*தகாத நட்பின் முடிவு என்ன ஆகும்?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:34 | Best Blogger Tips



ஒரு வீட்டில் மண் குடமும், இரும்புக் குடமும் இருந்தன.

மண்குடம் இரும்புக் குடத்துடன் நட்பு கொள்ள விரும்பியது.

இதைக் கண்ட பிற மண் பாண்டங்கள், “நமக்குச் சமமானவர்களுடன் நட்பு கொள்வதே சிறந்தது. நம்மை விட பலசாலியானவர்களிடம் நட்பு கொள்வது நமக்கு ஆபத்தாய் முடியும்என்று எச்சரித்தன.

ஆனால் அதை மண்குடம் கேட்கவில்லை.இரும்புக் குடத்துடன் நட்பு வைத்துக் கொண்டது.

மண் குடத்துக்கு இரும்புக் குடத்துடன் சேர்ந்திருப்பதில் விருப்பம் அதிகமிருந்தது.

வீட்டுக்காரர் மண்குடத்தை எங்கு வைத்தாலும் அது யாருக்கும் தெரியாமல் இரும்புக் குடத்துடன் போய் இருந்து கொள்ளும்.



இதைக் கண்ட பிற மண் பாத்திரங்கள், “மண் குடமே, நீ இப்படி மண் இனத்துடன் சேராமல் இரும்பு இனத்துடன் சேர்ந்து கொள்வது உனக்கு ஆபத்தாய்த்தான் முடியப் போகிறதுஎன்றன.

ஆனால் அவைகளையெல்லாம் மண் குடம் கண்டு கொள்ளவேயில்லை.

ஒரு நாள் அந்த வீட்டுக்காரர் தன் பழைய வீட்டை விட்டு புதிய வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தார்.

அவர் தன் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் ஒரு வண்டியில் எடுத்து வைத்துக் கொண்டு புதிய வீட்டிற்கு வண்டியை ஓட்டிச் சென்றார்....

அந்த வண்டியில் மண் குடம் பிற மண் பாத்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு இருந்தது. மண் குடத்திற்கு தன் நண்பனான இரும்புக் குடத்தை விட்டு பிரிய மனமில்லை... அங்கிருந்து நகர்ந்து இரும்புக் குடத்துடன் சேர்ந்து அமர்ந்து கொண்டது.

வண்டி ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. வண்டி குலுங்கியது.

இரும்புக் குடம் மண் குடத்தின் மேல் கவிழ்ந்தது.

அவ்வளவுதான்! மண் குடம் தூள் தூளாகியது.

தங்கள் இனத்தைச் சேர்ந்த மண் குடம் தகாத நட்பால் மாண்டு போனதை எண்ணி வருத்தப்பட்டன....

  

நன்றி இணையம்

*உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:30 | Best Blogger Tips

 


*உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!*

உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக

இருக்காதீர்கள்.



செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது

உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ

உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்

வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.

பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு

அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே

போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?

ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,

சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்

இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.

அதனால் *உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்*

*நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,*

*அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்*

உங்கள் இரத்தசொந்தங்களுக்கு

உதவிகளை செய்யுங்கள். உள்சுவரைப்பூசி, வெளிசுவரைப் பூசுங்கள் என்று சொல்வதைப்போல, உங்கள் தானம், தர்மம் அமையட்டும்....

விளம்பரத்திற்காக தானம், உதவிகள் செய்வதால், எந்த பிரயோஜனமும், இருக்காது.நீர் ஓடையில் தூவும் மலரைப்போன்று ஆகிவிடும்...

சிந்தியுங்கள்....

செயல்படுங்கள்....

முதியோர்களைப் போற்றுங்கள் என கூறி நிறைவு செய்கிறேன்...

மேலும் தொடரும்.....

 

நன்றி இணையம்