
மணக்கால் அய்யம்பேட்டை
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
யானையை அடக்கிய கோழி
"செட்டி நாட்டு அரசர்" சர் ராஜா அண்ணாமலை செட்டியார்

வாஸ்கோடகாமா ⟨⟨≈⟩⟩ வேளாங்கண்ணி ( " வாராந்திர விரைவு வண்டி ")

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
இந்திய
ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ
வீரருக்கு கிராமத்தில் பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்கி மாலை
அணிவித்து, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கம்பம்
அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம்
(33). இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பதவியில் காஷ்மீர் ராஷ்ட்ரிய
ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம்
தேதி தெற்கு காஷ்மீர் பகுதியான குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஒழிப்பு
நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஐந்து தீவிரவாதிகளுக்கும்
ராணுவத்திற்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில்
தீவிரவாதிகள் சுட்டதில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள்பட்டை மற்றும்
வாய் பகுதியில் குண்டு ஊடுருவியது. பலத்த காயமடைந்த நிலையிலும் இவர்
தீவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக்
கொன்று, தனது குழுவைக் காப்பாற்றினார். இந்த வீர தீர செயலைபாராட்டி இவரை
கவுரவிக்கும் வகையில் இந்திய இவருக்கு கீர்த்தி சக்ரா விருதினை அறிவித்தது.
2026-ஆம்
ஆண்டு இந்திய அரசு 7 வீரர்களுக்கு இந்த விருதை வழங்கியது. இதில்
தமிழ்நாட்டை சேர்ந்த தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி
சேர்ந்த மீனாட்சி சுந்தரமும் ஒருவர். கடந்த 8-ஆம் தேதி குடியரசு தலைவர்
மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த
விருதை மீனாட்சி சுந்தரத்துக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில்,
விடுமுறையில் இவர் சொந்த கிராமமான காமகவுண்டன்பட்டிக்கு இன்று பிற்பகல்
வந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தாடை, தப்பட்டை முழங்க, பட்டாசு
வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராம மக்கள், உறவினர்கள்,
நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என
பலரும் கைகொடுத்து இவரை பாராட்டினர்.
தொடர்ந்து
பொன்னாடை போர்த்தி கவுரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். முன்னாள்
ராணுவத்தினர் சிலர் கூறுகையில், “அதிவீரச் செயல்களுக்காக இந்திய
ராணுவத்தால் வழங்கப்படும் இந்த விருது அசோக சக்ரா விருதுக்கு அடுத்த
நிலையில் உள்ள ஓர் உயரிய விருது ஆகும். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த வீரர்
இந்த விருது பெற்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றனர்.
எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!

எந்த செல்வமும் இறுதியில் கூட வாராது… சிவம் என்ற செல்வத்தை தவிர !!!
இந்த உடலில் உயிர் வந்ததும் மாயையே...
அந்த உடலை விட்டு உயிர் போவதும் மாயையே.....
உடலால் ஏற்பட்ட சொந்தங்களால் புடை சூழ வாழ்வதும் மாயையே...
மனித
உருக்கொண்டு பூமியில் ஜனித்த பொழுது வெறும் கையுடன் வந்தோம்... போகும்
போது வெறும் கையுடன் தான் போவோம் என்பது வழக்கத்தில் உள்ள கூற்று…..
ஆனால் ஆன்மா “நிரம்பி வழிய வழிய” பெரும் செல்வம் ஒன்றைக் கொண்டு தான் செல்கின்றார்கள் புண்ணிய ஆத்மாக்கள் . அது என்ன செல்வம் அது?
ஆதியும்
அந்தமும் இல்லா.. என்றும் நிலையான செல்வமாம் அந்த “பேரானந்த சிவம்”
என்னும் பெருஞ்ச்செல்வத்தை நிச்சயம் கொண்டு தான் செல்கிறார்கள்.. அது
“சிவத்திற்க்கும்” அந்த “புண்ணிய ஆத்மாவுக்கும்” மட்டுமே உள்ள
பேரானந்தபந்தம்.. அது புறக்கண்களுக்கு புலப்படாதது...
யாரெல்லாம் சிவ பெருங்கருணையை உணரப் பெற்றவர்களோ!!!
யாரெல்லாம் வாழும் காலத்தில் சிவத்தையே உயிர் என நினைத்து வாழ்கின்றார்களோ!!
யாரெல்லாம்
ஒவ்வொரு செயலிலும் சிவத்தை உணர முற்ப்பட்டு சித்தமெல்லாம் சிவமென
வாழ்கின்றார்களோ!! இவர்கள் யாவரும் நிச்சயம் இந்த பூவுலகப் பணியை
முடித்து விட்டு வெறும் கையுடன் செல்வதில்லை என்பது சிவத்திண்ணம்…
மனித
உடல் கொடுக்கப்பட்டத்தின் நோக்கம் அந்த இறைவனை நினைத்து… உணர்ந்து …
இறைவனோடு ஒன்றாக கலக்கவே என்று ஒவ்வொரு ஆன்மாவிற்க்கு இறைவன் தக்க
தருணத்தில் உணர்த்துவார் …. அந்த உணர்த்தலை புரிந்து கொண்டு தண்ணீருக்குள்
மலர்ந்து வாழ்ந்தாலும் தண்ணீரில் ஒட்டாத தன்மையுடையது தாமரை மலர்….
அதனைப் போலவே செல்வக்குவியல் பெற்று வாழ்வோருக்கும், தேவையான செல்வத்துடன்
வாழ்வோருக்கும், நடுத்தரவர்கமாக வாழ்வோருக்கும், வறுமையில் வாழ்வோருக்கும்
இலக்கு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் … அது சிவமாக மட்டுமே இருத்தல்
வேண்டும் ...
தங்கள்ளுக்குள் சிவத்தை தேடிக் கொண்டிருக்கும் அத்துனை ஆத்மாக்களுக்கும் இது விளங்கும் ...
மற்றபடி
சிவத்தை நினைக்கவோ…..உணரவோ.. ஆதாரம் கேட்போரிடமும்.. மற்றும் சிவத்திடம்
நிலையில்லா செல்வதை மட்டுமே வேண்டுவோருக்கும் சிவம் என்றும்
“மறைபொருளாகவே” இருந்து விடுகின்றது.. பாசாங் இல்லாத பக்தியினால் மட்டுமே
பரமனை உணரமுடியும்..
சிவப்
பெருக்கருணையை உணர்ந்து வாழ்வோம்… நிலையான சிவத்தை (சிவத்தாயை) மட்டும்
வேண்டும் என்று கேட்போம்… சிவப் பெருவாழ்வு வாழ்வோம் என்றும் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
போற்றி ஓம் நமச்சிவாய!!!
சிவனை விஞ்சிய தெய்வம் இல்லை : சைவத்தை மீறிய மார்க்கம் இல்லை !
வாருங்கள்.... அறியப்படாத மிகப்பழமையான சிவனார் ஆலயங்களை வழிபாடுகள் செய்து பாதுகாத்து தொடர்ச்சியாக வழிபடுவோம்..
ஊர் கூடி தேர் இழுத்தால் நகராத தேரும் நகரும்...
அவனருளாலே
எல்லாம் சிவன் செயல்
சிவனருள் பெறுக...
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
**மாதம் ஒருமுறை பழமையான சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேகப்பணியில் **அடியேன்**
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்.
Thanks & copy from
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம்...................... ❤️ ❤️ ❤️

Thanks & Copy from FB
வாழ்க்கையில்🌷
🌴🌴🌴
வாழ்க்கையில்🌷
✅ 1) பெற்றோர்களை நோகடிக்காதே... நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!!
✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே... வாழ்க்கை போய் விடும்...
வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ...!!
✅ 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம் என்று நினைக்காதே... நேர்மையாக இருப்பதே ஒரு சாதனை தான்...!!
✅ 4) நேர்மையாக இருப்பவர்களுக்கு சோதனை வருவது தெரிந்ததே, அதற்காக நேர்மையை கை விட்டு விடாதே...அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!
✅ 5) வாழ்வில் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே...சந்தோஷம் குறைவதற்கும், பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்...!!
✅ 6) உன் அம்மாவிற்காக ஒரு போதும் மனைவியை
விட்டு கொடுக்காதே... அவள் உனக்காக அப்பா அம்மாவையே விட்டு வந்தவள்...!!
✅ 7) உனக்கு உண்மையாக இருப்பவர்களிடம்... நீயும் உண்மையாய் இரு...!!
✅ 8)அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் போது இனிமையாகத்தான் இருக்கும்...அதுவே உனக்கு
வரும் போது தான், அதன் வலியும் வேதனையும்
புரியும்...!!
✅ 9) உன் மனைவி உண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்... நீயும் உண் மனைவிக்கு
உண்மையாய் இரு, எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே, அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு...!!
✅ 10) ஒருவன் துரோகி என்று தெரிந்து விட்டால்... அவனை விட்டு விலகியே இரு...!!
✅ 11) எல்லோரிடமும் நட்பாய் இரு... நமக்கும் நாலு
பேர் தேவை...!!
✅ 12) நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை
சேர்க்க வேண்டும் என்பதில்லை... யாருக்கும் தீங்கு
செய்யாமல் இருந்தாலே...நீ கோவில் சென்றதற்கு
சமம்...!!
✅ 13) நிறை குறை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை... அதில் நிறையை மட்டும் நினை... நீ வாழ்க்கையை வென்று விடலாம்...!!
✅ 14) எவன் உனக்கு உதவி செய்கிறானோ, அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே... அந்த பாவத்தை நீ எங்கு போனாலும் கழுவ முடியாது...!!
✅ 15) அடுத்தவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லை என்று நினைக்காதே... நம்மை விட
வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள்
என்பதை மனதில் கொள்...!!
✅ 16) பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்,நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே உனக்கு மிஞ்சும்...உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே...!!
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏


