வேலைகளைத் திட்டமிடுங்கள்; சந்தோஷ தருணங்களை ரசித்துக் கொண்டாடு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:35 | Best Blogger Tips

Related image
ஒரு பழைய நண்பரை திடீரென சந்தித்துப் பேசினால், அக்கறையோடு ஒரு உறவினர் நலம் விசாரித்தால், நேசிக்கும் பெண் ஒரு புன்னகை பூத்தால்... உடனே மகிழ்ச்சி மலையின் சிகரத்தை அடைவது பலருக்கு சாத்தியம்.
Related image
ஆனால் அமெரிக்கர்கள் அப்படி இல்லை. உயர்ந்த வேலை, காஸ்ட்லி கார், சொகுசு பங்களா என பல சமாச்சாரங்களில் மகிழ்ச்சியை ஒளித்து வைத்து தவிக்கிறார்கள் அவர்கள். இதனால் மன அழுத்தத்தில் தவிக்கும் பலரை மகிழ்ச்சி அடைய வைப்பது அங்கே பெரிய பிசினஸ். புத்தகங்கள், யோகா, தியானம் என அமெரிக்க மகிழ்ச்சி வியாபாரத்தின் மதிப்பு 63 ஆயிரம் கோடி ரூபாய்.

Image result for வேலைகளைத் திட்டமிடுங்கள்Image result for வேலைகளைத் திட்டமிடுங்கள்
இதனால்தான், மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குவது எப்படி என அறிவியல் ஆராய்ச்சி அங்கே நடந்தது. அதில் மகிழ்ச்சியைப் பெறும் 5 வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அவை இங்கே...


Image result for தோட்ட வேலை
தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி தோட்ட வேலை போன்ற ஏதாவது வழக்கத்துக்கு மாறான பணியைச் செய்வதும், நீண்ட நாட்களாக பார்க்காத ஒரு நண்பரைப் பார்த்துப் பேசுவதும், மனதில் பாசிட்டிவ் சிந்தனைகளை விதைத்து மன அழுத்தத்தைத் துரத்திவிடுகிறதாம்.
Image result for கர்நாடக சங்கீதமோ, இளையராஜா பாடலோ
பிடித்த இசை - அது கர்நாடக சங்கீதமோ, இளையராஜா பாடலோ, பாப் மார்லே ஆல்பமோ - கேட்பது மனதை இதமாக்கி மகிழ்ச்சியை ஊற்றெடுக்கச் செய்கிறது. மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் இயல்பாக இசையை ரசித்தால், மகிழ்ச்சி தானாகக் கிடைக்கும்.
Image result for முதல் நாள் வேலைக்குப் போனதுImage result for திருமணம் தமிழ்
டிகிரி பாஸ் செய்தது, முதல் நாள் வேலைக்குப் போனது, திருமண மேடையில் பூரிப்போடு அமர்ந்திருந்தது என உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் அன்றோடு மறந்து போவதற்கு அல்ல! அவற்றை அவ்வப்போது நினைத்து நினைத்து மகிழ்ச்சியை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள். சந்தோஷ அறையின்
எளிய சாவி இதுதான்!
Image result for மகிழ்ச்சி
அமைதி விரும்பியாக இருப்பவர்கள் மகிழ்ச்சியை லேசான புன்முறுவலுடன் ஏற்கிறார்கள். துன்பத்தை உதட்டைக் கடித்தபடி சகித்துக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள் உடனே மறந்துபோக, துன்பம் மட்டும் சுமையாக மனதில் தங்கிவிடுகிறது. இப்படி இல்லாமல், ஆர்ப்பாட்டத்தோடு மகிழ்ச்சியை அனுபவிக்கிறவர்கள், துன்பத்தையும் நான்கு பேரிடம் புலம்பி லேசாக்கிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியை ஆர்ப்பாட்டமாக அனுபவியுங்கள்.
Image result for தீபாவளி
எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க நினைத்தால் மகிழ்ச்சி தொலைந்துவிடுகிறதாம். தீபாவளியை எப்படிக் கொண்டாட வேண்டும் என ஒரு மாதமாக திட்டமிட்டு, டிரஸ், ஸ்வீட், பட்டாசு, உறவினர் வீடுகளுக்கு டூர் என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்பவர்கள், ஏதோ ஓரிடத்தில் தப்பு நேர்கிறபோது நிம்மதி தொலைக்கிறார்கள்.

ஆனால் தீபாவளியை அந்த தினத்தில் ரசித்துக் கொண்டாடுபவர்கள் அதிக மகிழ்ச்சி பெறுகிறார்கள்.
Image result for வேலைகளைத் திட்டமிடுங்கள்
வேலைகளைத் திட்டமிடுங்கள்; சந்தோஷ
தருணங்களை இயல்பாக எதிர்கொள்ளுங்கள்.

Image may contain: 1 person, closeup
👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*


நன்றி 👤✍ *பெ.சுகுமார்*

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா?🐝🐝

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:06 | Best Blogger Tips
Image result for திருப்பதி சென்று வந்தால் நிச்சயம்

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா?🐝🐝

விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு

யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...
Image result for திருப்பதி சென்று வந்தால் நிச்சயம்
இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

செல்வம் மலை போல குவியும்.🌳

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள் .

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது
ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.🌳

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " -- 🌳

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!


#பொதுப்_பொருள்:


திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.


ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

Image may contain: 1 person, standing and indoor
நன்றி இணையம்

பழமொழிகள் 1

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:03 | Best Blogger Tips
See the source image

*இட்டுக் கெட்டது காது*
*
இடாது கெட்டது கண்*
*
கேட்டுக் கெட்டது குடி*
*
கேளாது கெட்டது கடன்*
*
பார்த்துக் கெட்டது பிள்ளை
*
பாராமல் கெட்டது பயிர்*
*
உண்டுக் கெட்டது வயிறு*
*
உண்ணாமல் கெட்டது உறவு*

விளக்கம் :

குச்சியைச் சதா காதில் விட்டு குடைவதால் காது கெடும்
மையை இடாததால் கண் கெடும்

பிறர் சொல்லும் கோள் வார்த்தைகளை காது கொடுத்துக் கேட்டால்

குடும்பம் சீரழியும்

அடிக்கடி கேட்காததால் கடன் திரும்பி வராமல் அழியும்

தயவு தாட்சண்ணியம் பார்த்துக் கண்டிக்காமல் இருந்தால்
பிள்ளைகள் திருந்தாமல் கெட்டுப் போவார்கள்

அடிக்கடி போய் பார்க்க வில்லையானால் பயிர் கெடும்
அடிக்கடி உண்பதால் வயிறு கெடும்

உறவினர் வீடுகளில் விசேஷக் காலங்களில்
நாம் கலந்துக் கொண்டு உணவு உண்ணவில்லையானால்
உறவினர் நட்புக் கெடும்.

படித்ததில் ரசித்தது!
நன்றி இணையம்