என்னது 121 பேர சத்தமில்லாம தூக்கிட்டாங்களா.......

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips

The untold story of a rescue operation: a transport aircraft, an unlit  runway and 1.5 hours | India News - The Indian Express 

 

என்னது 121 பேர சத்தமில்லாம தூக்கிட்டாங்களா.
எம்டன் களா இருக்காங்களே.

சூடானில் பாரதப் பிரதமர் அவர்கள் மோடி 7 நிமிடத்தில் செய்த சாதனை

இந்திய ராணுவம் இரு தினங்களுக்கு செய்த மிகதுணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது, கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது.
IAF aircraft rescues 121 Indians in a 'daring night operation' in  conflict-torn Sudan | India News - Times of India
இந்திய விமானபடையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை பாராட்டுகின்றது. இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன‌.

நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது.

விஷயம் நடந்திருப்பது சூடானில் .

IAF aircraft rescues 121 Indians in a 'daring night operation' in  conflict-torn Sudan | India News - Times of India

இந்திய ராணுவபடை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல, காரணம் முறையான விமான நிலையங்களில் வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன‌.

சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான்பகுதி மூடபட்டு விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது , அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது.

வேறு எல்லா நாடுகளும் அங்கே திணறின, விமான நிலையத்தில் சண்டை நடப்பதால் விமானம் சாத்தியமில்லை இன்னும் பல வழிகளும் சாத்தியமில்லை

பல நாட்டு மக்கள் இப்படி சிக்கி கொண்டார்கள்
Most difficult of situation…” Indian Air Force Chief's two thumbs up for  daring Sudan mission - YouTube
இந்தியர்களும் 121 பேர் இப்படி சிக்கிகொண்டார்கள், இவர்களை மீட்பது பெரும் சவானாலது

பிரதமர் மோடி இந்திய விமானபடைக்கு முழு உரிமை அளித்தார், இதனால் உற்சாகததுடன் இந்திய விமானபடை களமிறங்கியது அவர்களோடு இந்திய உளவுதுறையும் வெளிநாட்டு அமைச்சகமும் இணைந்தன‌.

சூடானில் வெளிநாட்டு விமானம் பறக்க முடியாது பறந்தால் இரு தரப்பும் அச்சத்தில் தாக்கலாம், அதை தாண்டி முக்கிய விமான நிலையம் சீரழிந்து கிடக்கின்றது, இந்நிலையில் சூடானிய அனுமதி இல்லாமல் இந்தியர்களை மீட்டு வரவேண்டும்

இந்திய உளவுதுறை சூடானை ஆராய்ந்தது அப்பொழுது தலைநகரை தாண்டி 50 கிமி தொலைவில் ஒரு ஆளில்லா கைவிடபட்ட விமான நிலையம் இருப்பது தெரிந்தது

அங்கே விமானத்தை இறக்கலாம் ஆனால் சிக்கல் பலவகை

From Yemen to Sudan — Modi govt's rescue operations since 2015 | Latest  News India - Hindustan Times

முதலில் தரையில் யாருமே இல்லை, மின்சாரம் இல்லை விளக்கு இல்லை ஏர் டிராபிக் எனப்படும் வழிகாட்டுதல் இல்லை, இங்கே விமானம் இறங்கினாலும் ஏறினாலும் ஆபத்து அதிகம்

அப்படியே விமானம் வந்தாலும் சூடான் அனுமதிக்காது அவர்களை மீறித்தான் ரகசியமாக வரவேண்டும்

அப்படி வரும்பொழுது இந்திய விமானம் பறந்துசெல்ல பெட்ரோல் நிரபப வழி இல்லை

இப்படி ஏக சிக்கல்கள்

முதலில் இந்திய விமானபடை தன் கமெண்டோக்களுடன் பெரிய விமானம் ஒன்றை சவுதி ஜெட்டா நகருக்கு அனுப்பியது, அங்கிருந்து சூடான் பக்கம் என்பதால் பெட்ரோல் ஒருமுறை நிரப்பினால் போதுமானது

பரபரப்பான காட்சிகளை இந்திய விமானபடை மிக ரகசியமாக செய்தது, அந்த 121 பேரும் ஓசைபடாமல் மாலை புறப்பட்டு அந்த ஆளில்லா விமான நிலையம் அருகே மறைந்திருந்தார்கள்
IAF C-17 Globemaster-III - India's daring rescue: Defining images of  Indians' evacuation from Yemen | The Economic Times
அதன் பின் தொடங்கியது இந்திய விமானபடை ஹெர்குலிஸ் ரக விமானத்தின் சாதனை

வெளிச்சமே இல்லாமல் இருளில் பறந்தது விமானம், விளக்கே இல்லாமல் பறந்ததால் சூடானியரின் பார்வைக்கு தெரியாது

அப்படியானால் பைலட்டுகள் எப்படி விமானத்தை செலுத்தினர் என்றால் இந்தியாவிடம் இப்போது இரவில் பார்க்கும் தாக்கும் உபகரணங்கள் உண்டு, மேற்கொண்டு செயற்கைகோள் வழிகாட்டலில் இந்திய விமானம் இருட்டில் சரியாக பறந்தது

விமானிகள் இரவில் சாமார்த்தியமாக விமானதை இறக்கினார்கள், என்சின் நிறுத்தபடவில்லை

விமான கதவு திறக்கபட்டு இந்திய கமெண்டோக்கள் ஓடி சென்று 121 பேரையும் மின்னல் வேகத்தில் விமானத்தில் ஏற்றி கிளம்பினார்கள்

விமானம் தரையில் நின்ற நேரம் 7 நிமிடங்கள்

மின்னல் வேகத்தில் கிளம்பிய விமானம் சவுதி ஜெட்டாவில் தரையிறங்கியது பின் இந்தியர்கள் நாடு திரும்பினார்கள்

சம்பவம் உலக அரங்கில் பெரும் திகைப்போடு பார்க்கபடுகின்றது

எந்த நாடும் இஸ்ரேலை தவிர இப்படி சவால் எடுத்ததில்லை அதிரடி காட்டியதில்லை, இந்தியா அதனை செய்திருக்கின்றது

இதை செய்தது ராணுவ விமானம் எனும் வகையில் இந்திய ராணுவம் எப்படி மேம்பட்டிருக்கின்றது என்பதை அறிந்த பாகிஸ்தான் நடுங்கி கொண்டிருக்கின்றது சீனா சத்தமே இல்லை

இந்த நடவடிக்கை சவால் அதிகம், பெரும் ஆபத்து விமானம் சிக்கினாலொ இல்லை அந்த போராளிகள் சூழ்ந்தாலோ பெரும் சொதப்பல்

ஒவ்வொரு திட்டமாக மிக நுணுக்கமாக ஆனால் தைரியமாக சவாலை மீறி வகுக்கபட்டு நிறைவேற்றபட்டிருக்கின்றது

மோடியின் இந்தியா உலகின் மாபெரும் சாகசத்தை செய்திருக்கின்றது.

ஆச்சரியம் என்னவென்றால் இது நடந்தது சனிகிழமை ஏப்ரல் 29,2023 அன்று

இதுபற்றி இந்திய ஊடகம் மூச்சுவிடவில்லை, மோடியும் பேசவில்லை
IAF C-17 Globemaster-III - India's daring rescue: Defining images of  Indians' evacuation from Yemen | The Economic Times
ஏன் பேசவில்லை?

அதுதான் ராஜதந்திரம், உலகமே இனி பேசபோகும் விஷயத்தை நாம் ஏன் முதலில் சொல்லவேண்டும்?

உலகெல்லாம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பாராட்டுமழை கொட்டபடுகின்றது, மோடி இஸ்ரேலிய பிரதமர்களை போல வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்

தன் மக்களை காக்க மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பாஜக அரசு நிரூபித்து இருக்கின்றது.

இந்த சாதனையினை செய்த விமானி மற்றும் குழு தலைவர் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடபடவில்லை

நிச்சயம் விருதுகளுக்காக அவர்கள் பெயர் அறிவிக்கபடும் அப்போது தெரிந்து கொள்ளலாம்

மாபெரும் சாதனையினை இந்திய விமானபடை செய்திருக்கின்றது, ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்தி  கம்பீரமாக அவர்களை பெருமையுடன் வாழ்த்த வேண்டிய நேரமிது

*"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும்
 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..." என சாதித்திருக்கின்றது மோடி அரசு*

இந்தியா வல்லரசு பட்டத்தை தொட்டுவிட்ட தருணமிது...

ராஜிவ் கொலையாளிகள் பெங்களூர் அருகே பதுங்கியபோது டெல்லியில் இருந்து கமோண்டோக்கள் வர இரு நாட்களானது

மும்பை தாக்குதலின் போது டெல்லியில் இருந்து கமாண்டோக்க்கள் வர ஒரு நாளானது

மோடி ஆட்சியில் 7 நிமிடத்தில் சூடானில் இருந்து இந்தியர் மீட்கபடுகின்றனர் என்பதில் தெரிகின்றது மோடி என்பவரின் ஆட்சி எத்தனைமடங்கு தேசத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றது எனும் சரித்திர சாதனை.

🇮🇳🌹🇮🇳RR🇮🇳🌹🇮🇳

தேசபக்தர் ஒருவரின் பேஸ்புக் பதிவிலிருந்து...

ஸ்ரீ கல்கருடன் 😍😍😍😍
SP

பிரசவமும், கார்ப்பரேட் மருத்துவ சுரண்டலும்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:46 PM | Best Blogger Tips

 


பிரசவமும், கார்ப்பரேட் மருத்துவ சுரண்டலும்
---------------------------------------------
 குவைத், சவுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சுக பிரசவம் மட்டும் தான் ஆகும். சர்ஜரி செய்ய சவுதியில் அனுமதி இல்லை.

 இது எப்படி சவுதியில் மட்டும் சாத்தியம்?

சவுதியில் அரை மணி நேரத்தில் சுக பிரசவம் செய்து கையில் குழந்தையை தந்து விடுவார்கள். உடனே வீட்டிற்கு செல்லலாம்.

 நமது இந்திய நாட்டில் மட்டும் கருவுற்ற பெண்களிடம் விட்டமின் ஊட்டச்சத்து என்ற பெயரில் தொடங்கி, பிரசவம் ஆகியும் பத்து நாள் வரை ஹாஸ்பிடலில் படுக்க வைக்கப் படுகிறார்கள். பெரும்பாலும் மேலை நாடுகளில் இதுபோன்று அவசியமும் தேவையும் இல்லை.

 எல்லாம் எதற்காக?பணத்திற்காக!!

சவுதியில் தனியார் மருத்துவமனையில் சர்ஜரி செய்தால் உடனே சவுதி அரசு அந்த ஹாஸ்பிடலின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடும்.

(தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் தகுந்த ஆதாரம் சமர்ப்பித்த பின்னரே சர்ஜரி செய்யப்படும். அதுவும் நூற்றில் ஒருவருக்குத் தான் இவ்வாறு நிகழும்)

இந்தியாவில் மட்டும் ஏன் வயிற்றை கிழித்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

எல்ல உயிரினங்களும் இயற்கையான முறையில் தான் சுக பிரசவம் ஆகிறது.

ஏன் மனிதனுக்கு மட்டும் முடியாதா? எல்லாம் முதலாளித்துவ சுரண்டல் வியாபார தந்திரம் தான்.

குழந்தை பிறக்க இயற்கை ஒரு வழியை, ஒரு உறுப்பை கொடுத்துள்ளது. அதை விட்டு விட்டு வயிற்றை கிழித்து குறுக்கு பாதையில் குழந்தையை எடுப்பது இயற்கைக்கு மாறான விஷயம் இல்லையா??

பல லட்சம் செலவு செய்து படிக்கும் டாக்டர்களும், மருத்துவ முதலிட்டார்களும் இப்படி தான் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். எனவே INDIA MEDICAL COUNCIL மருத்துவ முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

-வாட்ஸப் பகிர்வு -


நன்றி இணையம்

இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்* .....!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips

 சீன பெருஞ்சுவர் தெரியும், 'இந்திய பெருஞ்சுவர்' தெரியுமா? எங்கே இருக்கிறது?

 

*இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்* .....!!!
 
ராஜஸ்தானில் இருக்கிறது......
 
மேற்கொண்டு படிப்போம்.....
 
சீனப் பெருஞ்சுவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் ஓர் பெருஞ்சுவர் கொண்ட கோட்டை இருப்பது நிங்கள் அறிவீர்களா.... ?. வாருங்கள், அத்தகைய இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர் குறித்து அறிந்துகொள்வோம்.
 
உலகில் எந்த மூலையில் இருப்பவரும் சீனப் பெருஞ்சுவரை அறிந்திராமல் இருக்க முடியாது. சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய இந்தச் சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகும் என நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இதற்கு அடுத்தபடியாக, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் ஓர் பெருஞ்சுவர் கொண்ட கோட்டை குறித்து அறிந்துகொள்வோம்.இது இந்தியாவின் சீனப் பெருஞ்சுவர்..!! | The Kumbhalgarh - World's Second  Long Wall Fort - Tamil Nativeplanet
 
*கும்பல்கர்க் கோட்டை* 
 
அண்டை நாடான சீனாவில் இருக்கும் பெருஞ்சுவர் குறித்து அறிந்துவைத்திருக்கும் நாம், நம் நாட்டில் உள்ள அதிசயத்தை சற்றும் கவனிப்பதில்லை. அவ்வாறு நாம் தவறவிட்ட பெருஞ்சுவரே கும்பல்கர்க் கோட்டையில் அமைந்துள்ளது.
 
இந்தியப் பெருஞ்சுவர்....
 
சீன பெருஞ்சுவருக்கு அடுத்து *உலகின் 2-வது பெருஞ்சுவராக விளங்குவது கும்பல்கர்க் கோட்டைச் சுவர்* . இந்த மேவார் சாம்ராஜ்ய கோட்டை பனாஸ் நதியின் கரையோரத்தில் 15-ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது. ராஜஸ்தானின் முக்கியமான கோட்டைகளில் ஒன்றாக இந்தக் கோட்டை கருதப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
========
6,841 Rajasthan வீடியோக்கள், ராயல்டி இல்லாத ஸ்டாக் Rajasthan காட்சிகள் |  Depositphotosகும்பல்கர் கோட்டை
எவ்வளவு பெரிசு தெரியுமா ?
 
*கும்பல்கர் கோட்டை 13 சிகரங்களாலும், காவல் கோபுரங்களாலும், கொத்தளங்களாலும் சூழப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரவல்லி மலைத்தொடரில் 36 கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்கிறது. இதன் நீளமும், வளைந்து செல்லும் சுவர்களின் கட்டிட பாணியும் கோட்டையை எதிரிகளிடமிருந்து காக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது* .
 
========
நுழைவுவாயில்கள்
கும்பல்கர் கோட்டையில் உள்ள ஏழு மிகப்பெரிய நுழைவாயில்களில் ராம் போல் என்ற வாயில் மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. அதோடு இங்கு வரும் பயணிகள் ஹனுமான் போல் என்ற வாயிலின் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று வழிபடலாம். இவைத்தவிர ஹுல்லா போல், பாக்ரா போல், நிம்பூ போல், பைரவா போல் மற்றும் டாப்-கானா போல் ஆகிய நுழைவாயில்களையும் இந்தக் கோட்டை கொண்டுள்ளது. மேலும் இந்தக் கோட்டையின் உச்சியிலிருந்து அருகிலுள்ள பகுதிகளின் கவின்மிகு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.
கோட்டையின் உள் கோட்டை
கும்பல்கர் கோட்டைக்கு உட்புறம் கர்தார்கர் என்ற இன்னொரு கோட்டையும் அமைந்திருப்பது வியப்படையச் செய்கிறது.
 
மேகங்களின் அரண்மனை
ராஜஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே கும்பல்கர் நகரமும் சொக்க வைக்கும் அரண்மனைகளுக்காக புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக மேகங்களின் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் பாதல் மஹால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.
 
கும்பல்கர் நகரம் அதன் அழகிய அரண்மனைகளை தவிர தொன்மையான கோவில்களுக்காகவும் பிரசித்திபெற்றது. அதிலும் குறிப்பாக வேதி கோவில், நீல்கந்த் மகாதேவ் ஆலயம், முச்சல் மகாவீர் கோவில், பரசுராம் கோவில், மம்மாதேவ் கோவில், ரணக்பூர் ஜெயின் கோவில் போன்றவை முக்கியமான புண்ணிய தலங்களாக கருதப்படுகின்றன.
Which is the biggest living Fort of Rajasthan? - Quora
 
அருகில் உள்ள சுற்றுலாத் தலம்
கும்பல்கரில் கோட்டையைத் தவிர மிகவும் பிரதிபெற்றது வனவிலங்கு சரணாலயம். இங்கே நான்கு கொம்பு இரலை மான்கள், ஓநாய்கள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், குள்ள நரிகள், கழுதைப் புலிகள், சாம்பார் மான்கள், காட்டுப் பூனைகள், முயல்கள் போன்ற மிருகங்களை கண்டு ரசிக்கலாம். இதைத் தவிர ராஜஸ்தானின் வேறெந்த வனவிலங்கு சரணாலயத்திலும் நீங்கள் ஓநாய்களை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹல்டிகாட் மற்றும் கனேராவ் ஆகிய இடங்களும் கும்பல்கர் நகரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாப் பகுதிகளாகும்.
 
கும்பல்கர் நகரை எப்படி அடைவது?
கும்பல்கரின் அருகில் உள்ள விமான நிலையம் உதைப்பூரின் மஹாராண பிரதாப் மற்றும் தபோக் விமானம் நிலையம் ஆகும். மேலும், உதைப்பூரில் உள்நாட்டு விமான நிலையமும் செயல்படுகிறது. இருப்பினும் இது உள்நாட்டு விமான நிலையம் என்பதால் வெளிநாட்டு பயணிகள் தில்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
*ரயில் நிலையம்* 
 
கும்பல்கர் நகருக்கு வெகு அருகிலேயே பால்னா நகர ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் மும்பை, தில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கும்பல்கர் நகரை அடைந்து விட முடியும்.
தெரிந்து கொள்வோம்.....
🙏🙏🙏🙏🙏

 

இறைவனுக்கு அது தேவை .......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:48 AM | Best Blogger Tips

 பிச்சைக்கார செல்வந்தன் – கிறிஸ்தவன்

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்

 

உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?

அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்

 

எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.

கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

 

UPSC IAS exam preparation - Fundamentals of the Indian Economy - Lecture 6  | PT's IAS Academy 
 
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. 
 
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. 
 
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…? 
 
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
 
“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
 
என்னது பிசினஸ் பார்ட்னரா...?"
ஆமாம்… 
 
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. 
 
 
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். 
 
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். 
 
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”
 
“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? 
 
கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.
எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும்  நன்றிக் கடன்பட்டிருக்கேன்”
 
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? 
 
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
 
“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”
 
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
 
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
 
“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும். 
 
எனக்கு பணம் தேவையில்லை. 
 
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”
 
“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.
 
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
 Bombay1944
ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.
 
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். 
 
கழுத்தில் மைனர் செயின் அணிந்து
கொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
 
ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸினஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….
“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. 
 
உழைப்பு எல்லாம் என்னோடது.
 
இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.
 
அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.
 
“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.
 
அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
 
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
 
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.
 
இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர். 
 
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
 
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. 
 
ஒவ்வொரு நொடியை. 
 
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
 
ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
 
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா? 
 
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான். Indian Family Praying: Over 159 Royalty-Free Licensable Stock Illustrations  & Drawings | Shutterstock
 
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… 
 
அது முடிவே இல்லாமல்தான் போய்க்
கொண்டிருக்கும்.
 
இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு நாளைக்கு ஒரு10 நிமிடம் நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள
வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். 
 
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். 
 Pin by vishi on Hinduism | God illustrations, Art drawings for kids, Durga  painting
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான். 
 
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
 
இறைவனை வணங்குவதோ, 
 
வேதங்களைப் படிப்பதோ, 
 
ஆலயத்துக்குச் செல்வதோ, 
 
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்
கொள்வதோ ,
 
அல்லது 
 
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், 
 
நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,
இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில், 
 
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,Shiva | Definition, Forms, God, Symbols, Meaning, & Facts | Britannica
 
இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான் இந்த வழிபாடு எல்லாம்.
 
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.