பிரதமர் மோடி வருடத்தில் 300 நாட்களும்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 No photo description available.

பிரதமர் மோடி வருடத்தில் 300 நாட்களும் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்.., என்ன தெரியுமா?
 
பிரதமர் நரேந்திர மோடி, வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களுக்கு சிறப்புவாய்ந்த மக்கானாவை சாப்பிடுவாராம்.
 
பலரும் மக்கானாவை உணவில் சேர்த்துக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
மக்கானா என கூறப்படும் தாமரை விதையை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வருடத்தில் 300 நாட்கள் மக்கானா தனது உணவில் நிச்சயமாக இருக்கும் என்று மோடி கூறியிருக்கிறார். 
 
மேலும், அவற்றை பெரிய அளவில் பயிரிட வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, இது விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
 
இப்போது பல நகரங்களில் மக்கானா தினசரி காலை உணவாக மாறிவிட்டது என்று கூறிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டதையும் நினைவுப்படுத்தினார்.
 
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மக்கானாவில் 90 சதவீதம் பீகாரில் இருந்து வருகிறது. இது முக்கியமாக தர்பங்கா, மதுபானி மற்றும் பூர்னியாவில் பயிரிடப்படுகிறது.
மேலும், மக்கானா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
இதன் நன்மைகள்;
 
மக்கானா குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. மேலும், இது புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 
 
மக்கானாவில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
 
மேலும், இதில் சோடியம் குறைவாக உள்ளது, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
மக்கானாவில் ஆக்ஸிஜனேற்றிகள், 
 
ஃபிளாவனாய்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கின்றன.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது. மேலும், இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது.
 
மக்கானாவை சாப்பிடுவதை வழக்கமாக வைகொண்டால் சருமம் நன்கு மின்னும்.மேலும், முகப்பரு மற்றும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
 
மக்கானா உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
 

Copy from FB 

சரோஜாபாட்டி கைவைத்தியம்

சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும்............!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 Free Aari work training : தினமும் ரூ.5ஆயிரம் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.!  மகளிர் சுய உதவிக்குழுவிற்கு இலவச ஆரி ஒர்க் பயிற்சி | Notification for free  Ari work training for ...

♦ கடந்த 10 வருடங்களில் சொந்த தொழில் செய்து பணம் ஈட்டுவது முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது!
 
♦ *முன்பெல்லாம் 20,000 ரூபாய் முதலீடு செய்தால் கூட ஓரளவு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி முன்னேற முடியும்!*
 
♦ பல ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறிய தொழில் அதிபர்கள் உருவான காலகட்டம் அது!
 
♦ *கடன் கொடுத்தால் கூட திரும்பி வரும் என்று நம்பிக்கை இருந்த காலம் அது!*
 
♦ ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது!
 
♦ *ஒன்று பெரிய அளவில் முதலீடு போட்டு குறைந்த விலையில் விற்க வேண்டும்!*
 
♦ இல்லையெனில் நன்கு கடைகளை அலங்காரம் செய்து லாபத்தை பார்க்க வேண்டும்!
 உங்களுக்கு செயலற்ற வருமானம் தரும் முதலீடு | சுக்குக்கு ஒரு அறிமுகம்
♦ *அதைவிட கொடுமை உழைப்பில் பெரும்பகுதியை வாடகை தின்று விடுகிறது!*
 
♦ கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்று உத்தரவாதம் இல்லை!
 
♦ *லட்ச ரூபாய் முதலீட்டில் செய்து லாபம் பார்த்த தொழிலுக்கு இன்று பத்து லட்சமாவது முதலீடு செய்தால் தான் நஷ்டமின்றி பிழைப்பு ஓடும் என்ற நிலை வந்து விட்டது!*
 
♦ அதைவிட கொடுமை புதிய முயற்சிகளில் யாரும் இறங்குவதே இல்லை!
 
♦ *ஒரு ஊரில் ஒருவர் ஒரு தொழிலை ஆரம்பித்தால் அந்த முதலீட்டிற்கு நுகர்வு அதாவது விற்பனை கணிசமான அளவு வருகிறது என்று தெரிந்து விட்டால் போதும் வசவசவென அதே பகுதியில் அதே தொழிலை பலரும் ஆரம்பித்து போட்டி போட்டு லாபக்குறைவில் விற்று குறிப்பிட்ட காலத்தில் கூண்டோடு காணாமல் போய்விடுகின்றனர்! முதன்முதலில் அந்த தொழிலை செய்தவரும் சேர்த்து காணாமல் போகிறார்!*
 
♦ அதைவிட பிரமாதம் உழைக்கும் தொழிலாளர்களின் மனப்போக்கு!
 
♦ *10 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் இருந்த உழைக்கும் தன்மை இப்போது இல்லை! அவர்கள் தொழிலைக் கற்றுக் கொண்டு எப்படியும் முதலாளி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் உழைப்பார்கள்!*
 
♦ இப்போது அப்படி இல்லை, இந்த கூலிக்கு இவ்வளவு உழைத்தால் போதும் என்று முதலாளிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் செய்கின்றனர்!
 
♦ *விளைவு தொழில் சுத்தமும் இல்லை, இவர்களும் முதலாளிகள் ஆவதில்லை, முதலாளியும் உருப்படுவதில்லை!*
 
♦ வேலை செய்வதிலும் ஈடுபாடு இல்லாமல், ரிஸ்க் எடுத்து முதலீடு போட்டு தொழில் செய்யலாம் என்ற எண்ணமும் இல்லாமல் குழப்பங்கள் நிறைந்த இளைஞர்கள் கூட்டம் பெருகியுள்ளது!
 
♦ *சரியான வழிகாட்டுதல் இல்லை, சுயதொழில் தன்முனைப்பு இல்லை, கிடைக்கும் வேலையில் ஒட்டிக்கொண்டு அதையே திட்டிக்கொண்டே செய்கின்ற சமுதாயம் உருவாகிவிட்டது!*
 
♦ கடந்த 10 வருடங்களில் பிரம்மாண்டமான பல ஹோட்டல்கள், விடுதிகள், ஷாப்பிங் மால்கள், நகைக்கடைகள் என்று நேர்மையற்ற பணத்தில் எழும்பி நிற்கும் சாம்ராஜ்யங்கள் திகைக்க வைக்கின்றன!
 
♦ *மிகப்பெரிய தொழில் முதலீடு, திறமை, ஒழுக்கம் இந்த மூன்றும் இல்லாமல் ஒரு தொழிலதிபர் உருவாவது இனி சாத்தியம் இல்லை!*
 
♦ நேர்மையற்ற பணம் விதவிதமான வழிகளில் வேரூன்றி வியாபார சந்தைகளை வளைத்து விட்டது!
 
♦ *அரசியல், அதிகார தொடர்பு, பணம் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர் ஆக இனி வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை தான் மிஞ்சுகிறது!*
 
♦ இனி வரும் காலங்களில் பலமுள்ளது வாழும், பலமற்றது வீழும், அது எந்த தொழில் ஆனாலும் சரி!!!
 
♦ *எல்லாம் சில காலமே நிற்கும் , காலம் மாறுதலுக்குரியது என்பதை சமுக , பொருளாதாரம், பொதுவாழ்க்கை மற்றும் வாழ்வியலில் நடக்கும் நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் , இன்றைய , நாளைய சமுதாயம் உணரக்கூடியதாக அமையும்.*
 
♦ ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக
மேலே உள்ள எழுத்துகள்
பேசும் !!!
 
♦ *ஒலியாக இல்லை மெளனமாகவே...*
 
♦ சற்றே சிந்திப்போம்...
 
சந்ததிகளை பற்றி சற்றே யோசிப்போம்.
🙏🙏🙏🙏

copy & from FB 

S.k. Babu

 May be an image of one or more people and beard

NEET - MEDICAL SEAT ......எவ்வளவு கோடி தந்தாலும் இப்போது முடியாது..!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

 What is NEET? Full-Form, Syllabus and Eligibility 

பலருக்கு நீட் பற்றி தெரியவில்லை எனக்கு கூட மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு வெளியே சொன்னதை வைத்து கொண்டு தெரிந்த விசயம் தான் உண்மை என்று நம்பி இருந்தேன்.
சுருக்கமாக சொல்கிறேன். 
 
ஒரு காலத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் கிடைக்கும். 50 சதவீதம் கல்லூரி கோட்டா நேரடியாக கல்லூரிகள் சீட்டை நிரப்பலாம். இதை சுருக்கமாக இவ்வளவு புரிந்தால் போதும். 
 
இப்போது நீங்கள் நீட் பரிட்சை எழுத வேண்டும். அதில் வினா தாள் லீக் ஆகுறது அதற்கு நடவடிக்கைகள் தேவை ஆனால் நீட் எழுதி அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண் இந்திய அளவில் என்ன ரேங்க் தமிழக அளவில் என்ன ரேங்க் என வந்துவிடும். 
 
இதை இரண்டு வகையான கவுன்சிலிங் வழியாக நாம் இணைய முடியும்.
 
அதாவது பிரைவேட் மற்றும் டீம்ட் யுனிவர்சிட்டி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடம் இது எல்லாம் சென்ட்ரல் கவர்மெண்ட் கவுன்சிலிங் ல வரும் அதில் எந்தெந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தேவை என நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அது குறிபிட்ட தேதியில் லாக் செய்யபட்டு ரிசல்ட் வரும். ஒருவேளை நீங்கள் அதில் தேர்தெடுக்கபட்டால் உடனடியாக அரசு கல்லூரி என்றால் அதற்கு கட்டணம் அரசின் மெடிக்கல் கவுன்சிலுக்கு ஆன்லைன் பணம் போட்டு ஆடரை டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி சென்று ஆவனங்களை சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அந்த கல்லூரியும் அதை உறுதி செய்ய வேண்டும்.
 
மீதம் வராத சேராத இடங்களுக்கு மறுபடியும் இரண்டு மூன்று சுற்றுகள் நடக்கும்.
அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மெடிக்கல் கவுன்சில் அரசு மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் துவங்கும்.
 
ஒரு மாணவர் இரண்டிலும் பங்கேற்க முடியும்.
வைப்பு தொகை ஆயிரம் ரூபாய். ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் என்றால் இரண்டு லட்சம் அரசு கணக்கில் செலுத்த வேண்டும். மாநிலத்தின் கவுன்சிலிங் ல ஆயிரமும் தனியார் கல்லூரியில் அப்ளை செய்தால் ஒரு லட்சம் பினை தொகை செலுத்த வேண்டும் 
 
எல்லா கவுன்சிலிங் நடைமுறையும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். நேரடியாக தொலைபேசி வழியாக எந்த ஒரு செயல்பாடும் இல்லை.
உதாரணமாக ஒரு மெயில் ஐடி தவறாக பதிவு செய்தால் கூட மெடிக்கல் கவுன்சிலுக்கு மெயில் வழியாக மட்டுமே சரி செய்ய முடியும்.
இந்த மாநில அரசு கவுன்சிலிங் ல அரசு கல்லூரி இடம் கிடைத்தால் மெட்ராஸ் மெடிக்கல் கவுன்சில் என்ற வங்கி கணக்கில் 13500 செலுத்தி அந்த சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லுரி சென்று மற்ற சான்றிதழ் தந்து உறுதி செய்ய வேண்டும்.
 
ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் இரண்டு வகையான சீட் உள்ளது மதிப்பெண் அடிப்படையில் கவர்மெண்ட் கோட்டா மேனேஜ்மென்ட் கோட்டா என்று இரண்டுமே அரசின் கவுன்சிலிங் வழியாக மட்டுமே அப்ளே செய்ய முடியும்.
 May be an image of tree and road
அப்படி நீங்கள் கவர்மெண்ட் கோட்டா ல வந்தால் 3.5 லட்சம் அரசின் கணக்கில் செலுத்தி அதற்கு சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லூரி சென்று இணைய வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா என்றால் 13.5 லட்சம்.இதுவும் காலேஜில் கட்ட கூடாது மெடிக்கல் கவுன்சில் அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் இதை அரசு அந்த கல்லூரிக்கு நேரடியாக வழங்கும்.
 
இதில் இந்த டியூஷன் பீஸ் போக புத்தகம் உணவு தங்குமிடம் போக்குவரத்து என்று தனியார் மற்றும் அரசு கல்லூரியில் அனைத்தும் நமது வசதிக்கேற்ப செலவுகள் உள்ளது 
 
இதில் கடைசியாக ஒவ்வொரு கல்லூரியிலும் என்ஆர்ஐ கோட்டா என்று கடைசியில் மாப் ஆப் ரவுண்ட் என்று வரும் அதற்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வெளிநாட்டு குடியுரிமை சான்று என சில விசயங்கள் தேவை.
 
உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் நிச்சயமாக கவுன்சிலிங் வழியாக மட்டுமே போக முடியும்.
 
அப்படி பணம் இருந்தால் போக முடியும் என்றால் எதற்காக வினாத்தாள் க்கு கோடிக்கணக்கான ஸ்கேம் நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
நீங்கள் நீட்டில் போதுமான மதிப்பெண் எடுத்து சரியான கல்லூரியை தேர்ந்தெடுத்து கவுன்சிலிங் வழியாக சரியான முறையில் பதிவு செய்து குழப்பம் இல்லாமல் அணுகினால் நிச்சயமாக மருத்துவம் படிக்க முடியும்.
 
எவ்வளவு கோடி தந்தாலும் இப்போது முடியாது.
சில புரோக்கர்கள் அதை செய்யலாம் இதை செய்யலாம் என்று உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி இழுத்தடித்து கடைசியில் வாங்க உக்ரைன் ல படிக்கலாம் சைனால படிக்கலாம் னு மனதை குழப்புவதற்காக பணம் இருந்தால் இங்கேயே வாங்கலாம் என்று சொல்லி ஏமாற்றலாம்.
இதெல்லாம் நான் கூகுளில் படிக்கவில்லை.
எனது மகனுக்கு மருத்துவம் சேர்ப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் பட்ட நேரடி அனுபவம்
மேலும் முன்பு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இருந்தது இப்போது சிறப்பு தேர்வு நீட் வழியாக மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து கொள்ளலாம் இன்னும் மருத்துவ ஆசை நிறைவேற வாய்ப்பு.
 
மேலும் மாநில கல்வி சிலபஸ் படிப்பவர்கள் எப்படி போட்டி போட முடியும் என்று கேட்கலாம். அதற்காகவே 7.5. சதவீதம் அரசு பற்றி மாநில கல்வி வழியாக படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளது அந்த 7.5 சதவீதம் அவர்களுக்கு மட்டுமே. அது இல்லாமல் வேற இட ஒதுக்கீடுகள் வழியாகவும் அவர்கள் வர முடியும்.
 
இன்னும் நீட் மற்றும் கவுன்சிலிங் பற்றி எந்த சந்தேகம் இருந்தால் கூட கேளுங்கள். யாருடைய உதவியும் இல்லாமல் நான் எனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன் எந்த இடைதரகரும் தேவையில்லை ஆரம்பத்தில் நான் நேரடியாக எல்லா காலேஜில் போய் கேட்டு வந்தேன் அவர்கள் தெளிவாக சொல்லிட்டாங்க. நீங்கள் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் போங்க அங்கு செலக்ட் ஆகுற வரை நீங்கள் இங்கே வரவே தேவையில்லை செலெக்ட் ஆனால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் க்கு கட்டணம் செலுத்தி விட்டு அதற்கான அலாட்மண்ட் கடிதத்தை எடுத்துக் கொண்டு இங்கே வாங்க அது வரை யாரையும் நீங்கள் பார்க்க தேவையில்லை என்று சொல்லி அனுப்பிட்டாங்க.
 
பசங்கள கவனமாக படிக்க சொல்லுங்க வேற எதுவும் தேவையில்லை. ஒரு வேளை நீங்கள் தனியார் கல்லூரியில் சேர விரும்பும் பட்சத்தில் நீங்கள் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.
 
கா பா
Thanks & copy from 
https://www.facebook.com/share/p/19467TNBfe/