மணக்கால் அய்யம்பேட்டை
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
வேலியில் காலி பாட்டில்கள் ஏன்
திருமணத்தில் ஆசீர்வாதம் எப்படி செய்ய வேண்டும்?
இன்றைய தினம், நாம் பூஜைகளின் போது பயன்படுத்துகின்ற மங்கல அக்ஷதையைப் (அட்சதை) பற்றியும் அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு?
இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது?
இதன் ‘தாத்பர்யம்’ (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம்.
‘க்ஷதம்’ என்ற வார்த்தைக்கு ‘குத்துவது’ அல்லது ‘இடிப்பது’ என்று பொருள். ‘‘அக்ஷதம்’’ என்றால் இடிக்கப்படாதது என்று பொருள்.
உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி ‘அக்ஷதை’ எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு ‘அக்ஷதை’ தயாரிப்பது உசிதமல்ல.
இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம்.
எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?
சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.
வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது.
அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி, ‘உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்’ என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு.
திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களைவிட, அட்சதைக்கே முக்கியத்துவம் ஏன் வழங்கப் படுகிறது?
சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழவிழைபவர்கள்.
அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம்.
ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் (தலையில்) அட்சதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம்.
திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும்.
அட்சதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு.
இப்படிப்பட்ட அட்சதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும்.
அதே போன்று, புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மகாலட்சுமியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அட்சதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.🌹
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏

💐💐இன்றைய சிந்தனைக்கு💐💐
இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏
பாத்து செஞ்ச நம்ம உடம்பு ஒரு லாஜிக்!
டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂
உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂
நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,
ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂
லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும்.
பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂
நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை போடும் 😂
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!
படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!
மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும் தேவையில்ல,
on off எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!
சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏
எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி/கணவன் கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂
எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌
பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍
தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு
பெரிய மிராக்கிள் 🙏
எல்லா படைப்பையும்
பார்த்து வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!
படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி
பத்திரமா பாத்துக்குவோம் 🙏

உடல் நலன், மனநலன் இணைந்த வாழ்க்கை இல்லையேல் இறையருளால் நமக்கு கிடைத்த வசதிகள், கிடைத்து கொண்டிருக்கும் வசதிகள், கிடைக்கப் போகும் வசதிகள் என அனைத்தும் பூஜ்யமே என்பதை முதலில் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் உடல்,மன நலனுக்கு முன்னுரிமை கொடுத்து ஆரோக்கியமாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க நலமுடன்.
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹

ராமேஸ்வரம் ஒரு தீவு....அங்கே மலைகளோ,குன்றுகளோ கிடையாது. அதனால் கருங்கற்களும் கிடையாது வெறும் கடற்கரை..
ஒரு தீவில், அதுவும் மணல் மட்டுமே நிறைந்த மணற்ப்பரப்பில் பல்லாயிரம் டன் எடையுள்ள கருங்கற்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட மலையே எழுப்பி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
கிட்டத்தட்ட 800 வருடங்கள் உழைப்பில் உருவானது இந்த ஆலயம்..

பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை..
ராமேஸ்வரம் கோவிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை.
அந்தக் காலத்தில் 20 முதல் 30 டன் எடையுள்ள கற்களை ஏற்றிச் செல்லவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெரிய மரத் தோணிகளைப் பயன்படுத்தினார்கள். இவை அகலமான அடிப்பகுதியைக் கொண்டவை.
ஒரு பெரிய கல் தூணை ஒரு படகில் ஏற்றுவதற்குப் பதிலாக, இரண்டு அல்லது மூன்று பெரிய படகுகளை ஒன்றாக இணைத்து, அதன் மேல் ஒரு வலுவான மர மேடையை அமைப்பார்கள்.
இதனால் பாரம் சமமாகப் பிரிக்கப்பட்டு, படகு கவிழாமல் மிதக்கும். இதை இன்று நாம் "பாண்டூன்" (Pontoon) என்று அழைக்கிறோம்.
அடுத்து.......இரண்டு பெரிய படகுகளை இணைத்து, நடுவே அந்தப் பிரம்மாண்ட தூணைக் கட்டித் தொங்கவிட்டனர். தண்ணீருக்குள் கல்லின் எடை குறைவு என்ற 'மிதப்பு விசை' தத்துவத்தைப் பயன்படுத்தி, கடலின் ஆழமான பாதைகளில் அந்தப் பாரத்தைச் சுமந்து வந்தனர்.
தரை தட்டாமல் இருக்க, நிலவு மற்றும் ஓதங்களின் (Tides) நேரத்தைக் கணித்து கடல் மட்டம் உயரும்போது படகுகளை நகர்த்தினார்கள்
ராமேஸ்வரம் கடல் அலைகளே இல்லாமல் குளம் போல அமைதியாக இருப்பதுதான் இதற்குப் பெரிய உதவியாக இருந்தது.
அலைகள் அதிகமாக இருந்தால் படகு ஆடும், கல் கீழே விழுந்துவிடும்.
ஆனால் அமைதியான கடல் என்பதால், டன் கணக்கிலான பாரத்தை ஏற்றிய படகுகள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிதானமாகத் தீவை அடைய முடிந்தது.
கரையை அடைந்த கற்களை, பல நூறு யானைகள் மற்றும் காளைகளைக் கொண்டு இழுத்து வந்தனர். உயரமான இடங்களுக்குக் கற்களைக் கொண்டு செல்ல, , மண் சரிவுப் பாதைகளை (Earth Ramps) அமைப்பார்கள்.
அதாவது, கோவிலின் உயரம் வளர வளர, மண்ணைக் கொட்டி ஒரு பெரிய மேடு போலச் செய்து, அதன் வழியாக யானைகளை வைத்து கற்களை மேலே தள்ளிக் கொண்டு செல்வார்கள். கோவில் கட்டி முடித்ததும் அந்த மண் அகற்றப்படும்.
ராமேஸ்வரம் கோயிலின் அஸ்திவாரம் என்பது 'மிதக்கும் அஸ்திவாரம்'
நம் முன்னோர்கள் "சாண்ட்விச்' முறையைப் பயன்படுத்தினார்கள்..
முதலில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மணலைத் தோண்டி, அங்கே நீர் ஊற்றி நிறைய யானைகளை விட்டு நடக்கச் செய்வார்கள். யானையின் கால் படும்போது அந்த இடத்தின் மணல் பல டன் அழுத்தத்திற்கு உள்ளாகும். இதனால் மணலுக்கு இடையில் உள்ள காற்று வெளியேறி, அது பாறை போல இறுகிவிடும்.
அதன் மேல் கருங்கற்களை அடுக்குவதற்கு முன் கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி மற்றும் சில மூலிகைச் சாறுகளைக் கலந்து ஒரு 'பேஸ்ட்' போலச் செய்து இடையில் பூசினார்கள். இது காலப்போக்கில் கல்லை விடவும் வலிமையான ஒன்றாக மாறிவிடும்.இதற்குப் பிறகுதான் கற்களை அடுக்கத் தொடங்கினார்கள். இது நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் வலிமை கொண்டது.
மணல் என்பதால் ஒரு பக்கம் பாரம் அதிகமானால் கோயில் சாய்ந்துவிடும். எனவே, மேற்கூரையின் எடையைத் தூண்கள் தாங்கும்போது, அந்தப் பாரத்தை மணலுக்குக் கடத்தாமல் தரைப்பகுதியில் பிரம்மாண்டமான 'தளவரிசை கற்களை' (Paving stones) விரித்தார்கள். இது பாரத்தை சமமாகப் பிரித்துக் கொடுத்தது.
ராமேஸ்வரத்தின் 3-வது பிரகாரம் உலகப் புகழ் பெற்றது. இதில் சுமார் 1212 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் 20 இருந்து30 டன் எடை கொண்டது..
உலகிலேயே மிக நீளமான அந்தப் பிரகாரத்தின் தூண்கள் அனைத்தும் துல்லியமான சமச்சீர் நிலையில் உள்ளன. ஒரு முனையில் நின்று பார்த்தால், அனைத்துத் தூண்களும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இத்தனை ஆயிரம் டன் பாரம் கீழே இருக்கும் மணலை அழுத்தாமல் இருக்க, ஒவ்வொரு தூணின் அடியிலும் மிகப்பெரிய கல் பலகைகளை விரித்து எடையைச் சமமாகப் பரப்பினார்கள் (Weight Distribution).
இந்தத் தூண்களை நிலைநிறுத்த 'Lock and Key' முறை எனப்படும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணையும் முறையைப் பயன்படுத்தினார்கள்.
நம் முன்னோர்களின் ஆழ்ந்த அறிவு நுட்பம் பிரமிக்க வைக்கும்
"ராமேஸ்வரம் கோவில் ஆன்மீக இடம் மட்டுமல்ல.. அது, ஒரு 'அறிவியல் கூடம்..
நம் தமிழ் முன்னோர்கள் மணலில் மலை போன்ற கோயிலைக் கட்டி, அதன் நிழலில் உலகையே வியக்க வைத்துள்ளான்.
தொழில்நுட்பம் என்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று,.. அது நேற்று இன்று வந்ததல்ல🏛️🐘⚓🌹
🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
வெண்ணெயாக மாறும் அதிசயம்!

வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏
இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசய தலம் தான் கர்நாடக மாநிலம், சிவகங்காவில் உள்ள கவிகங்காதீஸ்வரர் கோவில்.
📍 எங்கே உள்ளது?
பெங்களூருவில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கா கிராமத்தில் ஒரு மலைக்குகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
✨ என்ன அதிசயம்?
சாதாரணமாக வெண்ணெயை உருக்கினால் தான் நெய் கிடைக்கும். ஆனால், இங்கே அபிஷேகம் செய்யப்படும் நெய், மீண்டும் வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது! 😲
இங்குள்ள 5 அடி உயர லிங்கத்திற்கு பக்தர்கள் நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.
அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி நெய்யால் அபிஷேகம் செய்தவுடன், அந்த நெய் திடமாகி வெண்ணெய் வடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!
🩺 தீராத நோய் தீர்க்கும் மருந்து:
இந்த வெண்ணெய் பிரசாதம் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
உங்களுக்கு கிடைத்திருப்பது… போதுமானதே!!



ராஜேந்திரன் கந்தசாமி
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
#ஏமாற்றி பிழைக்கும் #மருத்துவ உலகம்

அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி
அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்க வழக்கங்கள் ..
1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்.
2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பிவிடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்.
3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை கணவனுடன் சேர்ந்து திட்டமிடல் வேண்டும்.
4.முதலில் அனைத்து வீட்டு வேலைகளுக்கும் தானே பொறுப்பு என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
5.கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
6.கணவனையும் பிள்ளைகளையும் மாமனார் மாமியாரையும் பக்குவப் படுத்தி அவர்களின் தேவைகளை அவர்களை கொண்டே பூர்த்தி செய்திடவும் வகையில் பழக்கிடுங்கள்.
7.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள் இல்லை யெனில் நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களைப்போலவே செய்வார்கள்.
8.பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதை தவிருங்கள்.
9.கணவரை அடிப்படையாக கொண்டு பிள்ளைகளை திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு ".
10.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளை பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்பாகவும் வைத்துக்கொள்ள மெனப்படுகிண்றீர்களோ,
உங்கள் கணவரும் அப்படித்தானே என்பதை ஒருபோதும் மறவாதீர்.
11.மாமனார் மாமியாரை அம்மா அப்பாஎன்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்தி கொள்ளுங்கள்.
12.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக்கொண்டு ஒரு தோழியைப்போல நடந்துகொள்ளுங்கள்.
13.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
14.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்.
15.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி ட்ரைன் செய்திடுங்கள்.
16.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள்.. காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராக போவதில்லை.
17.எந்தஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாய் பிறந்தோம் என்று மட்டும் எண்ணிவிடாதீர். எண்ணவும் கூடாது.
18.என்ன பொழப்பு இது நாலு செவத்துக்குள்ள எல்லாத்துக்கும் வடிச்சு கொட்டி இதுக்கு பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக்கூடாது.
19.பணவிஷயங்களில் உங்களுக்கு என ஒரு சிறுதொகையினை உங்களுக்கு மட்டுமே என தெரிந்தவகையில் நம்பகமான இடத்தில் சேமித்து வாருங்கள் அஃது உங்களை எப்பொதும் உங்களின் மீது நம்பிக்கை கொள்ள செய்திடும்.
20.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்.
21.நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்.
22.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள்.
23.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
24.நைட்டியை வேலை செய்திடும் போது மட்டுமேஅணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூமுடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்.
25.உடைவிஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக்கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்.
26.வயதுக்கு வந்த பெண்குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்.
27.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும் உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்.
28.குறிப்பாக உள்ளடைகள் மீது அதிக கவனத்துடனும். சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்.
29.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதை தவிருங்கள்.
30.கணவருடன் தினம் தினம் குறைந்தது முப்பது நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
31.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்திடுங்கள்.
31.உங்கள் கணவரின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்பொதும் மறக்க வேண்டாம்.
32.கணவரின் தொழிலை பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
33.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
34.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்.
35.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்.
36.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக்கொள்ளுங்கள்.
37.வேலைக்கு செல்லும் பெண்கள் முதலில் உங்கள் ATM கார்டை உங்களின் கணவரின் கைகளில் கொடுக்க வேண்டாம். தேவையான பணத்தை நீங்களே எடுத்து கொடுங்கள். கொடுத்த பின் புலம்பவேண்டாம்.
38.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் பற்றி அதிகம் பேசவேண்டாம்.
39.உங்கள் தோழிகளுக்குள் பேசிக்கொள்ளும் அந்தரங்கமான விசயங்களை கணவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
40.எவ்வளவு உயிர்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைத்திருங்கள். வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்.
41.உங்களின் தனித்திறமைகளை எப்பொதும் வளர்த்துகொண்டே இருங்கள் அதை ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடாதீர்.
42.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
43.ஷாப்பிங் என்றவுடன் நகை கடை துணிக்கடை என்றுமட்டும் எண்ண வேண்டாம் உழவர் சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே?
44.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
45.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
46.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
47.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லதுதான் ஆனால் அதை அளவொடு நிறுத்திக் கொள்ளவது நல்லது.
48.தேவை இல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது. மருமகளை சரி செய்வது போன்ற செயல்களை தவிர்த்திடுங்கள்.
49.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப்போவது அம்மக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பதை மறக்க வேண்டாம்.
50.உங்கள் கணவரின் செல்போன் மீது ஒரு கண் இருக்கட்டும் ஆனல் அது சந்தேக கண்ணாக மாறவேண்டாம்.
51.whats ஆப் மீது கவனம் இருக்கட்டும் அஃது எச்சரிக்கை உணர்வுக்கு மட்டுமே.
52.உங்களின் கணவரின் facebook id மீதும் ஒரு பார்வை வைத்து கொள்ளுங்கள் அது தேவை இல்லாத எதிர்கால குழப்பங்களை தவிர்க்க உதவும்.
53.கணவரின் வெளிநாட்டு பயணங்கள், கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்.
54.குடிப்பது சந்தோஷத்துக்கு மட்டுமென உங்களின் கணவருக்கு உணர்த்தி அவர் குடிக்க விரும்பினால் அது உங்களின் இசைவோடு நடப்பதாக இருக்கட்டும்.
55.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது.
56.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள். ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டுபிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்.
57.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண். ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்கவேண்டாம்.
58.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கைநீளம் என்பதை மறக்க வேண்டாம்.
59.ஒரு நல்ல ஸ்திரி தன் வீட்டை காட்டுகிறாள் என்பது /.... வார்த்தை.
60.உங்களை வைத்துதான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்.
61.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்குகொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்கவேண்டாம்.
62.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்கு தரக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளனர்.
63.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள். சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டுவிடாதீர்கள்.
64.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்.
65.மொத்தத்தில் நீங்கள் தாயாக தோழியாக மனைவியாக இருப்பதைவிட சிறந்த பயிற்சியாளராக இருந்தால் வாழக்கை சிறக்கும்.
66.பயிற்சியாளருக்குப் பின் சிறந்த கோச்சாக மாறினால் சமுதாயம் மதிக்கும். வாழ்க்கை எளிமையாகும். இனிமையாகும்.
67.அன்பு நிலை பெற ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.






