THE TRIGGER HAPPY MAN Mr. விஜயகுமார் IPS

மணக்கால் அய்யம்பேட்டை | 9:50 AM | Best Blogger Tips

 

விஜயகுமார் IPS
வெற்றியின் வரலாறு !
 
சென்னை கமிஷ்னரேட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் கமிஷனர்களாக கால் பதித்து சென்றிருக்கிறார்கள் ! கடமை உணர்வுமிக்கவர்கள் , கை சுத்தமில்லாதவர்கள் , நேர்மையானவர்கள் , நிலை தடுமாறியவர்கள் , அடிபணியாத வணங்காமுடிகள் , அரசியல்வாதிகளின்
கைபாவைகள் சபலத்தில் சறுக்கி விழுந்து சீரழிந்தவர்கள் , சகலகலா வல்லவர்கள் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு முகமமூடி உள்ளது ! 
Vijay Kumar Ips,ராஜினாமா செய்து விட்டு ... 
அதில் விஜயகுமாரின் பதவி காலம் பொற்காலம் என்றே வர்ணிக்கப்பட்டது ! வீர , தீர செயல்களுக்கும் , விவேகத்திற்கும் மறுபெயர் இந்த முன்னாள் மாநகர கமிஷ்னர் ! மடிந்துவிட்ட மாநகர போலீசின் பெருமையை மீட்டுக் கொடுத்த மாமனிதன் ! 
 
டம்மியான பதவி ,
சிறந்த சென்சிடிவான பதவி என்றெல்லாம் தரம் பிரித்து பாராமல் , எங்கு போஸ்டிங் செய்யப்பட்டாலும் தன் சிறந்த செயல்பாடுகளால் சென்ற இடத்தை சென்சிடிவானதாக மாற்றி காட்டும் மாமனிதன் இவர் !
 
மாநகர காவல் துறையில் கமிஷனராக இருந்தவர்களிலேயே "ஆணழகன் " என்று அனைவராலும் கவரப்பட்டவர் ! அட்டகாசமான உடற்கட்டு , கவர்ச்சியான தோற்றம் , கம்பீரமான குரல் வளம் , 
 
பொன்னை உருக்கி ஊற்றியது போல் அப்படி ஒரு பளபளக்கும் நிறம் , பார்ப்பவர்களை தன் வயப்படுத்தும் ! 
May be an image of text 
அறிவுசார் அழகுமுகம் , (Intellectual Face ) மொழிப் புலமை என்று அத்தனையும் சரி விகிதத்தில் இணைந்த அபூர்வ கலவை இந்த கமிஷனர் ! 
 
மாநகர மக்களின் நினைவில் நீங்காமல் நிலைத்து நிற்பவர் ! உலக அரங்கில் தமிழக போலீசாருக்கென்று ஒரு தனி பெருமை உண்டு ! 
 
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாக பேசப்பட்டது தமிழக போலீசாரின் பெர்ஃபார்மன்ஸ் ! வேலியே பயிரை மேயும் விந்தையாலும் , போலீஸ் என்ற போர்வையில் சில கிரிமினல்அதிகாரிகளின் ஊடுருவலாலும் கெட்டு சீரழிந்தது காவல்துறையின் பெருமை ! 
 
தன்னலமற்ற மக்கள் பணியில் தளராத ஈடுபாடு , அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணியாத அஞ்சாத நெஞ்சுரம் , உயர்ந்த சிந்தனை , விதியை மாற்றி எழுதும் விவேகம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த போலீஸ் அதிகாரியை இன்று உலகமே விழி விரிய பார்த்துக்கொண்டிருக்கிறது !
 
மடிந்து விட்ட காவல்துறையின் பெருமைகளை தூக்கி நிறுத்த ஒரு விடியலை நோக்கி வீர நடை போட்டவர் ! அதில் வெற்றியும் கண்டவர் ! உருகுலைந்த காவல்துறையின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவர் ! 
 
முடியாததை முடித்துக் காட்டும் மந்திரம் இருக்கிறது இந்த மாமனிதரிடம் ! 
 
சென்னை மாநகர கமிஷனாக இருந்தபோது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளிலும் , தாதாக்களை தகனம் செய்வதிலும் இவர் காட்டிய வீரதீர சாகசங்கள் இன்று வரை மாநகர மக்களின் மனதை விட்டு மறையாது ! தீய சக்திகளிடம் துப்பாக்கியால் மட்டுமே பேசி பழக்கப்பட்டவர் ! 
 
தேவாரத்தை அடுத்து THE TRIGGER HAPPY MAN என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டவர் விஜயகுமார் மட்டுமே !
 
மாநிலத்தின் மூலை முடுக்கெங்கும் இந்த பெயர் முணுமுணுக்கப்பட்டது ! சிட்டியை அத்தனை சிறப்பாக வைத்திருந்த கமிஷனரை இதுவரை யாருமே கண்டதில்லை ! வீரப்பனின் விலாசத்தை தேடிப்பிடித்து , வீர சாகசத்தை நிகழ்த்தி காட்டியவர் ! பிடிக்கவே முடியாத மாயாவி என்று சவாலிட்ட சந்தன வீரப்பனை சிதைத்து சரித்திர சாதனை படைத்தவர் ! 
 
வீரப்பன் ஆபரேஷனில் தங்கள் விதியை முடித்துக் கொண்ட 44 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் வீரவணக்கம் செலுத்தி இருக்கிறார் விஜயகுமார் !
 ஓய்வு பெற்றார் வீரப்பன் புகழ் ...
உலக நாடுகளில் உள்ள அனைத்து மீடியாக்களிலும் , ஒரே நேரத்தில் பளிச்சிட்டது இவரது முகம் ! நான் , எனது என்ற ஆணவத்தை அறவே காண முடியாது இவரிடம் ! 
 
ஒரு நிலையில் , தமிழகத்தில் தாண்டவமாடிய அரசியல் நெருக்கடிகளால் மனம் வெறுத்து , மத்திய அரசின் டெபுடேஷனில் சென்று விட்டார் !
 
சென்ற இடமும் மிக மிக சென்சிட்டிவான CRPF ! ஆனால் CRPF பிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது ! சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள் உச்சத்தில் இருந்த காலம் அது !
இங்கு பதவியில் அமர்ந்த குறுகிய நாட்களுக்குள் CRPF பின்Structure யே மாற்றி எழுதி விட்டார் இந்த மனிதன் !
 President Droupadi Murmu presents Padma Shri in the field of Civil ...
 இவரது எளிமையும் , அன்பான , ஆர்ப்பாட்டமில்லாத அணுகுமுறையையும் கண்டு CRPF குடும்பமே அன்று சந்தோஷத்தில் திக்கு முக்காடியது ! 
 
சென்னை மாநகர கமிஷ்னராக இருந்தபோது , ஒரு நாள் மதியம் உணவு இடைவேளையில், கமிஷனரின் கார் ஒரு அவசர வேலையாக வெளியில் சென்று விட்டது ! அருகிலேயே இருப்பதால் விஜயகுமார் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு சென்று வருவது வாடிக்கையான ஒன்று ! 
 IPS Vijayakumar mass real life inspirational stories | Tamil Nadu News
அவர் நினைத்திருந்தால் , MT க்கு தகவல் கொடுத்திருந்தால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் கமிஷனரேட்டில் ! ஆனால் பந்தாவும் ஆர்ப்பாட்டமும் அறவே இல்லாத விஜயகுமார் வாசலில் வந்து நின்றார் ! IS இன்ஸ்பெக்டர் ஒருவர் (யேசுராஜ் ) தன் பைக்கை ஸ்டார்ட் செய்ததை கண்டதும் , "யேசுராஜ் உங்க பைக்கை கொஞ்சம் கொடுக்க முடியுமா ? வீடு வரை போயிட்டு வந்துடறேன் என்று சர்வ சாதாரணமாக கேட்டதும் ,
ஆடிப் போய்விட்டார் IS இன்ஸ்பெக்டர் ! 
 K. Vijay Kumar - Wikipedia
எந்த டென்ஷனும் இல்லாமல் புல்லட்டில் அமர்ந்து லாவகமாக ஒரு அழுத்து, அழுத்த உருமலுடன் ஸ்டார்ட் ஆனது புல்லட் ! அந்த கண்கொள்ளா காட்சியை கமிஷனரேட்டே
கூடி நின்று வேடிக்கை பார்த்தது ! கமிஷனரேட்டை கடந்து புதுப்பேட்டை வழியாக வாலாஜா ரோடு வரை கமிஷ்னர் சென்றதை ஓர் அதிசயமாக கண்டு ரசித்தனர் மாநகர மக்கள் ! 
 
" என்ன மாதிரி ஒரு மனுஷன் ! என் சர்வீஸ்லே இது மாதிரி ஒரு Officer கிட்ட நான் வேலை செய்தது இல்லை ! அத்தனை பெருமையா இருக்கு தம்பி " என்று பரபரப்பு அடங்காமல் உணர்ச்சிவசப்பட்டார் அன்று RI யாக இருந்த பரமேஸ்வரன் (டிராபிக் 24. எழும்பூர்)
CRPF பிலும் அப்படி தான் ! பந்தாவுக்கும் , ஆர்ப்பாட்டத்திற்கும் அப்பாற்பட்டவர் , தன் வாகனத்திற்காக காத்திருக்க மாட்டார் ! 
 முன்னாள் காவல் துறை அதிகாரியான கே. விஜயகுமார் IPS அவர்களுக்கு, மத்திய அரசு  சார்பில் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சட்டென்று சைக்கிளில் ஏறி பறந்து விடுவார் ! 
 
தீவிரவாதிகள் பற்றிய பயம் துளி கூட இல்லாமல் தன்னந்தனியாக காடுகளில் பயணிப்பார் !
CRPF இல் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் ( Bada Khana) இவர் பந்தாவும் , கௌரவமும் பாராமல் சக அதிகாரிகளுடனும் , 
 
சிப்பாய்களோடும் சரிசமமாக அமர்ந்து சாப்பிடுவார் ! 
 
செல்லுமிடமெல்லாம் அதிரடியில் "தர்பாரை " வைத்து ( குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்டு
அறிதல் ) அசத்தி விடுவார் ,! 
 
பணி மூப்பில் இவருக்கு ஓய்வு கொடுத்தாலும் , அது இந்திய காவல்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் ! சர்வீசை விட்டு இவர் விலகினாலும் , இவரது புகழலைகள் என்றும் ஓய்வதில்லை !
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
 
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் !
என்ற வாலியின் தத்துவ பாடலொன்று ரேடியோ FM மில் ரீங்காராமிட்டது Coincidence ! 
 
 
FB copy from Indrajith R
 
 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and people smiling🌷 🌷🌷 🌷

கர்ம யோகி (55) தெய்வப்பிறவி!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:56 AM | Best Blogger Tips

 May be an image of dais and text

 கர்ம யோகி (55):: 

 
தெய்வப்பிறவி! 
 
இத்தொடரை இன்னும் கூட விரிவாக எழுதியிருக்கலாம்! முகநூலுக்கு அது சரி வராது! ஆனால் அந்த கர்ம யோகியின் முதல் ஐம்பதாண்டு வாழ்க்கை வரலாறை நிறைவாக எழுதியுள்ளேனா என்பதில் எனக்கு ஐயமிருக்கிறது!
May be an image of text 
அவரது 19வது வயதிலிருந்து 35வயது வரையிலான வாழ்க்கை, இந்திய அரசியல்வாதிகளில் யாருமே வாழ்ந்திராத வாழ்க்கை
 
பற்றற்ற துறவியாக, வாழ்க்கையின் ரகசியத்தை அறிய மழையிலும், குளிரிலும்,வெய்யிலிலும், கடும் வெம்மையிலும், ஒரு வேளை உணவு உண்டு பல வேளை பட்டினி கிடந்து, கட்டாந்தரையிலும் பிளாட்பாரங்களிலும் படுத்துகிடந்து, 
 
இமய மலை உறை பனியிலும், ராஜஸ்தான் பாலைவன புயல் அனலிலும், ரயில் பயணங்களுக்கு கூலி வேலை செய்து, அதுவும் கிட்டாத போது நூற்றுக்கணக்கான மைல்கள் பாத யாத்திரை செய்து, தாய் உறவும் துறந்து, தேசத்திற்காக ஒரு இளைஞன் தன்னையேதந்தவர் மோடி ஒருவராகத்தான் இருக்க முடியும்!
 
குஜராத் முதல் அமைச்சர் ஆவதற்காகவோ, இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காகவா அந்த வயதில், அந்த தவ வாழ்க்கையை மேற்கொண்டார்?
 
தெய்வத்தை அறிவதை விட பிறந்த தேசத்தை அறிய வேண்டும் என்பதற்காக அவர் பட்ட பாட்டை, வேறு எந்த இளைஞனாவது கற்பனை கூட செய்து பார்ப்பார்களா? 
 
இந்த நாட்டில் மோடியைத்தவிர இவ்வளவு மோசமாக, தரக்குறைவாக, மரியாதை இல்லாமல் அன்றாடம் தாக்கப்படும் மனிதர் வேறொருவர் உண்டா? 
 
காந்தியையோ நேருவையையோ, ஏன் எமர்ஜென்சி கொண்டு வந்த இந்திராவையோ அவன் இவன் என்று மேடைகளிலேயே அன்றாடம் பேசி விட்டு எவனாவது உயிரோடு நடமாடி இருக்க முடியுமா? (நேற்றைக்கு கூட ஒரு நடிகன் பிரதமரை அவன் இவன் என்று பேசுகிறான்)
 
2001 அக்டோபரில் குஜராத் முதல்வரான அன்று துவங்கிய கீழ்த்தர தாக்குதல் யுத்தம், 25ஆண்டுகளுக்கு மேலாகியும் வேறெந்த தலைவருக்கு உண்டா?
 
"இங்கு ஏற்கனவே வேரூன்றி இருக்கும் அமைப்புமுறை மோடியை, நாகரீகமற்ற, கீழ்த்தட்டைச்சேர்ந்த ஒரு டீக்கடைக்காரனாகவே பார்க்கிறது, 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் வீட்டு வாசலை நெருங்கக்கூட அவருக்கு எந்த வித உரிமையும் கிடையாது என்றும் அது கருதுகிறது"
 
என்று மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பிஜேபி அறிவித்ததும் பத்திரிகையாளர் கவுன்சில், மேல் மட்ட மக்கள் என்று கருதக்கூடிய அறிவுஜீவிகள் மத்தியில் கருதுவதாக ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டதே, அப்படி வேறெந்த தலைவருக்காவது சொல்லி இருக்க முடியுமா?
 
மோடி எந்த விமர்சனங்களுக்கும் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை!
 
தேர்தல் பிரச்சாரம் முடித்து வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மோடியிடம் கேட்டார்கள் 
 
"நீங்கள் வெற்றி பெறுவீர்களா?"
 May be an image of one or more people, train and crowd
மோடி சிம்பிளாக சொன்னார் "நான் மக்கள் நலனுக்காக உழைக்கிறேன், அவர்கள் எங்களை ஜெயிக்க வைப்பார்கள்"
 
தேர்தல் முடிவுகளை உலகமே ஆர்வமாக உற்று நோக்கி கொண்டிருந்தது!
 
ஏப்ரலில் வந்த கருத்து கணிப்புகளிலும் NDTVஐத் தவிர எல்லா டிவிகளும், பிஜேபி கூட்டணி 230தொகுதிகளையே பெறும் என்றே சொல்லின!
NDTV மாத்திரம் பிஜேபி கூட்டணி 275இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும், பிஜேபி மாத்திரம் 235இடங்களை பெறும் என்றது!
 Mother Who Gave Nation a Precious Diamond': Amit Shah, UP CM Yogi Lead  Tributes to Heeraben Modi | India News - News18
தேர்தல் முடிவுகளின் ஆரம்பமே சொல்லி விட்டது! மோடி அமோக வெற்றி பெறப்போகிறார் என்று!
மதியத்துக்கு மேல் பிஜேபி, 25ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272க்கும் மேலாக 282 தொகுதிகளையும், கூட்டணி 336இடங்களையும் பெற்ற போது உலகமே வியந்து போனது! மோடி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தார்!
 India Today | PM Narendra Modi's mother, Heeraben Modi, passed away aged  100 in the wee hours of Friday. The prime minister often spoke of the bond  he... | Instagram
அதிக இடங்களில் போட்டியிட்டிருந்த காங்கிரஸ் வெறும் 44இடங்களில் மாத்திரமே வெற்றி அடைந்திருந்தது! சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்வளவு மோசமான தோல்வி இந்த தேர்தலில் தான்! தமிழ் நாட்டில் அதிமுக 37 இடங்களிலும், பிஜேபி கூட்டணி 2இடங்களிலும் வென்றது!
மே மாதம் 20ந்தேதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளக்கூடிய நாள்!
ஐந்து லட்சம் ஓட்டுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்திருந்த குஜராத்தின் வதோதரா தொகுதியை ராஜினாமா செய்து விட்டு, நாலே கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த வாரணாசி (காசி) தொகுதி எம்பியாக பதவியேற்க பாராளுமன்றம் வந்தார் மோடி!
 PM Narendra Modi's mother visits his official residence for the first time  - PM's mother visits his official residence
முகப்பு படியில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவர், அதுவரை எந்த பிரதமரும் செய்யாத நிகழ்வாக பாராளுமன்ற படிகளில் தலை சாய்த்து, படிகளில் முத்தமிட்டு கண்ணீர் மல்க அமர்ந்து விட்டார்!
 India has achieved success through Reform, Perform and Transform mantra”: Prime  Minister Narendra Modi | DD News
தொலைக்காட்சி நேரலையில் பார்த்து கொண்டிருந்த கோடானுகோடி மக்களும் உணர்ச்சி வயப்பட்ட தருணம் அது!
 First oath of office ceremony of Narendra Modi - Wikipedia
2014 மே 26ந்தேதி இந்திய குடியரசுத் தலைவர் மேதகு பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவிக்க "கர்ம யோகி" மோடி, பாரதத்திரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்!
 

நோய் தீர்க்கும் வாழ்வியல் முறைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips

 நோய் தீர்க்கும் வழிமுறைகள் | நூல் வெளி


நீங்கள் ஏதேனும் உடல்நல பாதிப்புகளால் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்! 

உங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமே, தேவையற்ற மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளின் துணையின்றி உங்களை நீங்களே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

உணவுப் பழக்கவழக்கங்கள்
உடல் நலனை மேம்படுத்தும் உணவு பழக்கங்கள்
  • சமச்சீர் உணவு: காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தண்ணீர் பாதுகாப்பு – மாற்றங்களை துரிதப்படுத்துவோம்! 
  • தண்ணீர் அருந்துதல்: உடல் நச்சுக்களை வெளியேற்றக் পর্যাপ্ত அளவு (நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 லிட்டர்) நீர் குடிக்க வேண்டும்.
  •  துரித உணவுகளால் தீமையே விளைகின்றன என்பதை - ஆதரித்து எழுதுக
  • துரித உணவுகளைத் தவிர்த்தல்: எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைப்பது நல்லது. [1]
  • உடலை ஃபிட்டாக வைத்திருக்க ... 
உடல் உழைப்பு மற்றும் பயிற்சி
ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்கான 7 எளிய காரணங்கள் 
  • தினசரி உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.
  • மன அமைதி: வெற்றியைத் தக்கவைக்கும் ... 
  • மன அமைதி: தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
தூக்கம் மற்றும் ஓய்வு
நல்ல ஓய்வு மற்றும் தூக்கம் ... 
  • போதுமான உறக்கம்: இரவில் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
  • Tropical Jungle Stock Photo - Download Image Now - Forest, Green Color,  Moss - iStock 
  • சுற்றுச்சூழல்: இயற்கையான காற்று மற்றும் சூரிய ஒளி படும் படி நம் வாழ்விடத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 


இயற்கை அன்னையின் கொடையான ஆரோக்கியத்தை மீண்டும் பெற, கீழ்க்கண்ட வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்.

காலை பொழுது

Early morning Images - Free Download on Magnific (formerly Freepik)

அதிகாலையிலேயே துயிலெழுந்து, குடலை முழுமையாகச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். காலை நேரத்தில் கிடைக்கும் மென்மையான சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும்.

உடல் உழைப்பு:
உங்கள் உடல் எடையை விட அதிக எடையை சுமப்பது எப்படி? ஷெர்பாக்கள் அதிக எடையை  சுமப்பதன் ரகசியம் - BBC News தமிழ்
ஆழமான மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்வதும், உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபடுவதும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.

குளியல்

குளிர்ச்சியான நீரில் குளிப்பது உடலின் வெப்பத்தைச் சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சியைத் தரும். முடிந்தவரை தினமும் இருமுறை குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.

இயற்கை உணவு
ஆரோக்கியம் தரும் உணவு வகைகள் - இயற்கை மருத்துவம்... உடலுக்கு ஆரோக்கியம்  தரும் உணவு வகைகளை உண்ண வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று ...
தாவரங்களில் இருந்து கிடைக்கும் சமைக்காத இயற்கை உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள். முந்தைய உணவு முழுமையாகச் செரிமானமான பிறகு மட்டுமே அடுத்த வேளை உணவை உட்கொள்ள வேண்டும்.

நீரும் ஓய்வும்
Drinking water to taking rest: Avoid doing these 3 mistakes after meals to  avoid weight gain - India TV News
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். மற்றும் இளநீர், பழச்சாறுகள், காய்கறி சாறுகள் எடுத்துக்கொள்ளலாம். அல்லது போதிய அளவு தண்ணீர் குடிக்கவும். இரவு சீக்கிரமாகத் உறங்கி, ஆழ்ந்த ஓய்வு எடுப்பது திசுக்களின் சீரமைப்பிற்கு மிக அவசியம்.

மனநிலை
இந்த 5 வகை சிரிப்பில் நீங்கள் எப்படி சிரிக்குறீங்க? உங்க சிரிப்பு உங்களை  பற்றி சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? | What Your Smile Say About Your  Personality in ...
சிரிப்பும், மகிழ்ச்சியும், நல்ல எண்ணங்களும், மன அழுத்தமற்ற அமைதியான சூழலும் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. இவற்றை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! உங்கள் நோய்கள் அனைத்தும் இயற்கையான முறையில் நிரந்தரமாக குனமடைவதை நீங்களே விரைவில் உணர்வீர்கள்!

இயற்கை அன்னையே உண்மையான மருத்துவர்!
இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து!
இயற்கைச் சூழலே நோய் தீர்க்கும் மருத்துவம் 🤝💐💚 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people and people smiling🌷 🌷🌷 🌷

 

முனைவர் பட்டம் காசு கொடுத்து வாங்க....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips

 May be an image of studying

ஒரு கல்லூரியின் வகுப்பில் ஒரு பேராசிரியர் சீரியசாக பாடம் எடுத்து கொண்டு இருந்தார்!
 
அவர் ஒயிட் போர்டில் எழுதி கொண்டு இருக்க ஒரு துடுக்கு மாணவன் விசில் அடித்தான்.
அவர் எழுதுவதை நிறுத்தி விட்டு யார் விசில் அடித்தது என்று கேட்க ! யாரும் உண்மையை சொல்ல வில்லை.
 
அப்பொழுது பேராசிரியர் இத்துடன் இந்த பாடம் முடிகிறது, ஆனால் இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால் உங்களுக்கு என் அனுபவ கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.
 
நேற்று நான் வீட்டில் தூங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த போது தூக்கம் வர வில்லை, சரி காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு வரலாம், நாளை நேரம் இருக்காது என்று நினைத்து பெட்ரோல் போட சென்றேன்.
 
பெட்ரோல் போட்டு விட்டு மெதுவாக வரும்போது வழியில் ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருக்க சரி உதவி செய்யலாம் என்று நினைத்து பேச அவர் சொன்னார் சார் நான் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கேன் ஆட்டோ டாக்ஸி எதுவும் வர வில்லை என்று சொல்ல , நான் சரி உங்களுக்கு உதவுகிறேன் என்று அந்த பெண்ணை அவர்களின் வீட்டில் ட்ராப் செய்தேன்.
 
வண்டியில் இருவரும் நிறைய பேசினோம். அந்த பெண்ணிற்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. வீடு வந்ததும் அந்த பெண் என்னை நேசிப்பதாக சொல்ல நானும் அவளை நேசிப்பதாக சொல்லி நான் பேராசிரியராக கல்லூரியில் வேலை செய்கிறேன் என்று நம் கல்லூரியின் பெயரை சொன்னேன். இருவரும் எங்கள் ஃபோன் நம்பரை பரி மாறி கொண்டோம்.
 
அப்பொழுது அவர் சொன்னார் என் தம்பியும் உங்கள் கல்லூரியில் இந்த வகுப்பில் தான் படிக்கிறான் அவனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று அன்புடன் சொன்னார்.
 
அதற்கு நான் அவன் பெயரை சொல்லு என்று கேட்க! அதற்கு அவர் பெயர் எதற்கு அவன் தான் வகுப்பில் சூப்பரா விசில் அடிப்பான் என்றார்.
அப்பொழுது வகுப்பில் எல்லாருடைய பார்வையும் ஒரே மாணவன் பக்கம் திரும்ப !
 
அந்த மாணவன் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்க!
 
பேராசிரியர் சொன்னார்!
 
நான் முனைவர் பட்டம் காசு கொடுத்து வாங்க வில்லை! படித்து வாங்கினேன்
Human Psychology என்றார்! 🙂
 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

"உலகிற்கே *இந்தியர்கள்தான் *சத்தான

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips

 No photo description available.

 

"உலகிற்கே *இந்தியர்கள்தான் *சத்தான *இயற்கை *உணவை *உண்ண *சொல்லிக்கொடுத்தவர்கள்...
 
எப்படி...???இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், 
 
அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்...
 
*இன்று அதையே*
==============
*BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,*
*KFC ,*
*MACDONALDS இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.*
 
*இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்றும் கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்,
 
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை பெரிய அதிசயம் போல கொள்ள லாபத்தில் STAR HOTELகளில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*உடலுறவு கொள்ளாத விந்தனுவில் உருவாக்கிய "ஜெர்சி" மாட்டை அறிமுகப்படுத்தினான்.*
=============
*இன்று அவனே அந்த இன மாடுகள் அவன் நாட்டு மக்களுக்கு ஆபத்து என இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் (விந்தனுவை) ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI, SPIRT, 7UP, ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகர டப்பாவில் அடைத்து நம்மிடமே விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் நாம் "*
================
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை வரப்பில் அள்ளிப்போட்டு காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழு பூச்சியை உண்ண கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்க மனசு இல்லாமல் அய்யனார் / சுடலை என சிலவற்றை நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை ஊர் உண்ண திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து ஆஸ்பத்திரி மருந்துகடையை தேடிதான் அழைகிறோம் *
================
*" நாமெல்லாம் "நாகரிக கோமாளிகளாக" மாறிவிட்டோம்"*
================


புரிவோம் தெளிவோம்🙏

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை சென்ற வீராங்கனை – எஸ்.என். சுந்தரம்பாள்! 👧👶🇮🇳🙏🔥

மணக்கால் அய்யம்பேட்டை | 9:52 AM | Best Blogger Tips

 No photo description available.

15-ம் வயதில் காந்தியிடம் தங்க வளையல்களைக் கொடுத்து, புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை சென்ற வீராங்கனை – எஸ்.என். சுந்தரம்பாள்! 👧👶🇮🇳🙏🔥
 
மூன்று முறை சிறை… ஏழு மாதங்கள் தொடர்ச்சி சிறைவாசம்…
 
சுதந்திரத்திற்குப் பிறகும் விவசாயிகளுக்காகவும் அனாதைகளுக்காகவும் போராடிய வீராங்கனை…” 🖤🙏
 
அவர்தான் எஸ்.என். சுந்தரம்பாள் – திருப்பூர் மாவட்டத்தின் மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
 
🔸 பிறப்பும் இளமையும் 🌱
1913, அக்டோபர் 7 – திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியில் பிறந்தார். தந்தை நச்சிமுத்து கவுண்டர், அந்தப் பகுதியின் மணியக்காரர் (உள்ளூர் தலைவர்). வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே சமூக சேவையிலும் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபாடு காட்டினார் .
 
🔸 1928 – 15-ம் வயதில் காந்தியை சந்தித்த சிறுமி 🕊️
1928-ம் ஆண்டு, திருப்பூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், 15 வயது சுந்தரம்பாள் கலந்துகொண்டார். மகாத்மா காந்தி பொதுமக்களிடம் போராட்டத்திற்கு நன்கொடை கேட்டபோது, அவர் மேடைக்கு ஏறி, தனது தங்க வளையல்களைக் கழற்றிக் கொடுத்தார் .
காந்தி அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார்: “தங்கம் கொடுப்பது மட்டும் போதாது. வெளிநாட்டுத் துணிகளைத் துறந்து காதி அணியுங்கள். போராட்டத்தில் நேரடியாக இறங்குங்கள்.” 
 
அன்றிலிருந்து சுந்தரம்பாள் வாழ்நாள் முழுவதும் காதி மட்டுமே அணிந்தார் .
 
🔸 1941 – புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை ⛓️👶
1941-ம் ஆண்டு, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, அவர் தனது புதிதாகப் பிறந்த மகனுடன் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் 3 மாதங்கள் அடைக்கப்பட்டார் . 
 
புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை சென்றது அவரது வீரத்தின் உச்சக்கட்டமாகும்.
 
🔸 1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 7 மாத சிறை 🇮🇳
 
1942-ம் ஆண்டு, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று, மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 7 மாதங்கள் அடைக்கப்பட்டார் .
 
🔸 1943 – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் 3 மாத சிறை ✊
1943-ம் ஆண்டு, திருப்பூரில் பெரிய ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். மீண்டும் கைது. மேலும் 3 மாதங்கள் சிறை .
 
"சிறை செல்வதை அவர் ஒருபோதும் பயப்படவில்லை" என்று குடும்பத்தினர் நினைவுகூருகின்றனர் .
 
🔸 சுதந்திரத்திற்குப் பின் – விவசாயிகளுக்காகவும், அனாதைகளுக்காகவும் 🤝
 
சுதந்திரம் கிடைத்த பிறகும் அமைதியாக இருக்கவில்லை. 1970-களின் தொடக்கத்தில் விவசாயிகள் போராட்டங்களுக்காக மீண்டும் பலமுறை சிறை சென்றார் . பின்னர் வினோபா பாவேவை சந்தித்து, அவரது சர்வோதய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திருப்பூர் அங்கேரிபாளையத்தில் அனாதை இல்லம் தொடங்கினார் .
 
🔸 இறுதிக் காலம் 🕊️
சுந்தரம்பாளுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் அவரது மரணத்திற்கு முன்பே இறந்துவிட்டனர் . 2007, ஆகஸ்ட் 20 – திருப்பூரில் தனது 93-ம் வயதில் காலமானார் .
திருப்பூர் நகரில் திருப்பூர் குமரனுக்கு அடுத்து அவரது சிலையும் உள்ளது . ஆனால் பொதுமக்களிடையே இன்னும் அதிகம் அறியப்படாத நிலையிலேயே இருக்கிறார்.
"15-ம் வயதில் காந்தியிடம் தங்க வளையல்களைக் கொடுத்த சிறுமி… புதிதாகப் பிறந்த குழந்தையுடன் சிறை சென்ற தாய்… மூன்று முறை சிறை… திருப்பூர் தந்த இந்தத் தியாகியை இன்றும் பலர் அறியவில்லை." 🖤

👇 இவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 
💬
#SNSundarambal 🖤  🏠  🇮🇳  💪  👩‍🍼  🕊️  📜

 Thanks & Copy from