திருவள்ளுவர் இந்துதான்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:08 | Best Blogger Tips

 





ரங்கராஜ் பாண்டே அவர்களின் பக்கத்தில் திருவள்ளுவர் இந்துதான் என்று அவர் பேசிய காணொளியை பதிந்திருந்தார். அதை பார்த்த சில மாற்றுமத நண்பர்கள் திருக்குறளில் இந்து என்ற வார்த்தை இருக்கா? குறைந்தபட்சம் திருக்குறளில் சொல்லப்படும் எதாவது ஒரு திருக்குறள் எதாவது இந்துமத நூலுடன் ஒத்துப்போகிறதா? என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பினார்கள்...!


திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் கண்ணன், இந்திரன், லட்சுமி, எமன், பிரம்மா போன்ற தெய்வங்களை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் இந்துதான் என்று கூறினாலும் இந்து என்ற சொல்லாடல் இருக்கா? என்ற கேள்வியை எழுப்புபவர்களிடம் தமிழ் என்ற சொல்லாடல் திருக்குறளில் இல்லை என்பதற்காக திருக்குறளை தமிழ்நூல் இல்லை என்று கூறினால் எவ்வாறு ஏற்க இயலாதோ அதுபோல்தான் இந்து மத கருத்துகள் நிறைந்த திருக்குறளை இந்து மத நூல் இல்லை என்று கூறுவதையும் ஏற்க இயலாது ...!

(இப்பதிவை இரு கேள்விகளை அடிப்படையாகக்கொண்டு தொடர்வோம்.)

1. திருக்குறளில் உள்ள எந்த குறள் இந்துமத நூல்களில் உள்ள கருத்துகளோடு ஒத்துப்போகிறது???

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறளைப்போல் அனைவரும் சமம்னு சொல்லும் நூல் இந்துமதத்தில் உண்டா??

முதலாவதாக திருவள்ளுவர் புலால் உண்பதை கண்டித்து ஒரு தனி அதிகாரமே எழுதியுள்ளார் என்பது நாம் அறிந்ததே. உதாரணமாக,

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று"

- திருக்குறள்.


பொருள் : மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய அவிகளைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. என்று வேள்வி செய்வதை விட ஊன் உண்ணாதிருப்பதே மேல் என்று கூறுகிறார். இங்கே திருவள்ளுவர் கூறிய அதே பொருளில் மனு தர்மமாமனது வள்ளுவர் கூறிய அதே பாணியில் புலால் உண்பதை கண்டிக்கிறது. உதாரணமாக,


"வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோ யஜேத ஶதம் ஸமா: ।

மாம்ஸாநி ச ந கா²தே³த்³ யஸ்தயோ: புண்யப²லம் ஸமம்॥

பொருள் : ஒருவன் நூறாண்டுகாலத்திற்கு வருடத்திற்கு ஒரு அஸ்வமேத யாகம் புரிவதால் எந்த அளவு புண்ணியத்தை பெறுவானோ, அதே அளவு புண்ணியத்தை ஒருவன் புலால் உண்ணாமலிருப்பதால் பெறுகின்றான்.

- மனு தர்மம்.

அதாவது திருக்குறளைப்போன்றே மனுஸ்ம்ருதியும் வேள்விகள் செய்வதை விட புலால் உண்ணாமலிருப்பது மேல் என்று கூறுகிறது. ஏனெனில் சிரமப்பட்டு, பெரும் பொருளை செலவழித்து, நியம நிஷ்டையோடு நூறாண்டுகாலம் நூறு அஸ்வமேதம் செய்யும் பலனை சுலபமாக புலால் மறுப்பதால் பெறலாம் என்கின்றது. அதோடு,

"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்"

பொருள் : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்? இதை மனுவின் வழியே பார்த்தோமேயானால்,

"ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேந யோ வர்தயிதுமிச்ச²தி । அநப்யர்ச்ய பித்ரூʼந் தே³வாம்ஸ்ததோந்யோ நாஸ்த்யபுண்யக்ருʼத் ॥

பொருள் : பித்ரு மற்றும் தேவகார்யங்கள் தவிர்த்து, எவனொருவன் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காக மற்றோர் உயிரின் உடம்பை புசிக்கிறானோ,

அவனை காட்டிலும் பெரிய பாபி இருக்க முடியாது.

-மனு தர்மம்.

இவ்வாறு திருக்குறளில் உள்ள ஒரே கருத்துகள் மனுஸ்மிருதியிலும் உள்ளது என்பதை மறுக்க இயலாது. அடுத்ததாக,

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில்_வேற்றுமை யான்"

பொருள் : எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதே கருத்து பகவத்கீதை மற்றும் இராமாயணத்திலும் உள்ளது. உதாரணமாக,

நல்லது எது தீயது எது என்று பிரித்துப் பார்க்கும் நல்லறிவு இல்லாத வாழ்க்கை விலங்கியல் வாழ்க்கையாகும். நீ எல்லாம் அறிந்தவன் ஆகையால் நீ அறியாத நெறி எதுவுமில்லை என்றும் வாலியிடம் இராமன் இவ்வாறு கூறுகிறான்.

தக்கது இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே; மனுவின் நெறி புக்கவேல், அவ்விலங்கும் புத்தேளிரே

என்றும் வாலியிடம் இராமன் எடுத்துக் கூறுகிறார். எக்குலத்தில் பிறந்தாலும் அவரவர் ஆற்றும் செய்கையால் வருவதே மேன்மையும் கீழ்மையும் அல்லாமல் பிறப்பால் அல்ல என்பதை நீ அறிவாய். அதைத் தெளிவாக நீ அறிந்திருந்தும் மனையின் மாட்சியை அழித்தாய் என்பதை வாலி வதை படலத்தில் அழகாக எடுத்துரைக்கப்படுகிறது.

"சினையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சியை என்றான் மனு நீதியான்''

- இராமாயணம்.

இதையேத்தான் பகவத் கீதையில் கண்ணபிரானும் சொல்கிறார். அதாவது,

"சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்"

- பகவத்கீதை.

பொருள் : குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர். அடுத்ததாக இரண்டாவது கேள்வியான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிக்கு ஏற்றார்போல் அனைத்து உயர்களும் சமமானது என்ற தொனில் பகவத்கீதையின் அதிகாரம் 9, சுலோகம் 29 சொல்கிறது,

"ஸமோஹம் சர்வபூசேஷு நமே த்வேஷ்யோ அஸ்திநப்ரிய: |

யே பஜந்தி துமாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் ||"

பொருள் : பலவகையாக உள்ள எல்லா உயிரினங்களிலும் நான் சமமாக இருக்கிறவன். எனக்கு யாரிடமும் வெறுப்பு இல்லை யாரிடமும் விருப்பமும் இல்லை. ஆகவே என்னை சேரத்தக்கவன் சேரதகாதவன் என்று எவருமில்லை. என்னிடம் பக்தி கொண்டு பிரியம் வைப்பவர் எவரோ என்னிடத்தில் அவரும் அவரிடத்தில் நானும் வாழ்கிறோம்...!


- பா இந்துவன்

நன்றி : பா இந்துவன்

 


சைவம்! அசைவம்!! என்ன வேறுபாடு?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:57 | Best Blogger Tips

 



 

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை ...

 

தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...

 

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.

 

தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும்.

 

செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும். மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?

 

தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான் ...

 

நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.

 

ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!

 


எங்கே தவறு நடந்தது?

 

நாக்கு தான்.

 

வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!

 

மாமிசம் மனித உணவா?இனி ஆராய்ச்சி செய்வோம் ...

 

இரு ஜீவராசிகளுக்கும் பற்களின் அமைப்பு ...

 

சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை

போல் தட்டையாக அமைந்துள்ளன. அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

 

எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன?

சைவ ஜீவராசிகள் அனைத்தும்

மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சிதான் குடிக்கின்றன.

 

அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக்

குடிக்கின்றன.

 

கால் விரல்கள்?

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.

 

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

 

குடல் அமைப்பு?

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே பதினைந்து அடி வரை

நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை

குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு.

 

அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம்

உள்ளதால் மிக குறைவான நேரத்தில்

குடலை விட்டு வெளியேற ஏற்றாற்போல் ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம் உள்ளது.

 

சமநிலையான உடல் உஷ்ணம் ... சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம்

அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை

குளிர்விக்கிறது.

 

அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

 

மலத்தின் தன்மை  ...

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம்

துர்நாற்றம் வீசாது.

 

அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம்

கழிப்பதில் சிரமமும், மலம் அதிக துர்நாற்றத்துடனும் இருக்கும்.

 

"உடற்கூறு ஆராய்ந்தோம். இனி மனநிலை ஆராயலாம்."

 

வாழும் முறை ...

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும்.

மனிதனும் அவ்வாறே வாழ ஆசைப்படுகிறான்.

 

அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன்

எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த

இன்னொரு விலங்கினை

அனுமதிக்காது.(இன்றைய மனிதனின் நிலையும்

இதுதான்.)

 

இயல்பு ...

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம்

சாந்தமாகவும், அமைதியாகவும்

இருக்கும்.

 

அசைவ ஜீவராசிகள் வேகமாகவும்,

ஆக்ரோசமாகவும் இருக்கும்.

 

சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான

வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்)

ஈடுபடுத்த முடியும். அசைவ

ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள்

எதுவும் செய்ய இயலாது.

 

மன இறுக்கம் ...

 

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக

மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?

ஒவ்வாருவரின் உடலிலும்

அபாயகரமான சமயங்களில் தப்பித்துக்

கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க

சக்தியை தர ) சக்தி வாய்ந்த ஹார்மோன்கள் அட்ரீனல் சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில்

கலக்கும்.

 

இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில்

சுரந்து அதன் இரத்தத்திலும், சதைகளிலும் கலந்து இருக்கும். இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ

அபாயத்தில் உள்ளது போன்ற உணர்வைப் பெறுகிறான். இதுவே மன இறுக்கமாக

உருவெடுக்கிறது.

 

மனிதன் ஆறாவது அறிவை சற்றும்

பயன்படுத்தாது அதிக சக்தியும், பலமும்

வேண்டியே தான் அசைவம்

சாப்பிடுவதாக எண்ணுகிறான். சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும்

உள்ளது. சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை?

 

உதாரணமாக சோயா பீன்ஸில்

நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன்

உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட

இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட நான்கு மடங்கும் அதிகமாகும்

 

மேற்கண்ட இந்த ஆராய்ச்சியில் அறிய

வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே ! எனவே, மனிதன்

ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, பொறுமையாக,

பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம்

இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல், நோய் இல்லாமலும் வாழ

ஆசைப்படுவான் எனில் சைவமே உட்கொள்வது சாலச் சிறந்தது.

 

இது உண்மைதானா என்று யோசித்துக் கொண்டே இருக்க, திருவள்ளுவர் எனக்கு விடை கொடுத்தார்.

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.

 

பொருள் : தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

 

மனிதன் நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணல, என்ன மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறாருன்னு இனிமேல் கேட்க மாட்டான்.

 

அதற்க்காக அசைவம் சாப்பிடாதீர்கள் என்று நான் கூற முடியாது!

படித்து தெரிந்ததை பகிர்ந்துள்ளேன்!


 நன்றி இணையம்


ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:44 | Best Blogger Tips

 


வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி

தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான்.

அதை அரசனிடம் எடுத்துச்

சென்றபோது சுடுகாட்டில் கிடைத்ததை நீயே

வைத்துக்கொள். சுடுகாட்டுச் சாம்பலை வைத்து

அபிஷேகம் செய்என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான்.

இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்

செய்து வழிபட்டான்.

திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது.

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய

சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது

மனைவியிடம் நான் இந்த தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்என்று கூறினான்.

ஆனால் மனைவியோ நீங்கள் அப்படி இறந்து விட்டால்

இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்

குதிக்கின்றேன்என்று கூறிக்கொண்டே தீயில்

வீழ்ந்தாள். இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன்

பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.

இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன

சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்

வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த

எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு

மோட்சம் அளித்துள்ளாரே என்று வருந்தினாலும் பக்தி

என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே

மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்

*ஓம் நம சிவாய*

 

நன்றி இணையம்