பலருக்கு நீட் பற்றி தெரியவில்லை எனக்கு கூட மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு வெளியே சொன்னதை வைத்து கொண்டு தெரிந்த விசயம் தான் உண்மை என்று நம்பி இருந்தேன்.
ஒரு காலத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சீட் கிடைக்கும். 50 சதவீதம் கல்லூரி கோட்டா நேரடியாக கல்லூரிகள் சீட்டை நிரப்பலாம். இதை சுருக்கமாக இவ்வளவு புரிந்தால் போதும்.
இப்போது நீங்கள் நீட் பரிட்சை எழுத வேண்டும். அதில் வினா தாள் லீக் ஆகுறது அதற்கு நடவடிக்கைகள் தேவை ஆனால் நீட் எழுதி அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண் இந்திய அளவில் என்ன ரேங்க் தமிழக அளவில் என்ன ரேங்க் என வந்துவிடும்.
இதை இரண்டு வகையான கவுன்சிலிங் வழியாக நாம் இணைய முடியும்.
அதாவது பிரைவேட் மற்றும் டீம்ட் யுனிவர்சிட்டி மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சதவீதம் இடம் இது எல்லாம் சென்ட்ரல் கவர்மெண்ட் கவுன்சிலிங் ல வரும் அதில் எந்தெந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தேவை என நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். அது குறிபிட்ட தேதியில் லாக் செய்யபட்டு ரிசல்ட் வரும். ஒருவேளை நீங்கள் அதில் தேர்தெடுக்கபட்டால் உடனடியாக அரசு கல்லூரி என்றால் அதற்கு கட்டணம் அரசின் மெடிக்கல் கவுன்சிலுக்கு ஆன்லைன் பணம் போட்டு ஆடரை டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி சென்று ஆவனங்களை சமர்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அந்த கல்லூரியும் அதை உறுதி செய்ய வேண்டும்.
மீதம் வராத சேராத இடங்களுக்கு மறுபடியும் இரண்டு மூன்று சுற்றுகள் நடக்கும்.
அதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில மெடிக்கல் கவுன்சில் அரசு மற்றும் அந்த மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் துவங்கும்.
ஒரு மாணவர் இரண்டிலும் பங்கேற்க முடியும்.
வைப்பு தொகை ஆயிரம் ரூபாய். ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் என்றால் இரண்டு லட்சம் அரசு கணக்கில் செலுத்த வேண்டும். மாநிலத்தின் கவுன்சிலிங் ல ஆயிரமும் தனியார் கல்லூரியில் அப்ளை செய்தால் ஒரு லட்சம் பினை தொகை செலுத்த வேண்டும்
எல்லா கவுன்சிலிங் நடைமுறையும் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். நேரடியாக தொலைபேசி வழியாக எந்த ஒரு செயல்பாடும் இல்லை.
உதாரணமாக ஒரு மெயில் ஐடி தவறாக பதிவு செய்தால் கூட மெடிக்கல் கவுன்சிலுக்கு மெயில் வழியாக மட்டுமே சரி செய்ய முடியும்.
இந்த மாநில அரசு கவுன்சிலிங் ல அரசு கல்லூரி இடம் கிடைத்தால் மெட்ராஸ் மெடிக்கல் கவுன்சில் என்ற வங்கி கணக்கில் 13500 செலுத்தி அந்த சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லுரி சென்று மற்ற சான்றிதழ் தந்து உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை நீங்கள் தனியார் கல்லூரியில் இரண்டு வகையான சீட் உள்ளது மதிப்பெண் அடிப்படையில் கவர்மெண்ட் கோட்டா மேனேஜ்மென்ட் கோட்டா என்று இரண்டுமே அரசின் கவுன்சிலிங் வழியாக மட்டுமே அப்ளே செய்ய முடியும்.
அப்படி நீங்கள் கவர்மெண்ட் கோட்டா ல வந்தால் 3.5 லட்சம் அரசின் கணக்கில் செலுத்தி அதற்கு சான்றிதழ் டவுன்லோட் செய்து அந்த கல்லூரி சென்று இணைய வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா என்றால் 13.5 லட்சம்.இதுவும் காலேஜில் கட்ட கூடாது மெடிக்கல் கவுன்சில் அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் இதை அரசு அந்த கல்லூரிக்கு நேரடியாக வழங்கும்.
இதில் இந்த டியூஷன் பீஸ் போக புத்தகம் உணவு தங்குமிடம் போக்குவரத்து என்று தனியார் மற்றும் அரசு கல்லூரியில் அனைத்தும் நமது வசதிக்கேற்ப செலவுகள் உள்ளது
இதில் கடைசியாக ஒவ்வொரு கல்லூரியிலும் என்ஆர்ஐ கோட்டா என்று கடைசியில் மாப் ஆப் ரவுண்ட் என்று வரும் அதற்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வெளிநாட்டு குடியுரிமை சான்று என சில விசயங்கள் தேவை.
உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் நிச்சயமாக கவுன்சிலிங் வழியாக மட்டுமே போக முடியும்.
அப்படி பணம் இருந்தால் போக முடியும் என்றால் எதற்காக வினாத்தாள் க்கு கோடிக்கணக்கான ஸ்கேம் நடக்கிறது என்று யோசிக்க வேண்டும்.
நீங்கள் நீட்டில் போதுமான மதிப்பெண் எடுத்து சரியான கல்லூரியை தேர்ந்தெடுத்து கவுன்சிலிங் வழியாக சரியான முறையில் பதிவு செய்து குழப்பம் இல்லாமல் அணுகினால் நிச்சயமாக மருத்துவம் படிக்க முடியும்.
எவ்வளவு கோடி தந்தாலும் இப்போது முடியாது.
சில புரோக்கர்கள் அதை செய்யலாம் இதை செய்யலாம் என்று உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி இழுத்தடித்து கடைசியில் வாங்க உக்ரைன் ல படிக்கலாம் சைனால படிக்கலாம் னு மனதை குழப்புவதற்காக பணம் இருந்தால் இங்கேயே வாங்கலாம் என்று சொல்லி ஏமாற்றலாம்.
இதெல்லாம் நான் கூகுளில் படிக்கவில்லை.
எனது மகனுக்கு மருத்துவம் சேர்ப்பதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் பட்ட நேரடி அனுபவம்
மேலும் முன்பு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இருந்தது இப்போது சிறப்பு தேர்வு நீட் வழியாக மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து கொள்ளலாம் இன்னும் மருத்துவ ஆசை நிறைவேற வாய்ப்பு.
மேலும் மாநில கல்வி சிலபஸ் படிப்பவர்கள் எப்படி போட்டி போட முடியும் என்று கேட்கலாம். அதற்காகவே 7.5. சதவீதம் அரசு பற்றி மாநில கல்வி வழியாக படித்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு உள்ளது அந்த 7.5 சதவீதம் அவர்களுக்கு மட்டுமே. அது இல்லாமல் வேற இட ஒதுக்கீடுகள் வழியாகவும் அவர்கள் வர முடியும்.
இன்னும் நீட் மற்றும் கவுன்சிலிங் பற்றி எந்த சந்தேகம் இருந்தால் கூட கேளுங்கள். யாருடைய உதவியும் இல்லாமல் நான் எனது மகனை மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன் எந்த இடைதரகரும் தேவையில்லை ஆரம்பத்தில் நான் நேரடியாக எல்லா காலேஜில் போய் கேட்டு வந்தேன் அவர்கள் தெளிவாக சொல்லிட்டாங்க. நீங்கள் ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் போங்க அங்கு செலக்ட் ஆகுற வரை நீங்கள் இங்கே வரவே தேவையில்லை செலெக்ட் ஆனால் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் க்கு கட்டணம் செலுத்தி விட்டு அதற்கான அலாட்மண்ட் கடிதத்தை எடுத்துக் கொண்டு இங்கே வாங்க அது வரை யாரையும் நீங்கள் பார்க்க தேவையில்லை என்று சொல்லி அனுப்பிட்டாங்க.
பசங்கள கவனமாக படிக்க சொல்லுங்க வேற எதுவும் தேவையில்லை. ஒரு வேளை நீங்கள் தனியார் கல்லூரியில் சேர விரும்பும் பட்சத்தில் நீங்கள் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும்.
கா பா Thanks & copy from
https://www.facebook.com/share/p/19467TNBfe/