இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

மனித உடலில் மறைந்துள்ள ரகசியங்கள்... உங்க உடம்புக்குள்ள ஓராயிரம் அதிசயம்  இருக்கு தெரியுமா? | Unknown Secrets About Human Body - Tamil BoldSky

💐💐இன்றைய சிந்தனைக்கு💐💐


இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏 

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!
How to change a tire the right way | Plymouth Rock
டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க 
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
 

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,


ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂
நம்ம உடம்பு – chinnuadhithya
நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை
போடும் 😂
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!
எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் ...
மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும்
தேவையில்ல, 
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி/கணவன் கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂
வடகாயிலின் காப்பகப்படுத்தப்பட்ட கருத்துகள் ...
எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு 
பெரிய
மிராக்கிள் 🙏

 எல்லா படைப்பையும்
பார்த்து
வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி 
பத்திரமா பாத்துக்குவோம் 🙏

தீக்ஷ்ண தங்ஷ்ட்ரா பைரவாஷ்டகம் ...


உடல் நலன், மனநலன் இணைந்த வாழ்க்கை இல்லையேல் இறையருளால் நமக்கு கிடைத்த வசதிகள், கிடைத்து கொண்டிருக்கும் வசதிகள், கிடைக்கப் போகும் வசதிகள் என அனைத்தும் பூஜ்யமே என்பதை முதலில் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும்.  நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் உடல்,மன நலனுக்கு முன்னுரிமை கொடுத்து ஆரோக்கியமாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்க நலமுடன். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of tree🌷 🌷🌷 🌷

 

 

 

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 ராமேஸ்வரம்: கோவில்கள் முதல் கோஸ்ட் டவுன் வரை- ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த  சூப்பர் ஸ்பாட்

ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது  வெறும் கடற்கரை..

ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த  மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள்  நம் முன்னோர்கள்.

கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..

ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய 13 சுவாரஸ்யமான இடங்கள் | Housing News
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..

ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.

அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.

​ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.


​இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!
 அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.

தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்

 ராமேஸ்வரம் கடல் அலைகளே இல்லாமல் குளம் போல அமைதியாக இருப்பதுதான் இதற்குப் பெரிய உதவியாக இருந்தது.

​அலைகள் அதிகமாக இருந்தால் படகு ஆடும், கல் கீழே விழுந்துவிடும்.
​ஆனால் அமைதியான கடல் என்பதால், டன் கணக்கிலான பாரத்தை ஏற்றிய படகுகள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிதானமாகத் தீவை அடைய முடிந்தது.

கரையை அடைந்த கற்களை, பல நூறு யானைகள் மற்றும் காளைகளைக் கொண்டு இழுத்து வந்தனர். உயரமான இடங்களுக்குக் கற்களைக் கொண்டு செல்ல, , மண் சரிவுப் பாதைகளை (Earth Ramps) அமைப்பார்கள்.

 அதாவது, கோவிலின் உயரம் வளர வளர, மண்ணைக் கொட்டி ஒரு பெரிய மேடு போலச் செய்து, அதன் வழியாக யானைகளை வைத்து கற்களை மேலே தள்ளிக் கொண்டு செல்வார்கள். கோவில் கட்டி முடித்ததும் அந்த மண் அகற்றப்படும்.

ராமேஸ்வரம் கோயிலின் அஸ்திவாரம் என்பது 'மிதக்கும் அஸ்திவாரம்'
 
 நம் முன்னோர்கள் "சாண்ட்விச்' முறையைப் பயன்படுத்தினார்கள்..
முதலில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மணலைத் தோண்டி, அங்கே நீர் ஊற்றி நிறைய யானைகளை விட்டு நடக்கச் செய்வார்கள். யானையின்  கால் படும்போது அந்த இடத்தின் மணல் பல டன் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் மணலுக்கு இடையில் உள்ள காற்று வெளியேறி, அது பாறை போல இறுகிவிடும்.

அதன் மேல் கருங்கற்களை அடுக்குவதற்கு முன் கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து ஒரு 'பேஸ்ட்' போலச் செய்து இடையில் பூசினார்கள். இது காலப்போக்கில் கல்லை விடவும் வலிமையான ஒன்றாக மாறிவிடும்.இதற்குப் பிறகுதான் கற்களை அடுக்கத் தொடங்கினார்கள். இது நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது.

மணல் என்பதால் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் கோயில் சாய்ந்துவிடும். எனவே, மேற்கூரையின் எடையைத் தூண்கள் தாங்கும்போது, அந்தப் பாரத்தை மணலுக்குக் கடத்தாமல் தரைப்பகுதியில் பிரம்மாண்டமான 'தளவரிசை கற்களை' (Paving stones) விரித்தார்கள். இது பாரத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்தது.

ராமேஸ்வரத்தின் 3-வது பிரகாரம் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 1212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 20 இருந்து30 டன் எடை கொண்டது..

 உலகிலேயே மிக நீளமான அந்தப் பிரகாரத்தின் தூண்கள் அனைத்தும் துல்லியமான சமச்சீர் நிலையில் உள்ளன. ஒரு முனையில் நின்று பார்த்தால், அனைத்துத் தூண்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இத்தனை ஆயிரம் டன் பாரம் கீழே இருக்கும் மணலை அழுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தூணின் அடியிலும் மிகப்பெரிய கல் பலகைகளை விரித்து எடையைச் சமமாகப் பரப்பினார்கள் (Weight Distribution).

​​இந்தத் தூண்களை நிலைநிறுத்த 'Lock and Key' முறை எனப்படும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் முறையைப் பயன்படுத்தினார்கள்.

 நம் முன்னோர்களின் ஆழ்ந்த அறிவு நுட்பம் பிரமிக்க வைக்கும் 

"ராமேஸ்வரம் கோவில்  ஆன்மீக இடம் மட்டுமல்ல.. அது, ஒரு 'அறிவியல் கூடம்..

நம் தமிழ் முன்னோர்கள் மணலில் மலை போன்ற கோயிலைக் கட்டி, அதன் நிழலில் உலகையே வியக்க வைத்துள்ளான். 

தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

வெண்ணெயாக மாறும் அதிசயம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:11 PM | Best Blogger Tips

 வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் - YouTubeJayanthy - வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏  இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் ...

வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏

இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசய தலம் தான் கர்நாடக மாநிலம், சிவகங்காவில் உள்ள கவிகங்காதீஸ்வரர் கோவில்.

📍 எங்கே உள்ளது?
பெங்களூருவில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கா கிராமத்தில் ஒரு மலைக்குகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

என்ன அதிசயம்?
சாதாரணமாக வெண்ணெயை உருக்கினால் தான் நெய் கிடைக்கும். ஆனால், இங்கே அபிஷேகம் செய்யப்படும் நெய், மீண்டும் வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது! 😲

இங்குள்ள 5 அடி உயர லிங்கத்திற்கு பக்தர்கள் நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி நெய்யால் அபிஷேகம் செய்தவுடன், அந்த நெய் திடமாகி வெண்ணெய் வடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!

🩺 தீராத நோய் தீர்க்கும் மருந்து:
இந்த வெண்ணெய் பிரசாதம் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 

 

உங்களுக்கு கிடைத்திருப்பது… போதுமானதே!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:03 PM | Best Blogger Tips

சியாச்சினில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த ராணுவம் 


 

படித்து பகிர்ந்து 🌹🌹*கண்டிப்பாக படிக்க வேண்டியது*🇪🇬
🇪🇬
டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இளம் சுற்றுலாப் பயணி ஒருவர், தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறைக்காக லடாக் வந்திருந்தார். 
 
அங்கு அவருக்குக் கிடைத்த டிரைவர் சுமார் 28 வயதுடைய இளைஞர். 
 
அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
 
பயணத்தின் போது உரையாடல் தொடங்கியது.
சுற்றுலாப் பயணி:
 
“இந்த வார இறுதியில் சுற்றுலா சீசன் முடிந்துவிடும். அதன் பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள்? கோவா, டெல்லி அல்லது வேறு பெரிய நகரங்களில் ஹோட்டல்களில் வேலைக்கு போவீர்களா?”
 
இளைஞர்:
 
“இல்லை, நான் இங்கேயே இருப்பேன். லடாக்கை விட்டு எங்கும் போக மாட்டேன்.”
 
சுற்றுலாப் பயணி:
 May be an image of money
“ஆனால் குளிர்காலத்தில் இங்கே கடும் குளிர் இருக்குமே. அப்பொழுது என்ன செய்வீர்கள்?”
 
இளைஞர்:
 
“அதிகம் ஒன்றுமில்லை… சியாச்சனுக்கு போவேன்.”
 
சுற்றுலாப் பயணி (ஆச்சரியத்துடன்):
 
“சியாச்சனா? அங்கே இங்கதைவிட இன்னும் அதிக குளிர் இருக்குமே!”
 
இளைஞர்:
 சியாச்சின் பனிமலையில் ராணுவ வீரர்களை சந்தித்த ராஜ்நாத்: இனிப்பு ஊட்டிவிட்டு  உற்சாகம்
“அங்கே இந்திய ராணுவத்துக்காக லோடராக வேலை செய்கிறேன். 
 
ஒப்பந்த வேலை. என்னைப் போல சிலர் சேர்ந்து, இங்கிருந்து சியாச்சன் பேஸ் கேம்ப் வரை சுமார் 250 கிலோமீட்டர் நடந்து செல்வோம். 
 
அதற்கு 15 நாட்கள் ஆகும். 
 
அங்கே மருத்துவ பரிசோதனை நடக்கும். தகுதி இருந்தால், யூனிஃபாரம், பூட்ஸ், குளிர் ஆடைகள், ஹெல்மெட் வழங்கப்படும்.
 
பின்னர் 3 முதல் 4 மாதங்கள் அங்கேயே தங்கி வேலை செய்வோம்.”
 
சுற்றுலாப் பயணி:
 
“அங்கே நீங்கள் செய்யும் வேலை என்ன?”
இளைஞர்:
 
“சரக்குகளை சுமப்பது. தேவையான அனைத்தையும் ராணுவம் வானிலிருந்து வீசிவிடும். 
 
அதை ஒரு போஸ்டிலிருந்து இன்னொரு போஸ்டுக்கு எங்கள் முதுகில் சுமந்து செல்வோம்.
 
அந்த முழுப் பகுதியும் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது.
 
லாரிகள் அங்கே செல்ல முடியாது. ஸ்னோ ஸ்கூட்டர்கள் சத்தம் செய்யும்; அது எதிரியின் துப்பாக்கிச் சூட்டை ஈர்க்கலாம்.
அதனால் இரவு 2 மணியளவில் கிளம்புவோம்.
 🔴இந்திய ராணுவ வீரர்களின் வாழ்க்கை | Life Of Indian Army In Siachen  #tamilamazingfacts #live #shorts
 டார்ச்சுகள்கூட பயன்படுத்த முடியாது.
 
முழு அமைதியிலும் இருட்டிலும் நடக்க வேண்டும்.
அங்கே குதிரைகளோ, கழுதைகளோ இல்லை.
 
மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரிலும், 18,000 அடி உயரத்திலும் எந்த விலங்கும் உயிர்வாழ முடியாது.”
 
சுற்றுலாப் பயணி (கடுமையான குரலில்):
“அங்கே ஆக்சிஜன் அளவும் குறைவுதானே. 
 
இவ்வளவு பாரத்தை எப்படி சுமப்பீர்கள்?”
 
இளைஞர்:
 
“அதனால்தான் பாரம் ஒருபோதும் 15 கிலோவுக்கு மேல் இருக்காது.
 
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர வேலை மட்டுமே. மீதமுள்ள நேரம் உடலை உயிருடன் வைத்திருக்க முயற்சிப்பதிலேயே செல்கிறது.”
 
சுற்றுலாப் பயணி:
 
“இது உயிருக்கு ஆபத்தான வாழ்க்கையே…”
இளைஞர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்.
 
பின்னர் கூறினார்:
 
“பல நண்பர்கள் திரும்பவே இல்லை. சிலர் பள்ளங்களில் விழுந்தார்கள், சிலர் எதிரியின் துப்பாக்கியால் உயிரிழந்தார்கள். 
 
மிகப் பெரிய ஆபத்து ஃப்ராஸ்ட் பைட் (உறைபனி காயம்)… ஒரு வகையில் மரணம் தவிர்க்க முடியாததே.”
 
சுற்றுலாப் பயணி:
 
“அப்படியென்றால் உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குமா?”
 
இளைஞர்:
 
“மாதம் 18,000 ரூபாய். எல்லா செலவுகளையும் ராணுவம் ஏற்றுக்கொள்கிறது.
 
அதனால் மூன்று மாதத்தில் சுமார் 50,000 ரூபாய் சேமிக்க முடிகிறது. 
 
அது போதுமானதே. குடும்பத்தை நடத்த உதவுகிறது.
 
அதைவிட முக்கியமாக, நாட்டுக்கும் ராணுவத்துக்கும் ஏதாவது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கிறது.”
 
டெல்லியிலிருந்து வந்த அந்த சுற்றுலாப் பயணி அமைதியாகி விட்டார்.
 
ஏசி அலுவலகத்தில், வசதியான வாழ்க்கையுடன், 50 லட்சம் சம்பளப் பேக்கேஜில் வாழும் அவர், 
 
முதன்முறையாக தன்னை சிறியவராக உணர்ந்தார்.
 
இங்கே — மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில், 18,875 அடி உயரத்தில், இரவு 2 மணிக்கு, மரண நிழல் சூழ்ந்த நிலையில் ஒரு நாளைக்கு க்கு 600 ரூபாய் சம்பளம் “பெரிதாக” உணரப்படுகிறது.
 
நாட்டுக்காக ஏதாவது செய்தோம் என்ற உணர்வே வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது.
 
நகரங்களில் உட்கார்ந்து அறிவுரை கூறுபவர்கள்,
சமூக வலைதளங்களில் விஷம் கக்கும் பலர்… 
 
அந்த இருட்டான, உறைபனி அமைதியில் பத்து நிமிடங்கள்கூட நிற்கத் துணிவில்லை. 👊
🤜🏼
நீங்கள் உங்கள் குழந்தையை மாலுக்கு அழைத்துச் சென்று ஷாப்பிங் செய்யலாம், பீட்சா ஊட்டலாம்;
ஆனால் ஒருநாள் இதையும் அவர்களுக்கு சொல்லுங்கள்… 
 
இந்த நாட்டின் உண்மையான முதுகெலும்பு எங்கே இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள.
தேசபக்தி என்பது கோஷங்கள் எழுப்புவதோ, விவாதங்களில் ஈடுபடுவதோ மட்டும் அல்ல;
 
அது தியாகம், கட்டுப்பாடு, கடமை ஆகியவற்றிலிருந்து பிறக்கிறது என்பதை நாம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்.
 
அடுத்த முறை நாமொரு வசதியான அறையில் அமர்ந்திருக்கும்போது, ஒரு கணம் நின்று நினைவுகூருவோம் —
 
இரவு 2 மணிக்கு, இருட்டிலும் பனியிலும், நமது அமைதிக்கான சுமையை தங்கள் தோள்களில் சுமந்து நிற்பவர்களை.
 
ஏனெனில், அவர்கள் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம்.
 
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!!
 
உங்களுக்கு கிடைத்திருப்பது… போதுமானதே!!
*மீண்டும் மீண்டும் பகிர வேண்டிய ஒரு செய்தி*
🇪🇬🇪🇬
 

ராஜேந்திரன் கந்தசாமி

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷

 

#ஏமாற்றி பிழைக்கும் #மருத்துவ உலகம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 மதுவினால் அதிகரிக்கும் இளம் வயதினரின் உயிரிழப்புகள்' - இன்று உலக கல்லீரல்  அழற்சி தினம்

 

#ஏமாற்றி பிழைக்கும் #மருத்துவ உலகம்
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனில், மருத்துவர் கூறுகிறார், Streptokinase ஊசி போடுங்கள் என்று.. அதற்கு 9,000 ரூபாய் என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700 - முதல் 900/- வரை மட்டுமே ஆனால் MRP ரூ. 9,000
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ....
 
டைபாய்டு வந்ததெனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும். மொத்த விற்பனை விலை ரூ 25/- ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்
மக்கள் என்ன செய்வார்கள்?
 
சிறுநீரகம் செயலிழந்து விட்டால் மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ1800. அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன்
 
மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது. அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார். மக்கள் என்ன செய்வார்கள்?
 
நோய் தொற்று ஏற்பட்டு விட்டது.. மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ540, அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ 150 மற்றும் ஜெனரிக் விலை ரூ 45 . ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம் என்பார்.
 
மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்... அதாவது 540 ரூபாய்.
மக்கள் என்ன செய்வார்கள்?
 
சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது. அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது. எனவே, ரூ. 750ல், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய்.
 
எம்ஆர்ஐ ஸ்கேனில், மருத்துவர்கள் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/ வரை..
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது.
மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது.
மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன.
இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்.
 
இதில், மிகப்பெரிய கேள்வி...
ஊடகங்கள் இதையெல்லாம் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்தை காட்டுகின்றனர்?
குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட் என்னென்ன செய்கிறாள், இதையெல்லாம் காட்டுகிறார்கள்..
ஆனால்... மருத்துவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்டவில்லை?
 
ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?
 
பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும்?
 
இந்த லாபி.... அரசாங்கத்தையே கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா?
 
ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்?
20 ரூபாய் கூடுதலாக கேட்டால் 
 
ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள் ஆனால், கொள்ளையிடும் டாக்டரை என்ன செய்வார்கள். 
 
வைத்தியர்: அர்ச்சுனா
நம் தெரிவு Malini 


அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips


 

அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்க வழக்கங்கள் ..

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்.

2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும். 

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்.

4.முதலில் அனைத்து வீட்டு வேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப் படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொண்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்.

7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள் இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களைப்போலவே செய்வார்கள்.

8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதை தவிருங்கள்.

9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு ".

10.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்றீர்களோ,
உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்.
Virtues that help improve family relationships குடும்ப உறவுகள்  மேம்பாட்டுக்கு உதவும் நற்பண்புகள்!
11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்.

12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்.

13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்.

15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்.

16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள்.. காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை.

17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாய் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர். எண்ணவும் கூடாது. 

18.என்ன பொழப்பு இது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது.

19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கை கொள்ள செய்திடும்.

20.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்.

21.நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்.

22.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்.

23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

24.நைட்டியை வேலை செய்திடும் போது மட்டுமேஅணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்.

25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்.

26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்.

27.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்.

28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும். சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்.

29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்.

30.கணவருடன் தினம் தினம் குறைந்தது முப்பது நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குடும்பம் குதூகலமாக விளங்க கடைபிடிக்க வேண்டிய 10 ஆலோசனைகள்!
31.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்திடுங்கள்.

31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்க வேண்டாம்.

32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

33.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்து  கொள்ளுங்கள். 

34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்.

35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.
Aval Vikatan - 31 December 2024 - 'உனக்கு முன்னாடி நான் போயிட்டா...' -  கணவன்/மனைவி சொல்லிக் கொள்வது பத்தாம்பசலியா... பகுத்தறிவா? |  aval-avan-anbu-husband-wife-relationship-series ...
36.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்.

37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டாம். தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள். கொடுத்த பின் புலம்பவேண்டாம்.

38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்.

39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.

40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைத்திருங்கள். வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்.

41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடாதீர்.

42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ண வேண்டாம் உழவர் சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே?

44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக் கொள்ளவது நல்லது.

48.தேவை இல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது. மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கள்.

49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை மறக்க வேண்டாம்.

50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அது சந்தேக கண்ணாக மாறவேண்டாம்.

51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே.

52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்.

53.கணவரின் வெளிநாட்டு பயணங்கள், கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்.

54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் அது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்.

55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது.

56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள். ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்.

57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண். ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்.

58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்.

59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது /.... வார்த்தை.

60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.

61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்கவேண்டாம்.

62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்.

63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள். சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்.

64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்.

65.மொத்தத்தில் நீங்கள் தாயாக தோழியாக மனைவியாக இருப்பதைவிட சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்.

66.பயிற்சியாளருக்குப் பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும். வாழ்க்கை எளிமையாகும். இனிமையாகும்.

67.அன்பு நிலை பெற ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும். 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 



வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனிக்கவும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips

 May be an image of one or more people


 
வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனிக்கவும், 
 
இந்த செயலை செய்யாவிட்டால் இன்சூரன்ஸ் புதுப்பிப்பது சாத்தியமில்லை.
 
2011 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மின்னணு ரசீதுகள் மூலம் அபராத தொகை விதிக்கப்பட்டது.
 
பிறகு மின்னணு ரசீது வழங்கும் முறை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 'ஒரே நாடு ஒரே சலான்' என்ற திட்டத்தின் கீழ் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இ-சலானை ஆன்லைனில் செலுத்துவது எப்படி என்பதை வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
சில ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் பலரும் அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுவரை அபராத தொகையை செலுத்தாத வாகன ஓட்டிகள், விரைந்து செலுத்துமாறு இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தியது. இல்லையெனில் வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிக்க முடியாது என்றும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 
இதுவரை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டிய அபராத தொகை மட்டும் ரூ.14,000 கோடியை தாண்டுகிறது என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இ-சலான் முறையில் அபராத தொகையை செலுத்தும் வழிமுறைகள்:
 
1. முதலில் echallan.parivahan.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
 
2. சலான் எண் அல்லது வாகன எண் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒனறைக் கொண்டு அபராத தொகை உள்ளிட்ட தகவலைத் தேடலாம்.
 
3. குறிப்பாக சலான் எண் கொடுப்பது நல்லது.
 
4. சலான் எண்ணை உள்ளிட்டு, திரையில் தெரியும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
 
5. பிறகு உங்களின் இ-சலான் விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டு, அபராத தொகையை செலுத்தவும் (Pay Fine Amount) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 
6. இப்போது உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ஓடிபி-யை சரிபார்க்க வேண்டும்.
 
7. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படுகிறேன் என்பதை கிளிக் செய்து விட்டு, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
8. இப்போது யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து அபராத தொகையை செலுத்தலாம்.
 
9. அபராத தொகையை செலுத்தி முடித்த பின்னர், அதற்கான ரசீதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
 
தற்போது ஏஐ கேமராக்கள் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேரடியாக போக்குவரத்து ஆய்வாளர்கள் இ-சலான் வழங்குவது மட்டுமின்றி, கேமராக்கள் மூலமும் வாகனை எண்ணைக் கொண்டு ஆன்லைனில் இ-சலான் உருவாக்கப்படுகிறது.
 
ஒருவேளை போக்குவரத்து விதிமுறைகளை நீங்கள் மீறி இருந்தால், உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்கள் வாகன எண்ணைப் பதிவிட்டு, அபராத தொகைக்கான இ-சலான் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
5 முறை இ-சலான் பெற்றால் ஆபத்து:
ஒரு வருடத்தில் 5 அல்லது அதற்கும் மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இ-சலானைப் பெற்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருப்பினும் வாகன ஓட்டிகளை அழைத்து விசாரணை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்படும். போக்குவரத்து விதிமீறலுக்கு ஏற்ப 3 அல்லது 6 மாதங்கள் அல்லது 1 வருடம் என உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.
 

FB copy Chennai FootPrints 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 

கௌரி நாயக் கிணறுகளை மட்டும் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 AM | Best Blogger Tips

 No photo description available.

ஒற்றை மனிதராக… தன் கைகளால்… தடுக்க முடியாத சக்தியாக — 60 அடி ஆழமுள்ள இரண்டு கிணறுகளைத் தனியாகத் தோண்டிய பெண்! 
 
கர்நாடகாவின் ஒரு அமைதியான கிராமத்தில்… அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்த ஒரு அதிசயமான துணிச்சல் காட்சி.
 
53 வயதான ஒரு பெண், வியர்வையும் தூசியும் படிந்த நிலையில்… கையில் பிக்காக்ஸ் பிடித்து… 
வறண்டு கடினமான மண்ணை தினமும் அடித்து உடைத்து…
 
அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல்!
அவளின் பெயர் கௌரி நாயக்.
 
இன்று ஊரார் அவளை மரியாதையுடன் “லேடி பகீரதா” என்று அழைக்கிறார்கள்.
 
திடமான தீர்மானத்துடன் இயற்கையையே சவால் செய்யும் மனிதர்களுக்கே அந்த பெயர் உரியது.
 
அவளின் செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடத் தொடங்கியபோது… அருகில் எந்த நீர்மூலமும் இல்லாதபோது…
 
கௌரி காத்திருக்கவில்லை.
 
“யோசிப்பது போதாது… செய்ய வேண்டும்!” என்று அவள் முடிவு செய்தாள்.
 
இயந்திரங்களை நம்பவில்லை… அரசு உதவிக்காக காத்திருக்கவில்லை…
 
யாராவது வந்து உதவுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை…
 
அவளே தோண்டத் தொடங்கினாள்.
 
அதுவும் ஒரு கிணறு மட்டும் அல்ல…
 
இரண்டு கிணறுகள்!
 
ஒவ்வொன்றும் சுமார் 60 அடி ஆழம்…
 
அதையும் முழுவதுமாகத் தனி முயற்சியால்.
ஆறு மாதங்கள் முழுவதும்… தினமும் சுமார் 6 மணி நேரம் அவள் உழைத்தாள்.
 
பலருக்கு நம்பிக்கை இல்லை… சிலர் கிண்டல் செய்தார்கள்…
 
ஆனால் கௌரிக்கிருந்த ஒரே இலக்கு:
 
தன் மண்ணுக்கு தண்ணீரை மீண்டும் கொண்டு வர வேண்டும்… தன் செடிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். 
 
இன்று அந்த இரண்டு கிணறுகளும் தண்ணீரால் நிரம்பி நிற்கின்றன.
 
அவை வெறும் கிணறுகள் அல்ல…
 
அவை வலிமை, பொறுமை, திடமான மன உறுதி ஆகியவற்றின் உயிருடன் இருக்கும் சான்றுகள்.
அவை அவளின் வயல்களுக்கு மட்டுமல்ல…
 
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கின்றன. 🇮🇳
 
கௌரி நாயக் கிணறுகளை மட்டும் தோண்டவில்லை…
 
கல், மண் ஆகியவற்றிலிருந்து நம்பிக்கையையே தோண்டி எடுத்தாள்.
 
திடமான மன உறுதி இருந்தால்…
 
மிகக் கடினமான மண்ணும் வழிவிடும் என்பதை அவளின் கதை நிரூபிக்கிறது.
 
ஒரு உறுதியான ஆத்மா என்னெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டிய இந்த உண்மையான நாயகிக்கு சல்யூட்! 💖🔥

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷