
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.

🙏🌹நன்றி இணையம் 🌹🙏
விரதம்
சம்பாதிக்கிறதே சாப்பிடறத்துக்கு தான். இதிலே விரதம் எதுக்கு.
நாம பட்டினியா இருந்தா, நமக்கு உள்ளே இருக்குற கடவுள பட்டினி போட்டதா ஆகாதா.
என்று இன்றைய மாடர்ன் தலைமுறை பல நேரங்களில் கிண்டலாகக் கேட்பதுண்டு.ல், கடவுள் பெயரால் நம் முன்னோர்கள் வகுத்து வைத்த இந்த ஏகாதசி விரதத்திற்குப்' பின்னால், சமீபத்தில் மருத்துவ உலகின் உயரிய விருதான நோபல் பரிசையே (Nobel Prize) தட்டிச் சென்ற ஒரு மாபெரும் அறிவியல் ரகசியம் மறைந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஆம்! 2016-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) என்ற விஞ்ஞானிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் கண்டுபிடித்த மாபெரும் மருத்துவ உண்மையின் பெயர் "ஆட்டோஃபேஜி" (Autophagy). இதன் அர்த்தம் 'தன்னைத் தானே உண்ணுதல்'.![]()
அதாவது, ஒரு மனிதன் தொடர்ந்து 14 முதல் 16 மணி நேரம் வரை எந்த உணவும் உட்கொள்ளாமல் உடலைப் பட்டினி போடும்போது, மனித உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகிறது. அப்போது, உயிர் வாழ்வதற்கான ஒரு போராட்டமாக, உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான செல்கள், அங்குள்ள கெட்டுப்போன, முதிர்ச்சியடைந்த மற்றும் கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடிய நச்சு செல்களை உணவாகத் தின்ன ஆரம்பிக்கின்றன! இதனால் மனித உடலுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த கழிவுகளும் எந்த ஒரு மருத்துவச் செலவும் இல்லாமல் தானாகவே சுத்தமாகி, உடல் முழுமையாகப் புத்துணர்ச்சி அடைகிறது. இது தான் அந்த நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு.
ஆனால், இதைத் தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்கள் 'ஏகாதசி விரதம்' என்ற பெயரில் நமக்குக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போனார்கள்!
சரி, எதற்காகச் சரியாக ஏகாதசி அன்று மட்டும் பட்டினி கிடக்க வேண்டும்? வேறு நாளில் இருக்கக் கூடாதா? அங்குதான் இந்து மதத்தின் பிரம்மாண்டமான வானியல் ( Astronomy) அறிவு வேலை செய்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து வரும் 11-வது நாளான ஏகாதசி அன்று, பூமியின் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) மிக மிகக் குறைவாக இருக்கும். அந்த நாளில் அதிக உணவு உட்கொண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதையும், மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்க அதுவே சரியான நாள் என்பதையும் துல்லியமாகக் கணித்தார்கள்.
சாதாரண மக்களிடம் போய் 'ஆட்டோஃபேஜி', 'செல் சுழற்சி' என்று விஞ்ஞானம் பேசினால் யாருக்கும் புரியாது என்பதால், அந்த மாபெரும் மருத்துவ அறிவியலை இறைவனோடு இணைத்து 'விரதம்' என்று வாழ்வியலாக மாற்றிக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள்.
இன்றைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்களை, நாம் என்றைக்கோ பின்பற்றி விட்டுப் பழசு என்று தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இனியாவது ஏகாதசி விரதம் இருந்தால் முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள்; அது நோபல் பரிசு பெற்ற ஒரு தலைசிறந்த மெடிக்கல் ட்ரீட்மென்ட்!
ஒவ்வொரு மாசமும் இரண்டு ஏகாதசி வரும். நாளை ஏகாதசி. பெருமாளை வணங்கி விட்டு விரதம் இருக்க தொடஙகுவோம். மதியம் பசித்தால் பழம் ஏதாவது சாப்பிடலாம். பால் டீ காபி குடிக்கலாம். இரவு சாப்பிடலாம்
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷



இறந்த பின்பும் வாழ்வது யார்? – பிணவறையில் கிடைத்த ஞானம்! ✨
இன்று எதிர்பாராத ஒரு விபத்து... விதியின் சதியால் பிணவறைக்குள் (Mortuary) நுழைய வேண்டிய கட்டாயம். அங்கே நான் கண்ட காட்சிகள், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை; மனித வாழ்க்கையின் அத்தனை அகங்காரங்களையும் சுக்குநூறாக்கியவை!
"அங்கே மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர். பத்துக்கும் மேற்பட்ட உடல்கள்... சில வெற்றுத் தரையில், சில மேசைகள் மீது, ஒன்று பிரேதப் பரிசோதனை செய்யும் திட்டின் மேல். ஆணாதிக்கமும் பெண்ணாதிக்கமும் அற்ற, பாலின பேதங்கள் கடந்த ஒரு மௌன உலகம் அது.
அப்போது பிணவறை உதவியாளர் உள்ளே வந்து, ஒரு உடலின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தினார். அந்த உடலால் தன் மானத்தை மறைக்க கைகளைக் கூட அசைக்க முடியவில்லை. என் நெஞ்சு துடித்தது... என்னை நானே கேட்டுக்கொண்டேன், இதுதானா வாழ்க்கை?
👉 எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள நாம் ஏன் இத்தனை போராட்டம் நடத்துகிறோம்?
👉 உலகமே நமக்குச் சொந்தம் என்ற திமிரும், அகங்காரமும் எதற்கு?
👉 நாம் ஏன் ஒருவரையொருவர் மன்னித்து, அரவணைத்து அன்பான ஒரு வாழ்க்கை வாழக் கூடாது?
ஐந்து வீடுகளுக்கு அதிபதியான வீட்டு உரிமையாளர்கள், பெரிய பட்டங்கள் வாங்கிய மேதாவிகள், சொகுசு கார்களில் வலம் வந்தவர்கள்... அனைவரும் இன்று எந்த பேதமும் இன்றி ஒருவருக்கு அருகில் ஒருவர் படுத்திருக்கிறார்கள். இந்த ஊரின் பெரும் பணக்காரனும், கிணறு வெட்டும்போது மண் சரிந்து இறந்த ஏழைத் தொழிலாளியும் ஒரே இடத்தில், ஒரே தகுதியில்...
விதவிதமான அலங்காரங்களோடும், ஆடைகளோடும் தன் அழகின் மீது கர்வம் கொண்ட பெண்கள், இன்று தலைவிரிகோலமாய்...
நாமெல்லாம் எதை நோக்கி ஓடுகிறோம்? சக மனிதனுக்கு ஒரு சிறு உதவியாவது செய்கிறோமா?
பதவி என்பது சிறிது காலம், செல்வமும் வயதும் தற்காலிகமானது. நான் எப்போது இறப்பேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இறந்த பின்பு எனக்கு என்ன நடக்கும் என்பதை இன்று என் கண்கள் நேரடியாகக் கண்டன.
ஒருவேளை எனக்கு மீண்டும் உயிர்த்து எழும் வரம் கிடைத்தால்...
நான் இன்னும் சிறப்பாக வாழ விரும்புவேன். பணிவாக இருக்கவும், பிறரை எளிதாக மன்னிக்கவும், முன்பை விட அதிக மனிதாபிமானத்துடன் இருக்கவும் பழகுவேன். ஏனென்றால், இங்கு வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை, மரணம் மட்டுமே நிச்சயம்!
பிணவறையை விட்டு வெளியேறும் போது, அந்த உதவியாளர் சக ஊழியரிடம் சொன்ன ஒரு வாசகம் என் காதுகளில் இடி போல் விழுந்தது:
👉 "அந்த நீல கலர் சட்டை போட்டவரை மட்டும் பார்த்து மெதுவாக கையாளுப்பா... நல்ல மனுஷன்!"
அப்போதுதான் புரிந்தது... இங்கு இறந்த பின்பும் வாழ்வது சிலர் மட்டுமே! அவர்கள் சேர்த்த சொத்துக்களால் அல்ல, அவர்கள் காட்டிய அன்பால் மட்டுமே!"
சிந்தியுங்கள் என் சகோதர சகோதரிகளே...
பணிவாக இருங்கள், அன்பைப் பரப்புங்கள், மனிதர்களை மன்னிக்கப் பழகுங்கள். மீண்டும் ஒரு பிறவி நமக்கு உறுதி என்றால், அது இந்த பூமியில் நல்லதைச் செய்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது! 👍❤️
🙏🌹நன்றி இணையம் 🌹🙏