்கிற எண்ணம் கொண்ட ஐரோப்பிய வியாபாரிகள், இந்தியாவிற்கான கடல்வழியைக் காண்பித்துத்தரும்படி அரபிகளிடம் கெஞ்சினார்கள். ஆனால் அரபிக்கள் அதனைச் செய்ய மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி ஐரோப்பியர்கள் அவர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து இந்தியப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
இருந்தாலும் இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள் தொடர்ந்து முயன்று கொண்டிருந்தார்கள். அவர்களில் வாஸ்கோ-ட-காமாவும் ஒருவர். எத்தனை முயன்றும் கடல்வழியைக் காட்டித்தர ஒருவரும் முன்வராததால் மிகவும் வெறுத்துப்போய் ஆப்பிரிக்காவில் காத்துக் கொண்டிருந்த அவருக்கு அதிர்ஷ்டம் வேறுவழியில் வந்தது.
வாஸ்கோ-ட-காமா இந்தியாவிற்கு வந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எப்படி வந்தார் என்கிற உண்மையை நாமனைவரும் அறிந்து கொள்வது நல்லது. அதற்கான கட்டாயம் இன்றைக்கு வந்திருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரான பத்மஸ்ரீ டாக்டர். விஷ்ணு ஸ்ரீதர் வானாகர் இதனைக் குறித்து கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்,
"நான் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தேன். அங்கு வாஸ்கோ-ட-காமாவின் நாட்குறிப்பு லண்டலில் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அவர் தான் எவ்வாறு இந்தியாவிற்குச் சென்றடைந்ததனைக் குறித்த குறிப்புகளும் எழுதி வைத்திருப்பதாக அறிந்தேன். எனவே அந்த நாட்குறிப்பினைப் பெற்று படிக்க ஆரம்பித்தேன்"

வாஸ்கோ-ட-காமாவின் கப்பல் ஆப்பிரிக்காவின் ஸான்ஸிபார் அருகில் வருகையில் மூன்று பெரும் கப்பல்களைக் கண்டதாக எழுதுகிறார். அந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் அவருடைய கப்பலைவிடவும் மூன்று மடங்கு பெரிதானவையாக இருந்தன. எனவே வாஸ்கோ-ட-காமா அவருடைய ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பாளருடன் அந்தக் கப்பலின் சொந்தக்காரரும், குஜராத்தி வியாபாரியுமான சந்தன் என்பவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்தன் இந்தியாவிலிருந்து பைன் மற்றும் தேக்கு மரங்களையும், இந்திய மசாலாப் பொருட்களையும் ஆப்பிரிக்காவிற்குக் கொண்டுவந்து விற்றுவிட்டுப் பின்னர் அங்கிருந்து வைரங்களை வாங்கிக்கொண்டு கேரளத்தின் கொச்சி துறைமுகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எனவே அவரைச் சந்திக்கச் செல்கிறார் வாஸ்கோ. பெரும் வியாபாரியான சந்தன், சாதாரண உடைகளை அணிந்து கொண்டு ஒரு கட்டிலின் மீது அமர்ந்திருக்கிறார். வாஸ்கோவைப் பார்த்த சந்தன் அவரைக் குறித்து விசாரிக்கிறார். தான் ஐரோப்பாவிலிருந்து வந்திருப்பதாகவும், இந்தியாவிற்குச் செல்லவிருப்பதாகவும், ஆனால் தனக்கு எவரும் உதவி செய்ய முனவரவில்லை என அவரிடம் புலம்புகிறார் வாஸ்கோ-ட-காமா.
அதனைக் கேட்ட சந்தன், தான் நாளை இந்தியா திரும்பவிருப்பதாகவும், அவர் விரும்பினால் தனது கப்பலைப் பின்தொடர்ந்து வரலாம் எனவும் வாஸ்கோவிடம் சொல்லுகிறார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி தனக்கு அதிர்ஷ்டம் வந்ததை எண்ணி மகிழ்ந்துபோகிற வாஸ்கோ, சந்தனின் கப்பலைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு வந்திறங்குகிறார். அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு.
பிரம்மாண்டமான கப்பல்களில் சாதாரணமாக உலகையே சுற்றி வந்து வியாபாரம் செய்து வந்த இந்திய வியாபாரிகளின் பின்னால் தொங்கிக் கொண்டு வந்தவன் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரனும் இங்குள்ள அவனின் அடிவருடிகளும் நம் பாட புத்தகத்தில் எழுதி வைத்து நம் வருங்கால தலைமுறையை படிக்க வைத்தார்கள்
இந்த உண்மையை வாஸ்கோ-ட-காமாவே எழுதி வைத்திருக்கிறார்.
ஆனால் பிரிட்டிஷ் புளுகர்கள் அவரே தனியாக இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடித்ததாகப் புளுகி வைத்திருக்கிறார்கள்.
இந்தியா சுதந்திரமடைந்து இத்தனை காலங்களுக்குப் பிறகாவது இந்த உண்மைகளை புதிய தலைமுறையினருக்கு நாம் கற்பித்திருக்கவேண்டும். ஆனால் நடந்ததோ நேரெதிரானது. இனியேனும் நாம் இவற்றையெல்லாம் சரிசெய்து உண்மையான வரலாற்றினைக் கற்பிக்கத் துவங்கவேண்டும்.
*
உலகில் எந்த நாட்டினைவிடவும் இந்தியாவில் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்த வரலாற்றைப் படிக்கிற எவருக்கும், என்ன காரணத்திற்காக அது அத்தனையும் இன்றைக்கு இந்தியாவிலிருந்து மறைந்துவிட்டது என்கிற கேள்வி மனதில் எழுவதனைத் தவிர்க்க இயலாது.
எனவே, இந்த இடத்திலிருந்து எவ்வாறு பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து இந்தியக் கப்பல் கட்டும் தொழிலை அழித்து ஒழித்தார்கள் என்பதனை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
இந்த வரலாற்றினைக் குறித்து விவரிக்கும் திரு. கங்காஷங்கர் மிஸ்ரா அவர்கள் இவ்வாறு எழுதுகிறார்,
"மேற்கத்திய நாட்டினர் இந்தியாவுடன் தொடர்பு கொண்ட காலத்தில் இந்தியாவில் கட்டப்படும் பெரும் கப்பல்களைக் கண்டு ஆச்சரியத்துடன் வாய்பிளந்தார்கள். 17-ஆம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பியர்களால் 600 டன்களுக்கு மேலான எடையுள்ள கப்பல்களைக் கட்ட இயலவில்லை. ஆனால் இந்தியாவிலோ 1500 டன் எடையுள்ள கோஹா போன்ற பெரும் கப்பல்களை இந்தியர்கள் சர்வசாதாரணமாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். எனவே ஐரோப்பியர்கள் இந்தக் கப்பல்களை விலைக்கு வாங்கி அதனை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். அந்தக் கப்பலில் மூலம் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அதுபோன்ற பெரும் கப்பல்களை இந்தியர்களின் உதவியுடன் கட்டுவதற்கும் துவங்கினார்கள்.
1811-ஆம் வருடம் பிரிட்டிஷ் லெப்டினன்ட் வாக்கர் என்பவர் இந்தக் கப்பல்களைக் குறித்து இப்படிச் சொல்கிறார், "பிரிட்டிஷ் கப்பல்படையில் இருக்கும் கப்பல்களை ஒவ்வொரு 12 வருடங்களும் ஒருமுறை பழுது பார்த்தாகவேண்டும். ஆனால், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்தியக் கப்பல்களை எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் 50 வருடங்கள் நலமாக இயங்குகின்றன. அவற்றைப் பழுதுபார்க்கவேண்டிய அவசியமே இல்லை."
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த இந்தியக் கப்பலான "தரியா தெளலத்" எந்தவிதமான பழுதுமில்லாமல் 87 வருடங்கள் இயங்கியது. நீடித்து உழைக்கும் ரோஸ்வுட், சால் மற்றும் தேக்கு மரங்கள் கொண்டு இந்தக் கப்பல் கட்டப்பட்டிருந்தது.
ஃப்ரெஞ்சுப் பயணியான வால்ட்ஸர் சால்வின்ஸ், 1811-ஆம் வருடம் எழுதப்பட அவருடைய புத்தகமான Le Hindu என்னும் புத்தகத்தில், "ஹிந்துக்களே இன்றைக்கும் கப்பல்கள் கட்டும் தொழிலில் சிறந்து விளங்குகிறார்கள். ஐரோப்பியர்களுக்கும் அதனைக் குறித்து அவர்கள் ஒண்றிரண்டு பாடங்களைக் கற்பிக்கலாம். புதிய கலைகளைக் கற்பதில் சிறந்தவர்களான பிரிட்டிஷ்காரர்கள் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தையும், பிற தொழில்நுட்பங்களையும் ஹிந்துக்களிடமிருந்து மிகப் பொறுமையுடனும், திறமையுடனும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். இந்தியக் கப்பல்கள் மிகவும் கலையழகும், உபயோகமும் உடையவை" எனச் சொல்லுகிறார்.
1736 மற்றும் 1863 ஆண்டுகளுக்கு மத்தியில் மும்பையில் இருக்கும் தொழிற்சாலைகள் வாயிலாக பிரிட்டிஷ்காரர்கள் ஏறக்குறைய 300 கப்பல்களைத் தங்களுக்கென கட்டிக் கொண்டார்கள். அத்தனையும் இந்தியத் தொழில்நுட்பம் மற்றும் இந்தியத் தொழிலாளிகளால் கட்டப்பட்டவை. அந்தக் கப்பல்களில் பலவும் பிரிட்டிஷ் கப்பற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அந்தக் கப்பல்களில் ஒன்றான "ஆசியா" ஏறக்குறைய 2289 டன் எடை கொண்டதாக இருந்தது. அதில் 84 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கல்கத்தாவின் ஹூக்ளி, சில்ஹட், சிட்டகாங், டாக்கா போன்ற பகுதிகளிலும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கப்பல்கள் கட்டப்பட்டன.
1781 மற்றும் 1821 ஆண்டுகளுக்கு மத்தியில் ஹூக்ளியில் மட்டும் 272 கப்பல்கள் கட்டப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1,22,693 டன்களாகும்.
மறந்துபோன நமது பெருமைமிகு வரலாறு - 2
Courtesy:
Narenthiran PS ji
கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!

கோவிலுக்கு செல்லும் முன் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஆன்மீக ரகசியங்கள்!
நற்றுணையாவது அண்ணாமலையாரே
நாம்
அனைவரும் கோவிலுக்குச் செல்கிறோம். சிலர் தினமும் செல்கிறார்கள்; சிலர்
வாரம் ஒருமுறை செல்கிறார்கள்; சிலர் விசேஷ நாட்களில் மட்டும்
செல்கிறார்கள். ஆனால், ஒரு கேள்வியை நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ள
வேண்டும்...
"கோவிலுக்குச் செல்லும் சரியான முறை நமக்குத் தெரியுமா?"
பலர் கோவிலுக்குச் செல்கிறார்கள். தரிசனமும் செய்கிறார்கள். ஆனால், அந்த தரிசனத்தின் முழுப் பலனும் அனைவருக்கும் கிடைக்கிறதா?
ஆன்மீக
அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்.
ஆனால், நாம் கோவிலுக்குச் செல்லும் முறையிலும், மனநிலையிலும், வழிபாட்டு
ஒழுக்கத்திலும் சில விஷயங்களை கடைபிடித்தால் அந்த அருள் பல மடங்கு
அதிகரிக்கும்.
ஒரு கோவில் என்பது
வெறும் கட்டிடம் அல்ல. அது தெய்வீக ஆற்றல் நிரம்பிய ஆன்மீக மையம். அங்கு
நுழையும் முன்பே மனமும் உடலும் தயாராக இருக்க வேண்டும்.
கோவிலுக்குச் செல்லும் முன் என்ன செய்ய வேண்டும்?
கோவிலுக்குச் செல்லும் முன் இயன்றவரை தலைக்குக் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
பருத்தி
ஆடைகள் அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம், ஆலய கருவறையில்
இருக்கும் தெய்வீக அதிர்வலைகளை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும் என்று ஆகம
மரபுகள் கூறுகின்றன.
அதேபோல், கோவிலுக்குச் செல்லும் முன் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மனதிலும் தூய்மை இருக்க வேண்டும்.
கோபம், பொறாமை, வெறுப்பு, அவசரம் போன்ற எண்ணங்களை விட்டு, இறைநினைவோடு செல்ல வேண்டும்.
கோபுர தரிசனத்தின் மகிமை
கோவிலின் ராஜகோபுரத்தை தொலைவிலிருந்தே கண்டவுடன் கைகூப்பி வணங்க வேண்டும்.
ஏனெனில் கோபுர தரிசனமே கோடி புண்ணியம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.
அந்த தருணத்தில் உலக சிந்தனைகளை விட்டு, மனதை இறைவனிடம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
வெறுங்கையுடன் செல்லாதீர்கள்
கோவிலுக்குச்
செல்லும் போது வெறுங்கையுடன் செல்லாமல், இயன்றவரை பூக்கள், பழங்கள் அல்லது
சிறிய காணிக்கையாவது எடுத்துச் செல்ல வேண்டும்.
அது பொருளின் மதிப்பிற்காக அல்ல.
அன்போடு கொடுக்கும் மனப்பான்மைக்காக.
ஆலயத்திற்குள் நுழையும் முறை
காலணி, மொபைல் போன் போன்றவற்றை உரிய இடத்தில் வைத்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
ஆலயத்திற்குள் நுழையும் போது மனதில் இறைநாமம் இருக்க வேண்டும்.
கோவிலுக்குள் தேவையற்ற பேச்சு, சிரிப்பு, சத்தம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கோவில் என்பது பிரார்த்தனை செய்யும் இடம்; உரையாடும் இடம் அல்ல.
முதலில் யாரை வணங்க வேண்டும்?
ஆலயத்தில் நுழைந்தவுடன்:
கொடிமரம்
பலிபீடம்
நந்தி (சிவாலயங்களில்)
இவற்றை வணங்க வேண்டும்.
அதன் பின் துவாரபாலகர்களை வணங்கி, விநாயகரை தரிசித்து, பின்னரே மூலவரை தரிசிக்க வேண்டும்.![]()
தீப ஒளியில் தரிசிக்கும் ரகசியம்
தீபாராதனை
நடைபெறும் போது, இறைவனின் திருமேனியை முழுமையாகப் பார்ப்பதை விட முதலில்
திருவடிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆன்மீக மரபுகள் கூறுகின்றன.
ஏனெனில் இறைவனின் பாதங்களே சரணாகதியின் அடையாளமாக கருதப்படுகின்றன.
அதன்பிறகு திருமேனி முழுவதையும் மனதில் பதிய வைத்து தரிசிக்க வேண்டும்.
கோவில் வலம் வரும் போது
மூலஸ்தானத்தில்
திரை போடப்பட்டிருக்கும் நேரங்களிலும், அபிஷேகம் நடைபெறும் நேரங்களிலும்
பிரகாரத்தை வலம் வராமல் இருப்பது மரியாதையாக கருதப்படுகிறது.
வலம் வரும்போது அவசரமாக ஓடாமல், இறைநாமம் ஜபித்தபடி அமைதியாக வர வேண்டும்.
நிழல்களை மிதிக்கக் கூடாதது ஏன்?
ஆகம மரபுகளில்:
கொடிமரம்
நந்தி
பலிபீடம்
இவற்றின் நிழல்களை மிதிக்காமல் இருப்பது மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.
இது பக்தியின் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.
பிரசாதத்தை எப்படி பெற வேண்டும்?
அர்ச்சகர் வழங்கும்:
விபூதி
குங்குமம்
துளசி
வில்வம்
தீர்த்தம்
எதுவாக இருந்தாலும் பக்தியுடன் இரு கைகளாலும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவற்றை தரையில் போடவோ, வீணாக்கவோ கூடாது.
சிவாலயங்களில் வழங்கப்படும் வில்வத்தையும், பெருமாள் ஆலயங்களில் வழங்கப்படும் துளசியையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
அவசரம் வேண்டாம்
இன்றைய காலத்தில் பலர் தரிசனத்தைக் கூட ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.
வந்து...
கும்பிட்டு...
வெளியேறிவிடுகிறார்கள்.
ஆனால் கோவில் தரிசனத்தின் உண்மையான பலன் மன அமைதிதான்.
அதனால் கோவிலுக்குள் இருக்கும் நேரத்தில் அவசரத்தை மறந்து, இறைவனின் சந்நிதியில் சில நிமிடங்களாவது அமைதியாக அமர்ந்து தியானிக்கலாம்.
தரிசனத்தின் உண்மையான அர்த்தம்
கோவிலுக்குச் செல்வது வெறும் வேண்டுதலுக்காக மட்டுமல்ல.
நம்முடைய மனதை சுத்தப்படுத்திக் கொள்ளவும்...
நம்முடைய அகந்தையை குறைக்கவும்...
இறைவனின் அருளை உணரவும்...
வாழ்க்கையில் நம்பிக்கையை புதுப்பிக்கவும்...
கோவில்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.
எனவே
கோவிலுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், "நான் என்ன கேட்டேன்?"
என்பதற்குப் பதிலாக, "நான் என்ன உணர்ந்தேன்?" என்பதையே சிந்திக்க வேண்டும்.
அப்போதுதான் தரிசனம் முழுமை பெறும்.
பார்வையாளர்களுக்கான கேள்வி
நீங்கள்
கோவிலுக்குச் செல்லும்போது எப்போதும் கடைபிடிக்கும் ஒரு ஆன்மீக வழக்கம்
என்ன? உங்கள் குடும்பத்தில் தலைமுறைகளாக பின்பற்றப்படும் கோவில் மரபு
ஏதேனும் உள்ளதா? 
எம்பெருமான்
திருக்கருணை இருந்தவாறே ![]()
![]()
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ![]()
சிவாய நம
சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

நன்றி இணையம்
