வாழ்க்கைப் பாடம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:53 PM | Best Blogger Tips


May be an image of studying and text 

இந்த அம்மாவைப் பார்த்து நான் ஒரு நல்ல வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொண்டேன். ❤️
 May be an image of studying
பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில், பள்ளிகளுக்கு எதிரே ஒரு சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இந்த அம்மா. மாணவர்களுக்கு தேவையான பென்சில், ரப்பர், நோட்டு, பேப்பர் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
 
இன்று என் குழந்தைகளுக்காக அவரிடம் ரூல்டு பேப்பர் வாங்கினேன். ஒரு பேப்பர் ₹1.50 என்றார். அதே பேப்பரை வேறு கடைகளில் ₹2 கொடுத்து வாங்கியிருக்கிறேன்.
 May be an image of one or more people and people studying
அதனால், "அம்மா... எல்லாரும் ₹2-க்கு விற்கிறாங்க. நீங்க மட்டும் ஏன் ₹1.50-க்கு கொடுக்குறீங்க?" என்று கேட்டேன்.
 
அதற்கு அவர் சொன்ன பதில் என்னை நெகிழ வைத்தது.
 
"அது போதும் தம்பி... எங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிடைச்சா போதும். பசங்களை ஏமாத்தக் கூடாது. குழந்தைகள் கடவுளுக்கு சமம். 
 
குழந்தைகளை ஏமாத்துறது, கடவுளையே ஏமாத்துற மாதிரி."
 
அந்த ஒரு பதில்... என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது.
 
இன்று பல இடங்களில் அதிக லாபம் மட்டுமே நோக்கமாக இருக்கும் காலத்தில், "நியாயமான லாபம் போதும்" என்று நினைக்கும் மனிதர்களும் இன்னும் இருக்கிறார்கள் என்பதே பெரிய மகிழ்ச்சி.
வியாபாரத்தில் பெரிய மூலதனம் பணம் அல்ல... நேர்மைதான்.
நேர்மையாக சம்பாதித்த ஒரு ரூபாய், அநியாயமாக சம்பாதித்த நூறு ரூபாயை விட உயர்ந்தது.
இந்த அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், மரியாதையும். இவரைப் போன்ற நல்ல உள்ளங்கள் இன்னும் பலர் இருக்க வேண்டும். இந்த அம்மாவைப் போன்ற நேர்மையான வியாபாரிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதே நமக்கு நம்பிக்கையைத் தருகிறது.



🙏
 

இறந்த பின்பும் வாழ்வது யார்? – பிணவறையில் கிடைத்த ஞானம்! ✨

மணக்கால் அய்யம்பேட்டை | 3:40 PM | Best Blogger Tips

 பிணவறையில் கண்ட ஞானம்: மரணமும் வாழ்க்கையின் அர்த்தமும் | Mortuary Wisdom |  TikTok

இறந்த பின்பும் வாழ்வது யார்? – பிணவறையில் கிடைத்த ஞானம்! ✨


​இன்று எதிர்பாராத ஒரு விபத்து... விதியின் சதியால் பிணவறைக்குள் (Mortuary) நுழைய வேண்டிய கட்டாயம். அங்கே நான் கண்ட காட்சிகள், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை; மனித வாழ்க்கையின் அத்தனை அகங்காரங்களையும் சுக்குநூறாக்கியவை!
உயிருடன் இருக்கிறேன் தண்ணீர் கொடுங்கள்" - பிணவறையில் பரபரப்பு
​"அங்கே மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர். பத்துக்கும் மேற்பட்ட உடல்கள்... சில வெற்றுத் தரையில், சில மேசைகள் மீது, ஒன்று பிரேதப் பரிசோதனை செய்யும் திட்டின் மேல். ஆணாதிக்கமும் பெண்ணாதிக்கமும் அற்ற, பாலின பேதங்கள் கடந்த ஒரு மௌன உலகம் அது.


​அப்போது பிணவறை உதவியாளர் உள்ளே வந்து, ஒரு உடலின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தினார். அந்த உடலால் தன் மானத்தை மறைக்க கைகளைக் கூட அசைக்க முடியவில்லை. என் நெஞ்சு துடித்தது... என்னை நானே கேட்டுக்கொண்டேன், இதுதானா வாழ்க்கை?

Pinavarai - An online Tamil story written by Milani Kalidass | Pratilipi.com
​👉 எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள நாம் ஏன் இத்தனை போராட்டம் நடத்துகிறோம்?


👉 உலகமே நமக்குச் சொந்தம் என்ற திமிரும், அகங்காரமும் எதற்கு?


👉 நாம் ஏன் ஒருவரையொருவர் மன்னித்து, அரவணைத்து அன்பான ஒரு வாழ்க்கை வாழக் கூடாது?


​ஐந்து வீடுகளுக்கு அதிபதியான வீட்டு உரிமையாளர்கள், பெரிய பட்டங்கள் வாங்கிய மேதாவிகள், சொகுசு கார்களில் வலம் வந்தவர்கள்... அனைவரும் இன்று எந்த பேதமும் இன்றி ஒருவருக்கு அருகில் ஒருவர் படுத்திருக்கிறார்கள். இந்த ஊரின் பெரும் பணக்காரனும், கிணறு வெட்டும்போது மண் சரிந்து இறந்த ஏழைத் தொழிலாளியும் ஒரே இடத்தில், ஒரே தகுதியில்...


​விதவிதமான அலங்காரங்களோடும், ஆடைகளோடும் தன் அழகின் மீது கர்வம் கொண்ட பெண்கள், இன்று தலைவிரிகோலமாய்...
​நாமெல்லாம் எதை நோக்கி ஓடுகிறோம்? சக மனிதனுக்கு ஒரு சிறு உதவியாவது செய்கிறோமா?

Relatives who went missing after the body of a person who died of a corona  virus infection | கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடையாளம்  காணாமல் தவித்த உறவினர்கள் ...
​பதவி என்பது சிறிது காலம், செல்வமும் வயதும் தற்காலிகமானது. நான் எப்போது இறப்பேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இறந்த பின்பு எனக்கு என்ன நடக்கும் என்பதை இன்று என் கண்கள் நேரடியாகக் கண்டன.
​ஒருவேளை எனக்கு மீண்டும் உயிர்த்து எழும் வரம் கிடைத்தால்...


நான் இன்னும் சிறப்பாக வாழ விரும்புவேன். பணிவாக இருக்கவும், பிறரை எளிதாக மன்னிக்கவும், முன்பை விட அதிக மனிதாபிமானத்துடன் இருக்கவும் பழகுவேன். ஏனென்றால், இங்கு வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை, மரணம் மட்டுமே நிச்சயம்!


​பிணவறையை விட்டு வெளியேறும் போது, அந்த உதவியாளர் சக ஊழியரிடம் சொன்ன ஒரு வாசகம் என் காதுகளில் இடி போல் விழுந்தது:


👉 "அந்த நீல கலர் சட்டை போட்டவரை மட்டும் பார்த்து மெதுவாக கையாளுப்பா... நல்ல மனுஷன்!"


​அப்போதுதான் புரிந்தது... இங்கு இறந்த பின்பும் வாழ்வது சிலர் மட்டுமே! அவர்கள் சேர்த்த சொத்துக்களால் அல்ல, அவர்கள் காட்டிய அன்பால் மட்டுமே!"


​சிந்தியுங்கள் என் சகோதர சகோதரிகளே...


பணிவாக இருங்கள், அன்பைப் பரப்புங்கள், மனிதர்களை மன்னிக்கப் பழகுங்கள். மீண்டும் ஒரு பிறவி நமக்கு உறுதி என்றால், அது இந்த பூமியில் நல்லதைச் செய்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.


​புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது! 👍❤️

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

இனி வரும் உலகம் மிகவும் கொடூரமான

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips

 

100 mark எடுத்தேன்
1st group எடுத்தேன்…”
“Engineering join பண்ணிட்டேன்…”
இவையெல்லாம் வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதம் இல்லை.
இனி வரும் உலகம் மிகவும் கொடூரமான போட்டி உலகம்.
உலகம் முழுவதும்:
* AI
* Robotics
* Automation
* Driverless vehicles
* Smart factories
* Machine learning
என்று மனிதர்களின் வேலைகளை மெதுவாக எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில்:
வேலைக்கு ஆள் தேவைஎன்றார்கள்.
இன்று:
ஒரே ஆளால் 5 பேரின் வேலையை செய்ய முடியுமா?” என்று கேட்கிறார்கள்.

Engineering​ | CIEE
நாளை:
இந்த வேலையை மனிதன் இல்லாமலே Machine செய்ய முடியுமா?” என்று பார்க்கப் போகிறார்கள்.
இனி வரும் காலத்தில் மிகவும் முக்கியமான 5 விஷயங்கள்:
1. கல்வி
2. திறமை
3. உடல் ஆரோக்கியம்
4. மன உறுதி
5. பொருளாதாரம்
இதில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் வாழ்க்கை தடுமாறும்.

உலகை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகள்:


* வெப்பநிலை உயர்வு (Global warming)
* தண்ணீர் பற்றாக்குறை
* விவசாய வீழ்ச்சி
* உணவு தட்டுப்பாடு
* வேலை இழப்பு
* பொருளாதார சரிவு
* போர் பதற்றம்
* பெட்ரோல் மற்றும் எரிசக்தி நெருக்கடி
இவை எல்லாம் புத்தகத்தில் படிக்கும் செய்தி அல்ல


உங்கள் தலைமுறை நேரில் சந்திக்கப்போகும் உண்மைகள்.
 

இனி சாதாரண Degree மட்டும் போதாது.
B.E., B.Sc., B.Com., MBA என்று ஆயிரக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர்.
ஆனால் வேலை?
 

* Delivery job
* Temporary contract
* Call center
* App-based work


இவற்றில்தான் பலர் முடிகிறார்கள்.
Engineering college-கள் பல இடங்களில்:
 

மாவு அரைக்கும் இயந்திரம் போல
மாணவர்களை சேர்த்து
 

“Degree” கொடுத்து வெளியே அனுப்புகின்றன
ஆனால் Industry கேட்பது:
 

“Skill இருக்கிறதா?” என்பதைத்தான்.

மாணவர்களே
Plus Two என்பது:
“School life continuation” அல்ல.
 

அது:
வாழ்க்கையின் முதல் போர்க்களம்.”
10th வரை:
Teacher உங்களை தள்ளிச் செல்லுவார்.
 

Plus Two முதல்:
நீங்கள் உங்களை நீங்களே இழுத்துச் செல்ல வேண்டும்.
 

இனி நீங்கள் போட்டி போட வேண்டியது:
உங்கள் தெரு நண்பர்களோடு அல்ல
முழு உலகத்தோடும்.
அதிலும் முக்கியமாக:
 

இன்றைய 
* படிப்பில்
* வேலையில்
* Communication skill-ல்
* Discipline-ல்
* Planning-ல்
* Competitive exams-ல்
பல இடங்களில்  …
 

இனி:
யார் திறமையானவர்?
யார் consistent?
யார் hard work செய்கிறார்?
அவர்கள்தான் மேலே வருவார்கள்.
NEET எழுதப் போகிறீர்களா?
 

அப்படியானால்:
* 2 வருடம் உயிரை வைத்து உழைக்க தயாரா?
* Coaching pressure handle பண்ண முடியுமா?
* குடும்ப பொருளாதாரம் support செய்யுமா?
என்று முதலில் யோசியுங்கள்.
 

பின்னால்:
“Seat கிடைக்கல…”
“Fees கட்ட முடியல…”
“Management quota முடியல…”
என்று அழ வேண்டாம்.
Maths group எடுக்கிறீர்களா?
 
AI Coding Tip 002 — Prompt in English | by Maximiliano Contieri |  CodeToDeploy | Medium

அப்படியானால்:
* Coding
* AI tools
* English fluency
* Communication
* Technology adaptation
 

இவைகளை உடனே கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
இல்லையெனில்:
Degree மட்டும் இருக்கும்
Direction இருக்காது.
_
ITI / Skill education
குறைவான கல்வி அல்ல.
நாளை உலகம் தேடப்போகும் மக்கள்:
 
Robotics Technician | Science & Engineering Career

* Electrician
* CNC operator
* Robotics technician
* Solar technician
* AC mechanic
* Automation expert
* AI maintenance engineer
போன்றவர்கள்.
 

முக்கிய அறிவுரை:
* Mobile addiction- கட்டுப்படுத்து
* Reels வாழ்க்கையை அழிக்க விடாதே
* இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை நிறுத்து
* உடல் ஆரோக்கியத்தை காப்பாற்று
* English கற்று கொள்
* Computer skill கற்று கொள்
* Public speaking கற்று கொள்
* Financial knowledge வளர்த்து கொள்
 

இனி வரும் காலம்:
“Soft life” அல்ல
“Survival life.
Punch Dialogues:
 

உழைக்காதவனை உலகம் மறக்கும்
உழைத்தவனை உலகம் பயன்படுத்தும்.”
 
டிகிரி மட்டும் வேலை தருமா? -Gen Z கல்லூரி மாணவர்கள், AI புரட்சி மற்றும்  எதிர்கால இந்தியா - Tamil News - Latest Tamil News

\“நாளைய உலகம் Degree- கேட்காது
Delivery செய்ய முடியுமா அல்லது Development செய்ய முடியுமா என்பதைத்தான் கேடும்.”

AI வருவது ஆபத்து இல்லை
AI- பயன்படுத்த தெரியாததே ஆபத்து.”
படிக்கும்போது வியர்வை சிந்தவில்லை என்றால்
 

வாழ்க்கையில் கண்ணீர் சிந்த வேண்டி வரும்.”
மார்க் மட்டும் வாழ்க்கையை உயர்த்தாது
Market-ல் நிற்கும் திறமை தான் உயர்த்தும்.”
போட்டி உங்கள் Class room-ல் இல்லை
China, America, Japan மாணவர்களோடு.”
 

இனி சோம்பேறிகளுக்கு சம்பளம் கிடைக்காது
திறமைசாலிகளுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.”
பெண்கள் வேகமாக முன்னேறுகிறார்கள்
 

நீ இன்னும் Mobile scroll பண்ணிக்கொண்டிருக்கிறாய்.”
 

தண்ணீர், உணவு, வேலை
இவை மூன்றும் வரும் காலத்தில் தங்கத்தை விட விலை உயர்ந்தவை.”
 

வாழ்க்கை உன்னை காப்பாற்றாது
நீ தயாரானால் மட்டுமே நீ உயிர் பிழைப்பாய்.”
கஷ்டப்பட்டு படிப்பது 2 வருடம்
 

கஷ்டப்பட்டு வாழ்வது 40 வருடம்.”
உன் App usage தான் உன் future- தீர்மானிக்கிறது.
சிந்தித்து செயல்படு

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

திறவுகோல் - இந்தியாவின் கையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:42 PM | Best Blogger Tips

 May be an image of temple

உலகையே சமைப்பவன் ...
 
இந்த ஆட்டம் வளைகுடாப் பகுதியில் நடப்பதல்ல; இது குஜராத்தில், திரைக்குப் பின்னணியில் நடக்கும் ஆட்டம்.
 
அரசரிடம் கச்சா எண்ணெய் இருப்பதில்லை; சுத்திகரிப்பு ஆலைகள்தான் அவரிடம் உள்ளன.
சவூதி அரேபியாவால் என்ன செய்ய முடியும்? அது குழாயைத் திறக்கலாம் அல்லது மூடலாம்; விலையை ஏற்றலாம் அல்லது குறைக்கலாம். அவ்வளவுதான்.
 
ஆனால், அந்தக் கச்சா எண்ணெயை வைத்துக்கொண்டு அது என்ன செய்யும்? அது வெறும் கறுப்பு நிறச் சேறு கலந்த நீர் போன்றது. அதை பெட்ரோல், டீசல் அல்லது ஜெட் எரிபொருளாக மாற்றாவிட்டால், உலகம் ஸ்தம்பித்துவிடும்.
 
அந்த அடுப்பை இயக்கும் திறவுகோல் இன்று இந்தியாவின் கையில் உள்ளது.
 
1. எரிபொருள் விநியோகத்தின் திறவுகோலை வைத்திருப்பவர்...
 
உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் எங்கே உள்ளது? அமெரிக்காவிலா? துபாயிலா? இல்லை.
 
அது குஜராத்தின் ஜாம்நகரில், இந்தியாவில் உள்ளது.
 
ஒரே இடத்தில் நாளொன்றுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெயைச் சுத்திகரிக்கும் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்டமான நிலையம் அது.
 
2022-ஆம் ஆண்டை மறந்துவிட்டீர்களா?
ஐரோப்பா முழுவதும் குரல் கொடுத்தது: "ரஷ்ய எண்ணெய் வேண்டாம்!" என்று அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன; தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
 
ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு என்ன நடந்தது? ஐரோப்பா இருளில் மூழ்கியது. ஜெர்மனியில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. லண்டனில் லாரிகள் வரிசையில் நின்றன. டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
 
அப்போது அதைக் காப்பாற்றியது யார்?
 
இந்தியா.
 
வேறு யாரும் வாங்க முன்வராத ரஷ்யாவின் கச்சா எண்ணெயை இந்தியா 60 டாலருக்கு வாங்கியது. அதே கப்பல் ஜாம்நகருக்குக் கொண்டுவரப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, 120 டாலர் விலையில் மீண்டும் ஐரோப்பாவிற்கே விற்கப்பட்டது.
 
ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்டதாக உலகம் முழுவதும் பேசியது. ஆனால், இந்திய டீசல் விநியோகத்தால் ஐரோப்பாவின் இதயம் துடிப்பதை நிறுத்தவில்லை.
 
இதுதான் 'ஸ்விங் சப்ளையர்' (தேவைக்கேற்ப விநியோகத்தை மாற்றியமைக்கும் முக்கிய விநியோகஸ்தர்) எனும் நிலை.
 
நீங்கள் தடைகளை அறிவிப்பீர்கள்; ஆனால் எரிபொருள் விநியோகத்தை நாங்கள் தீர்மானிப்போம். நாங்கள் விநியோகத்தை நிறுத்தினால், உங்கள் நாடு இருளில் மூழ்கிவிடும்.
 
2. லண்டனில் உள்ள நான்கு கொள்ளையர்கள் - உண்மையான எஜமானர்கள்
சவூதி அரேபியா எண்ணெயை விற்பதில்லை; 
 
ரஷ்யாவும் எண்ணெயை உற்பத்தி செய்வதில்லை.
லண்டன் மற்றும் ஜெனீவாவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்திருக்கும் நான்கு நிறுவனங்களின் ஒப்புதல் இல்லாமல், உலகில் ஒரு துளி எண்ணெய் கூட நகர்வதில்லை.
அவர்கள் எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதில்லை; எண்ணெயை விற்பதும் இல்லை. அவர்கள் ஒரே ஒரு வேலையைத்தான் செய்கிறார்கள் - இடைத்தரகர்களாக இருந்து கொள்ளையடிப்பது.
 
விடோல் (VITOL) - இவர்களே தலைவர்; உலகின் மிகப்பெரிய கொள்ளையர். நாளொன்றுக்கு 7 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெயை இவர்கள் கையாளுகிறார்கள். இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெயில் பாதி இவர்களது கப்பல்களில்தான் வருகிறது.
 
கிளென்கோர் (Glencore) - கடத்தல்காரர். அவர் சுவிட்சர்லாந்தில் அமர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ட்ராஃபிகுரா (Trafigura) - ஒரு கடத்தல்காரர். இவருடைய தொழில் கடலில்தான். ரஷ்ய எண்ணெயை இந்திய எண்ணெயாக மாற்றிக்காட்டி, கடலிலேயே ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு அதை எப்படி மாற்றுவது என்பது இவருக்குத் தெரியும். அந்த எண்ணெயின் உண்மையான பிறப்பிடத்தையே மறைத்து அழித்துவிடுவார் இவர்.
 
கன்வர் (Gunvor) - புடினின் நிழல். ஒரு காலத்தில் இவர்கள் புடினின் சொந்த நிறுவனமாகவே கருதப்பட்டனர். இன்றும் ரஷ்ய எண்ணெயை உலகிற்கு விநியோகிப்பவர்கள் இவர்களே.
அவர்களுக்குப் போர் தேவை. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் போரைக் கண்டு அஞ்சும்போது, இவர் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்.
 
3. உண்மையான எண்ணெய் சந்தை தரையில் இல்லை, காகிதத்தில்தான் உள்ளது.
உலகம் ஒரு நாளைக்கு 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பயன்படுத்துகிறது. ஆனால் காகிதத்தில் - அதாவது 'ஃபியூச்சர்ஸ்' (futures) சந்தையில் - 100 மில்லியன் பீப்பாய்கள் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
 
அதுதான் 'காகித எண்ணெய்' (paper oil).
நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு வங்கியாளருக்கு ஒரு ட்வீட் அனுப்பினால் போதும். அல்லது "ஈரான் தாக்குதல் நடத்தப்போகிறது" என்று ஒரு வதந்தியைப் பரப்பினாலே போதும்.
கச்சா எண்ணெய் அதே இடத்தில்தான் இருக்கும். ஒரு துளி கூட நகராது. ஆனால் உங்கள் நாட்டில் பெட்ரோல் விலை இரட்டிப்பாகிவிடும்.
 
விலையை ரியாத்தில் உள்ள ஷேக் தீர்மானிப்பதில்லை. அதை நியூயார்க்கில் உள்ள சூதாடிதான் தீர்மானிக்கிறார்.
 
4. அமெரிக்கா - கையில் ஆயுதம் வைத்திருப்பவர்
அமெரிக்காவிடம் SPR (Strategic Petroleum Reserve) எனப்படும் ஒரு ரகசிய சேமிப்பு கிடங்கு உள்ளது.
உலகில் விலை உயரும்போது, அமெரிக்கா அந்தக் கிடங்கைத் திறக்கும். 2022-ல், 180 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியேற்றி பைடன் சவுதியின் திட்டத்தை முறியடித்தார். சவுதி உற்பத்தியைக் குறைத்தாலும் விலையை உயர்த்த முடியாது; ஏனெனில் அமெரிக்கா அந்தக் கிடங்கின் மூடியைத் திறந்துவிடும்.
 
சவுதி அரேபியாவே அஞ்சும் 'பிரம்மாஸ்திரம்' அதுதான்.
 
கிளைமாக்ஸ்...
 
இப்போது சொல்லுங்கள், யார் ராஜா?
 
சவுதி அரேபியாவிடம் குழாய் (tap) உள்ளது.
 
ரஷ்யாவிடம் தள்ளுபடி (discount) உள்ளது.
 
அமெரிக்காவிடம் டாலர் உள்ளது.
 
ஆனால் இந்தியாவிடம் 'சுவிட்ச்' (switch) உள்ளது.
கச்சா எண்ணெய் இல்லாமல் இந்தியா இயங்க முடியாது என்று சிரித்தவர்களிடம் இதைச் சொல்லுங்கள் - சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்பதே உண்மை.
 
இன்று உலகின் ஏதோ ஒரு கரையில் இருள் சூழ்ந்தால், ஒளியுடன் ஓடி வருபவர் சவுதி அரேபியாவிலிருந்து வரப்போவதில்லை. இது குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து வரும் ஒரு கப்பலாக இருக்கும்.
 
உணவை வழங்கும் நாடு சவுதி அரேபியாவாக இருக்கலாம்; ஆனால் உணவு 
 
சமைக்கப்படாவிட்டால் அதை உண்ண முடியாது. அந்த அடுப்பு இன்று இந்தியாவின் கைகளில் உள்ளது....🙏🏻🙏🏻💪🏻💪🏻
 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷