ஆட்டுக்கல் என்பது வெறுமனே

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips

May be an image of text that says "ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல..."

#ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு 
 
#அரைப்பதற்கு மட்டுமல்ல 
 
அந்தக் #காலத்தில் அதுதான் #மழைமானி
 பழந்தமிழர்களின் அதிசய மழைமானி முதல் நீர் மேலாண்மை வரை - நீங்கள் அறியாத  சுவாரசிய தகவல்கள்! - Deep Talks Tamil
ஆம்.. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் 
 
நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஒருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
 மழையும்,வள்ளுவரும்... உரல் உணர்த்தும் மழை அளவு..! - Deep Talks Tamil
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது.
 
மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர்.
அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.
 நமது கிராமம் - பிலிமிசை - தமிழ் மழை...!💦💦💦 ஏன் அடைமழை என்கிறோம்? அடைமழை  = வினைத்தொகை! *அடைத்த மழை *அடைக்கின்ற மழை *அடைக்கும் மழை விடாமல் ...
மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் #தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
 சின்ன சின்ன தூறல் என்ன.. ரசிக்க மட்டுமா மழை.. உயிர்த் துளிகளை சேமிக்கவும்!  | rain not only to enjoy but to save the water - Tamil Oneindiahelloo salem - நம்ம சேலத்தில் தூறல் மழை !! | Facebook
#தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
 சாரல் - இயற்கை கவிதைபாலைவனத்தில் ஒரு சாரல் மழை... - பாலைவனத்தில் ஒரு சாரல் மழை
#சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.மழை துளிகளின் ரகசியம் தெரியுமா? Do you know the secret of raindrops?Chennai IMD Alert: தமிழகத்தில் மீண்டும் மழை... இன்னும் எத்தனை நாட்களுக்கு?  வானிலை மையம் தகவல்!
#மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
 Heavy rain in Rajaji National Park causes flash floods in Rishikesh |  TimesTravelPerumazhai - Single by Tony Britto | Spotify
#பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.
 downpour - Wiktionary, the free dictionaryஅடைமழை - ஏனைய கவிதைகள்
#அடைமழை” – ஐப்பசியில் பெய்வது
 அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழைதமிழ்நாட்டை வெளுக்கும் கனமழை: ரிஷிவந்தியத்தில் 14 செ.மீ கனமழை பதிவு!
#கனமழை” – கார்த்திகையில் பெய்வது..
 
இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:
 
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
 
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
 
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
 
மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம்.
 
 அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.
 
"கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி".........(குறள் 701)
இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்
பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்
 
"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு"......(குறள் 452)
எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.
 ஆட்டுக்கல் என்னும் மழைமானி பற்றி உங்களுக்கு தெரியுமா? வழக்காடலில் இருந்த  சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒருஉழவுமழை :
 
‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.
 உழவு மழை
பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. 
 மழை - தமிழ் விக்கிப்பீடியா
ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்..
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷