*எதிர் நீச்சல்..*_

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:06 | Best Blogger Tips



அவன் மிகவும் இளகிய மனம் படைத்தவன்.. யாருக்கும் உதவும் உள்ளம் கொண்டவன்..

அன்று வீட்டின் முற்றத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்..

அவன் வீட்டின் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை எதேச்சையாகப் பார்த்த போது.. ஒரு குட்டி வண்ணத்து பூச்சி அவன் கண்ணில்பட்டது..

மகரயாழ் அந்த வண்ணத்து பூச்சி தனது கூட்டுப்புழு கூட்டிலிருந்து வெளி வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது..

இந்த சின்ன வண்ணத்து பூச்சிக்கு பறந்து வர எவ்வளவு ஆசை இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் அதற்கு உதவ நினைத்தான்..

ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான்.. வண்ணத்து பூச்சிக்கு சுற்றி உள்ள கூட்டை ஆங்காங்கே வெட்டிவிட்டான்..

அவன் மனதில் ஒரு பரம ஆனந்தம், வண்ணத்து பூச்சிக்கு விடுதலை அளித்ததற்காக..!

நேரம் கடந்த்தது, ஆனால் மகரயாழ் வண்ணத்துப்பூச்சி வெளியே வந்தபாடில்லை..! சிறிது நேரத்தில் எறும்புகள் அதை மொய்த்தது.. வண்ணத்துப் பூச்சி இறந்து விட்டிருந்த்தது..!



அவன் திகைத்து நின்றான்..

கூட்டுப்புழு கூட்டை உடைத்து வெளிவரும் போது வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளுக்கு பறப்பதற்குத் தேவையான சக்தியும் சில சுரப்பிகளும் சுரக்கும்.. அதற்கு உதவும் நோக்கத்தில் வெட்டி விடப்பட்ட கூடு, அதற்கு எமனாகி விட்டது..!

*நமக்கு வரும் கஷ்டங்கள், நம்மை வாழ்விப்பதற்காக கொடுக்கப்படும் பயிற்சி ..*

_அதனால் அதை ஏற்றுக்கொண்டு பயிலுவோம் , எனக்கு உதவ யாரும் இல்லை என்று நினைக்காதே , அந்த கஷ்டமே உனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட உதவி.._

 


நன்றி இணையம்